Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    உங்களது 'மோகமுள்' இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக 'மோகமுள்' தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.

    நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.

    அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். முத்து முத்துப் புன்னகை புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.

    'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை வான் நிலா நிலா அல்ல புகழ் சொர்ணா. அண்ணன் ஒரு கோவில் படத்தில் குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.

    அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ. இப்போதுதான் படித்து முடித்தேன். கதைச் சுருக்கமும், விளக்கங்களும், வசனங்களும் உங்களுக்கே உரித்தான பாணியில் ஜோர். உங்களுக்கு நாவல் பித்து அதிகம் என்று எனக்குத் தெரியும். அதன் விளைவாக மோகமுள் தங்களுக்கு மோகத்தை ஏற்றி கலர் பதிவை இடும் அளவிற்கு கொண்டு வந்தும் விட்டது.

    நானும் ஒருதடவை மோகமுள் பார்த்தேன். நாவலும் வாசித்திருக்கிறேன். எனக்கு கதையை சிதைத்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அர்ச்சனா அன்னியோன்யமாகப் படாமல் அன்னியமாகப் பட்டார். நம் தமிழில் இல்லாத திறமைசாலிகளா? அதே போல அபிஷேக் அன்றுமுதல் இன்றுவரை தொலைகாட்சி நடிகராகவே தெரிகிறார். அவர் எப்போதும் டிஸ்டர்ப் ஆகவே நடிப்பார். அது போல நெடுமுடிவேணு மலையாளியாகவே தெரிவார்.

    அதே போலத்தான் பாரதியாரும் வேற்று மாநில நடிகராக (ஷாயாஜி ஷிண்டே) வந்து நன்கு செய்திருந்தும் மனதில் ஓட்டாமல் போனார். கமல் இல்லாமல் நாசருக்குக் கொடுத்திருந்தால் கூட ஜோராக இருந்திருக்கும். இது என் சொந்தக் கருத்து என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாலா பாடல் ஒன்றையும் துணிவாக போட்டுவிட்ட உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். 'முத்து முத்துப் புன்னகை' புரியும் நாயகி சரோஜா. 'வடைமாலை' புகழ் நடிகை.

    'சேற்றில் ஒரு செங்கழனி' அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நடிகை 'வான் நிலா நிலா அல்ல' புகழ் சொர்ணா. 'அண்ணன் ஒரு கோவில்' படத்தில் 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட' என்ற வாணியின் பாடலுக்கு நடித்து பேய் போல பயமுறுத்துபவர். நல்ல பாடலுக்கு நன்றி. ஆனால் நன்றியை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் விஜயகுமாரின் பாடலைப் போட்டதற்கு.

    அடித்த மழை, புயல், வெள்ளத்தில் பக்கெட் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதனால் தற்போது இமேஜஸ் நோ.
    Last edited by vasudevan31355; 15th November 2015 at 07:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •