Page 45 of 337 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #441
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஐயோ , வாசு , செந்தில் சார் - ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை உங்கள் பூதாகாரமான பதிவுகளைப்பார்த்தபின் - கதவுகளை யாரோ நடுநிசியில் தட்டுகிறார்கள் .. நாய்களின் ஊளை சத்தம் , "மல்லிகை என் மன்னன் மயங்கும் " என்று என்காதில் மட்டும் விழும் பாடல் , கொலுசுவின் ஒலிச்சத்தம் ---- " காக்க காக்க செந்தில் காக்க " என்று என்று எவ்வளவு தடவைகள் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் என்று கணக்கு வைக்க முடியவில்லை .... ஆன்மிக பதிவுகள் எவ்வளவு போட்டாலும் நீர்மோரை காச்சித்தான் பருகுகிறேன் - நீங்கள் இருவரும் இப்படி எல்லோரையும் பயமுறுத்துவது நியாமா ?? நீதியா ?? அந்த பேய்களுக்கே இது அடுக்குமா ??

  2. Likes Russellmai, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #442
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திகில் பாண்டிகள் / அமானுஷ்ய அசரீரிகள்!
    நிறைவுப்பகுதி 4 வேதாளம்

    விக்கிரமாதித்தனின் மிகச்சரியான பதிலால் அவன் மௌனம் கலைந்ததால் மீண்டும் வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் தன் முயற்ச்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் சலிக்காமல் முருங்கை மரமேறி வேதாளத்தை வெட்டி வீழ்த்தி தோளில் சுமந்து செல்வார்

    வேதாளமும் புதிய தனது புதிர்க்கதையை அவிழ்த்துவிட்டு விடுகதைக்கான பதிலை விக்கிரமாதித்தனிடம் வற்புறுத்தும்.....அம்புலிமாமா கதையேதான் மக்களே!

    ஆறறிவு மனிதனை விட அரையறிவு அதிகமுள்ள வேதாளம் ஓர் அறிவுஜீவி அமானுஷ்யமே!





    Last edited by sivajisenthil; 6th October 2015 at 10:37 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
    அகரத்தில் ஓர் இராமாயணம்.
    இராமாயண கதை முழுதும்
    'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
    " இதுவே தமிழின் சிறப்பு.."
    ++++++++++++++++++++++++++++++
    அனந்தனே
    அசுரர்களை
    அழித்து,
    அன்பர்களுக்கு
    அருள
    அயோத்தி
    அரசனாக
    அவதரித்தான்.
    அப்போது
    அரிக்கு
    அரணாக
    அரசனின்
    அம்சமாக
    அனுமனும்
    அவதரித்ததாக
    அறிகிறோம்.
    அன்று
    அஞ்சனை
    அவனிக்கு
    அளித்த
    அன்பளிப்பு
    அல்லவா
    அனுமன்?
    அவனே
    அறிவழகன்,
    அன்பழகன்,
    அன்பர்களை
    அரவணைத்து
    அருளும்
    அருட்செல்வன்!
    அயோத்தி
    அடலேறு,
    அம்மிதிலை
    அரசவையில்
    அரசனின்
    அரியவில்லை
    அடக்கி,
    அன்பும்
    அடக்கமும்
    அங்கங்களாக
    அமைந்த
    அழகியை
    அடைந்தான் .
    அரியணையில்
    அமரும்
    அருகதை
    அண்ணனாகிய
    அனந்தராமனுக்கே!
    அப்படியிருக்க
    அந்தோ !
    அக்கைகேயி
    அசூயையால்
    அயோத்தி
    அரசனுக்கும்
    அடங்காமல்
    அநியாயமாக
    அவனை
    அரண்யத்துக்கு
    அனுப்பினாள்.
    அங்கேயும்
    அபாயம்!
    அரக்கர்களின்
    அரசன் ,
    அன்னையின்
    அழகால்
    அறிவிழந்து
    அபலையை
    அபகரித்தான்
    அங்கேயும்
    அபாயம்!
    அரக்கர்களின்
    அரசன் ,
    அன்னையின்
    அழகால்
    அறிவிழந்து
    அபலையை
    அபகரித்தான்
    அந்த
    அடியார்களில்
    அருகதையுள்ள
    அன்பனை
    அரசனாக
    அரியணையில்
    அமர்த்தினர்.
    அடுத்து
    அன்னைக்காக
    அவ்வானரர்
    அனைவரும்
    அவனியில்
    அங்குமிங்கும்
    அலைந்தனர்,
    அலசினர்.
    அனுமன்,
    அலைகடலை
    அலட்சியமாக
    அடியெடுத்து
    அளந்து
    அக்கரையை
    அடைந்தான்.
    அசோகமரத்தின்
    அடியில் ,
    அரக்கிகள்
    அயர்ந்திருக்க
    அன்னையை
    அடிபணிந்து
    அண்ணலின்
    அடையாளமாகிய
    அக்கணையாழியை
    அவளிடம்
    அளித்தான்
    அன்னை
    அனுபவித்த
    அளவற்ற
    அவதிகள்
    அநேகமாக
    அணைந்தன.
    அன்னையின்
    அன்பையும்
    அருளாசியையும்
    அக்கணமே
    அடைந்தான்
    அனுமன்.
    அடுத்து,
    அரக்கர்களை
    அலறடித்து ,
    அவர்களின்
    அரண்களை ,
    அகந்தைகளை
    அடியோடு
    அக்கினியால்
    அழித்த
    அனுமனின்
    அட்டகாசம் ,
    அசாத்தியமான
    அதிசாகசம்.
    அனந்தராமன்
    அலைகடலின்
    அதிபதியை
    அடக்கி ,
    அதிசயமான
    அணையை
    அமைத்து,
    அக்கரையை
    அடைந்தான்.
    அரக்கன்
    அத்தசமுகனை
    அமரில்
    அயனின்
    அஸ்திரத்தால்
    அழித்தான்.
    அக்கினியில்
    அயராமல்
    அர்பணித்த
    அன்னை
    அவள்
    அதி
    அற்புதமாய்
    அண்ணலை
    அடைந்தாள்.
    அன்னையுடன்
    அயோத்தியை
    அடைந்து
    அரியணையில்
    அமர்ந்து
    அருளினான்
    அண்ணல் .
    அனந்தராமனின்
    அவதார
    அருங்கதை
    அகரத்திலேய
    அடுக்கடுக்காக
    அமைந்ததும்
    அனுமனின்
    அருளாலே.
    தமிழின் பெருமையை வாழ்நாள் முழுவதும் பேசினாலும் ஒரு துளிக்கும் ஈடாகாது.


    யாரோ...
    Last edited by senthilvel; 6th October 2015 at 10:54 PM.

  7. Likes madhu, Russellmai, eehaiupehazij liked this post
  8. #444
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker!

    Last edited by sivajisenthil; 6th October 2015 at 11:20 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #445
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி!

    உங்க இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. பி.எம் மாட்டேங்குது. கொஞ்சம் கிளியர் பண்ணுங்கோ.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #446
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும் !!


  12. Likes madhu, Russellmai liked this post
  13. #447
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில் வேல் - ஒரு வரி ராமாயணம் அருமை !!. உங்களைப்பற்றி பல நல்ல விஷயங்களை வாசுசார் சொல்லக்கேட்டிருக்கிறேன் . உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே ஒரு பொறாமை உண்டு . அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -இதோ !!

    16 வார்த்தை ராமாயணம்
    ******************************
    பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
    மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
    இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
    துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

    விளக்கம்:
    ************
    1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

    2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

    3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

    4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

    5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

    6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

    7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

    8. நெகிழ்ந்தார்:

    *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
    *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
    *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
    *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
    *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
    *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

    9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

    10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

    11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

    12.செழித்தார்:

    *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
    *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

    13.துறந்தார்:

    அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

    13.துவண்டார்:

    அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

    15.ஆண்டார்:

    என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

    16.மீண்டார்:

    பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

    ஜெய் ஸ்ரீராம்.


    Last edited by g94127302; 7th October 2015 at 08:30 AM.

  14. Thanks Georgeqlj, eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, madhu liked this post
  15. #448
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாடா மல்லிக்கு வண்ணம்
    உண்டு வாசமில்லை,
    வாசமுள்ள மல்லிகைக்கோ
    வயது குறைவு.

    வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
    கொம்புள்ள மானுக்கோ
    வீரம் இல்லை.

    கருங்குயிலுக்குத்
    தோகையில்லை,
    தோகையுள்ள மயிலுக்கோ
    இனிய குரலில்லை.

    காற்றுக்கு
    உருவமில்லை
    கதிரவனுக்கு நிழலில்லை
    நீருக்கு நிறமில்லை
    நெருப்புக்கு ஈரமில்லை,

    ஒன்றைக் கொடுத்து
    ஒன்றை எடுத்தான்,

    ஒவ்வொன்றிற்கும் காரணம்
    வைத்தான்,

    எல்லாம் இருந்தும்
    எல்லாம் தெரிந்தும்
    கல்லாய் நின்றான்
    இறைவன்.

    எவர் வாழ்விலும் நிறைவில்லை,
    எவர் வாழ்விலும் குறைவில்லை,

    புரிந்துகொள் மனிதனே
    அமைதி கொள் !

    -படித்ததில் பிடித்தது.

  16. Likes eehaiupehazij, Russellmai, madhu liked this post
  17. #449
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

    இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.

    எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

    ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் சனி பகவான் தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது. இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும்.

    நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...
    Last edited by g94127302; 7th October 2015 at 08:29 AM.

  18. Likes Russellmai liked this post
  19. #450
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜி!

    உங்க இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. பி.எம் மாட்டேங்குது. கொஞ்சம் கிளியர் பண்ணுங்கோ.
    இதோ இப்பவே கிளியர் செய்கிறேன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •