Page 70 of 337 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #691
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கலாட்டா கல்யாணம்'

    கலாட்டா மாற்றம்.



    'கலாட்டா கல்யாணம்' படத்தில் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடலில் நடிகர் திலகம், ராஜன் இவர்களுக்கு டி.எம்.எஸ்.அவர்களின் குரல். நாகேஷுக்கு அப்படியே நைஸாக வி.கோபாலகிருஷ்ணனுக்கும் சேர்த்து பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.

    'பத்துப் பதினாறு பிள்ளைகள் பெறலாமோ'

    'ஆணைகளை வெறுத்தாயே'

    இதை பி.பி.எஸ் நாகேஷுக்குப் பாடுவார். அப்படியே தொடரும் 'மன்மதன் நான்தானே' வரியை கோபாலகிருஷ்ணனுக்கு சாமர்த்தியமாகத் தந்திருப்பார்கள் அதே பி.பி.எஸ்.குரலில்.

    இப்போதான் கொஞ்சம் மாறிவிடும்

    'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' என்று டி.எம்.எஸ்.அமர்க்களமாக பாட, வாயசைப்பவர் ராஜன். உடனே 'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' என்று சுசீலாவின் குரலுக்கு வாயசைக்கும் ஜோதி அடுத்த வரியான

    'மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன'

    பாடும்போது ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைப்பார். முன் வரியை சுசீலா குரலுக்கு ஜோதியைப் பாட வைத்தவர்கள் அடுத்த வரியை அதே ஜோதிக்கு ஈஸ்வரியின் குரலைத் தவறாகத் தந்தது முரண்தானே! அதுவும் அந்தக் காலக் கட்டத்திற்கு.

    மறுபடியும் ஒரு தவறு. திரும்ப பதிலுக்குப் பாடும் ராஜனுக்கு அதே டி.எம்.எஸ் வாய்ஸ்தானே மீண்டும் ஒலித்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல் மாறாக பி.பி.எஸ் குரல் ராஜனுக்கு மாறி

    'முன்னம் காணாத இன்பம் என்னென்ன'

    என்று ஒலிக்கும்.

    இது எப்படி?

    ஒரே ஜோடிக்கு முதலிரண்டு வரிகளை ஒரு பாடகர்களும், அடுத்த இரண்டு வரிகளை வேறு பாடகர்களும் ரிககார்டிங்கில் பாடியிருக்க முடியாது. அது பாடகர்கள் தவறல்ல. காட்சிப்படுத்தியவர்களின் பிழைதான் இது.

    ஒருவேளை

    'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' டி.எம்.எஸ்.வரிகளை

    நடிகர் திலகத்திற்கும்,

    'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' சுசீலா வரிகளை

    மேடத்திற்கும்

    பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.

    அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.

    'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.

    ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு. அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பார் நமது டார்லிங் இயக்குனர். மீதியை அட்ஜஸ்ட் செய்து எடுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.

    சரி! ஏதோ ஒன்று. பாடல் அருமை. படமாக்கலும் அருமை. இசையும் அருமை. பாடகர்களும் அருமை. நடிகர்களும், நடிகைகளும் அருமை. நடனமும் அருமை. ஒளிப்பதிவும் அருமை. இயக்கமும் அருமை. பொருட்காட்சியும் அருமை. அதைவிட அருமை நடிகர் திலகத்தின் இளமை.

    என்ன சரிதானே!

    Last edited by vasudevan31355; 14th October 2015 at 01:06 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #692
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    இப்படி மாத்தி மாத்தி பாடுவதை எழுதினால் எதை எழுதியது யாருன்னே புர்லே ! கலாட்டா கல்யாணம் பத்தி ராகவேஷ் எழுத மாட்டுக்கார வேலன் பற்றி சின்னவாசு எழுதினாரா ? கொஞ்சம் நிதானமா படிக்கணும்...

    வாசு ஜி... வைராக்கியம் படப்பாடல்களை யூடியூபில் பழைய பாடல்கள் பதிபவகளிடம் கேட்டு கேட்டு கேட்டு கடேசியா ஒருத்தர் அபய கரம் நீட்டி விட்டு எல்லா பாடல்களையும் போட்டார். இப்போ நிறைய பேர் பதிஞ்சுட்டாங்க.

    அந்த சர்ர்ர்ர்ர்... எப்பவும் என் ஃபேவரிட் சர்ர்ர்ர்ர்ர்... கடைசில ஜோதிலட்சுமி சி.ஐ.டி. என்று மாத்தி புதியபறவை ரேஞ்சுக்கு கொண்டு போகப் பார்ப்பாங்களே !

    ம்ம்ம்... மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் "பொன்னே பூமியடி" பாட்டுக்கு ஸ்ரீதேவியும் மனோரமாவும் நடிக்க வாணியும், ஜானகியும் குரல் கொடுத்திருப்பாங்க... முதலில் ஸ்ரீதேவிக்கு ஜானகிதான் ஆரம்பிக்கிறார். ஆனா ஹீரோயினுக்கு அவங்க.. காமெடியனுக்கு நானா.. அப்படிங்கற பேச்சு வரவேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அப்பப்போ ஆளும் குரலும் மாறும்.


  4. Likes Russellmai, chinnakkannan liked this post
  5. #693
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்றைய கேஷவ்வின் படத்திற்கு எழுதியது..

    காணாமல் நின்றாடும் கண்ணாவுன் காட்சிதனை
    ஆனாலும் இங்கே அழகாக -கானாபோல்
    ஓடும் கவிதையாய் ஓர்கோட்டில் தந்தாரே
    ஆடுதே நெஞ்சமே ஆம்..

    https://scontent-fra3-1.xx.fbcdn.net...db&oe=568D366C



  6. Likes Russellmai liked this post
  7. #694
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இப்படி மாத்தி மாத்தி பாடுவதை எழுதினால் எதை எழுதியது யாருன்னே புர்லே ! கலாட்டா கல்யாணம் பத்தி ராகவேஷ் எழுத மாட்டுக்கார வேலன் பற்றி சின்னவாசு எழுதினாரா ? கொஞ்சம் நிதானமா படிக்கணும்...

    வாசு ஜி... வைராக்கியம் படப்பாடல்களை யூடியூபில் பழைய பாடல்கள் பதிபவகளிடம் கேட்டு கேட்டு கேட்டு கடேசியா ஒருத்தர் அபய கரம் நீட்டி விட்டு எல்லா பாடல்களையும் போட்டார். இப்போ நிறைய பேர் பதிஞ்சுட்டாங்க.

    அந்த சர்ர்ர்ர்ர்... எப்பவும் என் ஃபேவரிட் சர்ர்ர்ர்ர்ர்... கடைசில ஜோதிலட்சுமி சி.ஐ.டி. என்று மாத்தி புதியபறவை ரேஞ்சுக்கு கொண்டு போகப் பார்ப்பாங்களே !

    ம்ம்ம்... மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் "பொன்னே பூமியடி" பாட்டுக்கு ஸ்ரீதேவியும் மனோரமாவும் நடிக்க வாணியும், ஜானகியும் குரல் கொடுத்திருப்பாங்க... முதலில் ஸ்ரீதேவிக்கு ஜானகிதான் ஆரம்பிக்கிறார். ஆனா ஹீரோயினுக்கு அவங்க.. காமெடியனுக்கு நானா.. அப்படிங்கற பேச்சு வரவேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அப்பப்போ ஆளும் குரலும் மாறும்.
    Mdhunna chandrakala thaan CID.. hmmmmmmmmm

    adhu seri intha SJ VJ paatukku romba kashtapattangalam. both VJ & SJ dont like each other.
    when this song was recording they were in full hate mode .. it was tough for shyam to bring them together and made them sing is what i heard
    each sang their portion and left ..

    evlo dhooram unmaiyo

  8. Likes madhu, vasudevan31355 liked this post
  9. #695
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  10. Likes vasudevan31355 liked this post
  11. #696
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi ---aaNdavane illaiye from RaNi Lalithangi(1957)

    From RaNi Lalithangi(57)

    aaNdavane illaiye........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. Likes madhu, chinnakkannan, rajeshkrv liked this post
  13. #697
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மதுண்ணா இதோ வைராக்கியம் முழு படம்


  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai, madhu liked this post
  15. #698
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "அவள் பறந்து போனாளே"

    மாடிப்பட்டுக்களில் இறங்கி வரும் நடிகர்திலகத்தின் பூட்ஸ்கால்களைமட்டும் காட்டும் அந்த ஆரம்ப காட்சியே வித்தியாசமானதுதான்.. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் கதாநாயகனின் அறிமுக காட்சிக்கு
    மட்டுமே காட்டப்பட்டு வந்த உத்தியை படத்தின் சோக பாடலுக்கு பயன்படுத்திய சிறப்பு இப்பாடலுக்கு உண்டு.
    பூட்ஸ் கால் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி மெல்ல வரும்.அப்படியே காமிரா மெல்ல உயர்ந்து இடுப்பு,நெஞ்சு, முகம்னு நடிகர்திலகத்தின் உருவம் காட்டப்படும் என்று நெஞ்சு நிமிர உட்கார......
    பின்னர் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
    இறங்கி வருகிற பூட்ஸ் கால்களோட தொடர்ச்சியா ,டீப்பாய் மேல வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற வேற ஒரு கால்களை காண்பிப்பார்கள்.அந்தக் கால்களை தூக்கி நிலத்தில் நிற்கும் உருவத்தை காட்டும் காமிரா...
    அது முத்துராமன் .
    நடிகர்திலகத்தின் கால்களை மட்டும் காண்பித்து முகத்தை காட்டாமல் அதனின் தொடர்ச்சியாக வேறு கால்களை காண்பித்து அப்படியே முத்துராமனை காட்டுவது ஒரு வித சாதுர்யமான டெக்னிகல் உத்தி. இப்படி காட்டுவதால் அது ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பின் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கும்.அதே சமயம் தேர்ந்த திறமை வாய்ந்த டைரக்டர் அந்த காட்சியை காண்பிக்கிறார் என்றால் பின்வரும் காட்சிகள் ஏதோ ஒரு பிரளயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கும் என்பதுதான் அந்த உத்தியின் மூல காரணமாக இருக்கலாம்.

    என்ன ஒரு டெக்னிகலான காட்சியமைப்பு.கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் உதித்த அந்த ஐடியா
    பாராட்டப்பபவேண்டிய அம்சம்.சரி பீம்சிங் காரணமில்லாம இந்த ஷாட்டுகளை காண்பிக்கமாட்டாருன்னு நமக்கு நாமே அப்போது தேற்றிக்கொண்டோம் என்பதே உண்மை
    முத்துராமனுமஅவள் பறந்து போனாளே பாடலின் பல்லவியைவீட்டிற்குள் பாடுவது போல் காட்சி.

    அவள் பறந்து போனாளே
    என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே

    அந்தப் பல்லவியும் முடிஞ்சு இப்ப பிண்ணணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.இப்ப இடம் வேற.பாறைகள் நிரம்பிய இடத்தில் நுரைகள் பொங்க
    நீர் பெருக்கெடுத்து ஓடும் இடம்.பயத்தையும்,ஆச்சரியத்தையும்,ரசிப்பையும் கொண்ட இடம் அது.
    "சந்திராராராரா"
    ஓர் உரத்த கணீரெண்ற குரல் மட்டும் தான் இப்போது கேட்கும்.
    அட TMS குரல் கேட்டாச்சு. தலைவரோட அதகளம் ஆரம்பிக்குப்போகுதுன்னு நிமிர்ந்து உட்காருவோம். திரும்பி நிற்கும் உருவ அமைப்பும் ஸ்டைலும் மறுபடியும் ஏமாற்றத்தை தரும்.
    ஆனாலும் அதன் பின் வரும்காமிரா பதிவுகள் அசத்தல்.
    அணைகட்டு நீரில் அலைகளாட,
    அதில் முத்துராமனும் விஜய குமாரியும் ஆடும் காட்சி மிக்ஸிங்செய்யப்பட்டு DOUBLE EXPOSE'பாணியில் படமாக்கப்பட்டிருக்கும்.


    முத்துராமன் நடந்து செல்லும் பாலைவன காட்சி யில் ஒளிப்பதிவு பிரமாதம்.
    முத்துவோட நிழலைக் காண்பித்து அந்த நிழலிருந்து நிஜத்திற்கு மாறும் ஷாட் பிரமாதமாயிருக்கும்.
    அப்போது திரையில் ஒலிக்கும் வரிகள்.
    "என் நிழலுக்கு உறக்கமில்லை"
    முத்துவின் பக்கமிருந்துஅப்படியே லாங்சாட்டுக்கு மாறி பாலைவனத்தை
    காட்டுவது சிறப்பான ஒளிப்பதிவு.
    பீம்சிங் படங்களில் ஒளிப்பதிவு தனி அம்சமாக விளங்கும்.
    பல்லவி ,முதல் சரணம் முத்துராமனின் நடிப்பில் நிறைவு பெறுகிறது.




    திடீரென்று எரிமலை வெடித்துச் சிதறுவதை விட அந்த எரிமலை இப்ப வெடிக்கும் அப்பறம் வெடிக்கும் என்று பார்த்திருந்து,பார்த்திருந்து,
    காத்திருந்து,காத்திருந்து ,ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெடித்துச்சிதறும் எரிமலை போல்
    தான் இந்தக் காட்சியை இன்றும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

    மாடிப்படிக்கட்டுகளில் நிற்கும் நடிகர்திலகம் இந்த வீட்டுக்கு விளக்கில்லை என்று முதல் வரியை பாடி திரும்பி நிற்பார்.அப்போது வீட்டின் விளக்குகள்அணைந்து இருட்டில்
    சில் ஹவுட்டாகநடிகர்திலகத்தின் உருவம் தெரியும்.
    திரும்பிநிற்கும் நடிகர்திலகத்தைஅடுத்த ஷாட்டில் முன்பக்கம் காண்பிக்கும் அந்தக்கணம்எல்லா விளக்குகளும் எரியும்.அப்பொழுதே இது போன்ற டெக்னிகல் உத்திகளில் அதுவும் கறுப்பு வெள்ளையில் தெளிவான காட்சிகள் படம் பிடிக்கப்படிருப்பது பெருமையான விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்த பிற்காலங்களில் சில திரைப்படங்கள் இந்தப்பாடலில் வருவது போன்ற காட்சிகள் அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.ஆனால் பழமையான அந்தக்காலகட்டத்திலேயே கறுப்பு வெள்ளைகளில் சிறப்பான ஒளிப்பதிவுகள் தமிழ்சினிமாவில் கையாளப்படிருக்கிறது என்கிற வரலாற்றைத்தான் பிற்கால ரசிகர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

    நடிகர்திலகத்தை காட்டும்விதம்
    ஒன்று போதும்.அந்தப்பாடலின்
    சிறப்புக்கு.லைட்டிங் டெக்னாலஜியைப்பொறுத்தமட்டில் அந்தக்காலகட்டத்திலேயே இந்த மாதிரி டெக்னிகல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு விட்டதால்
    பிற்காலத்தில் வந்த சில படங்களை
    சொல்வதில் புதுமையில்லை.

    இல்லை என்பதில் முடியும் இரண்டாவது சரணத்தின் வரிகள்.
    அதுபி.பி.எஸ்க்கு.
    மூன்றாவது சரணத்தின் வரிகளும்
    இல்லை என்ற வார்த்தையில் முடியும்
    இது TMSக்கு.

    இல்லை இல்லை என்று சொன்னாலும் அதில் இல்லாதது எதுவும் இல்லை.
    சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த லொகேஷன்
    சிறந்த உடையமைப்புசிறந்த குரல்.etc...





    மறுபடியும் அந்த பாலைவனத்தில் அடுத்த சரணம்.முத்துராமன் பாடுவதாக இருக்கும்.சூறைக்காற்று வீச,புழுதிப்படலத்தின் பிண்ணணியில் அந்தக் காட்சி செல்லும்.இப்படியொரு பாடல் பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான யோசனை. புதுமையும் கூட.

    .....தன் சிறகை விரித்தாளே.








    (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ரசிகனே...
    நீ
    நினைத்ததை
    உன் தலைவன்
    நிறைவேற்றாத
    காட்சி
    எதிலேனும்
    உண்டா?)

    (எது நடக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகன் நினைத்தானோ அது நன்றாகவேநடந்திருக்கும் பாடலின் முடிவில்.)

    நடிகர்திலத்தின் விழிகளை பார்த்து பேசுவது பெரும் கலைஞர்களுக்கே
    சிரமம் என்று சொல்வதுண்டு.அவருடைய இந்த விழிகளைப் பார்த்தால் அதை என்னவென்று சொல்வது?
    முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு விழிகள் மேல் நோக்கி நிலைத்த நிலையில்
    எந்த அசைவையும் காட்டாமல்
    உட்கார்ந்திருக்கும் அந்தப் போஸ்
    பார்ப்பவர்களை மிரளவே செய்யும்.




    "அவள் எனக்கா மகளானாள்"
    "நான் அவளுக்கு மகனானேன்"
    "என் உரிமைத் தாயல்லவா
    என் உயிரை எடுத்துச் சென்றாள்."
    என்று முடியும் பாடல்.

    ட்ரிக்ஷாட்டில் எடுக்கப்பட்ட கடைசி வரிகளுக்கான படப்பதிவுகள்.









    (பி.பி. எஸ்
    அவள் பறந்து போனாளே
    என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

    பி.பி. எஸ்
    என் காதுக்கு மொழியில்லை
    என் நாவுக்கு சுவையில்லை
    என் நெஞ்சுக்கு நினைவில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை

    டி.எம்.எஸ்
    இந்த வீட்டுக்கு விளக்கில்லை
    சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
    என் அன்புக்கு மகளiல்லை
    ஒரு ஆறுதல் மொழியில்லை
    ஒரு ஆறுதல் மொழியில்லை

    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே


    பி.பி.எஸ்
    என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
    அதில் என்னையே காவல் வைத்தேன்
    அவள் கதவை உடைத்தாளே
    தன் சிறகை விரித்தாளே

    டி.எம்.எஸ்
    அவள் எனக்கா மகளானாள்
    நான் அவளுக்கு மகனானேன்
    என் உரிமைத் தாயல்லவா
    என் உயிரை எடுத்துச் சென்றாள்
    என் உயிரை எடுத்துச் சென்றாள்

    இருவரும்
    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

    Aval Paranthu Ponale:

  16. Likes Russellmai, madhu, JamesFague liked this post
  17. #699
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Varam Movie Songs - Ningi Nela Song - Prabhu, Ama:
    நல்ல இனிமையான தமிழ்பாடல்.
    தெழுங்கில் கிடைக்கிறது.
    தமிழில்?

    தமிழ்ப்பாடல்:
    வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்
    மழையும் அடிக்க வெயிலும் அடிக்க இங்கே கல்யாணம்.
    காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம்
    கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்.

    இசை MSV
    பாடியவர் ஜெயச்சந்திரன்.,சுசீலா?சித்ரா?

    இப்பாடல் சென்னை தொலைக்காட்சியில் மெல்லிசை
    பாடல்களில் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்படும்.பாடலின் இனிமையும்,
    மென்மையும் டைரக்டர் கேட்டு அது அவரை ஈர்த்திருக்கலாம்.அந்த சமயத்தில் அவர் எடுத்த இந்த திரைப்படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.படத்தின் சிச்சுவேசனும் இந்த வரிகள் மிகவும் பொருத்தமாய் அமைந்திருந்ததும் ஒரு காரணம்.
    திரைப்படத்திற்காக சில வரிகள் பாடலாசிரியரிடம் கேட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.

    டைரக்டர் RC சக்தி
    கவிஞர் வைரமுத்து

    நடிப்பு
    இளையதிலகம்
    அமலா
    டாப்சிலிப் மூணாறு மலைப்பகுதிளை
    ரசிக்கலாம்.

    படம்:வரம்

  18. Likes Russellmai liked this post
  19. #700
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //சுசீலா வரிகளை மேடத்திற்கும் பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.

    அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.

    'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.

    ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு.//

    டியர் வாசு சார்,

    இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அண்ணாநகர் உலக பொருட்காட்சியில் கூட்டம் குறைவான ஒரு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் பாடல் காட்சியை படமாக்கி முடித்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் படப்பிடிப்பு குழுவினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் (தகவல்: அன்றைய குமுதம் இதழில் சித்ராலயா கோபுவின் "பொருட்காட்சியில் படக்காட்சி")

    எனவே நேரம் போதாமை காரணமாக குரல் மாற்றம் குளறுபடிகள் நேர்ந்திருக்கலாம்.

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •