அமர்க்களம்.
இதே காட்சியைத் தான் மீண்டும் மீண்டும் ரசித்து, பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னாளில் DEFINITION OF STYLE தொடரில் எழுதுவதற்காக ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன். அப்படியே சிலாகித்து எழுதி விட்டீர்கள்.
காட்சிக்குத் தேவையாகவும் தோதாகவும் முன் கதைச்சுருக்கத்தையே அழகாய்த் தந்துள்ளீர்கள்.
அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.
Fantastic. இதையெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும். நடிப்பே என்ன என்று தெரியாத அரை குறையெல்லாம் ஓவர் ஆக்டிங் என பிதற்றுவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் முகத்தில் சாட்டையால் ஓங்கி விளாச வேண்டும் போல் தோன்றும். இந்தக் காட்சி அதை செய்து விடும்.
தங்களுடைய எழுத்தைப் பாராட்டத் தான் வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறோம்..
பாராட்டுக்கள்.
Additional Thanks for the images ... WOW....
துரதிருஷ்டவசமாக இப்படத்தின் வீடியோ இணையத்தில் கிடைக்கவில்லை. முயற்சி செய்து பார்ப்போம்.
Last edited by RAGHAVENDRA; 5th August 2015 at 12:48 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பிரமாதம். உங்கள் நினைவு சக்திக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். அத்தனை நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்து உள்ளீர்கள். மன்ற விழாவை மற்றோருக்காக தள்ளி வைத்த அந்த பெருந்தன்மையை என்னவென்று சொல்வது? அவரைக் கரித்துக் கொட்டிக் கொண்டே ஒரு கூட்டம் அவரால் மட்டுமே பலனடைந்தது. எங்காவது இப்படி நடக்குமா? ஒரு பலனுமில்லாமல் தன்னுடைய தலைவருக்காக வேண்டி தானும் உழைத்து, தன் ரசிகர்களையும் உழைக்க வைத்தாரே! சுயநலப் பேய்களும், புலிகளும் கோலோச்சிய கட்சியில் சிக்கி சொல்ல முடியாத கஷ்டங்களையும், அவமானங்களையும் காமராஜருக்காக சகித்துக் கொண்டாரே! அவர் மட்டும் சுயமாக சுதந்திரமாக ஒரு முடிவு எடுத்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
அருமையான நினைவலைகள் முரளி சார். ஏதோ அந்தக் கால கட்டத்திற்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு.
ஊஞ்சலாட்டம் ஒரு மன மகிழ்வான பொழுதுபோக்கே! கவலைகள் மறந்து மனம் தெளிந்து உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பொங்க வைக்கும் விளையாட்டே !
திருமண நிகழ்விலும் அறுபதாம் ஆண்டு நிறைவு போன்ற வைபவங்களிலும் ஊஞ்சலாட்டம் சிம்பாலிக்காக வைக்கப் படுகிறது!சிறுவர் பெரியோர் பேதமின்றி ஆடி மகிழும் ஊஞ்சல்கள் நடிகர் திலகத்தையும் சுமந்தாடிய பெருமை பெற்றன..
அதே போலத்தான் அலங்கார சர விளக்குத் தொங்கல்களும் டார்ஜான் பாணி மரக்கிளை கொடித் தொங்கலும் கயிற்றுத் தொங்கலும்!!
உத்தமபுத்திரனில் அந்தப்புரத்தில் ஆடல் பாடல் மது மங்கை மயக்கத்தில் திளைத்திருக்கும் மோசமான தருணத்தில் அன்னையின் திடீர் வரவு விக்கிரமனை நிலைகுலைய வைக்கிறது அன்னையின் மீது மட்டற்ற பாசமும் மரியாதையும் இருப்பினும் சிவபூஜை கரடியாக தாயின் பிரவேசத்தை விரும்பாத மன நிலையை அலட்சியமாக ஊஞ்சலில் அமர்ந்து கால்களை எத்தி எத்தி ஆடும் அபாரமான உளவியல் வெறுப்பு கலந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு உலக நடிகர்கள் எவரையும் தாள் பணிய வைக்கும் உன்னதமே!!
வியட்நாம் வீடு காவியத்திலும் தம்பதியர் முதுமைத் தள்ளாட்டத்திலும் நாணிக் கோணி ஊஞ்சலாட்டம் பின்னுகிறார்கள்!!(No link available!)
சொர்க்கம் திரைப்படத்திலும் திருமணக் கனவாக வண்ணமயமான ஊஞ்சலாட்டம் இடம் பெறுகிறது !
சில வருடங்களாக நமது நடிகர் திலகம் திரியின் மௌன வாசகரும் திரியில் பதிவிடப்படும் விஷயங்கள் பற்றிய விமர்சனங்களை உடனே அழைத்து சொல்பவரும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் திருச்சியை சேர்ந்தவருமான அருமை நண்பர் பாஸ்கர் அவர்களை நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என்று சொல்லி வரவேற்கிறேன்! மலைக்கோட்டை மாநகரில் கலைக்குரிசிலின் சாதனைகள் பற்றி பாமாலை பாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
உளமார்ந்த நல்வரவு பாஸ்கர். மக்கள் தலைவரின் மகத்தான சிறப்புக்களை எதிர்காலத்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களுடைய அனுபவங்கள், தங்களுடைய எண்ண ஓட்டங்கள் யாவற்றையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொண்டு தங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பத்மினி பிக்சர்ஸ் தங்கமலை ரகசியம் படத்தின் சில பாடல் காட்சிகள் உள்பட, பகுதி கலரில் திரையிடப்பட்டது. கல்யாணம் நம் கல்யாணம், இகலோகமே, அமுதைப் பொழியும் நிலவே பாடல் காட்சிகள் கலரில் இடம் பெற்றன. அப்படிப்பட்ட ஓர் காட்சியின் ஒரிஜினல் கலர் ஸ்டில் தான் மேலே இடம் பெற்றுள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks