Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 30

Thread: சொல்ல துடிக்குது மனம் !

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    சொல்ல துடிக்குது மனம் !


    அலுவலகத்திற்கு இன்றும் மட்டம்
    ஆறு நாளாய் அடித்து ஓய்ந்த சுரம்
    அன்பு மனைவியோ அங்காடி பக்கம்
    அனுவுடன் வீட்டில் நான் மட்டும்

    இரண்டு வயது தான் என் அனுவுக்கு
    ஆனால் என்ன ஒரு பாங்கு அவளுக்கு
    அப்பா டீ வேணுமா: அவள் வெல்லமாய்
    ஆஹா குடு பேஷா: நான் செல்லமாய்

    சின்ன சொப்பில் கொண்டு வந்தாள்
    சூடான தேநீர் என வெறும் நீர் தந்தாள்
    எடுத்து குடித்தேன் “அடடா அற்புதம்”
    எகிறி குதித்தாள் கிளுக்கியே ஓடினாள்

    அனுவின் கேள்வி மீண்டும் மீண்டும்
    அப்பா டீ வேணுமா இன்னும் கொஞ்சம் ?
    ஆமாம் கொஞ்சினேன் வேண்டும் வேண்டும்
    அவள் குப்பியில் டீ கொடுக்க நான் குடிக்க

    அதை கெடுக்க அகம் நுழைந்தாள் பத்தினி
    என்ன குடிக்கிறீர்கள்? கூத்தடிக்கிறீர்கள்?
    அதட்டினாள் அருமை மனைவி சிரித்தேன்
    அடியே அனுவின் டீ அபாரம் நீயும் குடி

    முறைத்தாள் மனைவி மறுத்தாள் டீயை
    அது சரி, அனுவோ குழந்தை! அவளுக்கு
    எட்டும் உயரத்தில் டாய்லெட் மட்டும் தான்
    அது கூடவா தெரியாது அசட்டு அத்தான் ?

    கதவின் பின்னால் அரவம் அனு தலை எட்டி
    குசு குசு மழலையில் “ வேணுமா அப்பா டீ ?“
    குண்டுஅனு இன்றேனோ அணு குண்டானாள் !
    கரிய கண்ணால் எனை கவிழ்த்து விட்டாள்
    !

    .
    .

    .

    (எப்போதோ வலையில் படித்த ஜோக்கின் தாக்கு
    Last edited by Muralidharan S; 19th February 2016 at 08:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    Yes, an old, hilarious joke read in fb long ago!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Likes Russellhni liked this post
  5. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    குழி

    வருமானம் பெருக்கவே
    சுருக்கான வழி
    வெளிநாட்டு நிறுவனம்
    வெட்டிய குழி
    விழுந்தது இந்தியன் தானே !

    இடியாப்பம் இட்லி தோசை வடகறி
    என ஏராளமாய் கிடக்கையில்
    ஏன் நமக்கு நூடுல்ஸ் வெறி
    என்ன குறை நம் வீட்டினில் ?
    என்ன காரணம் நம் நாட்டினில் ?

    தரங்கெட்ட அரசியல்வாதியா ?
    துணை நிற்கும் அதிகாரியா?
    தன்மானம் விற்ற வியாபாரியா?
    தறி கெட்ட விளம்பரமா ?

    ஏற்றமற்ற போட்டி கொண்டு
    ஏமாற்றியவர் பலர் உண்டு
    ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று!
    இன்றாவது விழித்தோமா ? இல்லை
    இன்னொரு சதியில் விழுந்தோமா?


  6. #4
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    Very good!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. Likes Russellhni liked this post
  8. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    சொத்து !


    ஆசுபத்திரியில் அவன்
    ஆவி போகும் நேரம்
    அருகில் மனைவி மக்கள்
    அழகான நர்சும் ஆங்கே

    அன்பு கோவிந்தா அப்பா நீ
    ஆரெம்ஸி நகரில் அபார்ட்மென்ட்
    இருவதும் இன்றே எடுத்துக் கொள்

    ஆசை மகனே !அருகே வா ! சுப்புடு !
    அடையாரில் உனக்கு பதினைந்து வீடு
    அளித்தேன் அப்படியே உன் ஆசைப்படி

    அருமை கடைக் குட்டி நந்தலால் !
    அறிவில் சிறந்தவன் நீ ஆதலால்
    ஆழ்வார்பேட்டை ஆபீஸ் ஐந்துமுனக்கு

    அன்பே ஆருயிரே ! அனிதா ! என் இதர
    எல்லா வீடுகளையும் நீயே எடுத்துக் கொள்
    இருமினான் நோயாளி! செருமினாள் நர்ஸ் !

    ஆச்சரியம் நர்சுக்கு ! அம்பானிக்கும் மேல்
    அநியாய பணக்காரரா இவர் ?அடடா!
    அறிந்திருந்தால் அமுக்கியிருக்கலாமே!

    இவ்வளவு சொத்தா ! என்ன ஒரு பாக்கியம்!
    எல்லாம் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்!
    என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றாள்

    எரிந்து விழுந்தாள் மனைவி ! எடு கட்டைய!
    எல்லாம் இவன் பால் பாக்கட் போடற வீடு !



    (நன்றி Pogo jokes 2013 - முகநூலில் ரசித்ததின் தமிழாக்கம் )
    Last edited by Muralidharan S; 19th February 2016 at 08:45 PM.

  9. Likes chinnakkannan liked this post
  10. #6
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. Likes Russellhni liked this post
  12. #7
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    கார் காலம் !

    காரோட்டி :
    ------------
    இந்தியா போல் எங்கும் காணோம்
    ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
    எக்கச்சக்க சட்டம் எதற்கும் ஒரு திட்டம்
    ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

    கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
    கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
    கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
    குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

    கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
    குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
    கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
    கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே !

    காரோட்டியின் மனைவி
    -----------------------------
    எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
    என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
    எதானாலும் சரி! ஒன்னும் பெரிதில்லை
    எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !

    எங்கேயும் இல்லியே இந்த ரோட்டிலே இடம்!
    எப்படி காரை நாம் பார்க் பண்ணுவோம் ?
    என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
    ஏதேனும் கொடுத்து சரி செய் ! ஆச்சு நேரம்!





  13. #8
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    kodumai!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  14. #9
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    அப்பாவின் ஆஸ்தி

    அமரராகிவிட்டார் அப்பா ஆனால்
    அகலவில்லை அவர் எங்களை விட்டு
    அங்கங்கே பிரித்து கொடுத்தார் ஆசையாய்
    அவர் இறந்த பின்னும் இருக்கும் சொத்தாய்

    அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
    அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
    அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
    அவர் தம் அழியா பிம்பம் மட்டும் அம்மாவிடம்!

    அப்பாவி என்னப்பா! அவரை - அடபாவி மனுஷா
    அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
    அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
    அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !

    அவர் நிழலை நிஜமாக நினைந்து அழுதபடி
    அவருடன் அளவளாமல் விட்டவளுமில்லை
    அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
    அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!



  15. #10
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    யார் காரணம் ?

    முரட்டு முனியனும் மூர்க்கன் மணியனும்
    முட்டாள் முத்துவும் மூன்றாம் மாடியில்
    மச்சு வீடு கட்டும் தச்சர் மூன்று பேரும்

    முனியன் சொன்னான் மதிய வேளையில்!
    இன்னிக்கும் என் டப்பாவில் குழம்பு சாதம்
    என்ன புழைப்பு ! பட்டது போதும்
    இது போல் நாளை பட்டை சாதமெனில்
    எகிறி குதித்திடுவேன் இங்கிருந்து தரைதனில்

    மணியன் தூக்கிலோ இன்றும் புளி சாதம்
    மன்னிக்க மாட்டேன்! மனைவியா அவள்?
    நாளைக்கும் புளியெனில் நானும் குதித்துடுவேன்

    முத்துவின் டப்பாவில் இன்றும் மோர் சாதம்
    மாட்டேன் மாட்டேன் நாளைக்கும் மோரென்றால்
    நான் என்ன மாங்கா மடையனா?
    நாலு மாசமா மாறவில்லை ! குதிப்பேன் நானும்!

    மறு நாளும் வந்தது மதியம் அமர்ந்தனர் மூவரும்
    முனியன் டப்பாவில் குழம்பு சாதம் ! வெறுத்தான்
    மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

    மணியன் தூக்கினில் பச்சை புளியின் வாசம்
    மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

    முத்துவின் டப்பாவிலோ இன்றும் மோர் சாதம்
    மாடியிலிருந்து குதித்தான் மடிந்தான் மறுநிமிடம்

    மடியுமுன் கொடுத்தனர் இருவர் மரணவாக்குமூலம்
    முனியனும் மணியனும் மனைவி தான் காரணம்

    மூவரின் ஈமச்சடங்கு மூன்றாம் நாள்
    முனியனின் மனைவி மல்லிகா முறிந்தாள்
    மோசம் போனேனே உன் மனம் அறியாமல் !
    மாமா ! மணக்க கறி சோறு மாற்றியிருப்பேனே !

    மணியனின் மனைவி மேனகா மறுகினாள்
    மச்சான்! உன் மனசுகேத்த மாதிரி மீன் குழம்பு
    மாங்கா தொக்கு கொடுக்காமல் போனேனே!

    முத்துவின் மனைவியோ மௌனமாய் நிற்க
    மயானத்தில் மற்றவர் அவளை முறைக்க
    மறுத்தாள் அவள்! நானில்லை நானில்லை காரணம்!

    மடையன் அவன் மறைவுக்கு அவனேதான் காரணம் !
    முட்டாள் கணவன் ! டிபன் பாக்ஸில் அனுதினமும்
    மோர் சாதம் அவனே தான் கட்டிப்பான் !



Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •