Page 6 of 15 FirstFirst ... 45678 ... LastLast
Results 51 to 60 of 145

Thread: நெஞ்சம் மறப்பதில்லை

  1. #51
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காமிராக் கோணங்கள் கூட வியப்பாக உள்ளன.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Gopal.s thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #52
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Meghe Dhaka Tara (1960),Komal Gandhar (1961),Subarna Rekha (1962)-Rithwik Ghatak -Bengali,India .

    என்ன ஒரேயடியாக ஈரான்,கொரியா,இத்தாலி என்று உதார் விடுகிறானே ,இந்தியாவில் யாருமே கண்ணில் படவில்லையா என்று சிலர் புலம்பல் கேட்கிறது. இதோ நான் மதிக்கும் யுகபுருஷன்,இயக்குனர் ரித்விக் கட்டாக்.

    இவர் இணை கலை படங்களில் சத்யஜித்ரே ,மிருணாள் சென் இவர்களோடு பயணித்தாலும் என் பார்வையில் அவர்களை விட மிக சிறந்தவர். நேர்மையான,பாவனை தவிர்த்த படங்கள் தந்தவர். சிறிய சிறிய விஷயங்களிலும் கூர்மையான,குறிப்பான கவனம் செலுத்தி சமூக நடைமுறையை ,ரியலிச படங்களை, இடது சிந்தனைகளோடு தந்தவர்.

    ஐம்பதே வயதில் மரித்தவர்,குடிக்கு அடிமையாகி,மனைவியை பிரிந்து,மனநிலை பாதிக்க பட்டு,மருத்துவமனையில் இரு ஆண்டுகள் கழித்தவர்.

    நாடகத்தில் தொடங்கினார். மதுமதி(மறுபிறவி-ஆவி இன்னொரு உடலுக்குள் அடக்கம்)என்ற சிறந்த வெகுஜன படத்திற்கு திரைக் கதை எழுதியவர்.(பிமல்ராய் இயக்கம்)

    மேலே சொன்ன முப்படங்களும் ,ரித்விக்கை மிக பாதித்த 1947 இன் பிரிவினை ,அது சார்ந்த சமூக,பொருளாதார,குடும்ப,அரசியல்,தனிமனித பிரச்சினைகள்தான் மூன்று படங்களின் மூலம்.

    மேகே தாக்க தாரா , ஒரு பெண்ணின்(நீத்தா) நல்ல இயல்பு ,தியாகம் குடும்பத்தாரால் உபயோக படுத்த பட்டு, காதல்,வேலை,ஆரோக்கியம் இழந்து நிற்கும் போது கசக்கி எரிய பட்டு, சிறிதே ஆதரவு காட்டும் அண்ணனிடம் ,நான் வாழவே விரும்புகிறேன் என கதறி தோள் சாயும் பரிதாபம்.

    கோமல் காந்தார் -இது இந்திய படங்களை முன்னெடுத்து செல்லும் முயற்சி. ஐரோப்பிய முறையில் தன் ரசனை,கருத்துக்கள் சார்ந்த தனிப்பட்ட படமாக்க முயற்சி.ஒரு இடது சாரி நாடக குழு (IPTA )அதில் விருகு,அனுசுயா என்ற பாத்திரங்கள். இலட்சியங்கள்,ஊழல்,கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆன தொடர்பு, கலையின் ஆளுமை,வர்க்க போராட்டம் என்று விவாதம் செய்து நகரும்.

    சுபர்ண ரேகா, ஒரு தாழ்த்த பட்ட பையனை(அபி ) எடுத்து வளர்க்கும் பிராமணர்(ஈஸ்வர்) தன்னுடைய தங்கை சீதாவிற்கும் அபிக்கும் ஏற்படும் காதலை ஏற்க முடியாமல், அவர்கள் சேரியில் வறுமையில் உழன்று டிரைவர் ஆகும் அபி, ஒரு விபத்தில் மாட்ட,
    வறுமை சீதாவை,ஒரு இரவு விடுதியில் தள்ள,ஹர பிரசாத் என்ற நண்பரின் உந்துதலால்,ஈஸ்வர் விரக்தியால்,தனிமையால் ,கல்கத்தா வந்து குடியில் தோய்ந்து,இரவு விடுதிக்கு வர, அங்கு அவர் தங்கையே அவருக்கு தேவை பூர்த்தி செய்ய வர, அவமானத்தால் உயிர்துறக்கும் தங்கையின் மகனை எடுத்து வளர்க்கிறார் ஈஸ்வர்.

    குமார் சஹானி,மணி கவுல்,மீரா நாயர்,கேத்தன் மேத்தா,அடூர் என்று பல இயக்குனர்களின் உந்து சக்தி இந்த மேதை. இவர் படங்களை சுட்டு பல படைப்புகள். (reincarnation of peter proud ,karz ,எனக்குள் ஒருவன்,ஓம் சாந்தி ஓம் ,குல விளக்கு,மறக்க முடியுமா,அவள் ஒரு தொடர்கதை,மகாநதி ) .

    நான் மிக மிக மிக மதிக்கும் இந்திய இயக்குனர்களில் முதல்வர்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes venkkiram, RAGHAVENDRA liked this post
  6. #53
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    கோபால்
    எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. மீடியாக்களால் அளவுக்கு மீறி புகழப்பட்ட சத்யஜித் ரே, சென் வகையறாக்களையெல்லாம் தாண்டி, சினிமாவை சிறந்த விஷுவல் மீடியாவாக பயன்படுத்தி தான் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னவர் ரித்விக் கடக். இவரைப் பற்றி நீங்கள் எழுதிய உடனே எனக்கு சந்தோஷம் எல்லை மீறி விட்டது. இந்திய சினிமாவின் சரியான அடையாளங்களில் நடிகர் திலகத்திற்கு ஈடாக கருதக் கூடியவர் ரித்விக் கடக். நம்மவர் நடிப்பில் என்றால் கடக் இயக்கத்தில். அதுவும் Meghe Dhaka Tara படம், பார்த்து முடிந்த பின்னர் சில நாட்களுக்கு நமக்குள் ஹேங் ஓவரை ஏற்படுத்தும் படம். (கதை அவள் ஒரு தொடர்கதையை நினைவூட்டும்). நம் மக்கள் நமக்கு தெரியாத மொழிப் படங்களை நமக்களிப்பதில் வல்லவர்களாயிற்றே..

    அதுவும் அந்த கடைசி காட்சி நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பை நம்மால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ரித்விக் கடக்கின் மேற்சொன்ன மூன்று படங்களும் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே. அதுவும் Meghe Dhaka Tara



    இந்திய சினிமாவின் நூற்றாண்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கவேண்டிய பெயர் ரித்விக் கடக். என் அபிமான இயக்குநரைப் பற்றி எழுதியதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.



    இது வரை இப்படத்தைப் பார்க்காத நம் நண்பர்கள் பார்வைக்காக இதோ இப்படம்..

    வாசு சார், இது வரை நீங்கள் பார்க்கவில்லையென்றால் கட்டாயம் பாருங்கள். கதாநாயகி சுப்ரியா சௌத்ரியின் நடிப்பில் நாம் நம்மை மறந்து விடுவோம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Gopal.s thanked for this post
  8. #54
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kyatapira -2010- Koji Wakamatsu -Japan .

    1)முக்கால் வாசி இந்திய பெண்கள் கேட்கும் கேள்வி, எங்களுக்கு எங்கே ஞாயிறு?போராவது,அமைதியாவது? பெண்களுக்கு எங்கே விடிவு?ஆணை சார்ந்து வாழ்வு என்பது ,அவலத்தை சமூக திணிப்பாக சுமந்து வாழும் , இழிவு,பரிதாபம். இதில் மொழியென்ன,நாடென்ன,இனமென்ன ,மதமென்ன?

    2)ஆண்கள் எப்படியிருந்தாலும் ஏற்றே ஆக வேண்டிய நிலையில் பெண்கள். (படித்து,பொருளாதார பலம் பெற்ற பின்பும் தொடரும் அவலம்).ஒரு தமிழ் நாடகம் நினைவுக்கு வருகிறது. உலகிலேயே அதிகம் தாழ்த்த பட்டது தலித் ஆண்களல்ல, அவர்களால் மேலும் தாழ்த்த படும் தலித்தின் மனைவியே என்று.

    4)புனித போர், போர் நாயகர்கள் என்று உண்டா? போரில் குற்றவாளிகள் மட்டுமேதானே மிஞ்ச முடியும்?

    மேற்கண்ட கருத்துக்களை வலுவூட்டும் விதமாக முகத்தில் காரி உமிழ்ந்து ,அறையும் குரூர அருவருப்புடன் சொன்ன படமே கம்பளி பூச்சி என பொருள் தரும் மேற்சொன்ன படம். படங்களில் அருவருப்பு தன்மையை சுமக்க இயலாத மனம் கொண்டவர்கள் தயவு செய்து பார்க்க கூடாத படம் ,எடோகொவா என்ற எழுத்தாளரின் தடை செய்ய பட்ட சிறுகதையை தழுவிய இப்படம்.
    1930இன் ஜப்பான்-சீன போரின் பின்னணி. குரோகவா என்ற ஜப்பான் லெப்டினன்ட் போரில் பலர் குடலையுருவி,சித்ரவதை தண்டனைகளுக்கு பலரை ஆட்படுத்தி,பல பெண்களை கதற கதற கற்பழித்த பெருமையாளன் .போரில் முகம் சிதைந்து,தொண்டை அறுந்து, கைகால்கள் துண்டு பட்டு, சிறிதே உடல் ,பாதி முகம் என்று ஊரால் போர் கடவுளாக தொழ பட்டு ,பதக்கங்கள் மட்டுமே மிஞ்சின பிண்டம்.அவன் மனைவி தஷாஷியால் அவனை ஏற்க முடியாவிட்டாலும் ,ஊரின் கட்டளைக்கு கட்டு பட்டு அவனை ஏற்று சேவை செய்யும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறாள்.குரோகவாவுக்கு ,மனிதன் என்று சொல்ல மிஞ்சியிருப்பது குரூர வக்கிர உணர்வு,கோபம்,காமம்,பசி. தனக்காக எதுவுமே செய்ய இயலாதவன் சாப்பிடுவது,மல-ஜலம் கழிப்பது உட்பட. மனைவியை வற்புறுத்தி வினோத முறையில் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறான். (அவளை அடித்து துன்புறுத்தி கேவலமாக பில்லையில்லாதவள் என்று தூற்றியிருப்பான் நல்லாயிருந்த காலத்தில்)அவளை கோபமூட்ட, அவள் உடையணிந்து கிளம்பும் போது சிறுநீர் கழிப்பது,சாப்பாட்டை துப்புவது என்று மகா படுத்தல்.பதக்கங்களை ரசிப்பது ஒரே பொழுதுபோக்கு.

    துன்புறும் ,வேதனையுறும் மனைவி, அவன் மறுத்தும் கேளாமல்,ராணுவ உடையை அணிவித்து ,அவனை தள்ளு வண்டியில் ஊர்வலம் போவாள். (என்ன அற்புத பழிவாங்கல்).

    இறுதியில்,தேய்த்தே ,தவழ்ந்து சென்று குட்டையில் உயிர்விடும் பிண்டம். நம் பழங்கால கூத்தில் கட்டியக்காரன் போல,நம் மனசாட்சியாய் ஒரு கோமாளி.

    இந்த மாதிரி படங்களே,போரை வெறுக்க,பெண்ணை சகாவாய் அங்கீகரிக்க நமக்கு கற்று கொடுக்கும்.

    ஒரு சித்ரவதை போன்று நம்மை துடிக்க,துவள வைத்து,மனதை குதறி போடும் படம். ஆனால் முடிவில் ,இன்னும் மேன்மையாக்கும் நம்மை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes venkkiram liked this post
  10. #55
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஏன்? (1970)

    ம்ம். ராகவேந்திரன் சார் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று கூறி விட்டார்.

    அதனால் 'என்னதான் முடிவு?' என்று முடிவெடுத்து தந்தாகி விட்டது.

    ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

    ஏன்? இத்தனை ஏன்?

    ஏன்? என்று பார்ப்போம்.



    ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.

    1970 இல் பொங்கலுக்கு வெளிவந்த இந்தப் படத்துடன் நடிகர் திலகத்தின் எங்க மாமா, திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'மாட்டுகார வேலன்' படங்களும் ரிலீஸ்.

    குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

    சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!) பார்த்து விடலாம்.

    ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, மாஸ்டர் ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு ஏன்? என்னாயிற்று? என்று கேட்பீர்கள். வருகிறேன்.

    லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.

    தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மணவீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.

    அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.

    பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.

    பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.



    பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீஸிங் டார்ச்சர் கொடுக்கிறார்.

    அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.

    சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.

    ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

    இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.

    நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.

    வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.

    ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.

    ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி 'குடும்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது' என்று கூறி விடுகிறார்.

    மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.

    வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.

    கொலை செய்தது யார்? ஏன்?

    காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.



    போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.

    ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.

    'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?

    அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது.

    இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.

    மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.

    ஒரே ஒரு நபரைத் தவிர.

    அவர்தான் டி.ஆர்.பாப்பா.

    ஏன்? நிறுத்திவிட்டாய்? என்று கேட்கிறீர்கள்.

    ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
    Last edited by vasudevan31355; 1st July 2015 at 03:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes uvausan liked this post
  12. #56
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஏன் என்று நான் கேட்க மாட்டேன்.
    ஏன் என்றால், ஏன் படத்தைப் பற்றி நான் முன்னமே அறிந்திருந்தது மட்டுமல்ல, படத்தைப் பார்த்திருந்ததும் தான்.
    ஏன் என்றால் கண்ணாடி பாத்திரத்தைக் கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
    ஏன் என்றால் உரக்க இப்படத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் போய் சேருமல்லவா..

    சரி.. சரி. யாராவது கல்லைத் தூக்கி ஓடி வரப் போகிறார்கள். ஐயா வுடு ஜூட்..

    ஏன் பாட்டுப் புத்தகப் பக்கங்கள் உங்களுக்கு பரிசாக..

















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #57
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...

    விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.



    உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...

    கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #58
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மறக்க முடியாத கலைஞர்கள்.

    குசலகுமாரி



    நல்ல அழகான நடிகை. பரத நாட்டியத்தில் தேர்ந்த பயிற்சி. வழுவூர் ராமையாப் பிள்ளை, எம்.எஸ்.ராமசாமி பிள்ளை இருவரின் சிஷ்யை. நிறையப் படங்களில் நடனம் ஆடும் மங்கை.

    நடிகர் திலகத்துடன் குசலகுமாரி



    இவர் நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி' படத்திலேயே நடித்திருப்பார். படம் டைட்டில் முடிந்தவுடன் ஆரம்பமாகும் நாட்டிய நிகழ்ச்சியில் குசலகுமாரி நடனமாடிப் பாடுவார்.

    'வாழ்க வாழ்கவே
    வளமாய் எமது திராவிட நாடு
    வாழ்க வாழ்க வாழ்கவே'

    என்ற பாடலுக்கு ஆடுவார்.

    டைட்டிலில்

    நடனம் குசலகுமாரி, குமாரி கமலா என்று போடுவார்கள். இவர் முகத்தை முதலில் 'பராசக்தி'யில் காட்டிய ராசி நடிகர் திலகத்திற்கு முதல் படத்திலேயே வானளாவிய புகழைப் பெற்றுத் தந்தது என்று கூட கூறலாம்.



    அடுத்து



    'கூண்டுக்கிளி' படத்தில் நடிகர் திலகத்தை விரட்டி விரட்டிக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். தீபாவளிப் பண்டிகையின் போது ஒலிக்கும் வித்தியாச அற்புத பாடலான,

    'வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே
    தீப நன்னாளிதை ஒன்றாகக் கொண்டாடுவோம்'

    கோஷ்டிப் பாடலில்

    'மிகச் சிறியாரும் பெரியாரும் மகிழ்வே கொண்டே
    ஆடித் திரிவார் இன்றே சுகம் பெறுவார் நன்றே'

    வரிகளின் போது இவர் நடனமாடுவார்.





    படத்தில் இவருக்கு சொக்கி என்று பெயர். நடிகர் திலகத்துடன் தனியாக இவருக்கு ஜாலியாக ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடலில் பாவாடை தாவணியுடன் கொஞ்சம் கிளாமராக வருவார்.

    எனக்குத் தெரியல்லே
    நெஜம்மா எனக்குத் தெரியல்லே
    நெஜம்மா தெரியல்லே
    ஒன்னும் புரியல்லே



    பாடல் முடிந்ததும் நடிகர் திலகம் குசலகுமாரி கன்னத்தில் ஓர் அறை விடுவார். அதற்கு குசலகுமாரி மறு கன்னத்தை சிரித்தபடி காட்டி 'இந்தக் கன்னத்திலே' என்பார். நடனமும், பாடலும் அம்சம்.



    இன்னொரு காட்சியும் ரசம். தொழிலாளிகளுக்கு சாப்பாடு போடும் ஒரு கிழவியின் பேத்திதான் குசலகுமாரி. தலைவர் அந்தக் கிழவியிடம் சாப்பாடு கொடுக்கச் சொல்லி காசு தர வருவார். 'பாட்டி... பாட்டி' என்று கதவு தட்டி நடிகர் திலகம் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் பேரா' என்று குசலகுமாரி அங்கு வருவது அழகு. நடிகர் திலகம் பாட்டியை சாப்பாடு கொண்டு வந்து தரும்படி குமாரிடம் சொல்ல,அதற்கு குறும்பாக 'பாட்டி வராட்டி பேத்தி கொண்டு வந்து தரலாமா?' என்று சிரித்தபடி கேட்பதும் சுவை. 'எனக்கு வேண்டியது சாப்பாடு... இதுல பாட்டி கொண்டுகிட்டு வந்தா என்ன? பேத்தி கொண்டுகிட்டு வந்தா என்ன?' என்று நடிகர் திலகம் கடுப்பாக பதில் சொல்லி செல்வது இன்னும் டாப். (மனிதர் முகத்தில்தான் எவ்வளவு கடுப்பு?!) பின் நடிகர் திலகம் போனதும் பாட்டியிடம் தலைவரைப் பற்றி குமாரி சொல்லி மகிழும் நடிப்பு நன்றாக இருக்கும்.

    இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகர் திலகம் கழுத்தை பிடித்து நெரிக்கும் போது குசலகுமாரி புத்தி சொல்லி அழுவது அவர் சிறந்த நடிப்பிற்கு சான்று.

    அடுத்து,

    'கள்வனின் காதலி' படத்தில் குசலகுமாரி தலைவரின் தங்கை அபிராமியாக வருவார். இதில் படம் முழுக்க தலைவருடன் வருவார்.

    படத்தின் ஆரம்பத்தில் பானுமதிக்கு ஒரு கிழவருடன் கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் நடிகர் திலகம் பூங்குளம் ஊரில் இருக்கப் பிடிக்காமல் அவசரஅவசரமாக மூட்டை முடிச்சு கட்டி வெளியூர் செல்வார் குசலகுமாரியுடன். அண்ணனின் காதலுக்கு சப்போர்ட் பண்ணும் பெண் குசலகுமாரி.



    வெளியூரில் தங்கியிருக்கும்போது அங்கு பெரிய மனிதர் வேடம் போடும் டி.எஸ்.துரைராஜ் அவர்களின் கழுகுப் பார்வையில் சிக்கி குசலகுமாரி பரிதவிப்பது பரிதாபம்.

    நடிகர் திலகம் கள்வனாகி நீண்ட நாள் சென்று பிரிந்த தன் தங்கையை மைத்துனர் டி.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் சந்திக்கும்போது அந்தக் காட்சி நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

    'காவேரி' படத்தில் இவருக்கு ஒரு நடனக் காட்சி உள்ளது.



    நடிகர் திலகம் மனம் குழம்பியிருக்கும் நிலையில் அவர் புத்தியைத் தெளிய வைப்பதற்காக பத்மினி, ராகினி, குசலகுமாரி, மாடி லஷ்மி மற்றும் நடன மாதர்கள் ஜிப்ஸி கூட்டம் போல பாடி ஆடுவார்கள். அந்தப் பாடலில்

    கீழ்க்கண்ட

    'சுந்தரனுக்காக தோகை மயில் கொண்டு வந்தோம்
    சொந்தமாகத் தருவோமின்னா வந்த வேலை சரியில்லே'

    வரிகளைப் பாடி ஆடுவது குசலகுமாரிதான். ஆனால் சொற்ப நேரமே வருவார்.



    இதுவல்லாமல் 'நீதிபதி' இவர் நடித்த ஒரு முக்கியப் படம்.

    மலையாளத்தில் 1960-ல் வெளியான 'சீதா' என்ற படத்தில் நசீர் ராமனாக நடிக்க இவர் பிரதான சீதை வேடத்தில் நாயகியாக நடித்திருப்பார். பிரேம் நசீருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ('மரியக்குட்டி' 1959)

    இவர் சிரிப்பும் கொள்ளை அழகுதான். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். 'கலைமாமணி' 'கலைச்செல்வம்' பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

    வறுமையில் வாடி வரும் நடிகை குசலகுமாரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு வாடகை கட்ட முடியாமல் 2004 ல் அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும் அன்றே வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை குசலகுமாரிக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    அது சரி! இப்போது குசலகுமாரி என்ற நடிகையைப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்?

    விஷயம் இருக்கிறது.

    அக்டோபர் ஒண்ணாம் தேதி தானாக உங்களுக்குத் தெரிய வரும்.

    அதுவரை பொறுங்கள்.

    இதோ ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவர்களைப் பாராட்டி குசலகுமாரி மேடையில் பேசும் பேச்சு. கண்டு களியுங்கள். இப்போதும் இளமையாகவே இருக்கிறார்.

    Last edited by vasudevan31355; 8th July 2015 at 12:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  18. #59
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    குசலம் என்றால் நலம் விசாரிப்பதே அனைவருக்கும் நினைவு வரும். அதைத் தாண்டி குசல குமாரி என்ற அற்புதமான நடிகையை பலருக்கும் தெரிந்திருக்காது. அவரைப் பற்றி இவ்வளவு விரிவாகவும் அவருடைய நடிப்பாற்றல், அவர் நடித்த படங்களைப் பற்றியும் நினைவாற்றலுடன் எழுதக் கூடியவர் நீங்கள் ஒருவரே. வார்த்தைகளில்லை தங்களைப் பாராட்ட. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    கூண்டுக்கிளியில் அவருடைய புன்னகை நம் மனதைக் கொள்ளை கொண்டு போகும். சொல்லப் போனால், இவரை புன்னகை அரசி சீனியர் என்று சொல்லாம். இவரைப் பற்றி நம் நடிகர் திலக ரசிக நண்பர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது சரி ஏதோ அக்டோபர் ஒண்ணாம் தேதி தெரிய வரும் என்கிறீர்கள். அதென்ன என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #60
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ராகவேந்திரன் சார்
    தாங்கள் விரும்பியதை போலவே என்னிடம் உள்ள பழைய திரைப்பட ஆவணங்கள் இந்த திரியிலும் பதிவிடுகிறேன் .கடந்த கால சினிமா விளம்பரங்கள் பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறேன் . நன்றி .


    Last edited by Varadakumar Sundaraman; 11th July 2015 at 02:42 PM.

Page 6 of 15 FirstFirst ... 45678 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •