Page 2 of 15 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 145

Thread: நெஞ்சம் மறப்பதில்லை

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதிராம் சார்
    முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வரவேற்பும் கூற விரும்புகிறேன். தங்களுடைய தொடர்ந்த பங்களிப்பினைத் தர வேண்டும் என விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
    நடு இரவில் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி.

    தாங்கள் கூறியது சரி. முத்துராமன் ஜெயலலிதா என அவர்களுக்கும் திரி உள்ள நிலையில் திக்குத் தெரியாத காட்டில் பதிவினை அவற்றில் தான் போட்டிருக்க வேண்டும். சுட்டிக்காட்டியதற்கு உளமார்ந்த நன்றி.

    முடிந்த வரையில் இவற்றைத் தவிர்க்கலாம் என வைத்துக் கொள்வோம். முற்றிலும் தவிர்க்க முடியாது.

    தங்களிடமிருந்தும் மலரும் நினைவுகள், நினைவில் நிற்கும் திரைப்படங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க. சார்
    தாங்கள் கூறியது போல் நடு இரவில் படத்தில் சந்தேகம் எலலாரையும் சுற்றிச் சுற்றி வரும் ஒருவரைத் தவிர. அவர்தான் வீல்சேர் ராகவன்.
    மனுஷன் உட்கார்ந்தவாறே படத்தை ஓட்டி விட்டார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #13
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திடுதிப்பென வழக்கம் போல அந்தக்காலத்தில் - இரட்டைத் தெரு சந்திப்பில் ஒரு போஸ்டர்..

    அழகிய பாடல்கள் நிறைந்தபடம் ஒவ்வொரு பாடலும் வளைந்து வளைந்து இருக்க முத்துராமன் பாலாஜி விஜயகுமாரி எஸ்வி சகஸ்ர நாமம் போஸ்டர்

    பார்த்த பாடல்களெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்டதே

    படம் போலீஸ்காரன் மகள்..

    கதையாவது யாதெனில்:

    ரொம்பக் கறார் கட்டுப்பெட்டு போலீஸ்காரர் எஸ்.வி சகஸ்ர நாமம்.. சீட்டாடும் இடத்தில்பையன் முத்துராமன் இருந்தான் என்பதற்காக அவனையும் கைது செய்து லாக்கப்பில் அடைக்கும் கடின மனம் ..

    முத்துராமனின் தங்கை விஜயகுமாரி

    முத்துராமனுக்கு அவ்வளவாக நட்பில்லாத நண்பன் பாலாஜி

    பாலாஜி எப்படி

    தேன் உண்ணும் வண்டு .. பின் மலர் மாறும் வண்டு

    பணக்காரப் பிள்ளை..செலவுகளுக்குப் பல வழி உண்டு..எனில் கெட்டவன் தான்

    ஆனால் விஜயகுமாரியின் வெள்ளந்தித் தனத்தில் வந்து விடுகிறது காதல்..

    பாலாஜியின் அப்பா பணக்காரர் எனில் பணம் வெளியில் போகக்கூடாது என நினைத்து தங்கை மகளைக் கல்யாணம் செய்தால் தான் சொத்து என்று விடுகிறார்..
    தங்கை மகள் புஷ்பலதா..

    இருப்பினும் விஜியைக் காதலித்துவிட்டேனே எனத்தவிக்கிறது மனசாட்சி..அப்பாவிற்கோ பையன் ஏராளமான பெண்களுடன் பழகுபவன் எனத் தெரியும்..எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் கட்டிக்கோ எனச் சொல்ல பாலாஜியும் என்ன செய்வது எனச் சரி சொல்ல பின்னர் தான் வருகிறது சிக்கலே..

    பாலாஜியிடம் பெண்களைக் காட்டி பணம்பறிக்கும் இருவர் பணம் கேட்க நிஜமாகவே கையில் பணம் இல்லை என பாலாஜி மறுக்க கோபம்.. பாலாஜியின் முன்னாள் காதலி வீட்டில் சென்று அவளது அப்பாவைக் கொலை செய்து விடுகிறார்கள்..

    கொலை செய்த சமயம் பாலாஜி விஜயகுமாரியுடன் அன்புடன் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த சமயம்..

    கொலைப்பழி பாலாஜி மேல்

    இதனிடையில் போலீஸ்கார எஸ்வி சகஸ்ர நாமத்திற்கு பெண்ணின் காதல் தெரிய பொங்குகிறது சாட்டை அடியோ அடி பெண்மலரின் உடலெங்கும் காயங்கள்..

    அவள் பாலாஜி வீட்டிற்குச் சென்று நிலையைச் சொல்லலாமென்றால் பாலாஜியைப் பார்க்க முடிவதில்லை.. ஒரு சந்தர்ப்பத்தில் பாலாஜி புஷ்பலதாவுடன் விஜயகுமாரியைப் பார்த்து யாரென்றே தெரியாது எனச் சொல்லிவிட,

    விஜயகுமாரியும் கண்ணீரும் தான் உடன்பிறந்த சகோதரிகளாயிற்றே..பெருகுகிறது கண்ணீர்..

    பாலாஜியிடம் சேர்த்து வைக்க முத்துராமன் எடுத்த முயற்சிகளும் பலனளிக்காமல் போய்விட

    அங்கே பாலாஜியைக் கைது செய்கிறது போலீஸ்..ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.. எங்கிருந்தாய் கொலை நடந்த இரவு என்றால் பாலாஜி மெளனிக்கிறார்..

    விஜயகுமாரியே வந்து அந்த தேதி அவர் என்னுடன் தான் இருந்தார் நாங்கள் பாடி மாலையெல்லாம் மாற்றிக் கொண்டோம் என உடல் நிலை சரியில்லாமல் சொன்னாலும் அதைக் கேட்பதாக இல்லை..பின்னர் அங்கு இருந்த இன்னொரு ஜோடி சந்திரபாபு மனோரமா சாட்சி சொல்ல
    பாலாஜிக்கு விடுதலை..

    விஜயகுமாரிக்கும் தன் உயிரிடமிருந்து விடுதலை..

    எனச் சோகமாக முடியும் படம் தான்..

    ஆனால் திரையிட்ட ஒருவாரம் சனி ஞாயிறு ஹவுஸ் ஃபுல், மற்ற நாட்களில் ஹவுஸ் ஃபுல் இல்லாவிட்டாலும் நல்ல கூட்டம்.. ஸ்ரீதேவி தியேட்டரில்.. நான் பார்த்தது வியாழக்கிழமை ஈவ்னிங்க் ஷோ.. என நினைக்கிறேன்
    பாடல்கள்
    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    பொன் என்பேன் சிறு பூ என்பேன் காணும் கண் என்பேன் வேறு என் என்பேன்
    பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
    கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது..

    *
    இதில் இந்தப் பொன் என்பேன் பாட்டு ரொம்ப்ப்பப் பிடிக்கும்

    கொத்து மலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
    சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்
    தொட்டவுடன் நெஞ்சில் பொங்கிவரும் வெள்ளம்
    கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

    சின்னச் சின்னப் பறவை அன்னையவள் மடியில்
    தவழ்வதுபோல் நான் தவழ்ந்திருப்பேன்
    கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையிலெடுத்து
    காலமெல்லாம் நான் ரசித்திருப்பேன்

    நினைவிலிருந்து எழுதுகிறேன்..ம்ம் நல்ல பாட்டு..படமும் ஓ.கே..ஆனால் விஜயகுமாரியின் அழுகை கொஞ்சம் ஓவர் தான்..



    பின்ன வாரேன்..

  5. Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #14
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி சரி..விஜயகுமாரி பத்தி எழுதினா யாருக்கும் பிடிக்காதுன்னு தெரியாமப் போச்சு..

    ஏன் எஸ் பாலச்சந்தரோட பொம்மையைப் பத்தி எழுதப்படாது..

    அந்தப் படம் பார்த்த போது( இருவருடம் முன் தான் பார்த்தேன்) ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன்ன்னா பட இறுதியில் வரும் டைட்டில்ஸ்.. எல்லாரோட ஃபோட்டோ போட்டு பெயர் போடறது.. கே.ஜே.ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈ, பி.சுசீலா எல்லாரும் வெகு இளமையா இருப்பாங்க..

  7. Likes RAGHAVENDRA, vasudevan31355 liked this post
  8. #15
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!



    முதலில் தாங்கள் தொடங்கியிருக்கும் அற்புதமான திரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தங்களின் அற்புதமான நெஞ்சம் பறப்பதில்லை திரியை இன்றுதான் பார்க்க நேரிட்டது. பிள்ளைகள் படிப்பு, ஆபீஸ் என்று கடுமையாக வேலை. மதுர கானங்களில் பதிவு போடக் கூட நேரம் இல்லை.

    நம் மனதிற்கு பிடித்த படங்களைப் பற்றி இங்கே நிச்சயம் நேரம் கிடைக்கும் போது என்னால் இயன்றவற்றை நான் பதிவிடுகிறேன். திரையுலக ஜாம்பவானான தங்கள் திரியில் நானும் பங்கெடுத்து கொள்வது எனக்கு மிக மிகப் பெருமையே.

    எல்லாம் வல்ல நடிகர் திலகத்தின் ஆசியுடன் திரி வெற்றி நடை போடட்டும். மற்ற படங்களைப் பற்றி எப்படியோ தெரியாது இந்தத் திரியில் நடிகர் திலகம், மற்றும் அவருடைய படங்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் தர எண்ணியுள்ளேன். அதற்கு தங்கள் அனுமதியும் வேண்டுகிறேன்.

    எவ்வளவோ நெஞ்சம் மறக்காத படங்கள், நடிகர்கள் இருந்தாலும் நமக்கு நெஞ்சமே நடிகர் திலகம்தானே! அவரைத்தான் இங்கு முன்னிலைப் படுத்துவேன். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  10. #16
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நெஞ்சம் மறக்குமா?

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  12. #17
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  14. #18
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    உளம் மகிழ்வூட்டும் உற்சாகமான வரவேற்புரையுடன் இவ்விழையில் தங்கள் தடம் பதித்துள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பும் நன்றியும்.

    தங்களுடைய நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் ஏராளமான அனுபவங்கள் இத்திரியை அலங்கரிக்கக் காத்திருக்கின்றன என்பதை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    நாம் முன்னமே குறிப்பிட்டது போல் இதுவரை இம்மய்யத்தில் திரி துவங்கப்படாத அந்நாளைய நடிக நடிகையர் மற்றும் கலைஞர்களின் பங்களிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களைப் பற்றிய நம் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வோமே. நோக்கமே அது தானே. தங்களுடைய விருப்பத்தின் பேரில் தாங்கள் துவக்கமாக நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தங்கள் நினைவுகள் ஆய்வுகள், விமர்சனங்கள் இவற்றுடன் துவங்கலாம். முடிந்தால், யாரும் பார்த்திராத, நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் அல்லது வேற்று மொழிப் படத்தில் ஏற்று நடித்த பாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.

    தொடரும் பதிவுகள் அநேகம் அதிகம் அறிந்திராத இதர கலைஞர்களின் பங்களிப்பில் வந்த படங்களாக இருக்கட்டுமே..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #19
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னதான் முடிவு?



    எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கே.எஸ்.ஜி அவர்களின் 'என்னதான் முடிவு'? என்ற ஒரு படம். அப்படியா என்று ஆச்சர்யத்தில் நீங்கள் விரிவது உணரப்படுகிறது. தெய்வப்பிறவி, செல்வம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா, உயிரா மானமா, கண்கண்ட தெய்வம், கற்பகம் என்றெல்லாம் நம்மை ஈர்த்த அந்த இயக்குனரின் இன்னொரு அருமைதான் 'என்னதான் முடிவு'

    ஆனால் 'நத்தையில் முத்து' தெரிந்த அளவிற்குக் கூட வெளியே தெரியாத நன்முத்து.

    கதை.

    ஒரு கட்டிட மேஸ்திரி. கல்யாண வயதுடையவன். அவனுக்கு சிறு வயதில் ஒரு தம்பி, அப்புறம் அவனை விட வயதில் சிறிய ஒரு தங்கை. மேஸ்திரி தம்பி தங்கை நல்வாழ்விற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறான். அவனையே நேசிக்கும் ஒரு பெண் இருந்தும் கூட.

    பள்ளி பயிலும் தம்பி சூதாட்டம் போன்ற கெட்ட வழக்கங்களில் ஈடுபடுகிறான். ஆனால் அவனிடம் உயர்ந்த குணம் ஒன்று. எக்காரணம் கொண்டும் பொய் சொல்லவே மாட்டான். நடந்த உண்மையை அப்படியே எடுத்துரைப்பான். ஆனால் முரடன்.

    அண்ணன் தம்பியைக் கண்டிக்கிறான். ஒரு கட்டத்தில் தம்பி பொய் சொல்கிறான் என்று அவனை அடித்துவிட, அண்ணன் தன்னை நம்பவில்லையே என்று தம்பி கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் ஒரு குடிகார பணக்காரரின் உயிரைக் காப்பாற்றி அவர் அன்புக்குப் பாத்திரமாகிறான். அவர் பராமரிப்பிலேயே வளருகிறான். அவர் அவனை சொந்த மகன் போல வளர்க்கிறார். தம்பியும் வளர்ந்து வாலிபன் ஆகிறான்.

    நிறைய சொத்து இருப்பதனால் அவருடைய மேனேஜர் நயவஞ்சகம் புரிந்து அந்த சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறான். ஆனால் அந்தப் பணக்காரரை தம்பி நிழல் போல பாதுகாப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    ஆகவே மேனேஜர் ஒரு சதி வலை பின்னி அந்தப் பணக்காரருக்கு விஷம் வைத்து அவரைக் கொன்று விட்டு, அந்தப் பழியை தம்பி மேல் போட்டுவிட்டு போலீசில் மாட்டிவிட்டு விடுகிறான். ஒன்றும் அறியாத அப்பாவி தம்பி ஜெயில் போகிறான். தன்னை மாட்டிவிட்ட அந்த மானேஜரின் மேல் கொலை வெறி கொள்கிறான் தம்பி.

    மானேஜர் பணக்காரரின் சொத்துக்கள் முழுதையும் தன் வசம் ஆக்கிக் கொள்கிறான். ஆனால் அவன் மனைவி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அது பாவம் என்கிறாள்.

    ஊருக்கு கார் பயணம் செல்லும்போது கார் விபத்தில் தன் மனைவியையும், மக்களையும் பறி கொடுக்கிறான் மானேஜர். குற்றுயிரும்,கொலை உயிருமாய்க் கிடந்த அந்த மானேஜரை மேஸ்திரி அண்ணன் மற்றும் அவனது தங்கை இருவரும் காப்பாற்றுகிறார்கள். அவன் பருவ வயது தங்கை அந்த மானேஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறாள். அவள் சேவையில் மனிதனாகிறான் அந்த மிருகம். தான் செய்த பாவம்தான் விபத்தில் தன் மனைவியையும், மகளையும் பிரிய நேர்ந்தது என்று உணர்கிறான்.

    இப்போது தான் செய்த பாவங்களையும், குமரனை போலீசில் மாட்டி விட்ட குற்றத்தையும் நினைத்து நினைத்து மனசாட்சியுடன் போராடுகிறான் மானேஜர். தன்னை கவனித்துக் கொள்ளும் மேஸ்திரியின், அவன் தங்கையின் நற்குணங்களை கண்டு முழுதாக மனம் திருந்துகிறான்.

    தன்னுடைய செல்வங்களை எல்லாம் நற்காரியங்களுக்கு செலவிட்டு தன் பாவத்தைக் கழுவ முயற்சிக்கிறான். அனுதினமும் தன் பாவங்களை எண்ணி எண்ணி சித்ரவதை அனுபவித்து துடிக்கிறான். மேஸ்திரிக்கு தானே திருமணமும் செய்து வைக்கிறான். மேஸ்திரிக்கு கட்டிடங்கள் கட்ட உதவி புரிகிறான். ஏழை எளியோருக்கு வாரி வழங்குகிறான்.

    தம்பி இருக்கும் சிறைச்சாலையில் ஒரு கட்டிட வேலைக்காக அண்ணன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் போது அங்கே கைதியாய் இருக்கும் தம்பியைக் கண்டுகொள்கிறான். தம்பியும் அண்ணனை அடையாளம் கண்டு கொள்கிறான். தம்பி சிறையில் இருப்பதை அவமானமாக நினைக்கும் அண்ணன் அவனை வெறுக்கிறான். ஆனால் தம்பி தன் தங்கையை மட்டும் பார்த்துவிட அண்ணனிடம் அனுமதி வேண்டுகிறான். அண்ணனும் தங்கையைக் கொண்டு வந்து தம்பியிடம் காட்டுகிறான். தம்பியும் விடுதலை ஆகி வெளிவருகிறான்.

    தம்பி நடந்த கதைகளை சொல்லி, மானேஜர் தனக்கு இழைத்த அக்கிரமங்களைக் கூறி, அவனைக் கொலை செய்வதுதான் தன் வாழ்வின் லட்சியம் என்று சூளுரைக்கிறான். அண்ணன் அது தவறான முடிவு என்று அவனைத் திருத்தப் பார்க்கிறான். ஆனால் அது முடியாது போல் இருக்கிறது.

    தன்னை ஆதரிக்கும் மானேஜர் தான் தன் தம்பியை கொலை கேஸில் மாட்டிவிட்ட அந்தக் கயவன் என்று அண்ணனுக்குத் தெரியாது. அது போல தான் பழி வாங்கக் காத்திருக்கும் மானேஜர்தான் அண்ணனை வாழ வைத்தவன் என்று தம்பிக்குத் தெரியாது.

    மானேஜர் சில விஷயங்களுக்குகாக வெளியூர் சென்று விடுவதால் அவன் தம்பியை பார்க்க முடியவில்லை. ஆனால் தன்னை வாழ வைத்த தெய்வம் அந்த மானேஜர்தான் என்று தம்பியிடம் சொல்லி சொல்லி அவர் மேல் ஒரு மரியாதையை உண்டாக்கி வைத்திருக்கிறான் அண்ணன். அவர் வந்தவுடன் அவரைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்றும் உறுதி வாங்கிக் கொள்கிறான் தம்பியிடம் அண்ணன்.

    தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்து அதற்கு தானே தலைமை தாங்கி நடத்தித் தருவதாக ஊரிலிருந்து போன் மூலம் தெரிவிக்கிறான் மானேஜர்.

    இறுதியில் திருமண நாளும் வருகிறது. தம்பிக்கு மானேஜர் யாரென்றும் தெரிந்து விடுகிறது. கத்தியுடன் காத்திருக்கிறான். தங்கையோ திருமணக் கோலத்தில். என்ன நடக்கப் போகிறது?

    இறுதியில் மானேஜரும், தம்பியும் சந்தித்தார்களா? தன் அண்ணின் வாழ்வில் விளக்கேற்றிய மானேஜரை தம்பி மன்னிப்பானா அல்லது தன்னை பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்பி தன்னை நாசப்படுத்திய அந்த கயவனைக் கொல்வானா?

    தம்பி கொலை வெறி கொண்டு அலைவதை அண்ணனால் தடுக்க முடிந்ததா?

    கயமைத்தனம் புரிந்த மானேஜர் உண்மையாகவே இன்று ஊர் போற்றும் நல்லவன். அவன் இந்த சூழ்நிலையில் என்ன பண்ணுவான்? தான் செய்த பாவங்களுக்காக சாவைத் துணிவுடன் ஏற்றுக் கொள்வானா? இல்லை சாவிலிருந்து தப்பிக்க தன்னைக் கொலை செய்யத் துடிக்கும் மேஸ்திரியின் தம்பியை கொல்வானா?

    அன்பு வென்றதா?...பழி உணர்ச்சி வெற்றி பெற்றதா?

    இப்படிப் பல கேள்விகள்.

    இதற்கு

    'என்னதான் முடிவு?'

    அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.
    Last edited by vasudevan31355; 22nd June 2015 at 10:35 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Gopal.s, Russellmai liked this post
  17. #20
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்



    அருமையான தொடக்கம்... ஆஹா.. சென்னை கெயிட்டியில் வெற்றிகரமாக ஓடிய படம். நூறு ஐம்பது போன்ற இலக்க சிகரங்களை எட்டவில்லையென்றாலும் வணிகரீதியாக அத்திரையரங்கில் நல்ல வசூலைத் தந்த படம்.

    எங்கள் நண்பர் ஒருவர் மூலமாக நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமஃபோன் இசைத்தட்டைக் கேட்டு மகிழும் போது, அடிக்கடி நாங்கள் கேட்டு ரசித்தது, இந்த படத்தின் பாடல்களையே. நீண்ட நெடும் சுவரும் என்று டி.எம்.எஸ்.ஸின் கம்பீர குரல் அட்டகாசமாக ஒலிக்கும். அந்த 78 கிராமஃபோன் இசைத்தட்டின் பின்புறம் பொன்னைப் பார்த்து மயிலைக் காளை பாடல், சுசீலாவின் குரலில் நம்மை சொக்க வைக்கும்.

    இதற்கு மேல் எழுதி தங்களுடைய ஸ்வாரஸ்யமான எழுத்திற்குக் குறுக்கே வர விரும்பவில்லை அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 2 of 15 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •