Page 95 of 400 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #941
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    குறை ஒன்றும் இல்லை கோபாலா

    இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்


    16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம். 1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர், பொள்ளாச்சியில் சென்ட்ரல் லாட்ஜ் என்ற அசைவ உணவு விடுதி நடத்தி வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஆறுமுகக் கவுண்டர்.

    மாதம் ரூ.85-க்கு மணியார்டர் வரும்.
    தபால்காரருக்கு 1 ரூபாய் அன்பளிப்பு.
    மவுண்ட் ரோடு புகாரியில் அரைபிளேட் பிரியாணி 14 அணா (88 பைசா). டபுள் ஆம்லட் 50 பைசா. மனமும் வயிறும் நிறைந்த பிறகு
    மீதி ரூ. 82.50/-க்கு பட்ஜெட் போடுவேன்.
    காலை சிற்றுண்டி எழும்பூர் பாந்தியன் கபேயில் ரூ.15/- முன்பணம் கட்டி சாப்பிட்ட ஒரே நபர் நான்தான்.
    பூபதி கபே பகல் உணவு 30 கூபன் ரூ.14
    இரவு உணவு மவுண்ட் ரோடு கீதா கபே மாதம் ரூ.14.
    விருந்தாளி வந்தால் ஒரு கூபன் காலி. மறுநாள் இரவு நீர்தான் ஆகாரம்.
    வீட்டு வாடகை ரூ.15.
    ஓவிய உபகரணங்கள் ரூ.15.
    மாதம் 4 சினிமா பார்க்க ரூ 3.50 பைசா. 84 பைசா டிக்கட் இன்று கிடைக்காவிட்டால் நாளை அரை மணி முன்னால் போய் க்யூவில்.
    துவைத்த துணிகளுக்கு இஸ்திரி போட மாதம் ரூ.5.
    சலூன் செலவு 75 பைசா..

    திருப்பதி சென்று, 7 நாள் கோயில் வாசலில், கும்பலோடு படுத்துறங்கி, குழாய் நீரை கை பம்ப்பில் அடித்து குளித்து, நேரு கபே தண்ணிச் சாம்பாரில் இட்லியை அமுக்கிச் சாப்பிட்டு ஏழுமலையான் கோயிலைச் சுற்றிய இயற்கை எழிலை ஓவியமாகத் தீட்ட பஸ் கட்டணமும் சேர்த்து ரூ.35. இப்படி தர்மச் சத்திரங்கள், குறைந்த வாடகை ரூ. 1.50 முதல் அதிகபட்சம் ரூ.4 ஓட்டலுக்குக் கொடுத்து திருச்சி, தஞ்சை, மதுரை, கன்யாகுமரி, குற்றாலம், பாண்டி- இப்படி விடுமுறை நாட்களில் ஓவியங்கள் தீட்டச் செல்வேன்.

    மகாபலிபுரம் சைக்கிளில். ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு வெளித்திண்ணையில் படுத்து, தெருக் குழாயில் குளித்து, மாமல்லபுரம் கபேயில் சிற்றுண்டி முடித்து 5 ரத ஓவியம், கடற்கரை கோவில்,புது லைட்ஹவுஸ் என வரைந்து முடித்து, அடைமழையில் நனைந்தவாறு 30 கி.மீ. சைக்கிள் சவாரி செய்து திருக்கழுக்குன்றம் சென்று, ஓவியங்கள் தீட்டிக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு 30 கி.மீ, சென்னை அங்கிருந்து 42 கி.மீ. வண்டலூர் லேலண்ட் கம்பெனி, ஆயுத பூஜைக்கு கடலை, பொரி, சில்லு தேங்காய் கொடுத்ததை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொரித்தவாறு பயணித்த நாட்களை, இறைவா இன்னொரு முறை தரமாட்டாயா? -

    நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #942
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னக் கண்ணன் சார்,

    பக்குவப்பட்ட பதிவு. தங்கள் பெருந்தன்மைக்கும், நற்குணங்களுக்கும் இந்த பதிவு ஒன்றே சான்று. மற்றவர் மனம் கோணாமல் பதிவிடுவது எப்படி என்று உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகிறேன். நன்றி! நன்றி!

    இப்போது வழக்கமான உங்கள் வாஸ்ஸூ

    சின்னா!

    //கலை..மிக்க நன்றி.. குழந்தையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்..!//

    ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது. எங்கே பக்கத்தில் சிரிப்பு பொம்மை காணோம்.

    'ராதா ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு'

    போட்டாச்.... கேக்கல?
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes chinnakkannan liked this post
  5. #943
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து..//

    படித்து ரசித்தேன் கிருஷ்ணா! சிவாதான் எத்தனை அழகு!

    நடிகர் திலகத்துடன் சிவா இள வயதில் நடிக்கும் போது நடிகர் திலகம் சிவாவிடம் அடிக்கடி சொல்வாராம்..."டேய்! சிவா! என்னா அழகுடா நீ!"
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes rajeshkrv liked this post
  7. #944
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா?

    உண்மை கிஷ்ணாஜி -

    எங்கோ படித்தது

    " அன்று பாட்டி வீட்டில் பிறந்ததால் , பாட்டி வீட்டிற்கு அடிக்கடி போனோம் !!

    இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் , அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம் !!!"

  8. Likes chinnakkannan liked this post
  9. #945
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    great ravi
    gkrishna

  10. #946
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது ----



    Ubuntu: A very nice message ---

    An Anthropologist proposed one game to the kids of African tribal children.

    He placed a basket of fruits near a tree.

    And made them stand 100 metres away.

    And announced that who ever reaches first would get all the fruits in the basket.

    When he said ready steady go...

    Do you know what these small children did?

    They all caught each other's hands and ran towards the tree together, divided the fruits among them and ate the fruits and enjoyed it.

    When the anthropologist asked them why you did so?

    They said 'Ubuntu'..

    Which meant, 'How can one be happy when all the others are sad?'

    Ubuntu in their language means: 'I am because, we are!'

    A message for all generations..

    Let all of us always carry this attitude within us and spread happiness.


    Last edited by g94127302; 12th June 2015 at 06:54 PM.

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #947
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது

    200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்..


  13. Likes Russellmai, vasudevan31355 liked this post
  14. #948
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்//

    அருமை ரவி சார் ! இதுதான் ரவி சார் என்பது. பொருத்தமான அபூர்வ பாடல். 'யானையின் பலம் எதிலே!'
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #949
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவக்குமார் செம அழகு. கோட் சூட்டெல்லாம் போட்டுகிட்டு.

    'குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள்
    கொட்டிக் கிடப்பதென்ன'

    'எதிரொலி' பாடலில்

    சைக்கிள் காதல்.

    அதற்கு முன் தனியாக பஸ் ஸ்டாண்டில் நிற்கும் தங்கை லஷ்மியிடம் வழிந்து ஜொள் விடும் சிவக்குமாரை காரில் வரும் போது நடிகர் திலகம் பார்த்து விட்டு, பஸ்ஸில் செல்வதனால்தான் அந்தப் பையனைக் காதலிக்கிறாளோ என்று தங்கை மேல் சந்தேகம் கொண்டு, வீடு வந்தவுடன் லஷ்மிக்கு சைக்கிள் வாங்கித் தருவதாக உளவு பார்த்தபடி நைஸாக சொல்ல, தங்கை மறுப்பாள் என்று இவர் எதிரபார்த்தது நடக்காமல் லஷ்மி கில்லாடித்தனமாய் சைக்கிள் வாங்கித் தர சொல்ல, அந்த சைக்கிள் கேப்பில் தங்கை காதலிக்கவில்லை என்ற உண்மையை (!) உணர்ந்து கொண்டு (பாவம்.. அப்பாவி மனுஷர்)



    'பையன் சைட்ல இருந்துதான் ஒருதலைக் காதல்...
    தறுதலை' (சிவக்குமாரை நடிகர் திலகம் திட்டுவதைப் பாருங்கள்)

    (ரெண்டு வரியில என்ன ஒரு எக்ஸ்பிரஷன்ஸ்! மனிதரின் கண்கள் அப்படியே விளையாடும். 'தெய்வத்தை'ப் பத்தி புரியாத தறுதலைகளுக்கு புரிஞ்சா சரி!)

    என்று 'நடிகர் திலகம்' லஷ்மி போனவுடன் சொல்லி அமர்க்களப்படுத்தி பாடலை மறக்கடிக்கச் செய்து விடுவார். நம்ம புத்தி நம்மை விட்டுப் போகுமா?

    லஷ்மிக்கு நல்ல முகம். ஆனால் உடம்பு அந்தபந்தம் இல்லாம இருக்கும். குறிப்பா இடை. அப்படின்னா என்னன்னு கேட்பார். (ம்..இதுக்கு யார் யார்கிட்டே என்னென்ன வாங்கிக் கட்டிக்கணுமோ! ஒற்றர்கள் நடமாட்டம் வேற ஜாஸ்தி. ஆனா சின்னா இந்த விஷயத்தில் சப்போர்ட்டா இருப்பார்) என்ன சின்னா! மாமா மியூசிக். 'பாடகர் திலகம்' சிவாவுக்குப் சரிப்பட்டு வர மாட்டார். பாடல் சுமார் ரகமே. அருமையான தமிழுக்கு நன்றி!



    Last edited by vasudevan31355; 12th June 2015 at 10:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #950
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    chinnakkaNNan: You are going to 'read' my jugalbandi later? Here are a few lines from the song to read:

    samsaram samsaram
    samsaram sakala dharma saaram suka jeevana aadhaaram
    kaNavan manaivi ondraai iNai piriyaadhu iru kaNNum maNiyumpole
    iLam baalakar viLaiyaadum samsaram samsaram
    uravodu uNNa veNdum oorodu vaazha veNdum
    ................
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Likes kalnayak, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •