-
12th June 2015, 02:17 PM
#941
குறை ஒன்றும் இல்லை கோபாலா
இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்
16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம். 1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர், பொள்ளாச்சியில் சென்ட்ரல் லாட்ஜ் என்ற அசைவ உணவு விடுதி நடத்தி வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஆறுமுகக் கவுண்டர்.
மாதம் ரூ.85-க்கு மணியார்டர் வரும்.
தபால்காரருக்கு 1 ரூபாய் அன்பளிப்பு.
மவுண்ட் ரோடு புகாரியில் அரைபிளேட் பிரியாணி 14 அணா (88 பைசா). டபுள் ஆம்லட் 50 பைசா. மனமும் வயிறும் நிறைந்த பிறகு
மீதி ரூ. 82.50/-க்கு பட்ஜெட் போடுவேன்.
காலை சிற்றுண்டி எழும்பூர் பாந்தியன் கபேயில் ரூ.15/- முன்பணம் கட்டி சாப்பிட்ட ஒரே நபர் நான்தான்.
பூபதி கபே பகல் உணவு 30 கூபன் ரூ.14
இரவு உணவு மவுண்ட் ரோடு கீதா கபே மாதம் ரூ.14.
விருந்தாளி வந்தால் ஒரு கூபன் காலி. மறுநாள் இரவு நீர்தான் ஆகாரம்.
வீட்டு வாடகை ரூ.15.
ஓவிய உபகரணங்கள் ரூ.15.
மாதம் 4 சினிமா பார்க்க ரூ 3.50 பைசா. 84 பைசா டிக்கட் இன்று கிடைக்காவிட்டால் நாளை அரை மணி முன்னால் போய் க்யூவில்.
துவைத்த துணிகளுக்கு இஸ்திரி போட மாதம் ரூ.5.
சலூன் செலவு 75 பைசா..
திருப்பதி சென்று, 7 நாள் கோயில் வாசலில், கும்பலோடு படுத்துறங்கி, குழாய் நீரை கை பம்ப்பில் அடித்து குளித்து, நேரு கபே தண்ணிச் சாம்பாரில் இட்லியை அமுக்கிச் சாப்பிட்டு ஏழுமலையான் கோயிலைச் சுற்றிய இயற்கை எழிலை ஓவியமாகத் தீட்ட பஸ் கட்டணமும் சேர்த்து ரூ.35. இப்படி தர்மச் சத்திரங்கள், குறைந்த வாடகை ரூ. 1.50 முதல் அதிகபட்சம் ரூ.4 ஓட்டலுக்குக் கொடுத்து திருச்சி, தஞ்சை, மதுரை, கன்யாகுமரி, குற்றாலம், பாண்டி- இப்படி விடுமுறை நாட்களில் ஓவியங்கள் தீட்டச் செல்வேன்.
மகாபலிபுரம் சைக்கிளில். ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு வெளித்திண்ணையில் படுத்து, தெருக் குழாயில் குளித்து, மாமல்லபுரம் கபேயில் சிற்றுண்டி முடித்து 5 ரத ஓவியம், கடற்கரை கோவில்,புது லைட்ஹவுஸ் என வரைந்து முடித்து, அடைமழையில் நனைந்தவாறு 30 கி.மீ. சைக்கிள் சவாரி செய்து திருக்கழுக்குன்றம் சென்று, ஓவியங்கள் தீட்டிக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு 30 கி.மீ, சென்னை அங்கிருந்து 42 கி.மீ. வண்டலூர் லேலண்ட் கம்பெனி, ஆயுத பூஜைக்கு கடலை, பொரி, சில்லு தேங்காய் கொடுத்ததை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொரித்தவாறு பயணித்த நாட்களை, இறைவா இன்னொரு முறை தரமாட்டாயா? -
நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து...
-
12th June 2015 02:17 PM
# ADS
Circuit advertisement
-
12th June 2015, 02:50 PM
#942
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 03:21 PM
#943
Senior Member
Diamond Hubber
//நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து..//
படித்து ரசித்தேன் கிருஷ்ணா! சிவாதான் எத்தனை அழகு!
நடிகர் திலகத்துடன் சிவா இள வயதில் நடிக்கும் போது நடிகர் திலகம் சிவாவிடம் அடிக்கடி சொல்வாராம்..."டேய்! சிவா! என்னா அழகுடா நீ!"
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 03:26 PM
#944
Junior Member
Seasoned Hubber
இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா?
உண்மை கிஷ்ணாஜி -
எங்கோ படித்தது
" அன்று பாட்டி வீட்டில் பிறந்ததால் , பாட்டி வீட்டிற்கு அடிக்கடி போனோம் !!
இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் , அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம் !!!"
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 03:58 PM
#945
-
12th June 2015, 06:51 PM
#946
Junior Member
Seasoned Hubber
ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது ----
Ubuntu: A very nice message ---
An Anthropologist proposed one game to the kids of African tribal children.
He placed a basket of fruits near a tree.
And made them stand 100 metres away.
And announced that who ever reaches first would get all the fruits in the basket.
When he said ready steady go...
Do you know what these small children did?
They all caught each other's hands and ran towards the tree together, divided the fruits among them and ate the fruits and enjoyed it.
When the anthropologist asked them why you did so?
They said 'Ubuntu'..
Which meant, 'How can one be happy when all the others are sad?'
Ubuntu in their language means: 'I am because, we are!'
A message for all generations..
Let all of us always carry this attitude within us and spread happiness.
Last edited by g94127302; 12th June 2015 at 06:54 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
12th June 2015, 06:54 PM
#947
Junior Member
Seasoned Hubber
ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th June 2015, 09:08 PM
#948
Senior Member
Diamond Hubber
//நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்//
அருமை ரவி சார் ! இதுதான் ரவி சார் என்பது. பொருத்தமான அபூர்வ பாடல். 'யானையின் பலம் எதிலே!'
-
12th June 2015, 09:59 PM
#949
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th June 2015, 04:49 AM
#950
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: You are going to 'read' my jugalbandi later? Here are a few lines from the song to read:
samsaram samsaram
samsaram sakala dharma saaram suka jeevana aadhaaram
kaNavan manaivi ondraai iNai piriyaadhu iru kaNNum maNiyumpole
iLam baalakar viLaiyaadum samsaram samsaram
uravodu uNNa veNdum oorodu vaazha veNdum
................
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks