-
7th June 2015, 11:57 AM
#731
Senior Member
Senior Hubber
கல் நாயக் தான் காணோம்.. ரவி.. அஸ் யூஸ்வல் அருமை..பட் முடித்த பிறகு தான் முழுமையாக கமெண்ட்டுவேன்..ராஜேஷையும் காணோம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th June 2015 11:57 AM
# ADS
Circuit advertisement
-
7th June 2015, 12:18 PM
#732
Originally Posted by
chinnakkannan
ஆதிராம் நீங்க்ள் இருப்ப்து ஜித்தாவா ரியாத்தா.. இங்கு தண்ணீர் கஷ்டம் ஆரம்பித்தாகி விட்டது ..கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வராமல் கொஞ்சம்ப்ளாட் காம்பெளண்டில் இருக்கும் கிணற்றுத்தண்ணீர் மோட்டாரில் எடுக்கப் பட்டு பின் பக்கெட்டால் வீட்டிற்குக் கொண்டு வருகிறோம் (எந்த நேரத்தில் வாசு சாரைக் கிண்டல் பண்ணினேனோ.. )
மற்ற படி.. தண்ணீர் கண்ட பின்பு மாறும் எங்கள் கண்ணீர்..
பின்ன வாரேன்..
டியர் சி.க.
நான் இருப்பது ஜித்தாவில் சரபியா ஏரியா. கேரள நண்பர்கள் அதிகம். இங்கும் கடும் வெயில் வாட்டுகிறது. கடல்நீரை குடிநீராக்கி தருவதால் செங்கடல் வற்றும்வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது.
-
7th June 2015, 01:51 PM
#733
Senior Member
Senior Hubber
ஆதிராம் பதிலுக்கு நன்றி 15 ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமாம்..அப்புறம்.. பழகிவிடுமாம்
//கடல்நீரை குடிநீராக்கி தருவதால் செங்கடல் வற்றும்வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது.// இங்கும் அப்படித் தான்..ஆனால் ஏதோ ரிப்பேர் அல்லது ஏன் இப்படி என சரியான காரணம் தெரியவில்லை. டார்செய்ட் என்று ஒரு இடம் உண்டு அதில் கடந்த ஒருமாதமாக தண்ணீர் வரவில்லை.. இப்போது ஏரியா ஏரியாவாக வராமல் போய்க் கொண்டிருக்கிறது,..
-
7th June 2015, 02:44 PM
#734
Junior Member
Seasoned Hubber
ஆதிராம் சார் - நீங்கள் இங்கு வந்து பதிவுகளை படிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது . பதிவுகள் போடவும் வேண்டுகிறோம் . உங்கள் தாயார் எப்படி இருக்கிறார்கள் ? என் பணிவான வணக்கங்களை அவர்களுக்குச்சொல்லவும் .
இந்த "கருவின் கரு " ஆரம்பித்ததே மையம் திரியில் உள்ள அனைத்து நல்ல உள்ளகளைப்பெற்ற அந்த இனிய தாய் தந்தைகள் அனைவருக்கும் என் பதிவுகள் மூலம் ஒரு புகழாஞ்சலியத்தந்து வணங்கவே ..... பார்க்காத முகங்கள் - ஆனால் கையெடுத்து கும்பிட வேண்டிய நடமாடும் தெய்வங்கள் அவர்கள் இருவர் மட்டுமே
பதிவுகளில் தவறுகள் இருந்தால் எடுத்துச்சொல்லுங்கள் . திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்
-
7th June 2015, 09:23 PM
#735
Senior Member
Senior Hubber
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை..
கொஞ்சம் யோசித்தால் எக்கச்சக்கமாகப் புலப்படும்..எனது சுதா ஸ்டீஃபன் சுந்தர்ராஜன் என்ற கதையில் பின் வருமாறு எழுதியிருந்தேன்:
1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகரின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ஆளிடம் பேரம் பேசி 200 ரூபாயில் டிக்கட் வாங்கி உள்ளே சென்று படம் திராபையாய்ப் போய்விட, தலைவலியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் குறுக்கே மைக்கை நீட்டி 'நாங்கள் சன் டிவியில் இருந்து வருகிறோம் படத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ' என்று கேட்கும்போது.
2. அழகாய் இருக்கிறாளே என்று நினைத்து கஷ்டப் பட்டு அப்துல் ரகுமான், மீரா போன்றவர்களின் கவிதையையெல்லாம் கோட் பண்ணி வெகு நேரம் செலவழித்து ஒரு கடிதம் எழுதி ஒரு பெண்ணிடம் ஒரு வாலிபன் சேர்த்தால் அதைப் படிக்காமலேயே அவனிடம் அவள் 'ஐ, லவ் யூ ' சொன்னால், அந்த வாலிபனுக்குச் சப்பென்று போய் வெறுத்து விடும்,
அது சரி இப்போது கோட் பண்ணுமளவிற்கு என்ன நேர்ந்தது..
என்ன நேரவில்லை.. தண்ணீர் திடீரென நின்று விட்டது .. பின் நண்பரிடம் பேசலாமென்றால் இன் டர் நெட் போனின் சிக்னல் வீக் காகி விக் விக்கென்று அழுகிறது.. போதாக்குறைக்குப் பொன்னியம்மா வந்தாளாம் என்ற சொலவடை போல என்னாச்சுன்னாக்க….
வெளியில் வெய்யில் எனில் வீட்டுக்குள்ளாறேயே இருந்தததால் ஏசி காற்றா அல்லது இன்னபிறவா தெரியவில்லை.. வீட்ல தாண்டா உனக்குத் தண்ணீர் வரவில்லை..இதோ உன் மூக்கிலேயே வரவழைக்கிறேன் என்று யாரோ கண்பட்டாற் போல ஸாரி மூக் பட்டாற்போல ஜலதோஷம் அதனால் தலைவலி அதனால் கண் கனத்தல் அதனால் சனி க்கிழமை முடிந்து அதனால் ஞா.கி வீக் ஆரம்ப ஆஃபீஸ்..
ஆஃபீஸில் போய் எல்லாரிடமும் மெல்லினமாய்ப் பேசப் பயந்து கொஞ்சம் முறுவல் கொஞ்சம் முகச்சீற்றம் என வைத்துக் கொண்டுவேலைபார்த்துக்கொண்டிருந்தேனா.. சரி லிட்டில் ஃபீவர் வர்றாமாதிரி இருக்கே என நினைத்து கொஞ்சூண்டு ரெண்டே ரெண்டு பனடால் நான்கு மணி நேர இடைவெளியில் போட்டுக் கொண்டால்.. ஜுரம் கூடுதற்போன்ற பிரமை..இலவச இணைப்பாய் லொக் லொக்..
வீட்டுக்கு கிளம்பும் போதாவது சும்மா இருக்கலாமில்லையா.. எடை பார்க்கலாம் டயட்டில் இருந்தோமே எனப் பார்த்தால் பழைய அதே எடை மூன்றிலக்க எண்.. கூட்டல் இரண்டு வரும்.. சோ ஓஓகம்.. பத்துகிலோ உடல் எடை மிச்சம் மூளை தான் (ஹை) என நினைத்தாலும் டயட்டில் இருந்த போது பத்து நாள் முன் மூன்றோ நான்கோ கிலோ குறைய அதனால் டயட்டை அலட்சியமாக விட்டு விட்டதில் இப்படி ஆகிவிட்டதே என வருத் வருத் தமா க இருந்தது..
சே இந்த எடை இருக்கிறதே..(ஹப்பாடி விஷயத்துக்கு வந்துட்டியா) எப்படியாவது குறைக்கவேண்டும் என்று சங்கல்பம்..ஆனால் விடுமுறையில் ஃபணால் ஆகுமா எனத் தெரியவில்லை..
சரி எடை போடும் பாடல்களைப் பார்க்கலாமா..ஹிஹி..
கண்ணில் துளிர்த்த நீருடன் பார்ட்டியில் ஹீரோயின் பாடும் போது மற்றவர்களெல்லாம் எப்படி சிரித் சிரித் ஆடுவார்களோ தெரியவில்லை..ஒருவேளை தமிழ் சினிமாவில் மட்டுமே இப்படியா..
சர்ரூ.. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா- பொங்கும்
விழி நீரை அணை போடவா
என விக் விக்கென அழ சுற்றியிருப்பவர்கள் ஆட பின் எடைக்கு – எடை வார்த்தைக்கு வருவார்..
பொருளோடு வாழ்வும் உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உறையாடுவார்
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
சே..இங்கே எடைபோடப் படுவது அன்பு..அதுவும் சீப்பாக..ஐயோ பாவம் சர்ரூ..
*
அடுத்த இடை..ஸாரி எடை..
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ என்று ஜாலியாக க் காதல் பாட ஆரம்பிக்கும் ஹீரோ ரட்சகனில் என்ன சொல்றார்..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...
எனக் கேட்டு விட்டு
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
என்றும் சொல்கிறான் காதலன்..அதாவது
இடையேன் மெலிந்தது ஏந்திழையோ காதல்
நடைபயின்று நின்றதால் தான்
என்பதையே காதலால தான் அந்தப் பொண்ணு லாஸ்ட் வெய்ட் என்கிறான்..சுஷ்மிதாசென் (இவங்க மூன்மூன்சென்னுக்கு ரிலேஷனா (ஹை வலை வீசியாச்சுன்னுல்லாம் சொல்ல மாட்டேனே))
*
காதல் நா என்ன செய்யும்.. தலை சுத்தும்.. அவனுக்கு அவள் நினைப்பு அவளுக்கு அவன் நினைப்பு.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நெனச்சுக்கிட்டே அவன் அவன்வீட்டுமொட்டை மாடியிலிருந்து நிலவைப்பார்க்க
அவளோ அவள் வீட்டு பால்கனின்னு தமிழ்ல சொல்லப் படற சாளரத்திலிருந்து பார்த்து பெருமூச்சு விட்டு எண்ணங்களை அலைபாய விட்டு உடலையும் வருத்திக் கொள்வாங்களா.. ஸாரி பிரதர்.. இவையெல்லாம் அந்தக்காலத்தில்
இப்ப இங்க பாருங்க..காதல் வந்துடுச்சு பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன பண்றாங்க.. ஒண்ணுமே பண்ணலை.. ச்சும்மா இருக்காங்க பாஸ்…
சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி ஆளகொன்னுட்டா
சார்லி சாப்ளின் என்னும் படத்தில் காயத்ரி ரகுராம் என்ற நடனமாடும் கொழுக்கட்டை ச் சிலையைப் பார்த்து பிரபு தேவா பாடும் பாடல்..
இங்கயும் எடை வருது..
காதலன் சொல்றான்.. ரொம்ப கன்ஃபீஷன் ஆய்ட்டான் போல..வள்ளுவனும் உன்னைப் போல் காமத்துப் பால் வடிக்கலைன்னு சொல்ல அந்த ப் பொண்ணு உச்சிகுளிர்ந்து
எடைக்கு எடை எடைக்கு எடை முத்தமிடலாமாங்கறா.. எந்த எடைன்னு சொல்லவே இல்லை..
//கல் நாயக்கிற்காக க் கொசுறாக ஒன்று..
கல் நாயக் இந்தப் பாட்டில் முற்றிலும் தேமா ஆன எழுசீர் விருத்தத்திற்கான ஒருவரி வருகிறது..
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா.//
*
பெண்கள் நாங்கள்.. எங்களுக்கு விருப்பமான ஆடை அணிகலன்களை அணிவோம்..அதனாலேயே எங்களை மட்டமாக எடை போடக் கூடாது அது தவறு என்கிறார் ஊர்மிளா மடோன்கர். அப்படி எடைபோட்டால் உம்மைக் கைது செய்து சட்டப்படி உள்ளே வைத்துவிடுவாராம் என்கிறார் இந்தப் பாடலில்
அக்கடான்னு நாங்க உடைபோட்டா
துக்கடான்னு நீங்க எடைபோட்டா தடா உமக்குத் தடா..
*
ம.தி என்ன கேக்கறார்..
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
இப்படிக் கவித்துவமாச் சொன்னா எல்.விஜயலஷ்மி மெல்ட் ஆகமாட்டாங்களா என்ன..
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
அதாவது அந்தம்மா சமர்த்தா அழகா ஆடறாங்களாம்..அவங்க மனசு அவங்க கிட்ட இல்லையாம்.. ம.தி.கிட்ட சொல்றாங்க நாசூக்கா..
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் சுகம்.. அழகியபாட்டு..
*
இந்தக் காதலன் அதாவது அஜீத் ச்சும்மாவாவது இருந்துருக்கலாம் அந்தப் பொண்பாட்டுக்கு செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமமாகாதோன்னு கவித்துவமாப் பாடிக்கிட்டிருககியில டவுட்டா அவங்களைத்தூக்கிப்பாத்துட்டு டபக்குன்னு கீழே விட்டும் விட்டுட்டு கேள்வி கேக்கறார்..
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
அந்தம்மா வோட பதில் கேள்வி..
மொத்தத்தில் காதலின் எடை
என்ன ஆகும் இப்படி சோதிக்கிறாய்
அழகான பாடல் பவித்ரா படம்.
*
கல்யாணத்துக்கப்புறம் நார்மலா பீப்பிள் வில் புட் ஆன் வெய்ட் தானே.. ஆனா இப்படி இல்லையாம்.. ஏற்கெனவே காதலிச்ச பொண்ணு தான்..வேற ஒருத்தரைக் கல்யாணம்கட்டி க் கிட்டதும் அவரிடம்கொஞ்சம் முழு ஈடுபாடுஇல்லாம் இருக்கப் பார்த்தும் கூட கொஞ்சம் சிலபல சம்பவங்களால மனசும் அசைந்து கொடுக்குதாம்.. ஹஸ்பெண்ட் பால் ஈடுபாடு பட்டு கொஞ்சம் கொஞ்சமா த் தன்னைத் தானே மாத்திக்கறாங்களாம்..அதனால எடையும் குறையுதாம்..
இதைத்தான் ஈரம் படத்துல சுசித்ரா வாய்ஸ்ல அழகா சொல்றாங்க
தரை இறங்கிய பறவை போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுக்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்
*
இங்கபாருங்க ப்ரஷாந்த்தும் லைலாவும் வெளி நாட்டுக்கெல்லாம்போய் டூயட் பாடும் போதும் டவுட் வந்துடுச்சு.. (பார்த்தேன் ரசித்தேன்படம்)
ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
இப்படிக் கேக்கச் சொல்ல அந்தப் பொண்ணு என்ன சொல்லணும்..ஆனாலும் அதுக்கு ரொம்ப்ப இதுங்க்க..அதான் குஷில சொல்வாரே விஜயகுமார் அடம்ங்க்க என்ன சொல்றாங்க குரல் கொடுத்த வசுந்தரா தாஸ்..(ஆண் குரல் சோனு நிகமாம்)
காதல் என்னும் பிச்சைதான் பெண்கள் இடுகிறோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
இது கொஞ்சம் ஓவர் தான்..ஆனா க்க பாட்டு நல்லா இருக்கே. படம் பார்க்கும் போதுஓட்டி விட்டேன் என நினைக்கிறேன்..இப்ப கேக்கப் பாக்க நன்னா இருக்கு.. (ஆமா மஜ்னுவின் காதலி பெயர் கொண்டவர்க்கு கண்கள் சிரிக்கிறதா என்ன)
*
மறுபடியும் ம.தி.. பாட்டுக்குப் பாட்டெடுக்கும் போதுஎன்ன சொல்றார்
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலை முடித்து
பின்னலாய் சடைபோட்டு என் மனச எடை போட்டு
மீன் பிடிக்க வந்தவளை நான் பிடிக்க ப் போனேனே
மையெழுதும்கண்ணாலே பொய்யெழுதிப் போனாளே..
கொயட் இண்ட்ரஸ்டிங்க் தானில்லை..
*
இப்படி எடையைத் தேடித் தேடிப் பார்த்ததில அனேகமா பத்துக் கலோரியாவது குறைஞ்சிருப்பேன்னு நினைக்கறேன்..
நிறைய எடை புதுப்பாட்டு எடையா இருக்கு.. விட்டுப் போன பழைய பாடல் எடை தருவீங்க தானே..
பின்ன வாரேன்..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th June 2015, 07:38 AM
#736
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 07:44 AM
#737
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 56
மூன்றாவது படிவம் : " அம்பா " - ஆரம்பம்
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
பிறந்த குழந்தைகள் எல்லாமே நல்ல குழந்தைகள் தான் என்றாலும் - அவர்கள் நான்றாக வளரவேண்டும் என்ற ஒரு நல்லெண்ணம் அவளை , குழந்தைகளை அவள் இருக்கும் வரை சுமந்துகொண்டே இருக்க வைக்கின்றது ... முடியும் வாழ்க்கை - முடிவில்லாத தியாகங்கள் - தொடரும் எண்ணங்கள் - தொடராத அவள் இளமை ; மூடும் விழிகளாக அவளின் குழந்தை - மூடாமல் காக்கும் அவள் இமைகள் - அப்பப்பா எத்தனை கனவுகள் - பட்டாம் பூச்சிகளைப்போல என்றுமே ஓயாத அவள் உழைப்பு - விட்டில் பூச்சிகள் போல விரைந்து முடிவடைகிறது அவள் வாழ்க்கை -----
முதலில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் உறங்கும் மாயகண்ணைனை எழுப்பி விடுவோமா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th June 2015, 07:53 AM
#738
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 57
" அம்பா "
உண்மை சம்பவம் -8
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று வெள்ளிகிழமை - டெல்லியில் ஒரு மீட்டிங் - 3மணிக்கு இண்டிகோ flight . இப்பொழுது 12மணிதான் ஆகிறது - வீட்டிலிருந்து 30 நிமிடங்களில் ஏர்போர்ட் சென்று விடலாம் - மேலும் வெப் செக்கின் பண்ணிவிட்டதால் சற்றே பால்கனியில் நின்றுகொண்டு விஜி போட்டுக்கொடுத்த காபி யை சுவைத்துகொண்டிருந்தேன் --- என்னுடைய garage பக்கம் இருந்து அந்த கருப்பு நாயின் ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது ...
"விஜி ! என்ன இந்த நாய் நேற்று முதல் நம் வீட்டு அருகில் இருந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கிறது ?- சனியன் - தொரத்திவிட்டாலும் இங்கேயே சுத்துகிறது - சத்தம் கொடுமையாக இருக்கிறது ! - முனிசிபாலிட்டிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தாயா ?"
எனக்கு நாய் என்றாலே அலர்ஜி - அதுவும் கருப்பு நாயென்றால் அதற்க்கு எதிர்புறமாக ஓடுவேன் ..
விஜி , என் மனைவி , எனக்கு எது பிடிக்காதோ அதை அவள் கண்டிப்பாக விரும்புவாள் -- எனக்கும் , என் மனைவிக்கும் சேர்ந்து பிடிக்கும் ஒரே விஷயம் ஜல தோஷம் ஒன்றுதான் .
" என்னங்க அது ரொம்ப பாவங்க - பிள்ளயாண்டிருக்கிறது - நிறை மாதம் - எப்பவேண்டுமானாலும் குட்டிகளை போட்டுவிடும் - அது பிரசவ வேதனையால் கத்துகிறது - கொஞ்சம் கருணை காட்டுங்கள் "
விஜியின் கண்களில் கங்கையின் பிரவாகத்தைக்கண்டேன் -- எங்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஓடிவிட்டன - இதுவரை ஆண்டவன் எங்களுக்கு அந்த குழந்தை பாக்கியத்தை ஏனோ தரவில்லை - செய்யாத தருமம் இல்லை , போகாத கோயில் இல்லை, பார்க்காத மருத்துவர்கள் இல்லை - விஜியின் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட வரவில்லை . இருவரிடமும் எந்த பிரச்சனையும் இல்லையாம் --- கடவுள் அருள் செய்தாலொழிய இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை . தத்து எடுத்துக்கொள்ளலாம் -- ஏனோ விஜிக்கு அந்த topic யை எடுத்தாலே அழுகை வந்து விடுகிறது -- அவள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை - நான் இழந்து பல நாட்கள் ஆகி விட்டன .
" விஜி உன் விருப்பம் - நான் செல்கிறேன் - நான் திரும்பி வருவதற்குள் இந்த நாய் இங்கு இருக்ககூடாது "
என் வேலை முடியவில்லை , வருவதற்கு 10 நாட்கள் ஆகிவிட்டது -- ஒரு சந்தோஷமான விஷயத்துடன் வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்தேன் - வெகு நாட்களாக வரவேண்டிய என் உத்தியோக உயர்வு கிடைத்த செய்தியை விஜியுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் - வேண்டுமென்றே ,போன் sms , whatsapp , ஈமெயில் , twitter , facebook எதிலுமே இந்த செய்தியை அவளுக்கு தெரிவிக்கவில்லை - suspene தொடருட்டுமே !!
வீட்டை வந்தடைந்தேன் -- அந்த கருப்பு நாயை பார்க்க முடியவில்லை - அதன் சத்தமும் கேட்கவில்லை -- விஜி அதை அனுப்பியிருப்பாள் - என் கோபம் அவளுக்கு ஒரு அச்சத்தை தந்திருக்கலாம் .
வீட்டில் விஜியும் இல்லை - எல்லா இடத்திலும் தேடினேன் விஜி கிடைக்கவில்லை --- மெதுவாக என்னுடைய பெரிய தோட்டத்திற்கு சென்றேன் - அங்கு நான் கண்ட காட்சி - பிரமிக்க வைத்தது .. விஜியின் மடியில் பால் போன்ற வெண்மை நிறத்தில் மூன்று labrador retriver -- அருகில் அந்த மூன்றின் தாய் -- என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் கால்களை ஈரமாக்கியது - நாக்கினால் என் முகத்தை அலம்பியது - கண்களில் முட்டிவரும் கண்ணீர் - நன்றிகள் தோய்க்கப்பட்ட கண்ணீர் --
விஜி " மன்னிச்சிடுங்க - நான் தான் இங்கே இவைகளை கொண்டுவந்தேன் - பிரசவ வலியை நான் அனுபவித்ததில்லை - ஆனால் இந்த நாயின் மூலம் உணர்ந்தேன் -- 6 குட்டிகள் - மூன்றை நம் டிரைவருக்கு கொடுத்துவிட்டேன் -- இந்த மூன்றையும் நாமே வளர்க்கலாமா ?
மீண்டும் அவைகளின் தாய் என் முகத்தை நன்றியுடன் நக்கியது - என் மடியில் அதன் குட்டிகள் -- என் பயம் எங்கோ ஒளிந்துகொண்டது -- அந்த தாயின் உணர்ச்சிகளை முதல் முறையாக புரிந்துகொண்டேன்
labrador family என் வீட்டில் வந்த நேரம் விஜியும் விரைவில் தாய்மை அடைந்தாள் -- இதைத்தான் வரம் என்று சொல்வார்களோ - ??தாய்மையின் சக்தியை , அதன் வலிமையை , அதன் புனிதத்தை அந்த labrador retriver மூலம் , விஜியின் உதவியுடன் புரிந்துகொண்டேன் -------
Last edited by g94127302; 9th June 2015 at 08:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th June 2015, 07:59 AM
#739
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 58
" அம்பா "
என்னவெல்லாம் கனவுகள் - அந்த தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்னின் சிரிப்பில் - கனவுகள் வாழ்ந்தன - கனவாகவே !!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th June 2015, 08:02 AM
#740
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 59
" அம்பா "
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே -----
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks