Page 50 of 400 FirstFirst ... 40484950515260100150 ... LastLast
Results 491 to 500 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #491
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் பாடல்.

    //மச்சினின்னு பாட்டே இல்லையே//



    சி.க,

    உங்களுக்காக ரொம்ப ஸ்பெஷலாக இதுவரை யாருக்கும் தராத ஒரு பாடலைத் தர போறேன். நான் மட்டுமே பல வருடங்களாக பார்த்து ரசித்து வந்த பாடல். இப்போது உங்களுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். நான் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.

    தெலுங்கில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி (நம்ம ஊர் மயிலேதான்) நடித்த ஒரு படம் ('Kshana Kshanam') தமிழில் டப் ஆகி வந்தது. தயாரிப்பு ஏ .எம்.ரத்னம். தமிழில் 'என்னமோ நடக்குது'. (புதுசில்லை) நம்ம ராம் கோபால் வர்மா இயக்கிய படம். படம் செம ஜாலி. ஒவ்வொரு பாட்டும் செம அமர்க்களம்.

    மரகதமணி மியூசிக். பின்னி எடுத்துடுவார் மனுஷன்.

    இந்தப் பாடல் காட்சிக்கு வருகிறேன். எதிரிகளிடமிருந்து தப்பி ஒரு காட்டுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் நாயகன், நாயகி இருவரும். காடு முழுவதும் ஓடி, ஓடி கால்கள் தேய்ந்து ஒரு சமயம் உட்கார்ந்து இருக்கும் போது கதாநாயகன் போராக பீல் பண்ணுகிறான். ஒரு ஆட்டம் பாட்டம் இல்லையே என்று சோம்பல் முறிக்கிறான். அப்படியே காட்டுவாசிகள் கூட்டம் கூடுகிறது.

    'ஜும்பாயே....ஆகும்பையே.....ஆகும்பையே ..ஜும்பாரே,,,ஆகும்பையே'

    என்று காட்டுவாசிகள் கத்திக் கொண்டே ஆட,

    துவங்குகிறது ஆர்ப்பாட்டமான டான்ஸ்.

    சும்மா ஸ்ரீதேவி ஆட்டத்தில் கவர்ச்சியாக பட்டை உரிக்க, கூட வசந்தமாளிகை எடுத்தவரின் வாரிசு உடன் சேர்ந்து ஆட பாலா, சித்ராவின் வளமான குரலுடன் கோஷ்டியினரின் கோரஸும் ஒலிக்க, காட்டுவாசிகளின் பின்னணியில் என்றும் திகட்டாத பாடல்.

    ஆனால் யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள். இப்போது கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

    சரி! திடீரென்று ஏன் இந்தப் பாட்டு உமக்கு?

    காரணம் இருக்கிறது. 'மச்சினி' என்று பாட்டே இல்லை என்று எழுதினீரா? அதெப்படி இல்லை என்று கூற முடியும்? அதனால்தான் உமக்கு இந்தப் பாட்டு. (மாட்டினீரா)

    "மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
    ஜும்பாயே...ஆகும்பையே

    அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
    ஜும்பாயே....ஆகும்பையே...

    அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
    உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி

    அது என்ன விலை நான் என்ன விலை
    நான் மோகினி இரவினில் முக்கனி கனி"

    சி.க,

    பாட்டை கவனமாக முழுசா கேட்டு என்ஜாய் பண்ணுங்க. டப்பிங் பாட்டு போலவே இருக்காது. சூப்பரோ சூப்பர். முக்கியமா டவுன்லோட் பண்ணி வச்சி டெய்லி கேளுங்க. அப்படியே அடிமை ஆயிடுவீங்க. அப்புறம் பதிவு போடக் கூட வராம இந்தப் பாட்டையே கேட்டுகிட்டு இருப்பீங்க.



    மஞ்சள் உடை அணிந்து, பச்சை உடை அணிந்து, தலையில் காட்டுப்பூக்கள் வைத்து நம்ம ஸ்ரீதேவி அமர்க்களம். என்ன சொல்லுங்க...எத்தனை பேர் வந்தாலும் மயிலுக்கு ஈடு இணை இல்லை.

    சி.க ஒரு வேலை உங்களுக்கு தரேன்.

    இந்த பாடலின் முழு வரிகளையும் கேட்டு நீங்கள் இங்கே லிரிக்ஸ் பதிய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.


    வீடியோவில் சரியாக 4.45க்கு தொடங்கும் பாடல். ஆமாம் பிறந்த நாள் சுந்தர பாண்டியன் சாருக்கா? இல்லை உமக்கா?

    அடிச்சீரய்யா லக்கி பிரைஸ் பாடலை.

    இதோ பாடல்.

    "மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு"



    அப்படியே தெலுங்கிலேயும் பார்த்துடுங்க. தெலுங்கிலும் அருமை.

    'Chali Champutunna Chamakkulo' (மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு)



    உமக்காக மெனக்கெட்டு இம்மாம் பெரிய பதிவு போட்டிருக்கேன். ஒழுங்கா ராட்சஸி பாட்டை போடும்.
    Last edited by vasudevan31355; 1st June 2015 at 09:21 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #492
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க. சார், வாசு சார்
    மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
    ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்..
    [ஹய்யா... சி.க. கேட்ட மச்சினச்சி பாட் வந்துடுச்சே...]

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes vasudevan31355 liked this post
  6. #493
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    அரிதான பாடல்களைத் தேடிப்பிடித்து அளிப்பதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது..
    தூள் கிளப்புங்கள்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #494
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vanakkam ji
    vanakkam ellorukkum

  9. #495
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் வணக்கம் - அருமையான பதிவுகளாக தொடரும் இந்த திரியில் சற்றே அன்னையின் புகழாஞ்சலியும் தொடருட்டுமே . யாருக்கும் மறுப்பு இருக்காது என்று நினைக்கிறேன் ......

    கரு தொடர்கின்றது ---------


  10. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  11. #496
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 28

    தாயின் மடியில் தலை வைத்து சற்றே உறங்க நினைக்கிறேன் - அவள் நினைவுகள் தான் படுக்கையாக வருகிறது - உலர்ந்த என் உதடுகள் சொல்ல சொல்ல , என் , வற்றிய கண்கள் இந்த கவிதையைப்படிக்கின்றது :

    ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
    சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
    நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
    நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

    ஜனனமும் பூமியில் புதியது இல்லை
    மரணத்தை போலொரு பழையதும் இல்லை
    இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
    இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

    பாசம் உலாவிய கண்களும் எங்கே
    பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே
    தேசம் அளாவிய கால்களும் எங்கே
    தீ உண்டதென்று சாம்பலும் எங்கே


    கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
    மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
    எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
    எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

    பிறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
    இறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
    நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
    மறதியைப்போல் ஒரு மாமருந்தில்லை

    கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
    தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
    நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
    மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

    மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
    மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
    வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
    விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

    பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
    யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
    நித்திரை போவது நியதி என்றாலும்
    யாத்திரை என்பது தொடர்கதையாகும்.

    தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
    சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
    மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
    அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .

    அம்மாவின் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
    தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
    பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
    போனவள் புண்ணியம் எம்முடன் சேர்க



  12. Likes vasudevan31355 liked this post
  13. #497
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 29

    எல்லாம் எனக்குள் இருந்தாலும் , என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில்
    அவளே என்றும் என் தெய்வம் ----

    ( thanks to சித்தூர் வாசு - இந்த பாடலை அலசும் முன் உங்கள் பதிவு வந்து விட்டது ) - இந்த பாடல் ஏற்படுத்தும் positive vibes யை சொல்ல வார்த்தைகளே இல்லை - தன்னம்பிக்கை , எல்லாமே தான் அனுபவிக்கத்தான் இறைவன் படைத்திருக்கான் என்ற ஆழ்ந்த கருத்துக்கள் - முடிவில் இதற்க்கெல்லாம் காரணம் ஒரு அன்னை என்று அழகாக முடிவடையும் வார்த்தைகள் ---


  14. Likes vasudevan31355 liked this post
  15. #498
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    vanakkam Rajeshji!
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #499
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்! அருமை!

    முதுகு காடுங்க. (புறமுதுகு இல்ல).

    ஹப் நிர்வாகம் முதுகு சொறியற மாதிரி இன்னுன் ஏன் smiley போடல?
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #500
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி,

    வாங்க. குறுகிய நோக்கத்துக்குப் பின் (ஸாரி மீள முடியலப்பா) குறுகிய இடைவெளிக்குப் பின் 'துறுதுறு'ன்னு சுறுசுறுப்போட வந்திருக்கீங்க. 'அம்மா' அமர்க்களம் மீண்டும் ஆரம்பம். ஹய்! ரெட்டை அர்த்தம் வருதே. நான் உங்க பதிவுகளை சொன்னேன் சார். தாய்ப் பாடல்கள் பாடகர் திலகத்தின் குரல்களில் அமுதம்.

    தங்கள் கைபேசி அழைப்புக்கு மிக்க சந்தோஷம். கலை போல நீங்களும் என் உயிருக்கு உயிரான நண்பர். (அடுத்த சதித் திட்டத்திற்கு உங்க எல்லோரோட உதவியும் தேவை)
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •