Page 369 of 400 FirstFirst ... 269319359367368369370371379 ... LastLast
Results 3,681 to 3,690 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3681
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    0.30 மற்றும் 1.34 விநாடிகளில் கவனித்தால் தெரியும். தண்ணீர் மட்டத்திற்கு மேலேயும் தண்ணிர் மட்டத்திற்குள்ளேயும் காட்சி படமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது உதாரணத்திற்கு மட்டுமே. இன்னும் பாடல் காட்சியில் அங்கங்கு காணலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3682
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker

    தமிழ் கௌபாய் / கௌகேர்ல் பாடல்கள் !!

    கௌபாய் என்றவுடன் அழுக்கான ஜீன்ஸ் முள்சக்கரம் வைத்த ஷூஸ், கைகளில் சுழலும் துப்பாக்கிகள் சகிதம் குதிரையேறும் கிரிகரி பெக், கிளின்ட் ஈஸ்ட்வுட், டெரன்ஸ் ஹில் ...ஜெய் சங்கரின் 'கர்ண' காமிரா படங்களெல்லாம் மனதில் ஓடியிருக்குமே!!

    தமிழ் கௌபாய் என்பது (தொழில்நுட்ப ரீதியாக பால் கறக்கவும் சக்கர் மெஷின்கள் வந்துவிட்ட போதும்) வெற்றுடம்புடன் வெறும் அரைக்கால் டிரவுசர் யூனிபார்மில் முதலில் கன்று வயிறுமுட்டக் குடிக்கவிட்டு ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கும் பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கும் செண்பகப் பசுநேசர் ராமராஜனையே குறிக்கும்! கோமாதா அவர் குலமாதா!

    Pasu Nesan's Nation!!



    ராமராஜி பிரமீளா ...



    கோமாதா எங்கள் குலமாதா .....

    [url]https://www.youtube.com/watch?v=IX1s1_Et1Cs

    ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கும் பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கும் அறிவாளி !

    [url]https://www.youtube.com/watch?v=6vyVE5HfOZs
    Last edited by sivajisenthil; 10th September 2015 at 07:54 PM.

  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #3683
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா

    //( சிக்கா கிட்ட கேட்டா... ஜி..கா.. ஜி..கா.. என்க் உண்ட்... தம்.. தம்.. என் க் உ ண் ட் அப்படின்னு சொல்லிடுவார்.. இல்லாட்டி

    //அல்வா துண்டாட்டம் அசைந்தாடும் சிஐடி
    பல்லை காட்டத்தான் வைத்தார் - சொல்லை
    இசையோடு பாடும் எல்லார் ஈஸ்வரியோ
    பசை போட்டு விட்டாரே பார்...

    அப்படின்னு ஒரு வெண்பா சொல்லிடுவார்.. ( சிக்கா குண்டாந்தடியோடு வரதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் )//

    மதுண்ணா.. வெண்பா அல்மோஸ்ட் ஓ.கே


    அல்வாவின் துண்டாய் அசையும் சிஐடி
    பற்களைக் காட்டுதற்குப் பாடவே - சொல்லை
    இசையோடு பாடிடும் எல்லார் ஈ நெஞ்சில்
    பசைபோட்டு விட்டாரே பார்..
    .
    நு மாத்திக்கலாம்.. எல்லார் ஈ, சிஐடி எல்லாம் ஆங்கில எழுத்துக்கள்..

    வெரி நைஸ்..உங்க்.. வெண்பா வில் கம் நன்ற்..

    *
    //ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே ஓடோ ஓடென்று ஓடி பணம் கொட்டோகொட்டென்று கொட்டிய தண்டர்பாலை அண்டெர்வாடர் போடோக்ராபியில்
    முறியடிக்க இதுவரை வேறுபடம் ஏதுமில்லை !!//

    சி.செ.. மதுரை தங்கம் தியேட்டரில் ஸ்கூல் படித்த சமயத்தில் The Deep என்றுபார்த்த ஒருபடம்மனதில் நிழலாடுகிறது.. நன்றாக ஓடியதா எனத் தெரியாது..அதுவும் முக்கால் வாசி தண்ணீர்க்குள்ற தான் இருக்கும்.. கதை யார் நடித்தார் என்பதெல்லாம் மறந்த் போச்..

    அவள் ஒரு நவரச நாடகம் பாடல் பற்றிய விவரங்களுக்கு நன்றி..சிந்தாமணியில் அரை டிராயர் சி.க ஆவென்று பார்த்தபடம் அது!

    //யூ.ராஜகோபால் மிகவும் பிரயத்தனப்பட்டு எடுத்த பாடல் காட்சி அவளுக்கென்று ஓர் மனம் மலர் எது பாடல் காட்சி. அந்தக் காலத்திலேயே நீச்சல் குளத்தின் அருகில் தரையில் பள்ளம் தோண்டி தண்ணீர் மட்டத்திற்குள் காமிராவால் ஒளிப்பதிவு செய்ய ஏதுவாக சுவற்றில் ஓர் துளையை ஏற்படுத்தியும், அதே போல் பிரத்யேகமாக ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட சிலிண்டரை உடலுடன் கட்டிக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு தண்ணிருக்குள்ளே ஊடுருவியும் எடுக்கப்பட்ட பாடல் காட்சி. இதைப் பற்றி யூ.ராஜகோபால் அப்போது வெளிவந்த ஒரு சினிமா பத்திரிகையில் எழுதியுள்ளார். பேசும் படமோ பொம்மையோ இல்லை.// தாங்க்ஸ் ஃபார் த தகவல் ராகவேந்தர் சார்..

    *

    சி.செ. மாட்டுக்கார வேலன் இருக்கே.. சத்தியம் நீயே தர்மத் தாயே குழந்தைவடிவே தெய்வ மகளே..ட்ரியோ..

    மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டில் உழுது போடு செல்லக்கண்ணு.. இருக்கே..

    தம்பிக்கு எந்த ஊரில் பால்கறக்கும் மாட்டிடம் கராத்தே போல ஏதோபேசி உதை வாங்கும் ரஜினி..

    தி.ஜானகி ராமனின் எருமைப் பொங்கல் கதை நினைவுக்கு வருகிறது..

    *

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  8. #3684
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Si Ka...

    About the film The Deep....my nostalgia with data and information from reliable sources like Wikipedia and IMDB by Courtesy)

    The Deep is a 1977 adventure film directed by Peter Yates and based on Peter Benchley's novel of the same name. The film stars Robert Shaw, Jacqueline Bisset, and Nick Nolte.

    Storyline :

    While scuba-diving near shipwrecks off Bermuda, vacationing couple David Sanders (Nick Nolte) and Gail Berke (Jacqueline Bisset) recover a number of artifacts, including an ampoule of amber-colored liquid and a medallion bearing the image of a woman and the letters "S.C.O.P.N." (meaning "Santa Clara, ora pro nobis" or "Saint Clara, pray for us") and a date, 1714. Sanders and Berke seek the advice of lighthouse-keeper and treasure-hunter Romer Treece (Robert Shaw) on the origin of the medallion, who identifies the item as Spanish and takes an interest in the young couple. The ampule is noticed by the man who had rented diving equipment to Sanders and Berke, which in turn attracts the attention of Henri Cloche (Louis Gossett, Jr.), a local drug kingpin for whom the shop owner works, who unsuccessfully tries to buy the ampoule and then begins to terrorize the couple with Haitian black magic. The ampule contains medicinal morphine from the Goliath, a ship that sank during World War II with a cargo of munitions and medical supplies. The wreck of the Goliath is considered dangerous and is posted as off-limits to divers due to the danger of explosions. Treece concludes that a recent storm has exposed her cargo of morphine and unearthed a much older wreck containing Spanish treasure.

    Through research in Treece's library, they reconstruct the history of the lost treasure ship, locate a list of valuable items, including a metallic jar with the letters "EF" engraved on it, and learn the identity of the noblewoman (Elizabeth Farnese) for whom they were made by the king of Spain. Sanders is determined to locate at least one item on the list to establish provenance; since without it there is no value to the treasure. Treece wishes to destroy the Goliath to put the morphine out of reach of Cloche; and Cloche interferes with their efforts so that he can recover the morphine for himself. During a running series of conflicts Treece's friend Kevin (Robert Tessier) is murdered by one of Cloche's henchmen and Adam betrays them and is killed when he triggers a booby-trap while trying to steal the recovered morphine. A climactic battle during the final dive ensues, with Cloche and his divers being killed in the destruction of the Goliath and the recovery of a gold dragon necklace that will provide the needed provenance of the treasure.




    Music

    The film's score was composed by John Barry, who at the time was most famous for his work on the James Bond film series. In the same manner of a Bond film, Barry collaborated with a high profiled singer for the film's theme song. American singer Donna Summer teamed up with Barry for the film's signature song entitled "Down Deep Inside (Theme From The Deep)". Summer was a singer under contract to the film production company, Casablanca Record&FilmWorks. The song was nominated for a Golden Globe Award and a hit on the U.S. Dance Chart, as well as a top-five singles hit in the UK, and a top-forty hit in the Netherlands.



    Though technically the movie was ok, box office sagged soon and collected a lukewarm response only.

    senthil
    Last edited by sivajisenthil; 10th September 2015 at 08:22 PM.

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #3685
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breaker!

    Cartoon Charachters dancing with human beings !

    Front and Back Light Animation Matte Process!!

    கார்டூன்கள் மாந்தருடன் இணைந்து நடனமாடினால் ..?!

    நடனம் என்பதே மனிதர்களுக்கும் முறையான பயிற்ச்சியினால் மட்டுமே ஆளுமை கொள்ளக்கூடிய அற்புதமான கலை

    குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் கார்டூன்களும் மனிதருடன் இணைந்து நடனமாடினால் ....




    Though we are now in the state of the art motion capturing era, imagine how this could be achieved in 1945 that is 70 years back?!!!!
    Last edited by sivajisenthil; 10th September 2015 at 09:05 PM.

  11. Likes Russellmai liked this post
  12. #3686
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ.. தி டீப் படத்தைப் பற்றி விரிவான கதைக்கும், தகவல்களுக்கும் நன்றி.. நான்பார்க்கிறேன்..யெஸ் அந்த முகமிப்போது நினைவில்..தங்கத்தில் பார்த்த போது முழுக்கப் பார்த்துவிட்டு கதை புரியவில்லைஎனச் சொல்லிக்கொண்டு வந்தது நினைவில்..பட் கூட்டம் இருந்த நினைவு.. தாங்க்ஸ் அகெய்ன்..

  13. #3687
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அவளுக்கென்று ஓர் மனம்' படத்துக்கு முன்பாகவே சிஷ்யன் 'ஜில்லென்று காற்று வந்ததோ' என்று ஜெய்சங்கரையும், பாரதியையும் நீச்சல் குளத்திலே முக்க வைத்து, நின்று கவனித்து காதலிக்க வைத்து விட்டாரே. அண்டர் வாட்டரிலேயே சில காட்சிகளும் உண்டே. மறந்தாச்சோ! இல்லை நான்தான் கவனிக்காமல் சொல்கிறேனா?

    Last edited by vasudevan31355; 11th September 2015 at 07:52 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #3688
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சில மீள் பதிவுகள் இடலாமென்றிருக்கிறேன்..சுவாரஸ்யக் குறைவின் கண்டிப்பாகச் சொல்லவும்..

    *

  15. #3689
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார்..

    **

    அத்தியாயம் ஒன்று

    **
    கோவிலில் சென்றால் தெய்வத்தைக் கும்பிடவேண்டும் என்பது நியதி..அந்த வாலிபனுக்கும் அவ்வண்ணமே நினைப்பு தான்..இருப்பினும் அவனோர் கவிஞன்..கவிஞன் கண்களில் கட்டெறும்பு தட்டுப்பட்டால் என்னாகும்

    விட்டுவிட்டுச் செல்லாமல் வேகத்தைக் கூட்டியே
    எட்டிநீ செல்வதெங்கு ஏஎறும்பே – வட்டிலிட
    பெண்ணொன்று காத்திருக்க பேதைநீ செல்வதைக்
    கண்ணிலே கண்டுவிட்டேன் காண்..

    இப்படி எறும்பைக்கூட கவியாக்கும் சின்னக் கவிஞர்கள்(ம்க்கும்.. நான் தான்) இருக்கையில் அந்த இளைஞனோ மகாகவி.. கண்ணில் தட்டுப் படுகிறாள் ஒரு நங்கை.. உடன் ஒரு மங்கை..உடன் ஒரு ஆள்.. முறையே மான் மயில் நரியெனச் சென்றாலுங் கூட முதல் நங்கையின் எழில் முகம் மனதில் பல அலைகளை எழுப்பிப் பொங்க வைத்துக் கவியாக வெளிப்படுகிறது..

    தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
    குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
    பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
    பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

    மரபுக்கவிஞன் தான் மகாகவி காளிதாஸன்.. பெண்ணுக்காக கொஞ்சம் மரபை மீறி மரபுக்குள்ளேயே கவிதை பாடிவிட்டான்..அதுவும் என்ன மரபு.கட்டளைக் கலித்துறை..கொஞ்சம் சிரமமான விஷயம் தான்..

    வெண்டளை பயில வேண்டும் நேரசையில் ஆரம்பித்தால் ஒவ்வொரு வரியிலும் 16 எழுத்துக்கள் (புள்ளி வைத்த எழுத்துக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது) முடியும் போது ஏகாரத்தில் முடியவேண்டும்.. இதை எல்லாம் எழுதிப்பார்க்க பேனா பேப்பர் (அந்தக்காலம்) ஒரு கம்ப்யூட்டர் எம் எஸ் வேர்ட் அண்ட் தமிழ் ஃபாண்ட் ப்ளஸ் விரல் (இந்தக்காலம்) வேண்டும்..

    என இருக்கையில் ,மனதுள் உதித்துப் பாடினால் எப்படி இருக்கும்..அதுவும் இரண்டு விதமாய்த் தென்படும் வண்ணம்..

    ஒரு விளக்கம்: ”அடி பெண்ணே.. இந்த உலோகம் தங்கம் இருக்கிறதே அதுவே தாமரை மொட்டுக்கள் போல ஆனது போன்ற நிறத்தில் உனது நகில்கள் நிமிர்ந்து நிற்க, குங்குமச் சாறு ஊறியதாற்போன்ற சிவந்த நிறங்கொண்ட உன் முகத்தில் குறு குறுவென இருக்கும் கருவண்டுகள் என உன் கண்கள் காட்சியளிக்க தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பங்கய னான பிரம்மனின் வியப்புக்குரியதான படைப்பாகி பசுங்கொடி போல் துவண்டிருக்கும் நீ – உன் மேல் பகுதியில் அப்படியே பொங்கியே பூரித்து புறப்படு வரும் முழு நிலவென உன் முகம் இருக்குதடி.. நீயும் புறப்பட்டு விட்டாய்..”

    இன்னொரு விளக்கம்” “ஓ நிலவே..தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுத்து நிற்க குங்கும நிறம் போன்ற மின்னும் தாமரை மலர் முகப்பினில் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, தந்தைத் தாமரையின் மகளாகிய பெண் தாமரை எழுகிறது..அதன் மேல் நீயும் பொங்கி எழுந்து புறப்படுகிறாய்..”

    கேட்ட வனிதை அதிர்ச்சியில் நிற்க அவளைத்தவிர அந்தப் பாடலைக் கேட்டது இன்னொருவர்..அரசன்..அவனும் கவிஞன்..

    இந்தக் கவிஞர்களுடைய சுபாவமே கவிதை நன்றாக இருந்தால் ரசித்துவிட்டு மெளனமாக இருப்பார்கள்.. கொஞ்சம் ஏதாவது தென்பட்டால் உண்டு இல்லை தான் ஆக்கிவிடுவார்கள்..

    அது போல அந்த அரசனான கவிஞனுக்கும்.. “ ஓய்..பாடல் நன்னாத் தான் இருக்கு”

    காளிதாஸன் வணங்கி “ நன்றி “

    “ஆனாக்க ஒம் பாட்டில ஒரு பிழை இருக்கும் ஓய்..”

    “என்ன அது”

    “ கவி முரண் இல்லியோ.. பாடறது நிலாபத்தி அப்படியே தாமரையையும் கோத்து விட்டிருக்கீங்களே.. தாமரை பகல்லன்னா மலரும்..

    “ இல்லீங்க்ணா.. தாமரைன்னு சொல்லலியே தாமரை மொட்டுன்னா சொன்னேன்..”

    மன்னனுக்கு உடன் தன் பிழை புரிந்தாலும் உடனிருந்தவர்கள் ஒப்பாமல் டெஸ்ட் வைக்க அதில் காளிதாஸன் பாஸானது வேறு கதை..

    இந்த கட்டளைக் கலித்துறைப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியம்..

    மகாகவி காளிதாஸில் வரும் அனைத்து மரபு க் கவிதைகளும் எழுதியவர் அவர். பிறந்தது 1920 அண்ட் காலமானது 2004.. திரைப்பாடலில் மரபுக்கவிதையைப் புகுத்தியவர்களுள் ஒருவர் எனலாம்.. வெகு அழகான பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் இருந்தவர்.. பாரதிதாசன் மீது மிகப் பற்று வைத்திருந்தவர்..

    வீரபாண்டிய கட்டபொம்மனில் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் இவர் தான்..
    மற்ற பாடல்கள்
    யாரடி நீ மோகினீ
    சித்திரம் பேசுதடி
    அமுதைப் பொழியும் நிலவே
    நெஞ்சினிலே நினைவு முகம்
    இன்பம் பொங்கும் வெண்ணிலா

    இன்னும் பல..

    அவற்றில் ஒரு பாடல்

    நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்த தேவாரப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962..அந்த தேவாரப் பாடல் மந்திராமவது நீறு

    அந்தப் பாடலை நாதஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாதஸ்வர மேதை அருணாசலம்.

    இப்படித் தேடுகையிலேயே ஒன்று தோன்றியது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு..இதற்கு – இந்த நாதஸ்வர இசைக்கு ப் பொருத்தமாக வேறு பாடல் எழுதினால் என்ன..

    அப்படியே கவிஞரைக் கூப்பிட கவிஞரும் எழுதிக் கொடுக்க பல பேரைப் பாடவைத்தால்..என்னமோ.. அந்த மரபிசைப் பாடலுக்கும் நாதஸ்வர இசைக்கும் அந்தப் பாடகிகளின் குரலுக்கும் ஏதோ ஏதோ.. நல்லாத் தான் இருக்கு ஆனால்..
    கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார் .

    கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது.
    'ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது.இப்பாடலை எழுதிய கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
    கு.மா.பாலசுப்பிரமணியத்தின் க.க து பாடல்காட்சி – மகாகவி காளிதாஸ்..


    https://www.youtube.com/watch?featur...&v=gr7jj-RtXLE

    இனி என்ன ..இன்னொரு காதல் பாட்டு தான்..

    ஆமாம் காதல்னா என்னங்க.. காதலே மாயை..ஒரு சின்னக் கனாலோகம் தானே..
    கனவின் மாயா லோகத்திலே நாம்
    கலந்தே உல்லாசம் காண்போமே நாம்
    கலந்தே உல்லாசம் காண்போமே

    தீங்கனியே உன்னாசை போலே நாம்
    இணைந்தாடுவோம் இந்நாளே

    ரொம்ப எளிமையாக கு.மா.பாலசுப்பிரமணிய ம் எழுத பாடியவர்கள் டி.எம்.எஸ் பி.சுசீலா..இளமை ந.தி, நடிகையர் திலகம் சாவித்ரி ( ஒல்லியாய் இருக்கிறார்) படம் அன்னையின் ஆணை..

    https://www.youtube.com/watch?featur...&v=wzkXoR41lOE

    **

    அடுத்து வரும் கவிஞர் தாவணி போன்ற ஒன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்..கொஞ்சம் யூனிக்கான கவிஞர்.. தனக்குப் பிடித்தவருக்காக தன் பெயரையே மாற்றிக் கொண்டவர்..

    அவர் யாரென்றால்….

    (ஹி ஹி..இன் நெக்ஸ்ட் அத்யாயம்)

    தொடரும்..
    Last edited by chinnakkannan; 11th September 2015 at 01:39 AM.

  16. Likes Russellmai liked this post
  17. #3690
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    பாடினார் கவிஞர் பாடினார் – 2

    **

    ஹாய் ஆல் செளக்கியமா…

    ஓ..ரொம்ப இடைவெளி கொடுத்துட்டேனா ஸாரி ( அதனால பரவாயில்லைங்கறீங்களா.. தாங்க்யூ)

    போன தடவை ஒரு யூனிக் கவிஞர் பத்தி –பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன்..ஆனாக்க அப்படிச் சொன்னதும் தப்பு தான்.. ஏனெனில் கவிஞராய் இருந்து பாடலாசிரியராக மாறிய ஒவ்வொருவருமே அவங்க அவங்க எழுத்துல யூனிக் தான்..
    **
    முதலில் இந்தக் கவிஞர் சில பல பாடல்கள் திரையில் எழுதி பிரபலமாகியிருந்த காலம்..

    சினிமா என்பதே தொழில் தானே.. தயாரிப்பாளர் இன்னொரு கவிஞர் உடுமலை நாராயணகவியிடம்.. “ நாராயணரே..எனக்கு இந்தப் பாட்டு (அந்தப் பாட்டைச் சொல்லி) அதே போல் எனக்கு இன்னொரு பாட்டு வேண்டுமே..

    உடுமலைக்\கோ கொஞ்சம் கோபம் ப்ளஸ் வருத்தம்.. சரி போ இதான் லைஃப் இதான் வேர்ல்ட் என க் கொஞ்சம் மனதிற்குள் குமுறி “ஒன் மீட் ஓய் ப்ரொட்யூசர்..இதோ வந்துட்டேன்” என்று வெளிச் சென்று விட்டார்..
    பின் திரும்பி வந்த போது ப்ரொட்யூஸர் கேட்ட – இது போன்ற பாட்டை எழுதிய கவிஞரையே முன்னிறுத்தி “இந்தாங்க.. இவர் கவிஞர் சுரதா.. நீங்கள் எழுதிய அமுதும் தேனும் எதற்கு எழுதியவர் இவர் தான்..இவரையே வைத்து அதே டைப்பில் பாட்டு எழுதிக் கொள்ளுங்கள்”

    “ நாராயணர்வாள் ஷமிக்கணும்”

    “”கோபம்லாம் இல்லைங்காணும்.. “

    சரி என்று கவிஞர் சுரதாவை இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடம் கொண்டு விட..கனஜோராய்ப் பாடலின் முதல்வரிகள் எழும்பின..

    பின்
    முதல் மூன்று வரிகள் வந்துவிட அதற்கப்புறம் தான் நானகைந்து வரிகளைக் கவிஞர் சொன்னாலும் இசையமைப்பாளர் கே.வி.எம்க்கிற்கு ஏனோ பிடிக்கவில்லை.. இன்னொண்ணு சொல்லுமேன்.. எனக் கேட்க சுரதாவிற்கோ முணுக் கென்று கோபம் வந்து எழுந்து சென்றுவிட்டார்..

    மறுபடியும் தயாரிப்பாளர் உடுமலை நாராயண கவியைப் பிடிக்க, அவர் சரி நோப்ராப்ளம் பேலன்ஸ் நான் எழுதறேன்..ஆனா டைட்ட்டில்ல மறக்காம சுரதா பேரையும் போடணும்.. ஓகே சொல்லி எழுதப்பட்ட பாடல் தான் கீழே இருப்பது..

    ஒரு கவிதை இருகவிஞர்கள் எழுதும் போது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..

    வெண்ணிலா குடைபிடிக்க
    வெள்ளீ மீன் தலையசைக்க
    விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது
    இனி நீ என் வசமே
    இனி நான் உன் வசமே
    இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே

    கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே
    சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே
    ஒண்ணுமே புரியலையே எண்ணமே சரியிலையே
    சரியாக இது வேளை தனிமை வேண்டுமே

    : பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க
    பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா..


    எழிலிற்கிருப்பிடமே எனக்கில்லை மனத்திடமே
    எளியேன் மேலிந்த ஏனிந்த கோபமே

    http://tamilmp3songs.mobi/mp3/load/3...ilanda.com.mp3

    இந்தக் கவிஞர் சுரதா இருக்காரே..அவருக்கு இன்னொரு கவிஞர் மேல ரொம்ப மரியாதைகுருபக்தி, ரொம்பப் பிடிக்கும்.. அந்தக் கவிஞருக்கு இன்னொரு மகாகவி மேல பக்தி ..ஸோ அந்த மகாகவிக்கே தாஸனா தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்..

    அவர் பாரதி தாசன் தன்னுடைய இயற்பெயரான சுப்பு ரத்தினத்தை பாரதி தாசன் என மாற்றிக் கொண்டு விட்டார்.. இந்த கவிஞருக்கு என்ன பண்றது.. பாரதி தாசன் ரொம்பப்பிடிக்கும்..ஆனா பெயர் எப்படி மாத்திக்கறது..பாரதி தாச தாசனா.. எங்கயோகொஞ்ச்ம் இடிக்குதே.. சரி என்று தனது சொந்தப் பெயரான ராஜகோபாலனை விடுத்து சுப்பு ரத்தின தாசன் சுரதா என்று மாற்றிக்கொண்டு விட்டார்..

    இவர் எழுதிய ..திரைப்பாடல்கள் என்று பார்த்தால் 22 வருடங்களில் சுமார் 30 தான் இருக்கும்.. ஆனால் கலந்துகொண்ட கவியரங்கங்கள் அளவிடற்கரியவை..1990இல் த்மிழக அரசு வழங்கிய பாவேந்தர் விருது பெற்ற முதல் கவிஞர் இவர் தான்..பிறந்தது 1921 மறைந்தது 2006
    சில்பாடல்கள்

    கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
    விண்ணுக்கு மேலாடை..
    அமுதும் தேனும் எதற்கு நீஅருகினில் இருக்கையிலே
    புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    நெருங்கி நெருங்கிப் பழகும் போது..

    *
    எனக்குப் பிடித்த பாடல் விண்ணுக்கு மேலாடை..
    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
    வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
    கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
    கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

    மண்ணுக்கு மேலாடை
    ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
    மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
    ஹையே
    மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
    மனதிற்கு மேலாடை
    வளர்ந்து வரும் நினைவு

    பத்துக்கு மேலாடை
    பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆஹா
    ஆ ஆ ஆ ஆ
    நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
    பத்துக்கு மேலாடை
    தெரியலையா? ம் சொல்லட்டுமா?
    பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
    பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
    வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

    காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
    காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
    காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
    இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
    எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
    *
    https://www.youtube.com/watch?featur...&v=1lyf-YEM2_8
    வெகு அழகிய பாடல்..
    **
    நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
    நேரமல்லவா
    நீயும் நானும் கொண்ட காதல்
    அமுதமல்லவா

    தலையை நீட்டும் இந்த நிலவு
    தலைமை தாங்கட்டும்

    தழுவும் போது வீசும் தென்றல்
    விலகி ஓடட்டும்


    அடுத்த கவிஞர் எழுதிய ஒரு அடிமைப் பாடலுக்கு அடிமையாகாதார் யார்..

    பின்ன வாரேன்.

    (

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •