-
27th May 2015, 11:59 PM
#341
Senior Member
Senior Hubber
என்னமோ போங்க – 13
*
ஊர்வலம் என்றால் என்ன..ப்ரொஸஸன் என்று தமிழில் சொல்வார்கள்..அதாவது நாலுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு காரியமாகக் கூடி தெருவில் நடந்து செல்வது என்று வைத்துக் கொள்ளலாமா..
மாப்பிள்ளை ஊர்வலம், கட்சி ஊர்வலம், என நிறையவே வரும்.. கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் செல்வதைப் பார்த்தால் இளம் சிட்டுக்களின் ஊர்வலம் என சில பலகல்லூரி மாணவர்கள் சொல்வார்கள்..
இங்க பாருங்க இந்த அந்தக்கால இள நங்கை என்னவாக்கும் செய்யறாள்..
முத்தாகப் பற்களுமே மோகனமாய்த் துலங்கிடவே
..மூடிவைத்த இதழ்திறந்து மோகினியும் மென்னகத்து
குத்திவிடும் ஈட்டியென கூர்விழியின் கீழிமைகள்
…குளிர்வாகப் படபடத்து பார்வையிலே பனித்தூவி
சித்தமதைக் கலைத்துவிடும் சீரழகு நடையாலே
…சிரித்திங்கே ஜதியுடனே தோகைமயில் ஆட்டமென
வித்தைகள் பலவாறாய்க் காட்டித்தான் பாடுகிறாள்
…விந்தையிது வஞ்சியிவள் மொத்தவெழில் ஊர்வலமோ..
(ஹப்பா எப்படியோ ஆரம்பிச்சு ஊர்வலம்னு முடிச்சுட்டேன்)
*
இளம்பெண்ணுக்கே உரித்தான ஆசை கனா இவளுக்கும் இருக்கு..ஆனா அது நானில்லை என்கிறாள் எல்லா ஆசையையும் சொல்லி..ம்ம் என்னமோ நாணம்னு சொல்வாங்களே அதுவா இருக்கலாமா.. ம்ம் என்னமோ போங்க..
*
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
ராஜாக்கள் எல்லோரும் சீர்கொண்டு வருவார்களோஓஓ
மை வண்ணம் கலையாத கண் என்ன
அன்னையும் பிதாவும் இல் வாணிஸ்ரீ…கூட தோழிகளில் ஒருவர் ஜெயந்தியா
..
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th May 2015 11:59 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2015, 12:11 AM
#342
Senior Member
Senior Hubber
*
என்னமோ போங்க – 14
**
கையில் உள்ள எட்டணாவை ப் பத்துமுறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்ச ராஜா
தேனிலவு என்றாலும் தனியாய்த் தானே போவானே’ என வைரமுத்து எழுதிய ஒரு பாட்டில் வரும்..
தேனிலவு என்பது என்ன.. கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் தங்களது உள்ளத்தையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்காக செல்லும் ஒரு குளிர் பிரதேசம் சரி செல்லும் ஒரு இடம்..என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
பெண்ணுக்கோ மயக்கம்..யாரென்று தெரியாதே.. இப்படி அம்மா அப்பா பார்த்துக் கட்டி வைத்துவிட்டார்களே என்று..ஆணுக்கும் மயக்கம் தான்..எப்படி தன்னை, தன் பேச்சுக்களை, இவளுக்கு ப் புரியவைப்பது என்று.. அப்படி மெல்ல மெல்ல இச்சையுடன் ஆசையுடன் அன்புடன் பண்புடன் இன்னும் என்னமெல்லாமோவுடன் அணுக சிறந்த இடம் அறிந்தவர்கள் யாரும் இல்லாத நல்ல இடம் என்பதைத் தான் தேனிலவு என வைத்துவிட்டார்கள் போல..
இங்கே என்ன..கல்யாணம் நடந்து முடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஒன் டே ஒன் டே ஒன் பாய் ஒன் கேர்ள்
ஆசை ஓசை கேட்கும் ஜாடையில் பாடலாம்
வானில் வருவது வெள்ளி மூன்
வாழ்வில் வருவது ஹனி மூன்..
*
நல்லாத் தான் பாட்டுப் பாடி ஆடறாங்க நாகேஷ் மற்றவங்கள்ளாம்.. நின்னுண்டிருக்கற ஹீரோ ஹீரோயின் ஏன் அசட்டுத் தனமா சிரிக்கறாங்க..ஓ..அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறீங்களா.. அதுவும் சரிதான்..என்னமோ போங்க..
*
ஜெய்ஷங்கர் ஜெயலலிதா நாகேஷ்.. படம் நீ..(சரிதானா)
*
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
28th May 2015, 12:18 AM
#343
Senior Member
Senior Hubber
[QUOTE=vasudevan31355;1228606]சி.க,
கோபாலனோடு நீங்கள் ஆடிய பாடலுக்கு நன்றி! கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஆடவும். புலி பதுங்கி இருக்கிறது.:-d கூட ராகவேந்திரன் சார் வேறு. // ராத்திரி வேளைல இந்தப் பயமுறுத்தலை மறுபடி படிச்சுட்டேனா (மொதல்லபடிச்சப்ப தெரியலை) இப்ப குப்புன்னு வேர்க்குது.. எதுக்கும் வாசு சார் நம்ம பக்கெட்லாம் ஒளிச்சு வச்சுக்கலாமா கொஞ்ச நாள்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th May 2015, 06:34 AM
#344
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th May 2015, 06:46 AM
#345
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 24
உண்மை சம்பவம் : 3
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன .......
அன்று எனக்கு interview ஒரு பெரிய அலுவுலகத்தில் - பெரிய position - இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் ஒரு வீடு வாங்கலாம் , ஒரு கார் வாங்கலாம் , அம்மாவை ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டவேண்டும் - எப்பொழுதும் இருமிக்கொண்டே இருக்கிறாள் --- என்னவோ நினைவுகள் , ஆசைகள் ... அம்மாவிடம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டேன் - இருமிக்கொண்டே என்னை ஆசிர்வதித்தாள் ---
புதியதாக நுழைந்த அலுவுலகத்தில் என்னைப்போல இன்னும் இருபது பேர் வந்திருந்தனர் -- சரியாக கூட சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன் - பசி வேறு ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தது ----
பியூன் குரல் கொடுத்தான் - இங்கே யாரப்பா அருண் ? உள்ளே கூப்பிடுகிறார்கள் ---
ஒரு வித பயத்துடன் , மன உளைச்சலுடன் உள்ளே சென்றேன் --
நான்கு பேர் அமர்ந்து இருந்தார்கள் - கூரை சரியில்லை என்று நினைக்கிறேன் - அந்த நால்வரில் ஒருவர் மேலேயே பார்த்துக்கொண்டிருந்தார் ---
உங்கள் பெயர் ?
அருண் ---- அருண் சாரதி --
அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள் --- எல்லாவற்றிலும் 90 % மேல் விழுக்காடு -விளையாட்டுக்களில் முதன்மை - நான் எழுதி எடுத்துச்சென்ற ப்ரோக்ராம்ஸ் யை பார்த்தார்கள் - பல கேள்விகள் - பொறுமையாக விடை அளிக்க தயாரானேன் - திடீரென்று உள்ளே ஒருவர் நுழைந்தார் - எல்லோருமே எழுந்து நின்றார்கள் , நானும் எழுந்தேன் --- அவர்தான் அந்த கம்பெனியின் MD யாம் ---
அவர் என்னைப்பார்த்தார் - அருண் ஒரே ஒரு கேள்விதான் உங்களிடம் கேட்க போகிறேன் .
உன் அம்மா என்ன செய்கிறாள் ? - கேள்வியே புதுமையாக இருந்தது - படித்த படிப்புக்கு சற்றும் சம்பந்தமே இல்லை --- வார்த்தைகளை முழுங்கினேன் .
மீண்டும் அதே குரல் சற்றே கடினமாக -- அம்மா என்ன செய்கிறாள் ?
சார் ! அம்மா வேலை செய்கிறாள் -- ஒரு வீட்டில் பத்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கின்றாள் - அவள் பெரும் கூலியில் தான் படித்தேன் - எனக்கு அப்பா இல்லை - பிறந்தவுடன் போய் விட்டார் --
Interview postponed - என்று சொல்லிவிட்டு அந்த ரூமை விட்டு அவர் போய் விட்டார் - ஒன்றுமே புரியவில்லை - என்ன தப்பாக சொல்லிவிட்டேன் - அம்மா ஏழை என்றால் இந்த கம்பெனியில் வேலை கிடைக்காதா - படித்த படிப்புக்கு மதிப்பு இல்லையா ? நெஞ்சில் பல கேள்விகள் - அதிர்ப்தியுடன் எழுந்தேன் --- சற்று நேரத்தில் பியூன் என்னை MD கூப்பிடுகிறார் என்று சொல்லி , அவரிடம் அழைத்துச் சென்றான் ---
அருண் உட்க்கார் ---- உன் interview இன்று இல்லை - நாளை -- உன் அம்மாவின் கைகளை நன்றாக பார்த்து விட்டு நாளை என்னை சந்திக்க வா ----
குழப்பத்திற்கு மேல் குழப்பம் -- அன்று அம்மாவை அருகில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் - அப்பொழுது MD சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன -- அம்மாவின் கைகளை உன்னிப்பாக அன்று தான் பார்த்தேன் - எல்லா ரேகைகளும் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தன - கைகள் சந்திர மண்டலத்தில் இருக்கும் மேடு பள்ளங்கள் குறைவு என்று பறைச்சாற்றிகொண்டிருந்தன - இரத்த ஓட்டம் அந்த பகுதிகளுக்கு வந்ததே இல்லை . கைகளில் கண்ணாடி வளையல் கூட இல்லை --- இந்த கைகளா எனக்கு தினமும் அன்னத்தை பிசைந்து எனக்கு ஊட்டி விட்டது ---- அவள் கைகள் என் கண்களை பொத்தின ----
மீண்டும் interview ---
" அருண் , வா - உன் அம்மாவின் கைகளை பார்த்தாயா ? "
" கண்களில் வரும் நீர்தான் அவருக்கு பதிலாக அமைந்தது "
" எல்லோருடைய உழைப்பையும் நீ புரிந்து கொள்ள வேண்டும் , மதிக்க வேண்டும் - உன்னுடைய பதவி மிகவும் பெரியது , முக்கியமானதும் கூட -- நீ எப்படி பிறருடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் -- மற்றவர்களின் உழைப்பையும் , தியாகத்தையும் மதிக்காதவர்கள் என் கம்பெனியில் வேலை செய்ய முடியாது - வேலை செய்யக் கூடாது - என் அம்மா ஒரு அரசாங்க மருத்துவமனையில் தினமும் கூட்டி பெறுக்கும் ஆயா - அவளிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது இந்த ஒரு பண்பைத்தான் - உன் கண்ணீர் நீ அந்த பண்பை கடைப்பிடிப்பாய் என்று சொல்கிறது - எப்பொழுது இங்கு நீ சேறப்போகிறாய் ??
" அம்மா " என்று கதறி அழுதேன் - ஓடிக்கொண்டே இருக்கிறேன் அவளின் கைகளில் ரேகைகளாக இருக்க --------
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th May 2015, 07:06 AM
#346
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
ஆஹா.. வாசுங்க்ணா.. எள்னு கேட்டா இதயம் நல்லெண்ணெயா வந்து என் இதயத்தைக் குளிர்வித்தீர்களே..
மிக்க நன்றி..ராகசுதா என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்..இவர் தான் ராக சுதா எனத் தெரியாது..பார்வதி என்னைபாரடி இரண்டாவது படமாகயிருக்கும் என நினைக்கிறேன்..இவராவது ர வோட வாழறாரா..
அது குட்டி பத்மினியில்லைன்னா வேறு யாரு :thinking:
இந்தாங்க குமாரி பத்மினி படம்
இவக கண்காட்சியில் சிவகுமாருக்கு ஜோடி.
பின்னே பல படங்களில் இரண்டாம் நாயகி வேடம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th May 2015, 07:15 AM
#347
Senior Member
Seasoned Hubber
அகந்தையது கண்மறைக்க ஆடிய பாவை
அகத்தைத் திறக்கத்தான் அன்பாய் - இகத்தினில்
வண்ணமாய்ப் பாச்சரத்தை வாகாய்த் தொடுத்துவிட
கண்கள் திறந்தன காண்..
திறந்த கண்கள் மூடாமல் இருக்கத்தான்
சின்னக்கண்ணன் அளித்தாரே பாக்கள்தான்
பாக்களிலே அவரளித்த வாழ்த்தைத்தான்
பாசத்தின் பிரதியென்று கூறித்தான்
ஏற்கின்றேன் அன்புடனே நானும் தான்..
தங்கள் தொடர் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி சி.க. சார்
அதோடு
வாழ்த்துரைக்க காத்திருக்கும் அத்துணை நெஞ்சிற்கும் தான்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th May 2015, 07:19 AM
#348
Senior Member
Seasoned Hubber
சி.க., கிஜி, ராஜேஷ், ரவி, கல்நாயக் என அனைவரின் பங்களிப்பில் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. காலை சென்று மாலை வருவதற்குள் பக்கங்கள் பல ஓடுகின்றன. எதற்கு பதில் சொல்வது, எனத் தெரியாமல் முழிக்கின்றேன். ஒவ்வொன்றிற்கும் தான்.
ஒன்றே ஒன்று சொல்லி விட்டால் போதும்.. அது அனைவருக்கும் சென்று சேர்ந்து விடும்.
மதுர கானம் திரி தொடங்கி மனம் மயங்க இந்த வாய்ப்பளித்த வாசு சாருக்கு நன்றி சொன்னால் இங்கு ஒவ்வொருவருக்கும் நன்றி சொன்னாற்போல்..
[க்கும்.. நான் திருவிளையாடல் பிள்ளையார் கட்சியாக்கும்.. நோகாமல் நொங்கு தின்ன... ]
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
28th May 2015, 07:39 AM
#349
Senior Member
Diamond Hubber
Happy Birth day Raghavendran sir.
Last edited by vasudevan31355; 28th May 2015 at 09:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
28th May 2015, 07:42 AM
#350
Senior Member
Diamond Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களுக்கு என்னுடைய சிறப்பு பிறந்த நாள் பரிசு பதிவு
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
4
'பால'சுப்ரமணியத்தின் பாடல்களில் அடுத்து நாம் காணப் போகும், கேட்கப் போகும் பாடல் 'மிஸ்டர்' சம்பத்' (1972) படத்திலிருந்து.
'பால் குட'த்தில் ததும்பிய பாலின் குரலோன் 'மல்லிகைப்பூ' வங்கி வந்து, 'இயற்கை என்னும் இளையகன்னி' யைக் கூட தனக்கு 'அடிமைப் பெண்' ணாக்கித் தன் அழகுக் குரலால் அனைவரையும் ஆளத் துவங்கியிருந்த நேரம்.
'ஆரம்பம் யாரிடம்?' என்று இசையரசியிடம் பாலா கொஞ்ச,
'உன்னிடம்தான்' என்று இசையரசி பதில் கூவ,
சுவையான பாடல் கிடைத்தது 'மிஸ்டர் சம்பத்'தில்.
நமது 'துக்ளக்'தான் ஹீரோவே. திரைக்கதை, வசனம், இயக்கமும் இவரே! வாய் சாமர்த்தியத்தால் ஊரை ஏய்த்து உலையில் போட்டு அனைத்தையும் முதலை போல் விழுங்கி வைக்கும் பாத்திரம். லட்டு தின்பது போல அவருக்கு.
ஆச்சியிடம் இவர் நைசாகப் பாடி, ('அலங்காரம் போதுமடி') அவருடைய ஒவ்வொரு நகையாகக் கேட்டு வாங்கி, இறுதியில் 'பாக்கி' என்று ஆச்சியிடம் (ஆச்சியின் பெயர் பாக்கியம். செல்லமாக சோ 'பாக்கி... பாக்கி' என்று கூப்பிடுவார்) சிலேடையாகக் கேட்க, அதற்கு "ஆச்சி ஏது பாக்கி? எல்லாத்தையும்தான் கழட்டிகிட்டீங்களே!" என்று அப்பாவியாகப் புலம்ப, இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இல்லையா ராகவேந்திரன் சார்?
உடன் ஆச்சி, முத்துராமன், குகநாதனின் குடும்பத் தலைவி ஜெயா என்று நட்சத்திரங்கள். நாடக வாசனை காமெடி தோரணம். புத்திசாலித்தன நகைச்சுவை புத்தியில்லாதவர்கள் கூட ரசிக்கும் அளவிற்கு. சரி! படத்தை விட்டு விடுவோம்.
பாடலுக்கு வருவோம். சிறுவயது முதற்கொண்டே என் மனதில் சிருங்கார ரீங்காரமிடும் பாடல். கன்னிக் குரல் பாலா நிஜ கானக் குயில் சுசீலா அம்மாவுடன் குழைந்து தந்த பாடல்.
முத்துராமன் ஒரு திரைப்பட இயக்குனர். தான் இயக்கும் ஒரு படத்திற்கு 'மெல்லிசை மன்ன'ரை வைத்து ஒரு பாடலுக்கு டியூன் கம்போஸ் செய்ய சொல்கிறார். 'மெல்லிசை மன்ன'ரும் அருமையாக தன் குழுவினரை மேய்த்து இனிய ஒரு பாடலை உருவாக்கித் தருகிறார்.
பாடலைக் கேட்டு கனவில் மிதக்கிறார் 'நவரசத் திலகம்'. படத்தின் ஹீரோயின் ஜெயாவை டைரெக்டர் முத்துராமன் உண்மையிலே காதலிக்கிறார். படத்தில் பாடலுக்கு நடிக்கும் ஹீரோ வேறு. தன் கற்பனையில் அந்த ஹீரோவை ஒதுக்கிவிட்டு அவருக்கு பதிலாக முத்துவே ஜெயாவுடன் டூயட் பாடுவதாக கற்பனை. பாடல் 'மெல்லிசை மன்னர்' கம்போசிங்கில் துவங்க, அப்படியே அவுட்டோர் நோக்கி பாடல் காட்சியாக நகருகிறது.
முதலில் சாலையில் நிற்கும் படத்தின் ஹீரோவிடம் சிம்பிள் சுடிதார் அணிந்த நாயகி ஜெயா (புலி நக ஷேப்பில் நெற்றியின் முன்னால் முடி தொங்க அழகாக இருப்பார்)
"ப்ளீஸ்! இப்ப என்ன டைம்?"
என்று காதலாகி சுசீலா அம்மாவின் குரலில் கேட்க,
அதற்கு அந்த ஹீரோ,(யாரோ!?)
"பரவாயில்ல! நல்ல டைம்தான்" என்று இருபொருள் பட, பாலாவின் குரலில் தன் பதில் காதலை மொழிய,
அந்த நான்கரை நிமிட நேரமும் நான்காயிரம் தரம் கேட்டாலும் இனிமை குறையாத பாடல் கிடைக்க ஆரம்பிக்கிறது.
ஆட்களே இல்லாத அந்தக் கால மரங்கள் நிறைந்த நம்மை ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் நிழலான ஒற்றை தார் சாலை. பட ஹீரோ மறைந்து இப்போது அந்த இடத்தில் முத்து.
'ம்ஹூம்' என்று இசையரசி மென்மையாக ஹம்மிங்கில் பாடலைத் தொடங்க,
அதே ஹம்மிங்கை பாலா திருப்பி வழங்க,
ஹம்மிங் மீண்டும் தொடர,
பாலா 'யாயயயா' என்று கொஞ்சுவது தென்றல் சுகம். (இதையே ஆயிரம் முறை கேட்கலாம்)
இரண்டாவதாக வரும் ஹம்மிங்கில் சுசீலா 'ம்ஹூம்' ஹம்மிங்கை 'ம்ஹூம்ஹூம்' என்று அதியற்புதமாக மாற்றி பின்பு 'ஆஹாஹஹா' என்று கொஞ்சுவாரே! அடடடா! ஜென்மம் சாபல்யம் அடைந்து விடலாம்.
'ஆரம்பம் யாரிடம்?
உன்னிடம்தான்...
ஆசை கொண்டு சொல்ல சொல்ல...
ஆனந்தம்தான் மெல்ல மெல்ல'
அப்படியே காதலர்கள் அங்கு வரும் பஸ்ஸில் ஏற, 'மெல்லிசை மன்ன'ரின் பிரிய 'பலகுரல் மலையாள மன்னன்' சதன் கண்டக்டர் பையை அக்குளில் செருகி 'ஆ போ ரைட்' என்று விசில் தர, பஸ்ஸில் பாடல் தொடரும் 'சிட்டுக்குருவி' போல.
"யாரேனும் பார்த்தால் என்னா..வது?' (சுசீலாம்மா கலக்கல்)
ஜெயா அஞ்சல். (அச்ச உணர்வை அழகாக வெளிப்படுத்துவார்)
'காதோடு சொன்னால் தேனாவது'
நவரசம் கெஞ்சல்.
'ஆனாலும் வேகம் ஆகாதது'
ஜெயா போய்க் கோபம்.
'போனாலும் காலம் வாராதது'
என்று கவலைப்படும் முத்து.
டாப் கியரில் பாடல் எகிற ஆரம்பிக்கும் பஸ்ஸைப் போல.
அடுத்த சரணம் ஜெயா, முத்து பீச்சில் கைகோர்த்து ஓடியபடி.
"ஆசை துடித்த போதிலும் அச்சம் விடலாமா?
பாவை அச்சம் விடலாமா?"
என்று ஜெயா சுத்த தமிழ்ப் பெண்ணாய் நாண,
"நேரம் நல்ல நேரம்... நாணம் வரலாமா?
இன்று நாணம் வரலாமா?"
என்று முத்து காரியத்தில் கண் வைக்க,
"நானென்ன சொல்வது மேலும்? (சுசீலாம்மா அமர்க்களம் புரிவார்)
காலம் வர வேண்டும்...
எதற்கும் காலம் வரவேண்டும்"
என்று ஜெயா ஆன்ஸர் அளிக்க,
'மாலை நாடகமானால் ஒத்திகை தர வேண்டும்
இன்றே ஒத்திகை தர வேண்டும்'
என்று முத்து முத்தாரமாய் அச்சாரம் கேட்டு அப்ளிகேஷன் போட,
சுகமோ சுக பாடல் கிடைக்கிறது நமக்கு.
அடுத்த சரணம் இருவருக்கும் திருமணம் நடந்து, முதலிரவு கொண்டாடி, பிள்ளை ஒன்றை பெற்று,
'இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம்'
என்று அன்றைய சிகப்பு முக்கோண விளம்பர அட்வைஸ் போர்டு காட்டி பாடல் முடியும்.
"மூடிக் கிடக்கும் பூவிதழ் முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும்
மேலும் ஒன்றைக் கேட்டால் ஆயிரம் தரவேண்டும்
மீண்டும் ஆயிரம் தரவேண்டும்
பேசிய வார்த்தை போதும் பழகிப் பார்ப்போமா
சுகம்('நாம்') பழகிப் பார்ப்போமா?
(சென்ஸார் புண்ணியத்தால் சுகம் 'நாம்' என்று ஆனது)
காலம் முழுதும் காதல் கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா!"
ஆஹா! ஆஹா! என்ன ஒரு பாடல்! என்ன ஒரு குரல்வளம்! என்ன பாடகர்களின் ஜோடிப் பொருத்தம்! என்ன ஒரு மெலடி! என்ன ஒரு டியூன்! என்ன வெரைட்டியான இசையமைப்பு!
டி,எம்,எஸ், சுசீலா இணைந்து காலத்தால் அழியாத பாடல்கள் பல தந்து இருக்க, சற்றே அலுப்புத் தட்டிய நிலையில் சுனாமித் தென்றலாய் வந்து சேர்ந்தார் பாலா. சுசீலாவுடன் மென்மை குழைத்து இவர் பாடிய பாடல்கள் இளசுகளின் நெஞ்சங்களை வருடின. (அப்போ நான் இளசுதானே!) இன்றும் வருடிக் கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட பாடல்களில் இது தலையாய வரிசையில் சேர்ந்தது.
எம்.எஸ்.வி பாடலுக்கு மியூஸிக் போடுவதில் இருந்து தொடங்கும் பாடல்.
'வரவு எட்டணா செலவு பத்தணா' என்று பாடிய சிறுமி ஜெயா 'வாலைக் குமரி'யாக வாழைத்தண்டு போல் சுசீலா குரலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். முத்துவும் வழக்கம் போல் கடிக்காமல் சமாளித்து விடுவார். (பாலா முத்துவுக்கு அதிகமாக பாடல்கள் பாடியுள்ளார். எல்லாம் பின்னால் வருகின்றன)
'மெல்லிசை மன்ன'ரைப் பற்றி சொல்வது வேஸ்ட் திருப்பதி லட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வதைப் போல.
இந்தப் பாட்டைப் பற்றி எழுதியதில் அவ்வளவு மனத்திருப்தி கிடைத்தது எனக்கு. ரொம்ப நாள் ஆசையும் கூட.
பாலாவின் மணி மகுட டூயட்.
Last edited by vasudevan31355; 4th June 2015 at 03:00 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
Bookmarks