Page 337 of 400 FirstFirst ... 237287327335336337338339347387 ... LastLast
Results 3,361 to 3,370 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3361
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    " கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
    தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
    பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
    நல்ல இடமா அமையணும்" - ck

    ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மன பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
    எதனால் இந்தக் கமெண்ட் என எனக்குப் புரியவில்லை ரவி.. நான் என்ன தவறாக எழுதுகிறேன்..ஏதேனும் ஜல்லி அடிக்கிறேனா.. போர் அடிக்கிறதா.. சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்கிறேனா..சொன்னால் திருத்திக் கொள்வேன்..

    மண்டபத்தில் எழுதி வாங்கி இடுவேன் என்று எப்படி கேவலமாக என்னைச் சிந்திக்கப்போயிற்று ரவி.. ? ..
    Last edited by chinnakkannan; 3rd September 2015 at 09:57 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3362
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன ck இது?? , இப்பொழுது தானே நகைச்சுவை பகுதி என்று ஆரம்பித்தேன் - அதற்குள் உங்கள் புரிதலில் தவறு வந்து விட்டதே !!! - நீங்கள் ஜாலியாக எழுதும் நபர் - உங்கள் எழுத்துக்களில் இருந்த ஒரு முதிர்ச்சியைப்பற்றி சொன்னேன் - இது உங்களுடைய பதிவுதானா என்று ...... மற்றபடி நீங்கள் தவறாக எழுதும் நபரும் அல்ல , நானும் மற்றவர்கள் மனம் புண் படும் படி எழுதும் நபரும் அல்ல . இனி இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  4. #3363
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi and 1000

    From Senthamarai(1962)

    vaaraNam aayiram soozha valam seidhu........

    The video clip begins with margazhi thingaL followed by vaaraNam aayiram soozha....




    I am taking a break for two weeks to visit my sons !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes kalnayak, Russellmai, madhu liked this post
  6. #3364
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //எனது குல தெய்வமான குசலாம்பாள் சமேத சரளாநாதேஸ்வரர் அவரை வணங்கி , புள் அரித்த இடங்களில் தடிப்பு வராமல் இருக்க விபூதியை உடலெங்கும் தடவிக்கொண்டேன்//

    அடாடாடா! அந்தப் புண்ணியத்தல ஷேத்திரம் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்கோ! போயிட்டு சேவிச்சுட்டு வந்துடறேன். அப்படியே விபூதி பார்சல் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3365
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    CK - காலை வணக்கம் . இன்னும் என் மீது தவறான புரிதல் தொடர்கிறது என்று நினைக்கிறேன் . PM இல் எழுத வேண்டியதை இங்கு பதிவிடுகிறேன் . தருமியின் நடையில் உங்களை சித்தரித்ததின் நோக்கம் உங்களுக்கு இறை அருள் இயற்கையாகவே அமைந்துள்ள வரம் என்பதை சுட்டிக்காட்டவே - அங்கே இறைவன் எழுதி கொடுத்த பாடலைத்தானே தருமி படித்தான் . அதே போல இறைவியின் அருளால் கவிதை நடைக்கு நீங்கள் ஒரு கண்ணனாக இருக்கிண்டீர்கள் . உங்கள் சௌந்தரிய லஹரியின் உரையை மறக்க முடியுமா ? நினைத்துப் பார்த்தாலும் என்னால் அப்படி எழுத முடியாது . கோபம் வந்தால் நமக்கு உள் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் திறன் குறைந்துவிடுகிறது . சொன்ன விளக்கங்கள் இன்னும் உங்களுக்கு நம்பிக்கையத்தரவில்லை என்றால் - என்னுடைய Unconditional Apologies - என்னுடைய வரிகள் உங்களை வெப்பமாகத் தாக்கினதற்காக . எனக்கு நானே ஒரு தண்டனையையும் அளித்துக்கொள்கிறேன் . நீங்களாக ( கோபம் தணிந்து ) அழைத்தால் மட்டுமே என் பதிவுகளை தொடர்வேன் - அதுவரை கட்டாய ஒய்வு - சரியா ?? உங்களிடம் இருந்து இன்று நான் கற்றுக்கொண்ட பாடங்களில் இன்று நான் கற்றுக்கொண்டது கடலளவும் பெரிது - " நகைச்சுவை என்பது ஒரு பால கயிறு போன்றது - கவனாமாக கையாளவேண்டும் .நாம் நகைச்சுவை என்று நினைத்து எழுதுவது பிறருக்கும் அப்படியே அமையும் என்று சொல்ல முடியாது " நன்றாக புரிந்துகொண்ட நண்பர்களுக்கும் இது ஒரு விதிவிலக்கு அல்ல ".

    நன்றி , அன்புடன்

  8. #3366
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    உங்கள் அளவிற்கு பக்தியைப் பற்றி எனக்கெல்லாம் கொஞ்சமும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஜெயகுமாரி, ஹலம், சரளா, குசலகுமாரி இப்படிப் பட்டவர்கள்தான். பக்கா லோ கிளாஸ். என்ன பண்ணட்டும்? அப்படியே வளர்ந்துட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes rajeshkrv liked this post
  10. #3367
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - நீங்களுமா ??? " நகைச்சுவை உணர்வு " என்று தப்பான ஒரு தலைப்பை அலச எடுத்துக்கொண்டது என் குற்றம் என உணர்கிறேன். புரிதல் என்பது அடிக்கடி விளக்கம் கொடுப்பது அல்ல . அதிகமாக உங்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு விட்டேனோ ?? மன்னிக்கவும்

  11. #3368
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ci ka
    ravi was trying to tell that usually your writings will be so humourous so is it you who wrote so maturely.he was just teasing you that's all

  12. #3369
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வணக்கம் ஜி

  13. #3370
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    32

    'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்'

    'புன்னகை'



    அடுத்து பாலா தொடரில் சோலோவோ டூயட்டோ இல்லை.

    இது பட்டப்படிப்பு பெற்ற 5 நண்பர்கள் பட்டம் பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாடிக் குதூகலிக்கும் பாடல். காந்தி சிலைக்குமுன் 'உண்மை வழி நடப்போம்' என்று உறுதி எடுத்து 5 நண்பர்களும் உற்சாகமாக அந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

    ஜெமினி, நாகேஷ், முத்துராமன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த 5 நண்பர்கள்.

    அமுதம் பிக்சர்ஸ் 'புன்னகை' படத்திலிருந்து இந்தப் பாடல். திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாலச்சந்தர்.


    காரில் மதராஸை வலம் வந்தபடி, பீச்சில் ஜாலியாய் சுற்றியபடி, ஐவரும் செம கலாட்டா. ஜெமினியைப் பார்த்தால் படத்தில் நடிக்க வந்தவர் போலவே இல்லை. கூலிங் கிளாசெல்லாம் போட்டுக்கொண்டு நிஜமாகவே நண்பர்களுடன் ஊர் சுற்றுவதைப் போலவே அவ்வளவு இயல்பு. மற்ற எல்லோருமே பாடலுக்குத்தான் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் நிஜ நண்பரகளாய் அரட்டை அடித்து என்ஜாய் செய்வது அமர்க்களம்.

    ஜெமினி மெயின் என்பதால் அவருக்கு டி.எம்.எஸ்.அவர்களின் கணீர்க் குரல். மனிதர் என்னமாய் உணர்ந்து பாடுகிறார்! முத்துராமனுக்கு தொடரின் நாயகர் பாலாவின் குரல். நாகேஷுக்கு மிகப் பொருத்தமாக சாய்பாபாவின் குரல். கே.எஸ்.கோபாலகிருஷனுக்கு பாடல் இல்லை என்பதால் பின்னணி இல்லை. (கோரஸில் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.) ஆக ஒவ்வொருத்தருக்கும் குரல் பொருத்த தேர்வு ஆஹா! ஓஹோ!

    அதுவும் வாசுவிற்கு வீரமணியின் குரல் நன்றாகவே பொருந்துகிறது. அனுபவித்துப் பாடியிருக்கிறார். வீரமணி பாடிய சினிமாப் பாடல்கள் மிகக் குறைவு.

    எதிர்கால இளைஞர்களின் கனவுகளை அதுவும் தனியாக வாசுவின் கனவை, அவருடைய கேரக்டருக்குத் தக்கபடி அவர் எதிர்பார்ப்பை பாடலில் உணர்த்தியிருப்பது சிறப்பு.

    எம்.ஆர்.ஆர்.வாசு,

    'மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
    என்றும் சொன்னாலென்ன?
    மனது சொன்னபடி கால்கள் போனபடி
    போனாலென்ன'?

    என்று தன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை வளைக்க நினைத்து மாறுதல் வேண்டிப் பாடுவதும்,

    அதற்கு ஜெமினி 'ஊரோடு ஒத்துப் போவதுதான் வாழக்கை...உன் இஷ்டத்திற்கு எதையும் மாற்றிக் கொள்ள முடியாது' என்று பொருள்பட,

    'நீயும் ஊரோடு சேராமல் முடியாது
    காலம் உனக்காகத் தானாக நடக்காது'

    என்று உபதேசித்துப் பதில் சொல்லிப் பாடுவதும் டாப்.


    பாடலின் முடிவில் நண்பர்கள் காரில் வேகமாக வளைவுகளைக் கடக்கும் போது காரின் பிரேக் சப்தம் ஒலிப்பதை பாடலில் காட்டியிருப்பது இன்னொரு புதுமை. அது பாடல் முடிந்தவுடன் நடக்கும் விபத்தை முன் கூட்டியே அறிவிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

    படு கேஷுவலான நடிப்புடன் கூடிய கருத்துக்கள் மிகுந்த களை கட்டும் பாடல். கடல் அலைகளில் வாசுவுடன் ஜெமினி சில ஷாட்களில் அமர்க்களம் பண்ணுவார். குறிப்பாக சாய்பாபா பாடும்

    'சோறு படைக்கும் சொர்க்கங்கள்
    பூமியில் உள்ள இன்பங்கள்
    தேடி நடந்து செல்லுங்கள்'

    வரிகளில் நாகேஷுடன்.

    முத்துராமனையும், கோபாலகிருஷ்ணனையும் தனியே காண்பிக்கும் போது 'நெஞ்சிருக்கும் வரை' ஞாபகத்திற்கு வராமல் போகாது. அந்த நாயகரும் நினைவுக்கு வாராமல் இருக்க மாட்டார்.



    'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே

    என்று தொடங்கும் வரிகள்'.

    நான்கு அருமையான பாடகர்கள் பாடுவதால் அனைவருக்கும் சம வாய்ப்பு. பாலாவும் தன் பங்கிற்கு மிக அழகாகப் பாடியிருப்பார். ஆனால் 'பாடகர் திலகம்' கம்பீரத்தாலும், பாவத்தாலும் வழக்கம் போல முன்னை இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.


    இசை 'மெல்லிசை மன்னர்'. கோவர்த்தன், ஜோசப் கிருஷ்ணா இருவரும் உதவியாளர்கள். இந்த மாதிரிப் பாடல்களென்றால் விச்சுவிடம் உற்சாகம் பீறிட்டு எழுமே! மனிதர் விளையாடி விடுவார். முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் அந்த சாக்ஸ் இசை பிரமாதம். பாடல் முழுவதுமே உற்சாக இசை கொப்பளிக்கும். புல்லாங்குழல்களின் சின்ன சின்ன பிட்கள் அம்சம். பாங்கோஸ் உருட்டல்களும், ஆர்கன் வித்தைகளும் அமர்க்களம். நண்பர்கள் கடற்கரையில் ஓடி வரும் போது பின்னிப் பெடலெடுக்கும் இசைக்கருவிகளின் ஆதிக்கங்களை உன்னிப்பாகக் கேட்க மறந்து விடாதீர்கள்.

    மிக மிக அற்புதமான அனுபவித்துக் கேட்க வேண்டிய முத்தான பாடல். பலவகையிலும் சிறப்புப் பெற்றது.


    டி.எம்.எஸ்

    நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே!
    நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே!
    நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை


    பாலா

    நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
    காலம் உங்களின் கைகளின் மேலே


    கோரஸ்

    காலம் உங்களின் கைகளின் மேலே

    பாலா

    நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே!


    சாய்பாபா

    ராமன் ஆளட்டும்... சோமன் ஆளட்டும்
    ஆண்டாலென்ன?
    காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
    வாழ்ந்தாலென்ன?


    பாலா

    அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
    நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க


    டி.எம்.எஸ்

    அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
    நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க


    பாலா

    தாமரை கொண்ட தண்ணீர்

    டி.எம்.எஸ்

    தன்னறிவற்ற உன் வாழ்(வு)

    பாலா

    நிம்மதி கொள்ள முடியாது

    ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ


    டி.எம்.எஸ்

    நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
    காலம் உங்களின் கைகளின் மேலே


    கோரஸ்

    காலம் உங்களின் கைகளின் மேலே

    வீரமணி

    மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
    என்றும் சொன்னாலென்ன?
    மனது சொன்னபடி கால்கள் போனபடி
    போனாலென்ன?


    டி.எம்.எஸ்

    நீயும் ஊரோடு சேராமல் முடியாது
    காலம் உனக்காகத் தனியாக நடக்காது


    சாய்பாபா

    சோறு படைக்கும் சொர்க்கங்கள்
    பூமியில் உள்ள இன்பங்கள்
    தேடி நடந்து செல்லுங்கள்

    ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ


    பாலா

    நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே


    டி.எம்.எஸ்

    மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை
    ஆனாலென்ன
    பொறுத்துப் பார்த்த பின்பு இறைவன்
    கேட்பதுண்டு
    கேட்டாலென்ன


    வீரமணி

    எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
    எந்தன் பாவங்கள் தேவனுக்குத் தெரியாது


    பாலா

    ஆடுவதென்று நீ ஆடு
    பாடுவதேன்று நீ பாடு
    ஓடுவதென்று நீ ஓடு

    ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ


    டி.எம்.எஸ்

    நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
    காலம் உங்களின் கைகளின் மேலே


    கோரஸ்

    காலம் உங்களின் கைகளின் மேலே

    நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
    ஆண்டு பாருங்கள் தோழர்களே!




    ராகவேந்திரன் சார்,

    1978-ல் வெளிவந்த அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டான 'Muqaddar Ka Sikandar' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'Rote Hue Aate Hain Sab' பாடலில் வரும் இசையை இந்தப் 'புன்னகை' படப் பாடலில் 'மெல்லிசை மன்னர்' கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னமேயே அப்படியே தந்து அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் வரும் பல சங்கதிகளை கல்யாண்ஜி ஆனந்த்ஜி 'Rote Hue Aate Hain Sab' பாடலில் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிக நன்றாகத் தெரியும்.
    Last edited by vasudevan31355; 4th September 2015 at 03:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •