Page 336 of 400 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3351
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வயதாக ஆக எண்ணங்களுக்கும் வயதாகின்றது..

    ஒரு மாதிரி கொஞ்சம் விட்டேத்தியான மனோபாவம் வருகிறது..

    கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
    தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
    பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
    நல்ல இடமா அமையணும்

    என நினைத்து மறு நொடி மறந்தும் போகிறது..

    ம்ம் என்னவாழ்க்கை இது என சலிப்பும் உண்டாகின்றது

    ஆழ்கடலில் குதிந்தங்கே நீச்ச லிட்டு
    ...அணுஅணுவாய் அங்குமிங்கும் தேடித் தேடி
    மீள்வதற்காய் முத்தெடுத்து மேலே வந்து
    ..மீண்டுந்தான் கடலினிலே மூழ்கி மூழ்கி
    வீழ்ந்துநிதம் தேடுவதா பூமி வாழ்க்கை
    ..விரக்தியினிலே மன்முந்தான் சலிப்பைக் கொள்ள
    பாழ்நெஞ்சே கேள்வாழ்க்கை இஃதே மாயை
    .. பரமனவன் பதம்நாடு நிஜமும் அதுவே..

    என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது..

    இதையே ஒள்வை நாலடியில் சொல்கிறார்..

    ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
    காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
    பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
    விட்டதே பேரின்ப வீடு.

    வாழ்க்கையில ஒருஸ்டேஜில் விரும்பிய பொருள் மறு ஸ்டேஜில் அவ்வளவாய் ஆர்வத்தைக் கூட்டுவதில்லை..

    கல்லூரி இளைஞனிடம் போய் இந்தாடா இது தான் நீ ஆசைப்பட்டு விளையாடிய பேட்ட்ரி கார் என்றால் ஓ.கேயா சொல்வான்..ம்ஹூம் என்று
    தான் சொல்வான்..

    எனில் சிறுவயதில் குட்டிக்கார் மீதுகாதல் பின் இளமையில் பெரிய கார், பெரிய கைகாரி மீது காதல்கள்..

    அதுவே கல்யாணம் கண்டு காட்சி எல்லாம் கண்டு குடும்பசூழலில் உழன்று வயதானால்..காதலும் கசந்துவிடும்..

    பின் என்ன தான் செய்வது..

    வாழ்க்கை ஆரம்பத்தில் :அறவேலைகள் பல செய்யவேண்டும். பின் தீய எண்ணம் கொள்ளாமல் நல்லவழியில்
    பொருள் ஈட்டவேண்டும்..கண்ணுக்கினிய காதலியை மணந்து அல்லது அம்மா அப்பா சொன்னதனால் கண்ணுக்கினியவளை
    மணந்து கருத்து வேறுபாடு கொள்ளாமல் ஜாலியாக இருந்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு இருப்பதே இன்பமாகத் தான் இருக்கும்..ஆனால்

    வயதனால் இம்மூன்றையும் விட்டு இறைவனை நினைந்தால் பேரின்ப வீடு என்னும் மொட்சம் நமக்குக் கிட்டுமாம்..

    ம்ம்

    *

    சரி இந்த ஜோடிகள் என்ன சொல்றாங்க..


  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3352
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நகைச்சுவை உணர்வு ஒரு வரம் !

    பதிவு 2

    குலுங்க குலுங்க சிரிக்கும் போது எல்லோருமே குழந்தையாகி விடுகிறோம் - கவலைகள் , காற்றில் வால் இல்லாத பட்டம் போல மிதக்கின்றன ...



    சிரிப்பில் உண்டாகும் ராகம் - அபூர்வ ராகம் - அனுபவித்தால் தான் இந்த ராகத்தை புரிந்து கொள்ள முடியும்


  5. Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #3353
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    உங்களுடைய புதிய தலைப்பு நான் எப்போதுமே மிக மிக ரசிக்கக் கூடியது. சிரிப்பைப் பற்றிய தங்களது பல்வேறு முன்னோட்டக் கருத்துக்களை ரசித்தேன். பதிவைப் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. சிரிப்பு சம்பந்தமான திரைப்பட பாடல்களையும் இணைத்து தருவதற்கு நன்றிகள். எப்போதும் போல இந்தத் தலைப்பையும் பின்னி எடுத்து விடுவீர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிரிப்பாய் சிரிப்பதற்கு பதில் வாழ்க்கையில் கள்ளமில்லாமல் சிரித்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.

    தெனாலி ராமனுக்கு ராயர் ஒரு விஷயத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் மற்றவர் ராமன் மீது இரக்கம் காட்ட ராயரை வேண்ட, அதற்கு கிருஷ்ண தேவராயர் 'சரி! உன் இஷ்டப்படியே உன் இறப்பு இருக்க முடிவு செய்து கொள். நீ எப்படி இறக்க விரும்புகிறாய்? எனக் கேட்க, அதற்கு ராமன் 'அரசே! நான் கிழவனாகி இருக்க விரும்புகிறேன்' என்று போட்டானே ஒரு போடு. புத்திசாலித்தனம் கலந்த மேதையின் அறிவார்ந்த நகைச்சுவை அல்லவா அது! தானும் தப்பித்து மற்றவர்களையும் மகிழ்வித்த அதி புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வு. இது போல நிறைய சங்கதிகள் தங்கள் பதிவில் வரப்போகிறது என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks uvausan thanked for this post
  8. #3354
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாழ்க்கை என்பது இப்படி யதார்த்தத்தை மீறி இருக்கக் கூடாது. வயது மீறி வரம்பு மீறி உறவுகள் அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிக அழகாக விளக்கும் பாடல். கல்யாணம் என்பது விளையாட்டல்ல. அதில் விபரீத விளையாட்டுக்கள் விளையாடுவது பெரும் தீங்கில் போய் முடியும். அபூர்வ ராகங்கள் அபஸ்வர ராகங்களாகி விட்டால் இப்படித்தான் எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள் இல்லையா ரவி சார்?

    'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று' என்று சொல்லிய இயக்குனர் 'இவருக்கு ஜோடி இவரா?' என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஷேக் முகம்மது பாடிய பாடல். முகக் கோணல்களில் ஊரார் சிரிசிரியென்று சிரிக்க, வயதொத்தாத ஜோடிகள் வருந்தி ஒடியும் அளவிற்கு கேலிக்கு ஆளான கதை.

    Last edited by vasudevan31355; 3rd September 2015 at 08:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3355
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓய் திட்டறீரா பாராட்டறீரா..


    நகைச்சுவை உணர்வு ஒரு வரம் எனப் போட்டுவிட்டு சிரிப்பைச் சுமந்து வரும் பாடல்கள் போடும் ரவிக்கு ஒரு ஓ அவரது உழைப்பு நம் எல்லோருக்கும் தேவை..

    ‘’ நல்ல நேரம் பார்த்து
    நண்பனையே மாத்து” எதற்காக ச் செவ்வெழுத்துக்கள் எனத் தெரியவில்லை..

    *

    கை கொட்டிச் சிரிப்பார்கள் நல்ல பாடல் தான்.. உங்கள் உபபதிவுகள் எல்லாம் மிக அருமையாக இருக்கின்றதுவாசுசார்..






    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ரவி சார்!

    உங்களுடைய புதிய தலைப்பு நான் எப்போதுமே மிக மிக ரசிக்கக் கூடியது. சிரிப்பைப் பற்றிய தங்களது பல்வேறு முன்னோட்டக் கருத்துக்களை ரசித்தேன். பதிவைப் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. சிரிப்பு சம்பந்தமான திரைப்பட பாடல்களையும் இணைத்து தருவதற்கு நன்றிகள். எப்போதும் போல இந்தத் தலைப்பையும் பின்னி எடுத்து விடுவீர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிரிப்பாய் சிரிப்பதற்கு பதில் வாழ்க்கையில் கள்ளமில்லாமல் சிரித்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.

    தெனாலி ராமனுக்கு ராயர் ஒரு விஷயத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் மற்றவர் ராமன் மீது இரக்கம் காட்ட ராயரை வேண்ட, அதற்கு கிருஷ்ண தேவராயர் 'சரி! உன் இஷ்டப்படியே உன் இறப்பு இருக்க முடிவு செய்து கொள். நீ எப்படி இறக்க விரும்புகிறாய்? எனக் கேட்க, அதற்கு ராமன் 'அரசே! நான் கிழவனாகி இருக்க விரும்புகிறேன்' என்று போட்டானே ஒரு போடு. புத்திசாலித்தனம் கலந்த மேதையின் அறிவார்ந்த நகைச்சுவை அல்லவா அது! தானும் தப்பித்து மற்றவர்களையும் மகிழ்வித்த அதி புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வு. இது போல நிறைய சங்கதிகள் தங்கள் பதிவில் வரப்போகிறது என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  10. #3356
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    சுந்தரபாண்டியன் சார் புண்ணியத்தால் பலவருடங்களுக்கு முன் கேட்ட

    'கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா
    கம்பன் சொன்ன வார்த்தையெல்லாம் நான் சொல்லவா
    கண்ணே நான் சொல்லவா'

    பாடலை மனதார கேட்டு ரசித்தேன்.

    இப்பாடலின் சரணங்கள் இப்போது கேட்டவுடன் நன்றாக நினைவுக்கு வந்து விட்டன. இதில் வேடிக்கை பார்த்தீர்களா? அப்படியே இந்த டியூனை நடிகர் திலகத்தின் 'உத்தமன்' படத்தில் 'நாளை நாளை என்றிருந்தேன்' டூயட்டில் மகாதேவன் யூஸ் பண்ணியிருப்பார்.

    'கல்யாணத்தை மனதில் வைத்து' பாடலில்

    'குழல் வளர்ந்து கொடிகளைப் போல் பாதம் தழுவுது
    குறுகுறுத்த விழியில் வண்டு மோகம் பாடுது'

    என்ற சரணங்களை கவனித்தால் 'உத்தமன்' பட 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலின்

    'பூமியெங்கும் பச்சை சேலை மணமகள் கோலம்
    பூத்த பூக்கள் பார்க்கும் பார்வை விழிகளின் ஜாலம்'

    சரண டியூனை அப்படியே ஒத்திருக்கும். ம்.
    Last edited by vasudevan31355; 3rd September 2015 at 09:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes madhu, sss liked this post
  12. #3357
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    எங்கேயும் அதிகம் கிடைக்காத ரேர் சாங்க்ஸ் எவ்வளவு போடுறோம். கேக்குறீரா? அதை விட்டு சண்டை மூட்டி விடப் பாக்குறீரே!

    10 விஜயகுமாரி பாட்டைப் போட்டால்தான் நீரெல்லாம் அடங்குவீர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes sss liked this post
  14. #3358
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
    தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
    பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
    நல்ல இடமா அமையணும்" - ck

    ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மனப்பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
    Last edited by g94127302; 3rd September 2015 at 09:31 PM.

  15. #3359
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    " கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
    தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
    பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
    நல்ல இடமா அமையணும்" - ck

    ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மன பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
    ரவிங்காணும்.. மனப்பக்குவம்ங்கறது வேறு.. ஜாலியா இருக்கறதுங்கறது வேறு..தவிர மற்றவர்களிடமிருந்து காப்பி அடித்தால் அதைச் சொல்லும் மனத்திட்பமும் எனக்கு இருக்கிறது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்..

    எனக்கு நகைச்சுவை உணர்வுகொஞ்சம் கம்மி தான்.. எப்படித் தெரிஞ்சது தெரியுமா..கடந்த பத்து நிமிஷமாய்ச் சிரிச்சுண்டே இருக்கேங்காணும்.. எதுக்குத்தெரியுமா..ஒரு கல்லூரி மாணவி என நினைக்கிறேன்..ஃபுல் ஹிலாரியஸா அதேசமயத்துல பக்குவமாகவும் எழுதியிருக்காங்க..நீங்களும் சிரிப்பதற்காக..

    *

    நன்றி மிஸ் விவி.. முக நூல்

    *

    ப்ரூக்பீல்ட் மாலில் ஒரு படம் பார்க்கப் போனால் ஒரு டிக்கெட் விலை 120 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் இன்னும் கூடுதல் கட்டணம். தியேட்டர் ஏரியாவுக்குள் போகும்போது பையை சோதனையிடுவார்கள். சாப்பாடு எதுவும் கொண்டு போகக் கூடாது.

    எப்போதுமே பசியில் இருக்கும் நாங்கள் (வளர்ர புள்ளீங்கல்ல) எப்படியாவது எச்சில் முழுங்கிக் கொண்டு உட்கார்ந்தாலும் பக்கத்து சீட்காரர்கள் மினி மீல்ஸும் ஆளுயர கோக் டம்ளரும் வாங்கிக் கொண்டு வந்து உட்காரும் போது அவர்களுக்கு எங்களால் வயிற்று வலி வந்துவிடக் கூடாதென்னும் ஒரே நல்லெண்ணதோடு food court போனால் கிராஸ்கட் கமலா ஸ்டோர் வாசலில் பத்து ரூபாய்க்கு விற்கும் பாப்கார்னை 80 ரூபாய் என்பான். 20 ரூபாய் பாப்கார்னை 120 ரூபாய் என்பான்.

    டிக்கெட் காசுக்கே பர்சை வழித்து சில்லறை பொறுக்கி கொடுத்திருப்போம். மறுபடி காலேஜ் பேக் ஹேண்ட் பேக் என எல்லாவற்றிலும் துழாவி ஒரு 100 200 தேற்றி எல்லாருக்குமாக ஒரே ஒரு பாப்கார்ன் ஒரே ஒரு கோக் (ஸ்ட்ரா எடுக்க மறந்துடாதீங்கடி) வாங்கி வெற்றிக் களிப்போடு தியேட்டருக்கு திரும்புவதற்குள் பாதி படம் ஓடிவிடும். (இருக்கற 100 ரூபாய்க்கு பாப்கார்ன் மட்டுந்தான் வாங்க முடியும்ன்னு தெரிஞ்சாலும் வரிசைல நின்னு ஏய் ஐஸ்க்ரீம் வாங்கலாமா ஏய் காம்போ வாங்கலாமா ஏய் துபாய வாங்கலாமான்னு கொஞ்ச நேரம் கன்பீசன்ல திணறற வரைக்கும் ஆப்பரேட்டர் அன்கிள் படம் போடாமயா இருப்பாரு?)

    அதிலும் ஒருத்தி உண்டு. அவள் கையில் பாப்கார்ன் போனால் மொக்கைப் படமாக இருந்தாலும் மெய்மறந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படத்தில் லயித்துவிடுவாள். அதனால் கடைசியாக தான் அவள் கையில் பாப்கார்ன் கொடுப்போம். மீறி முதலிலேயே அவள் எடுத்துவிட்டால் அவள் அதைத் திருப்பி தரும் வரை ஸ்க்ரீனை பார்க்காமல் அவளைப் பார்த்துக்கொண்டிருப்போம். (இரு தரேன் குறுகுறுன்னு பார்க்காத)

    இந்த கேப்பில் 'எங்க இருக்க வீட்டுக்கு எப்ப வருவ அங்கேர்ந்து கரெக்டா பஸ் ஏறிடுவேல்ல' என எல்லாருக்கும் வரிசையாக போன் வேறு. படம் முடித்து வெளியே வரும்போது வெளியே பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். "இவளே பஸ்ஸுக்கு காசிருக்குல்ல?இல்லாட்டி இந்தா பத்து ரூபாய்" என ஒருத்தி நீட்டுவாள்.

    'தமிழே எனக்கு கொஞ்சம் தான் புரியும் இதுல மலையாள படத்துக்கு வேற இழுத்துட்டு வரீங்களேடி' என புலம்பிக்கொண்டே இந்திக்காரி கிளம்புவாள். நிவின் பாலி வீட்டில் தோட்டக்காரியாகவாவது சேர வேண்டும் என திட்டம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு கிளம்பி வருவோம்.

    இதே ப்ராசஸ் அடுத்த மாதமும் தொடரும்.

    ‪#‎நாங்க_படம்_பாக்க_போற_கதை‬

  16. #3360
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - உங்கள் கண்ணப்ப நாயினார் பதிவுகள் மிகவும் அருமை - உங்களின் தன்னடக்கம் - என்னை புல்லரிக்க வைத்துவிட்டது - எனது குல தெய்வமான குசலாம்பாள் சமேத சரளாநாதேஸ்வரர் அவரை வணங்கி , புள் அரித்த இடங்களில் தடிப்பு வராமல் இருக்க விபூதியை உடலெங்கும் தடவிக்கொண்டேன் . சில கொப்பளங்கள் மறைந்துவிட்டன .. யார் சொன்னது உங்களுக்கு ஆன்மிகம் வராது என்று ?? நீங்கள் எழுதுவதில்லை .. நீங்களும் எழுதினால் , நான் துண்டைக்காணோம் , துணியைக்காணோம் என்று என்றோ ஓடியிருப்பேன் . அருமையான பாடல்கள் . திருவருட்செல்வரில் இந்த வேடத்தை நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் - நடிப்பில் உருகி இறைவன் தன் கண்களை தோண்டி ந .தி க்கு கொடுத்திருப்பார் . பக்தி என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் நம் இந்து மதத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால் ஒன்று கண்ணப்பர் அடுத்த ஒன்று ஆண்டாள் . மிக்க நன்றி

  17. Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •