-
3rd September 2015, 02:27 PM
#3341
Originally Posted by
vasudevan31355
மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.
வாசு அண்ணா அவர்களே
http://www.mediafire.com/listen/434j...ECK19B3TMS.mp3
என்னிடம் உள்ள பாடல் இதோ உங்களுக்கு ... உபயம் நமது தூத்துக்குடி வள்ளல் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்கள்
இது தவிர வியர்வை துளிகளே (TMS) மற்றும் கல்யாணத்தை (TMS & PS ) பாடலும் உள்ளன..வேண்டுமா ?
நன்றி
சுந்தரபாண்டியன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015 02:27 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2015, 02:36 PM
#3342
Junior Member
Seasoned Hubber
மதிய வணக்கம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 02:41 PM
#3343
Senior Member
Diamond Hubber
Originally Posted by
sss
வாசு அண்ணா அவர்களே
http://www.mediafire.com/listen/434j...ECK19B3TMS.mp3
என்னிடம் உள்ள பாடல் இதோ உங்களுக்கு ... உபயம் நமது தூத்துக்குடி வள்ளல் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்கள்
இது தவிர வியர்வை துளிகளே (TMS) மற்றும் கல்யாணத்தை (TMS & PS ) பாடலும் உள்ளன..வேண்டுமா ?
நன்றி
சுந்தரபாண்டியன்
நன்றிகள் பல சுந்தரபாண்டியன் சார். கண்டிப்பாக அனைத்துப் பாடல்களையும் தாருங்கள். பொக்கிஷமாக போற்றி வைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆனந்தம் என்ன இருக்கிறது?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
sss liked this post
-
3rd September 2015, 02:43 PM
#3344
Senior Member
Diamond Hubber
அன்பு சுந்தரபாண்டியன் சார்,
பேராசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மது அண்ணாவும், நம் ராகவேந்திரன் சாரும் மிக்க சந்தோஷம் அடைவார்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd September 2015, 02:44 PM
#3345
Senior Member
Diamond Hubber
-
3rd September 2015, 02:51 PM
#3346
Junior Member
Seasoned Hubber
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்!
ஒரு புதிய பதிவு . புதிய கண்ணோட்டத்தில் . இதுவும் ஒரு நெடும் தொடர் அல்ல . சற்று மாறுப்பட்ட கருத்துக்கள் . இப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் , " இதுவும் கடந்து போகும் " என்று நாம் சொல்லிக்கொண்டாலும் , மனதில் ஆழமான வலி இருப்பது உண்மைதான் . சற்று சூழ்நிலையை மறக்க இந்த தலைப்பை எடுத்துக்கொண்டேன் . "சிரிப்புக்கு " "நகைச்சுவைக்கு " அதிகமாக நாம் முக்கியத்துவம் தருவதில்லை . வாழ்க்கை ஒரு இயந்திரமாகவே ஓடுகிறது . நகைச்சுவை நிறைந்த பதிவுகளை நாம் இங்கு போடாவிட்டாலும் , பேசாவிட்டாலும் , சம்பந்தப்பட்ட பாடல்களை தொகுத்து வழங்க இருக்கிறேன் . ரசிக்கலாமா ??
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலையளிக்கும் நபரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாழ்க்கையானது துன்பங்களால் நிறைந்தது.
நாள்தோறும் ஏதேனும் ஒரு சோதனையோ அல்லது கவலையோ ஒவ்வொரு மனிதனுக்குமே ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி உணர்வை அடைய ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். மகிழ்ச்சியை உடனடியாகவும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக தரக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், நகைச்சுவை உணர்வு. இந்த நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். இவர் தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை தருபவராக இருக்கிறார்.
எப்போதும் தன்னை துரதிருஷ்டவாதியாகவே நினைத்துக்கொண்டு, தான் உள்ளிட்ட எல்லோரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை.
உருளுவது தலையா, தலைப்பாகையா?
19ம் நூற்றாண்டில், ஈரான் நாட்டில் பஹாய் சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கு பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டின் ஷியா அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. சிரச்சேதத்தின் மூலம் அந்த மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டம். களத்திற்கு கொண்டுசென்று அவரது குனிந்த தலையை கொலையாளி வெட்டுகையில் குறி தவறி அவரின் தலைப்பாகையின் மீது கத்திப் பட்டு அந்த தலைப்பாகை உருண்டு ஓடியது. அந்த சூழ்நிலையிலும் அந்த பஹாய் சிரித்துக்கொண்டே கூறியதாவது, "உருண்டு ஓடுவது எனது தலையா அல்லது தலைப்பாகையா?" என்பதுதான். தனது உயிர்போகும் தருவாயில்கூட, தனது நகைச்சுவை உணர்வின் மூலம் அந்த இடத்தில் கலகலப்பைக் கொண்டு வந்தார். இதுபோன்ற ஒரு மனிதர் அநியாயமாக இறக்கிறாரே என்று அங்கிருந்த காவலர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். நகைச்சுவை உணர்வானது ஒரு மனிதனை எந்த சூழலிலும் சந்தோஷமாக வைக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலனாகிறது.
முகலாய பேரரசர் அக்பர் கூட நகைச்சுவை உணர்வுகொண்ட பீர்பாலை தனது அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார். மிகப்பெரிய பேரரசை பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்ட அக்பருக்கு, பீர்பால் போன்றவர்களின் நகைச்சுவை உணர்வு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்தது.
வித்தியாசம் அறியுங்கள்
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள் இருப்பீர்கள்.
நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம் மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.
ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும் பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல. அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.
சில முக்கிய நன்மைகள்
* நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து, நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது.
* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு
உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும்.
இது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் செய்ததின் விளைவு சிரிப்புஎன்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக (துன்பம் வரும்போது சிரியுங்கள்), வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப
-என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர்,தனது தொல்காப்பியத்தில் மனிதர்களின் எட்டு வகையான உணர்வுகளை பதிவு செய்ததில், நகை(சிரிப்பு) இதற்கே முதலிடம் வகுத்துள்ளார் என்றால் சிரிப்பின் மகத்துவத்தை நாம் அறிய வேண்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனிதன் தன் சுயத்தை, மனிதன் தன் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதும் ஓய்வற்ற உழைப்பு,போதிய ஊதியமின்மை,பணத்தேவை,பேராசை போன்ற காரணங்களே மனிதன் உண்மையாக சிரிக்க மறந்ததற்கு காரணம் எனலாம்.
இனி சிரிப்புக்களை சுமந்து வரும் சில பாடல்களை ரசிப்போம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd September 2015, 03:09 PM
#3347
Senior Member
Senior Hubber
ரவி...எனக்கு அழுவாச்சியா வருது...உங்களை மாதிரி சப்ஜெக்ட் பிடிச்சு எழுத முடியலையேன்னு..
என்னுடைய நண்பர் ஒருத்தர்..அவரும் என்னைப் போலவே டயட்..ப்ளஸ் ஆ.அ.கா.ஜ எல்லாம் செய்பவர்.. ஸோ
டயட் ப்ரகாரம் ஈவ்னிங்க் அவர் சென்று மூன்று முட்டை ஆம்லெட் சாப்பிடுவது வழக்கம்.. நைட் டின்னர் மோர் தான்..
கா.ஜ நாளில் ஈவ்னிங் எனக்கு ஃபோன்..
கண்ணா
என்னாச்சு
அதாவது வழக்கம் போல ஈவ்னிங்க் போய் எக் ஆர்டர் பண்ணினேனா..அப்புறம் தான் இன்னிக்கு சாப்பிடக்கூடாதுன்னு நினைவு வந்தது..
அப்புறம் என்ன பண்ணினே..
வேறென்ன செய்ய..ஆம்லெட்ல ஆனியன் போடாதேன்னுட்டேன்
**
-
3rd September 2015, 03:16 PM
#3348
Originally Posted by
vasudevan31355
நன்றிகள் பல சுந்தரபாண்டியன் சார். கண்டிப்பாக அனைத்துப் பாடல்களையும் தாருங்கள். பொக்கிஷமாக போற்றி வைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆனந்தம் என்ன இருக்கிறது?
http://www.mediafire.com/listen/uz0k...m_Ketkurom.mp3
http://www.mediafire.com/listen/iqts...m_Ketkurom.mp3
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
3rd September 2015, 03:42 PM
#3349
Junior Member
Seasoned Hubber
CK - ஒரு பக்கம் 108 காயத்ரி - இன்னொருபக்கம் - ஒரு கருவை வெளிவராமல் உள்ளே தள்ளுவிக்கும் செயல் - உங்களை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? ( டண்ட டண்ட டையிங் ---- back ground music )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2015, 03:45 PM
#3350
Junior Member
Seasoned Hubber
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்! பதிவு 1
இந்த பாடல் இன்றைய சூழ்நிலைக்கும் எவ்வளவு பொருத்துகிறது பாருங்கள் !!
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
நல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks