Page 332 of 400 FirstFirst ... 232282322330331332333334342382 ... LastLast
Results 3,311 to 3,320 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3311
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - எங்களுக்குப்பாராட்ட , இது வரை உபயோகிக்காத வார்த்தைகளை கண்டு பிடித்து எழுத கொஞ்சம் கூட கால அவகாசம் தராமல் குறைந்த இடைவெளியில் மீண்டும் பாலாவை கூட்டிக்கொண்டு வந்தால் நாங்கள் என்ன செய்வது - எந்த நீதி தேவனுக்காவது இது அடுக்குமா ?? -

    இப்படி பண்ணலாமா ? பாராட்டுக்களை முதலில் போட்டு விடுகிறோம் , பிறகு பாலாவை அழைத்து வாருங்கள் ......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3312
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு.. எப்போதோ கேட்டது போல் வெகு மெல்லிய புகையாக நினைவிருக்கிறது மாணிக்கப் பதுமைக்கு.. ஆடியோவை வெகுவாக ரசித்தேன்..

    கவிஞர் வாலியாய்த் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்..கொஞ்சம் சாயல் தெரிகிறது..ஓவர் டு வாலி தாஸ் இன் அமெரிக்கா..


    காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
    கவிதைகள் பெறலாமா
    அதிலே கனவுகள் வரலாமா

    24 காரட்ல ஊஞ்சல்ல கவிதைகல் பெறணுமாம்.. நைஸ்.. அப்புறம் எதுக்கு கனவு..

    குங்குமச் சாந்துக்கு மேலே
    இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே
    மங்கலமாய் ஒரு முத்தம் கொடுத்திட
    மாப்பிள்ளை வரலாமா
    அதில் மணவினை பெறலாமா

    நெற்றியிலே முத்தம் கொடுக்கறதுக்கு அழகான வரிகள்..பட் காதலன்லாம் நெத்திலயா கொடுப்பான் ?

    அழகான பாடல் .. நானும் தேடிப்பார்த்தா நீதி தேவன் மயக்கம் சாங்க்ஸ் தான் வருது.. ஓவர் டூ சென்னை மதுண்ணா..

  4. #3313
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசு..
    நெற்றியிலே முத்தம் கொடுக்கறதுக்கு அழகான வரிகள்..பட் காதலன்லாம் நெத்திலயா கொடுப்பான் ?


    பர்ஸ்ட் நெத்தியிலே

    அப்புறம்

    இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3314
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இதையும் CK விற்கு சொல்லிவிடுங்களேன் - இன்னும் அதே சாலையில் பயணம் செய்தால் நெய்வேலியில் இருக்கும் சுரங்கத்தையும் அடைந்துவிடலாம்

  6. #3315
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    காலை வணக்கம்
    திரையில் பக்தி



  7. #3316
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி


    இறைவன் ஒருவனே - நாம் தான் அவனுக்கு பல ரூபங்கள் தருகிறோம் - பல பெயர்களினால் அழைக்கிறோம் - அவனும் கருணை கூர்ந்து , நாம் எந்த பெயரை வைத்துக்கூப்பிட்டாலும் நம்மிடம் ஓடோடி வருகிறான் .எந்த ரூபமும் , மற்ற ஒன்றைக்காட்டிலும் உயர்ந்ததோ , தாழ்ந்ததோ அல்ல . எல்லா ரூபங்களும் சொல்லும் பொதுவான கருத்து ஒன்றுதான் - அன்புடன் இருங்கள் , அன்பைக்காட்டுங்கள் - அஹிம்சையால் என்னை நீங்கள் அடைய முடியாது என்பதே ! - இந்த பாடல் மேல் சொன்ன கருத்துக்களுக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு .


  8. #3317
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி : ( நிறைவு பகுதி )

    “இதுவும் கடந்து போகும்”
    ..............................................


    ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.
    ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.

    தொடர்ந்து புத்தரை நோக்கி,

    “புத்தரே, நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.

    ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
    இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.

    எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

    அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி
    மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.

    நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    உங்களைக் குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றது அக்குரல்.

    மௌனமாக சிரித்த புத்தர்,

    “இதுவும் கடந்து போகும்” இதுதான் அந்த மந்திரம் என்றார்.,

    “இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாக
    மூன்று முறை சொன்னார்.

    அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.

    நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

    “இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

    இம் மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

    “இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது.
    இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”
    நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

    “இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்.
    இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

    அடுத்து இருந்த அழகான பெண்,

    “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

    கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது,

    “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.


    ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..

    ஆம்,நண்பர்களே.,

    தோல்விகள் தழுவும்போது,

    “இதுவும் கடந்து போகும்”

    என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    சோர்ந்து விட மாட்டீர்கள்.

    தாய் , தந்தையர்களை என்றுமே கோபிக்காதீர்கள் - உங்கள் முன்னேற்றத்துக்கும் , நீங்கள் இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கும் அவர்கள் தான் மூலக்காரணம் . அவர்கள் ஆசியின்றி நீங்கள் துரும்பைக்கொட்ட உங்கள் பக்கம் சேர்க்க முடியாது . இதுவும் கடந்து போகும் " என்பதால் இருக்கும் பொது உங்கள் மனதில் வையுங்கள் - முதியோர் இல்லம் வேண்டாம் .

    மனைவியை என்றும் ஆத்மார்த்தமாக பாராட்டுங்கள் - அவள் தான் உங்கள் வெற்றியின் ஆணிவேர் . சக்தி இல்லாமல் சிவமே இல்லாத போது , நாம் எந்த மூலை ?? "இதுவும் கடந்து போகும் " - தாமதிக்காதீர்கள் இன்னொருவரை மனமார பாராட்ட !!

    நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில்

    வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்
    கொள்ளுங்கள்.

    அவர்கள் இருக்கும்போது போது கொளரவிப்பீர்கள்.

    அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.

    எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்

    உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.

    “இதுவும் கடந்து போகும்” என்பதை

    உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும்.

    தோல்வியைச் சந்திப்பவர்கள்,

    நோயில் இருப்பவர்கள்,

    சிக்கலில் மாட்டியவர்கள்,

    திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும்

    இதை மனதில் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே.,

    ===============






  9. #3318
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    தினமும் செய்ய வேண்டியவை

    1)சோகத்தை >>> Delete செய்யுங்க

    2)சந்தோஷத்தை >>> Save செய்யுங்க

    3)சொந்தங்களை >>> Recharge செய்யுங்க

    4)நட்புகளை >>> Down load செய்யுங்க

    5)எதிரிகளை >>>Erase செய்யுங்க

    6) உண்மையை >>>Broad cast செய்யுங்க

    7)துக்கத்தை >>>Switch off செய்யுங்க

    8)வேதனையை >>>Not reachable செய்யுங்க

    9)பாசத்தை >>> In coming செய்யுங்க


    10)வெறுப்பை >>>Out going செய்யுங்க

    11) சிரிப்பை >>>In box செய்யுங்க


    12)அழுகையை >>> Out box செய்யுங்க

    13)கோபத்தை >>>Hold செய்யுங்க

    14) இன்முகத்தை >>>Send செய்யுங்க

    15) உதவியை >>>Ok செய்யுங்க

    16) இதயத்தை >>> Vibrate செய்யுங்க

    பிறகு பாருங்க

    வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
    Have a relaxing day everyday


  10. #3319
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் இனிய வணக்கங்கள் . இந்த மதுரகானத்திரியின் மூலம் என் நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றிக்கொண்டேன் . ஒரு பெரிய வட்டத்தை பூர்த்தி செய்துவிட்ட மகிழ்ச்சி . என்னைப்பொருத்த வரையில் தெய்வம் என்று ஒன்று தனியாக எங்குமே இல்லை. கீழே இருக்கும் நபர்களை multiply பண்ணினால் அந்த கூட்டு தொகையின் பெயர் தான் தெய்வம் .

    (பெற்றவர்கள் )( மனைவி)( நண்பர்கள்)( குரு) = தெய்வம் . ஒரு வகுப்பில் கணித ஆசிரியர் மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார் .

    What is the sum total of

    (x-a) * (x-b) * (x-c ) ----- upto ( x-z) ??

    யாருமே பதில் சொல்ல முடியாமல் தவித்தனர் . ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து , "சார் , விடை பூஜ்யம் " என்றான் . ஆசிரியருக்கு மிகவும் ஆச்சிரியம் , தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் " எப்படி பூஜ்யம்?" என்றாய் ?

    அவன் உடனே சார் , x-a ; x-b என்று சொல்லிக்கொண்டு வரும் போது
    ( x-x) என்று வரும் - அது ஜீரோ என்பதால் எல்லாமே ஜீரோ வாகி விடுகிறது என்றான் . இந்த உதாரணத்தையே இங்கும் உபயோகிக்கலாம் . பெற்றோர் , மனைவி , நண்பர்கள் , குரு என்ற இந்த வரிசையில் ஒருவரை நாம் மதிக்காமல் விட்டாலும் - பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பவனை பார்க்கவே முடியாது .

    என் பதிவுகளை படித்து மனமுவந்து பாராட்டிய அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி . பல பாடல்கள் விட்டுப்போய் இருக்கலாம் - ஆனால் சொல்ல வந்த கருத்துக்களில் நான் குறை வைக்க வில்லை .

    இங்கு இருக்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட அந்த இறைவனை மனமுருகி வேண்டிக்கொள்கிறேன் .







  11. Likes madhu liked this post
  12. #3320
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    சிலை விஷயத்தில் நாமும் சிலையாகி நிற்கிறோம் - மெரினாவை விதவையாக்குவதில் எவ்வளவு பேர்களுக்கு மகிழ்ச்சி --- நன்றி என்று எழுதிய வார்த்தைகளில் உள்ள மை காய்வதற்குள் , நெஞ்சில் இரத்தம் என்னும் மையை கசிய செய்து விட்டார்கள் . உறங்குபவர்களுக்கு அங்கு இடம் உண்டாம் - தமிழை , தேச பக்தியை , இந்த தேசத்தை தலை நிமிர்ந்து நிக்க வைத்தவனை , அங்கே தொடர்ந்து நிக்க வைக்கக்கூடாதாம் ---- குடி போதையில் செல்லும் கார்கள் அங்கே , அந்த சிலையினால் , நிமிர்ந்து நிற்கும் அந்த வெண்கல சிலையினால் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளுமாம் -- அதனால் ஒழுங்காக ஒட்டிச்செல் , உனக்காக உன் குடும்பம் வீட்டில் விழி மேல் வழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று நிமிர்ந்து சொல்லும் சிலை அங்கே இருப்பதில் நியாயம் இல்லையாம் - முதுகு எலும்பு இல்லாத மக்கள் , நடிகர்கள் , குனிந்து , குனிந்தே , தமிழனின் மானத்தை புதைத்தவர்கள் நடுவே இந்த ஒரு சிலையாவது நிமிர்ந்து நிக்கட்டும் ......... இதுவும் கடந்து போகட்டும் -----

  13. Likes madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •