Page 331 of 400 FirstFirst ... 231281321329330331332333341381 ... LastLast
Results 3,301 to 3,310 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3301
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி
    அதில் இது மிகவும் சிறந்த பாடல்
    சலீல் செளத்ரி அவர்களின் இசையில்


  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3302
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எது எது எங்கே இருக்கணுமோ அது அது அந்த இடத்தில் இருந்தால்தான் அழகு. காமெடி என்றால் காமெடியோடு நிற்கலாம். அதை விடுத்து நடிகர் திலகம் மாதிரி நடிப்பதாக எண்ணிக் கொண்டு நடிகர் திலகத்தின் பிரதான நாயகியையே ஜோடியாக்கிக் கொண்டு இப்படி சோதனை செய்யக் கூடாது. விஜயாவும் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. பாடல் என்னவோ நல்ல பாடல்தான். ஆனால் காட்சியில் குமட்டுகிறது. 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் பெயர். ஆனால் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.

    Last edited by vasudevan31355; 1st September 2015 at 10:57 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes raagadevan liked this post
  6. #3303
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    எது எது எங்கே இருக்கணுமோ அது அது அந்த இடத்தில் இருந்தால்தான் அழகு. காமெடி என்றால் காமேடியோடு நிற்கலாம். அதை விடுத்து நடிகர் திலகம் மாதிரி நடிப்பதாக எண்ணிக் கொண்டு நடிகர் திலகத்தின் பிரதான நாயகியையே ஜோடியாக்கிக் கொண்டு இப்படி சோதனை செய்யக் கூடாது. விஜயாவும் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. பாடல் என்னவோ நல்ல பாடல்தான். ஆனால் காட்சியில் குமட்டுகிறது. 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் பெயர். ஆனால் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.
    பேசாமல் படத்தின் பேரை நான் குமட்டிக்கொண்டே இருப்பேன் என்று வைத்திருக்கலாம்.

    இந்த லட்சணத்தில் படத்தின் பேரில் ஒரு எழுத்தை தலைகீழாகப் போட்டு வேறு நம்மைப் படுத்துவார்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes vasudevan31355 liked this post
  8. #3304
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்..

    படம் போர் பாட் நல்லா இருக்கும்ங்கறீங்க வாசு.. சில சமயங்களில் காட்சி நல்லா இருக்கும்.. பாட் ஸோ ஸோ தான்..அதுபோல பாடல்கள் போடலாமே..

    ஏனெனில் இன்று எழுதிய வெண்பாக்கள் முகநூலில்

    *
    Qantab beach, Muscat

    காந்தாரி இன்றிருந்தால் கண் திறந்து பார்த்திடுவாள்
    காந்தாப் கடற்கரையின் பேரழகை - சீண்டியே
    செல்லும் கடலலைகள் திரும்பிவந்து முட்டுவதும்
    அள்ளிடும் நெஞ்சினை ஆம்..

    திரைகட லோடித் திரவியமாய்ப் பாடலிலே
    திரைப்படத்தில் காட்டுவார் தேர்ந்தே - கரையினில்
    வெண்மணற் பாதையில் வேகமாய் நாயகியும்
    மென்மையாய் ஆடுவாள் ஆம்..

    (இங்கு எடுக்கப்பட்ட பாடல்கள் - தத்துவமான - எச்சூச்மி மிஸ்டர் கந்தசாமி -சுச்சியின்குரல்,
    சூர்யா வின் ஒரு படம், பாவனாவின் தீபாவளி படத்தில் ஒரு பாடல்)

    *

    எச்சூச்மி பாட்டை யூட்யூபில் பார்த்து மனம் மகிழலாம்

  9. #3305
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி
    அதில் இது மிகவும் சிறந்த பாடல்
    சலீல் செளத்ரி அவர்களின் இசையில்
    Here is another song that fits the description of "வாணிக்கு மிக நல்ல மலையாள பாடல்கள் கிட்டி"; composed by Salilda...


  10. Likes Russellmai liked this post
  11. #3306
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    31

    'மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக'

    'நீதிதேவன்'

    இன்று பாலாவின் தொடரில் மிக அரிய பாடல் ஒன்று. 'நீதிதேவன்' என்ற படத்தின் பாடல் தான் அது. 1971-ல் வந்த படம். இந்தப் படத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நாயகன் ஜெயசங்கர். இசை 'திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன் அவர்களாம். இயக்கம் ஆர்.தேவராஜன் என்று இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன

    மிக அருமையான பாடல். பாலா சுசீலாம்மாவுடன் பாடிய டூயட்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று. குழைத்த சந்தனம் போல குரல் குழைவுகளில் ஜாலம் காட்டியிருப்பார் பாலா வழக்கம் போல. சுசீலாவும் நல்ல ஈடு. பாடல் வரிகளில் சுத்த தமிழ் நிரப்பபட்டு மனதிலும் உவகை நிரப்பப் படுகிறது. நாயகன் கேள்விகளை பல்லவியில் கேட்க அப்படியே தொடரும் நாயகி.

    'இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே '

    'அதில் மணவினை பெறலாமா' என்ற புதுமை வரிகள்.

    அதே போல ரொம்ப ரசிக்கக் கூடிய, புரிந்து விட்டால் தேனை விட இனிக்கக்கூடிய இனிப்பான வரிகளைப் பாருங்கள்.

    'செங்கனி இதழ்களின் மேலே
    அது தேன்மொழி பேசிடும் போதே
    பங்குக்கு நாலென பழங்கள் பறித்து
    பந்தியில் இடலாமா
    அதை நான் பசியுடன் பெறலாமா'

    அருமையான கற்பனை வளம் பாடலாசிரியருக்கு.

    'எப்போதும் இது தப்பாதென்பதை
    இதயத்தில் அறிவோமா'

    என்று சுசீலா அம்மா அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பதை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

    இப்படத்தைப் பற்றி விவரங்கள் வந்தவுடன் காட்சிகளை இங்கு இணைத்து பின் தெரிவிக்கிறேன். இப்படத்தைப் பற்றியோ, இப்பாடலைப் பற்றியோ தெரிந்தால் அது பற்றித் தெரிவிக்கும்படி மது அண்ணாவையும், ராகவேந்திரன் சாரையும் அழைக்கிறேன். அதுவரை இப்பாடலின் ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்.


    மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
    என் மனதைத் தரலாமா
    நான் மடியில் வரலாமா

    காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
    கவிதைகள் பெறலாமா
    அதிலே கனவுகள் வரலாமா

    மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
    என் மனதைத் தரலாமா
    நான் மடியில் வரலாமா

    காணிக்கையான பின் ஆனிப்பொன் ஊஞ்சலில்
    கவிதைகள் பெறலாமா
    அதிலே கனவுகள் வரலாமா

    குங்குமச் சாந்துக்கு மேலே
    இளம் கூந்தலின் சாலைக்குக் கீழே
    மங்கலமாய் ஒரு முத்தம் கொடுத்திட
    மாப்பிள்ளை வரலாமா
    அதில் மணவினை பெறலாமா

    செங்கனி இதழ்களின் மேலே
    அது தேன்மொழி பேசிடும் போதே
    பங்குக்கு நாலென பழங்கள் பறித்து
    பந்தியில் இடலாமா
    அதை நான் பசியுடன் பெறலாமா

    மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக
    என் மனதைத் தரலாமா

    நான் மடியில் வரலாமா

    மேடிட்ட மணலினில் படுத்து
    சிறு கோடிட்ட புன்னகை விரித்து
    தேனிட்ட முகத்துக்கு நானிட்ட நகைகளை
    சோதனை இடலாமா
    இன்ப வேதனை படலாமா

    பொங்கிடும் ஆற்றினில் குளித்து
    வரும் போதையிலே மனம் நனைத்து
    சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட
    சரசம் பெறுவோமா
    அதிலும் சமரசம் அறிவோமா

    முப்பால் முழுவதும் படித்து
    அதற்கப்பாலும் நடை எடுத்து
    எப்போதும் இது தப்பாதென்பதை
    இதயத்தில் அறிவோமா

    காலை உதயத்தில் எழுவோமா

    லாலல்ல லாலல்ல லாலல்ல லாலல்ல
    லலலா லலலால்லா
    லாலல்ல லலலா லலலால்லா
    லலலா லலலால்லா


    http://www.inbaminge.com/t/n/Neethi%20Devan/
    Last edited by vasudevan31355; 1st September 2015 at 11:58 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #3307
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சில சமயங்களில் காட்சி நல்லா இருக்கும்.. பாட் ஸோ ஸோ தான்..அதுபோல பாடல்கள் போடலாமே..//

    ஒன்னு போடறது...
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes chinnakkannan liked this post
  15. #3308
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏற்கெனவே நீங்க போட்டீங்களே.. ரவி, வாணிஸ்ரீ பாட்டு..

  16. #3309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஏற்கெனவே நீங்க போட்டீங்களே.. ரவி, வாணிஸ்ரீ பாட்டு..
    அப்புறம் வேற ஒண்ணுமே இல்லையா சின்னா! மதிய ஷிப்ட்டுக்கு கிளம்பறேன். நைட் வந்து பார்ப்பேனாக்கும். கபர்தார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #3310
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சமர்த்தா போய்ட்டு வந்துட்டு ஆராய்ச்சி பண்ணிப் போடுங்க.. நானும் ட்ரைபண்றேன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •