Page 329 of 400 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3281
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.. முதலில் கிருஷ்ணாவதாரம் பற்றி கொஞ்சம் படித்து, கொஞ்சம் நிறையக்கேட்டு,எழுதிப் பார்த்தது- எனது முயற்சியான பூமாலை தொடுத்த பாமாலையிலிருந்து திருப்பாவை இருபத்து நான்காம் பாடல்..--- ck

    ஏன் மாறுபடுகிறீர்கள் ? எங்கே மாறு படுகிறீர்கள் ? புரியவில்லை - இருந்தாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார் . நீங்கள் தயாரா ??

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3282
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்திரர் சார், முருகா எனக்கொரு வரம்வேண்டும் அழகிய பாட்டு.. முருகனை சீருடைலாம் போட்டுபள்ளிக்கு அனுப்பும் பானுமதி ஆசை அழகு..
    *
    ஆறா மனத்திற்காய் ஆற்றலுடன் சிந்தையினுள்
    வேறாய் நினைக்காமல் வேலனை – நீராடி
    போவாய்நீ கோவிலுக்கு பொன்விரதம் தான்முடித்தே
    போவேக மாகவே போ

    (ஈற்றடி என் குரு நாதர் பேரா.பசுபதியாருடையது)

    -
    எனில் சஷ்டி விரதம்:

    ஐப்பசி மாதம் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரை விரதம் இருந்து, சஷ்டியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவேற்றினால் ஆயிரமாயிரம் ஆண்டு தவம் செய்த பலனை பெறலாம் என்பது நம்பிக்கை

    எப்படி விரதம் ஆரம்பித்ததாம்..
    பிரதமையில் சிவனிடம் பிறந்த நெற்றிக்கண் பொறிகள், துதியையில்
    கௌரியின் கர்பத்திலிருந்து திருதியையில் அக்கினியிடம் கொடுக்க அவன் அதைப் பெற்று சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள்.
    இது தான் கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கக் காரணமாயிருந்ததாம்..
    *
    ஆரண முனிவர் வானோர் அங்(கு) அதன் மற்றை வைகல்
    சீரணி முருகவேட்கு சிறப்பொடு பூசையாற்றி
    பாறணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
    தார் அணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
    (கந்த புராணம்)
    (வேதம் உணர்ந்த முனிவர்களும், தேவர்களும் அந்த சஷ்டித் தினத்திற்கு அடுத்த தினமாகிய சப்தமியில் திருவருட் சிறப்பமைந்த முருகப்பிரானுக்கு வெகு சிறப்பாக விசேட பூசை செய்து விதித்ததன் பிரகாரம் பாராயணம் செய்தார்கள். அனுஷ்டிக்கும் இந்த விரத விசேஷத்தினாலே, தேவர்களும் முனிவர்களும்- மாலையை அணிந்த அசுரர்கள், தம்மிடமிருந்து கவர்ந்துகொண்ட தத்தம் பதத்தின் தலைமையை மீண்டும் பெற்றார்கள்.)
    *
    சஷ்டி திதியில் சூரனைப் போரில் முருகப்பெருமான் வதைத்ததே சஷ்டிக்கும் சூரனுக்கும் உள்ள தொடர்பு எனக் கந்த புராணம்கூறுகின்றதாம்..

    *
    அப்போ பானுமதி சொல்றது என்னவாம்..

    தேடிப்பார்த்தால்..

    சஷ்டி என்பவள் ஒரு திதிதேவதை ஆவாளாம்..அது என்ன திதி..

    குறித்த மாதத்தில் சூரியனோடு சமமாக நின்ற சந்திரன் சூரியனைப் பிரிந்து கிழக்கு நோக்கிப் பூமியைச் சுற்றி வந்து திரும்பவும் சூரியனைச் சந்திக்கிறது.

    இந்த இடைப்பட்ட காலத்தை முப்பதாகப் பிரித்து, வளர்பிறை பிரதமை முதல் தேய்பிறை அமாவாசை ஈறாக முப்பது திதிகள் வகுக்கப்படுகின்றது.
    இத் திதிகள் வளர்பிறை பிரதமை முதல் அமாவாசை ஈறாக பதினைந்தும், தேய்பிறை பிரதமை முதல் பௌர்ணமி ஈறாக பதினைந்துமாக முப்பதாகின்றன
    . அமாவாசை முதல் பௌர்ணமி ஈறாக வரும் திதிகளை சுக்கில பட்ச திதி அல்லது பூர்வ பட்ச திதி என உரைப்பர். பௌர்ணமி முதல் அமாவாசை ஈறாக வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதி அல்லது அபரபட்ச திதி என்று உரைப்பர்.பூர்வ பட்சம் வளர்பிறை.. அபரபட்சம் தேய்பிறை..
    இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது

    ஆக மற்ற திதிகள் அப்புறம் பார்க்கலாம்.. எனில் ஆறாவது திதியான சஷ்டி திதிக்கு ஒரு தேவதை உண்டு.. இவள் பிரம்ம தேவனின் மானஸ புத்ரி.. தேவசேனை எனப் பெயர்..

    முருகப்பெருமானுக்கு – தேவாசுர யுத்தம் சமயத்தில்- தேவசேனைகளுக்குத் துணையாக உதவி புரிந்த தேவதை ஆதலின் சஷ்டி திதி விருப்பமுடையதாக மாறினாள்..
    புத்ரபாக்யமில்லாதவருக்குப் புத்திர பாக்கியம் மட்டுமன்றி கரு உருவாவதில் இருந்து பெற்றெடுக்கும் வரை எந்த விகல்பங்களும் வராமல் அருளுபவள்..

    சஷ்டி விரத காலத்தில் முருகனையும், சஷ்டி திதிப் பெண்ணையும் வணங்கியவண்ணம் விரதமிருந்தால் புத்திர பாக்கியம் பெறுவார்களாம்..
    *
    எனில் பானுமதி பாடுவது சரியே!

    **


    *

    ராகவேந்தர் சார்..அடியேன் சிறுவன் .. கொஞ்சம்படித்துப்பார்த்து எழுதிப் பார்த்திருக்கிறேன்.. பிழையிருப்பின் பொறுக்கவும்..
    Last edited by chinnakkannan; 31st August 2015 at 10:55 PM.

  4. Likes RAGHAVENDRA liked this post
  5. #3283
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஏன் மாறுபடுகிறீர்கள் ? எங்கே மாறு படுகிறீர்கள் ? புரியவில்லை - இருந்தாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார் . நீங்கள் தயாரா ??//

    இது தான்..

    //ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "

    மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... " //

    நான் கிருஷ்ணாவதாரம் என எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது..அவ்வளவு தான்
    Last edited by chinnakkannan; 31st August 2015 at 11:23 PM.

  6. #3284
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    ck - அருமை -- இது -- இது -- இதைத்தான் ( இப்படிப்பட்ட பதிவுகளையும் ) எதிர்ப்பார்த்தேன் உங்களிடம் - மிக்க நன்றி
    நன்றி ரவி..Tamil literature section il பாசுரம்பாடி வா தென்றலே யில் திருப்பாவைப் பாடல்கள் உரை பதிந்திருக்கிறேன்..

  7. #3285
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஆஹா ராகவ் ஜி
    அருமை அருமை
    உங்களை தொடர்ந்து சி.கவும், ரவி ஜியும், நம்ம வாசு ஜியும் கலக்கோ கலக்கென்று கலக்கி விட்டனர்
    அனைத்து பதிவுகளும் அற்புதம்

    ரவி நீங்கள் உங்கள் தாய் பற்றியும் உங்களைப்பற்றியும் சொன்ன பதிவு நெஞ்சை கனக்கச்செய்தது.
    நீங்கள் ஞான சூன்யமா ஆஹா அப்போ நாங்கள் எல்லாம் முழுச்சூன்யம் போங்கள்

  8. Likes chinnakkannan liked this post
  9. #3286
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    காலை வணக்கம்

    திரையில் பக்தி

    கேள்வி -பதில்கள் தொடர்கின்றன




  10. #3287
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி

    கேள்வி -பதில்

    கேள்வி :


    பதிவு -1

    காசேதான் கடவுளடா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா ---- நிரந்தரம் இல்லாத ஒன்று , நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் . வாழ்க்கையில் அதை அடைவது மட்டுமே ஒரு பெரிய குறிக்கோளாக இருக்கின்றது . போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை - நம் கடைசி பயணத்தில் நம்முடன் கூட வராத இந்த பணம் நாம் வாழும்போது நம் நிம்மதியை தொலைக்க வைக்கின்றது , உறவை முறிக்க வைக்கின்றது , இளமையை முதுமையாக்கின்றது . பணம் ஒன்று மட்டுமே இருந்தால் போதுமா ?? போதும் என்று சொல்லும் சில பாடல்கள் ......

  11. #3288
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like





    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
    க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
    ஆளாக்கினாள் அன்பிலே !
    .
    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
    க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
    ஆளாக்கினாள் அன்பிலே
    .
    முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
    தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
    முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
    தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
    பாவை நீ வா
    சொர்க்க*த்தின் வ*ன*ப்பை ரசிக்கும்
    சித்த*த்தில் ம*ய*க்கும் வ*ள*ர்க்கும்
    யோக*மே நீ வா
    வைர*மோ என் வ*ச*ம்
    வாழ்விலே ப*ர*வ*ச*ம்
    வீதியில் ஊர்வ*ல*ம்
    விழியெல்லாம் ந*வ*ர*ஸ*ம்
    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
    .
    செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
    வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
    செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
    வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
    ராஜ*னாக* !
    இன்ப*த்தில் ம*ன*த்தில் குளிப்பேன்
    என்றென்றும் சுக*த்தில் மித*ப்பேன்
    வீர*னாக* !
    திரும*க*ள் ச*ம்ம*த*ம் த*ருகிறாள் என்னிட*ம்
    ம*ன*திலே நிம்ம*தி
    ம*ல*ர்வ*தோ புன்ன*கை
    .
    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
    க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
    ஆளாக்கினாள் அன்பிலே......
    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக*...


  12. #3289
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பதில் :

    இல்லை குணம் தான் முக்கியம் , அன்புதான் பிரதானம் . கடவுள் வெறும் பணத்தால் மகிழ்பவர் அல்ல - நாம் பிறருக்கும் செய்யும் உதவிகளிலும் , இரக்க குணத்தில் மட்டுமே அவனை அடையமுடியும் . இதுதான் நம்முடன் என்றும் கூட வருவது , நிலையானது



    உன் அன்பு ஒன்று தான் என் செல்வம் - உன் திருநாமத்தை உச்சரிக்கும் போது வரும் சுவை - அதற்கு ஈடாக அந்த வைகுண்டமே கிடைத்தாலும் எனக்கு அது தேவை இல்லை ... உன்னை என்றும் நினைக்க என்னை பழக்கி விடு கண்ணா -- உன் அருள் எனக்கு இருக்கும் பொழுது இந்த சொர்க்கம் எனக்கு ஒரு தூசி - இப்படி ஆண்டாலும் , ஆழ்வார்களும் பாடுகின்றனர் - உண்மையை உணர்ந்து கொண்டாய் என்று கண்ணனும் சிரிக்கிறான் ------


  13. #3290
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி

    கேள்வி -பதில்


    பதிவு -2

    கேள்வி : உண்மையான பக்தி என்பது என்ன ? பல யாகங்கள் செய்து , பல லக்ஷ செலவில் , எல்லோரும் வியக்க , ஆடம்பரமாக செய்யும் பூஜைகள் இறைவனை உண்மையில் மகிழ்விக்கின்றனவா ?

    பதில் : இல்லவே இல்லை --- உண்மையான அன்பைத்தான் அவன் எதிர்ப்பார்க்கிறான் - கலப்படம் இல்லாத அக்மார் அன்பு . ஆடம்பரமான பூஜைகள் , மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்ற நினைப்பில் செய்யும் ஆடம்பர செலவுகள் இதில் எதுவுமே அவனை மயங்க வைக்காது - உங்களுக்கு முதலில் உண்மையாக இருங்கள் - அவன் உண்மையாக உங்களுடன் இருக்க துடிப்பான் ....



    திரையில் பக்தி நாளை நிறைவேறும் ------

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •