-
16th August 2015, 08:39 AM
#2661
Senior Member
Veteran Hubber
sa ri ga ma pa dha ni Chiththaranjani
For a change a song from old days:
From Mangayarkkarasi
kaadhal kani rasame.....
If it sound like "Naadha Thanumanisam Sankaram" you are not wrong. Here is naadha thanumanisam from Thyagayya (Telugu)
I posted this to bring back old memories !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
16th August 2015 08:39 AM
# ADS
Circuit advertisement
-
16th August 2015, 10:35 AM
#2662
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
27
'உலகில் இரண்டு கிளிகள்'
'குலமா குணமா?'
1971-ல் வெளியான நடிகர் திலகத்தின் வெற்றிப்படமான 'ஆஸம் ஆர்ட்ஸ்' 'குலமா குணமா' படத்தில் பாலா பாடிய பாடல் இன்றைய அவரது தொடரில் இடம் பெறுகிறது.
நடிகர் திலகத்தின் படங்களில் பாலாவின் முதல் பங்கு 'அருணோதயம்' படம்தான் என்று நினைக்கிறேன். நடிகர் திலகத்திற்கு பின்னணி தராவிட்டாலும் நடிகர் திலகத்தின் படங்களில் பாலாவின் பங்கு ('எங்கள் வீட்டு தங்கத் தேரில்') தொடங்கிய முதல் படம் இது.
அடுத்ததாகப் பார்த்தால் அது நடிகர் திலகத்தின் அடுத்த படமான 'குலமா குணமா?'
இதிலும் நடிகர் திலகத்திற்கு பாலாவின் பின்னணிக் குரல் இல்லாமல் தம்பியாக நடிக்கும் ஜெய்க்கு அந்த வாய்ப்பு.
அண்ணன் நடிகர் திலகம்,அண்ணி பத்மினி. நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தமபதியர். தம்பி ஜெய்க்கு வாணிஸ்ரீயுடன் திருமணம் நடக்கிறது. 'தேனிலவுக்கு கொடைக்கானல், ஊட்டி என்று ஜாலியாகப் போய் வா' என்று அண்ணன் திலகம் ஜெய்யிடம் கூறுகிறார். சந்தோஷத்துடன் ஜெய் வாணிஸ்ரீயிடம் இதைச் சொல்ல அவரோ 'அக்காள் பத்மினியும், அக்காள் கணவர் நடிகர் திலகமும் உடன் உல்லாசப்பயணம் வரவேண்டும்' என்று முரண்டு பிடிக்க, 'அவர்கள் ஏன் நம்முடன் வர வேண்டும்? என்று ஜெய் புரியாமல் குழம்பிக் கேள்வி எழுப்ப,
ஊர்நலம், வீடு இவையே கதியென்று கிராமத்தில் அடைபட்டுக் கிடக்கும் நடிகர் திலகம், பத்மினி தம்பதியர் தங்களுடன் கொடைக்கானல் வந்தால் 'அங்கேயாவது அவர்களுக்குத் தனிமை கிடைத்து இருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட சந்தர்ப்பம் வாய்க்கலாம் அல்லவா?' என்று வாணிஸ்ரீ ஜெய்க்கு புரியவைக்க, இப்போது இளம் தம்பதிகளின் பிடிவாதத்தால் அந்த நடுத்தர வயது தம்பதிகளும் அவர்களுடன் உல்லாசப் பிரயாணம் கிளம்புகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் ஒரு நல்ல பாடல்.
கொடைக்கானலில் ஒரு தனி அறையில் நடிகர் திலகமும், பத்மினியும் தங்கியிருக்க, உல்லாசப் பறவைகளாய் இளஞ்சிட்டுக்கள் ஜெய், வாணிஸ்ரீ ஊர் சுற்றி படகு சவாரி, குதிரையேற்றம் என்று ஜாலி பண்ண, நால்வரும் பாடும் பாடல்.
இங்கே அவுட்டோரில் ஜெய் வாணிஸ்ரீ பாலா, ஜானகி குரலில் குதூகலமாகப் பாட,
அங்கே தனி அறையில் நடிகர் திலகமும், பத்மினியும் பாடகர் திலகம், இசையரசியின் குரல்களில் பாடி குழந்தை பிறக்க அஸ்திவாரம் போட,
ஒரு அருமையான பாடல் உருவாகும்.
ஜெய், வாணிஸ்ரீ குதிரையில் பூங்காக்களைச் சுற்றி வந்து பாடலைத் தொடங்குவார்கள். ஜெய்க்கு பாலாவின் குரல் அப்போது ஓகே. வாணிஸ்ரீக்கு ஜானகி குரல்.
'திரை இசைத் திலகம்' நடிகர் திலகம், பத்மினி காட்சிகளின் போது அமைதியாகவும், ஜெய், வாணிஸ்ரீ காட்சிகளின் போது விறுவிறுப்பாகவும் மியூஸிக் போட்டு நடுத்தர வயது தம்பதியர், இளம் தம்பதியர் உற்சாகங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார். சபாஷ்.
வேட்டி, சட்டை, தோளில் புரளும் சால்வை சகிதம் நடிகர் திலகம் ரொம்பப் பாந்தம் அந்த பெரிய மனிதர் பாத்திரத்துக்குத் தக்க்கபடி. பத்மினியும் கண்ணியம். ஜோடிப் பொருத்தம் கச்சிதம்.
'கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்'
என்று கொடைக்கானலின் பெயரை பாடலின் இடையே நடிகர் திலகம் பாடுவது போல் பொருத்தமாகப் புகுத்தியிருப்பது அருமை.
'ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்'
என்ற டேஞ்சரான வரிகளும் உண்டு. புரியாதவரை பிரச்னை இல்லை.
திரைக்கதை, வசனம், இயக்கம் 'இயக்குனர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பாடல்கள் கவிஞர்.
'மாத்தூரு ராமக்கா... மாப்பிள்ளை யாரக்கா? (பி.வரலஷ்மி, நளினா டான்ஸ். சுசீலா அமர்க்களம். முன்பே எழுதி இருக்கிறேன்.)
'பிள்ளைக்கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்' (சுசீலாவுடன் 'சூலமங்கலம்'. அமர்க்களமான கவிஞரின் வரிகள். தொகையறா அருமையோ அருமை. முத்தே...மரகதமே...முக்கனியே... சர்க்கரையே!)
'சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்' (டூயட். 'பாடகர் திலகம்' ஜெய்க்கு. சுசீலா வாணிக்கு)
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இன்றுவரை நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது. புரியவிடாமல் குழப்புவது போல் குழப்பி தெளிவாகப் புரிய வைக்கும் கிளைமாக்ஸ். கே.எஸ்.ஜியும், நடிகர் திலகமும் அசத்தி விடுவார்கள்.
நடிகர் திலகத்தின் நடிப்பின் ஆளுமையைப் பற்றி எழுத பக்ககங்கள் போதாது. (குறிப்பாக நடிகர் திலகமும், வாணிஸ்ரீயும் தனியாக சந்திக்கும் அந்த மரத்தடிக் காட்சி) என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இப்பாடலின் ஆய்வை எழுதுகிறேன். வாணியும் பிரமாதப்படுத்தி விடுவார்.
என்னைப் பொருத்தவரை இப்படத்தை மிக உயரிய குடும்பப் படம் என்பேன்.
பாலா நிரம்ப அழகாக இளமை ததும்பப் பாடியிருப்பார்.
'கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று'
என்ற ஒருவரியே போதும். தூள் பரத்தியிருப்பார். மற்ற எல்லோரும் வழக்கம் போலப் பாடியிருப்பார்கள். பாலா ஒருபடி தூக்கலாக உற்சாகமாகப் பாடி இருப்பது போலத் தோன்றும்.
பாலா
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
ஜானகி
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
பாலா
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
ஜானகி
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
டி.எம்.எஸ்.
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
சுசீலா
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
டி.எம்.எஸ்.
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
பாலா
இயற்கைப் பெண்ணின் இளமை
அவள் இதழில் ஊறும் பசுமை
இயற்கைப் பெண்ணின் இளமை
அவள் இதழில் ஊறும் பசுமை
ஜானகி
விளக்கம் கூறத் தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூறத் தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
டி.எம்.எஸ்.
கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
சுசீலா
ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆடிக் கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
டி.எம்.எஸ்.
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
பாலா
கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
ஜானகி
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனதின்று
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனதின்று
டி.எம்.எஸ்.
பள்ளியறையில் பதுமை
அவள் பணிவில் தெய்வப் புதுமை
பள்ளியறையில் பதுமை
அவள் பணிவில் தெய்வப் புதுமை
சுசீலா
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
அதில் என்றும் இல்லை முதுமை
பாலா
உலகில் இரண்டு கிளிகள்
ஜானகி
அவை உரிமை பேசும் விழிகள்
சுசீலா
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
டி.எம்.எஸ்.
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
Last edited by vasudevan31355; 16th August 2015 at 02:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 11:17 AM
#2663
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
சி.செ... நன்றி சொல்லும் போது குமாரை விட்டு விட்டீர்களே..அவர் எனக்கு பி.எஸ்.புளி வாங்கித் தருவதாகக் கூறியிருந்தார்.. நீர் சொன்னாலென்ன நான் சொன்னாலென்ன.. குமாரின் ஆவணங்களுக்கு - குமார் சார் மிக்க நன்றி..
*
வாசு.. காலங்காலைல நல்ல பாட்டு போட்டதற்கு நன்றி..
குலமா குணமா மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ்..ரிலீஸின் போது பார்த்த போது படம் புரியவில்லை..(வெகு சின்னஞ்சிறுவன் நான்) பட் லேட்டர் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்திருந்தேன்.. ந.தி, ஜெ, வாணிஸ்ரீ, அப்புறம் தான் பத்மினி.. பத்மினி அவரதுகுழந்தையை வாணியிடம் கொடுத்து வளர்க்கும் தியாகம் என்னவோஎன் மனதில் பதியவில்லை.. ந.தி வழக்கம்போல ஊதித் தள்ளியிருப்பார்.. நீங்கள் சொன்ன க்ளைமாக்ஸ் சிறப்பானது என்றாலும் இந்த இரண்டு தம்பதிகளுக்கு நடுவில் இருந்த கெமிஸ்ட்ரி ஏனோ ஆழமாக இல்லாதது போன்ற பிரமை ( படம் பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டன)..ப்ள்ஸ் நடு நடுவில் காட்சிகளில் தொய்வு..என் இருந்ததாக நினைவு..( அவர் என்ன சொத்துன்னு சொல்றார்னு தெரியலையா.. என வாணிஸ்ரீ தவிப்பது அதற்கு ஜெய்யின் கொஞ்சம் ஏனோ தானோ ரியாக்*ஷன்..)
வாணியின் ஆக்டிங்க் கூட கொஞ்சம் ஓவர் எனச் சொல்லவேண்டும்..பட் படத்தை தாங்கிப் பிடித்தது ந.தி + பாடல்கள் மட்டுமே..
(மன்னிக்க இது எனது அபிப்ராயம் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்க)
Last edited by chinnakkannan; 16th August 2015 at 11:19 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 11:35 AM
#2664
Senior Member
Diamond Hubber
//வாணியின் ஆக்டிங்க் கூட கொஞ்சம் ஓவர் எனச் சொல்லவேண்டும்//
நன்றி சின்னா!
அது வாணியின் தவறில்லை சின்னா! இயக்குனர் திலகத்தின் படங்கள் அனைத்திலுமே வழக்கத்தை விட நடிக நடிகையர்கள் உணர்ச்சிபூர்வமாக டயலாக் பேசுவார்கள். அது கே.எஸ்.ஜி யின் பாணி. அதனால் அவரே பொறுப்பு.
அப்புறம் சொந்தக் கருத்துக்களை வரம்பு மீறாமல் சுதந்திரமாகக் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு சின்னா! எனக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்றோ உங்களுக்குப் பிடித்தது எனக்கும் விருப்பமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயம் எதுவுமே இல்லை. அப்புறம் எதற்கு நமக்குள்ளே ஸாரி எல்லாம். ம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
16th August 2015, 12:01 PM
#2665
Junior Member
Seasoned Hubber
வாசு - குலமா குணமா இன்னும் அலசப்பட வேண்டிய படம் - சண்டை காட்சிகள் , மனதை கவரும் காபரே நடனங்கள் , காதல் நளினங்கள் நிறைந்த குடும்ப படம் ! ஷகீலாவிற்கு ஒரு சவாலாக அமைந்த படம் !தாய்மார்களின் ஏகோப்பித்த ஆதரவுகளை பெற்றப்படம் என்றெல்லாம் பிதற்றி வெளிவந்து நம்மை ஏமாற்றும் படங்களின் நடுவே , இப்படி ஒரு படம் வெளிவந்து உறவுகளின் பெருமையை , குடும்பம் செலுத்தும் அழகை , தாம்பத்தியத்தின் அருமையை வெகு அழகாக எடுத்துச்சொன்ன படம் - தன் ஆசா பாசங்களை தள்ளி வைத்து விட்டு , மனைவியின் உண்மையான , நியாமான ஏக்கங்களை புரிந்துக்கொள்ளாத கணவனாக நடிப்பில் ஒரு புதிய சகாப்த்தத்தை ஏற்படுத்திருப்பார் நடிகர் திலகம் - அமைதியான நடிப்பு , இலக்கிய காதல் இழைந்தோடும் குடும்பம் , உணர்ந்து கொள்ள முடியாத உணர்ச்சிகள் , உணர்ந்து கொள்ளக்கூடிய உறவுகள் - சொல்லிக்கொண்டே போகலாம் . இவ்வளவு பெரிய honey comb இல் ஒரே ஒரு சொட்டு தேனைத்தான் எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - ஆனாலும் உங்கள் எழுத்து வண்ணத்தில் அந்த ஒரே சொட்டு தேனும் ஒரு குடம் தேனை அருந்தியது போல அருமையாக இருந்தது .
வாசுவா ? பாலாவா ?? என்று ஒரு படம் எடுத்தால் எங்கள் எல்லோருடைய ஆதரவும் பாலாவை ஆராதனை செய்யும் வாசுவிற்கு மட்டுமே !!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015, 03:37 PM
#2666
Senior Member
Senior Hubber
//. அப்புறம் எதற்கு நமக்குள்ளே ஸாரி எல்லாம். ம்.// மிக்க நன்றி வாசு உங்கள் புரிதலுக்கு..
*
முக நூலில் படித்தது:
//அந்த பிரபல பாடகரை கௌரவிக்க மேடைக்கு அழைக்கிறார்கள்.அவரும் முதுமை காரணமாக (85) இருவர் கைத்தாங்கலாக மேடைக்கு வருகிறார்.
நிகழ்ச்சி இணைப்பாளர் அவரை சில வார்த்தைகள் பேசுமாறு வேண்ட,அவரும் மைக்கை வாங்கி நடுங்கும் குரலில் தெலுகு கலந்த தமிழில் ஓரிரு வாக்கியங்களை சொல்லி நன்றி கூறுகிறார்.
அடுத்து இணைப்பாளர்,"அய்யா நீங்க மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடிய பாடல்களில் ஒன்றை எங்களுக்கு பாடிகாட்ட முடியுமா?: என்று கேட்க,நமக்கே கோபம் வருகிறது "என்னடா இவர் பேசுவதற்கே சிரமப்படுகிறார் இவரை பாடுங்கள் என்று சொல்கிறார்களே!" என்று! ஆனால் அவரோ தயக்கமின்றி மைக்கை வாங்கி ஆபோகி ராக பாடலை ஆரம்பிக்கிறார்.
எங்கேய்யா போச்சு அந்த தள்ளாமை? நடுங்கும் குரல்? சுருதி சுத்தமாக கணீர் என்று பாட நமக்கு புரிகிறது.பாடிய வாய் மூப்பின் காரணமாக பேச சிரமப்படலாம்! ஆனால் பாட அல்ல ! !// நன்றி:ரங்க நாதன் கணேஷ்
*
அந்தப் பாடகர் பால முரளிகிருஷ்ணா..பாடிய பாடல் தங்க ரதம் வந்தது வீதியிலே..
இருந்தாலும் அவர் பாடிய இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்..வீட் போய் கேக்க வேண்டும் ரொம்ப நாளாச்சு..
மதுண்ணா வாசு திரை வீடியோ ப்ளீஸ்
-
16th August 2015, 08:37 PM
#2667
Senior Member
Seasoned Hubber
(சின்னக்)கண்ணா; here is பால முரளிகிருஷ்ணா singing தங்க ரதம் வந்தது வீதியிலே (live on stage), with MSV watching...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 09:29 PM
#2668
Senior Member
Senior Hubber
Wow..ராக தேவரே..மிக்க நன்றி..பால முரளி கிருஷ்ணா பாடிய பாடல்களில் வரிசைகட்டி வருவதில் முதல் இந்தத் தங்கரதம் வந்தது வீதியிலே.(கேட்டது இசைக்களஞ்சியம் சிலோன் ரேடியோ).ஆனால் முதலாவதாக நான் கேட்டு புளகித்தது. ஒரு நாள் போதுமா.. அப்புறம் சின்னக் கண்ணன் அழைக்கிறான்...நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மனி ராதா என இழையும் இழைதல்..ம்ம்..அகெய்ன் தாங்க்ஸ் குரு..
-
16th August 2015, 09:51 PM
#2669
Senior Member
Senior Hubber
புன்னகை முகத்தைப் பார்க்கத்தான்..
….புவியினில் நானும் கிடந்திருந்தேன்
விண்ணிலே இருந்தே வருவதற்கு
….வேகமாய்ப் பட்சி உடனிலையா
சின்னதாய் எண்ணம் கொண்டபடி
…சேவகர் பேசுவர் பலவிதமாய்..
கண்ணிலே ராமனே வந்துவிடு
…காரிய மாற்றித் தந்துவிடு..
திரைகட லோடத் தெரியுமென்று
…தீர்க்கமாய்க் கருடன் சொல்லியதா
விரைவினில் செல்ல இவனொன்றும்
..வித்தக னிலையெனச் சொல்லியதா.
கரையினை ஏதும் காணாமல்
..கண்ணதில் நீரும் பொங்கியதே
முறையிட எனக்கோ யாருண்டு
…முக்தியை அளிக்க வந்திடுவாய்
பேதங்கள் கொள்ளாமல் பேதை எனக்காக
வேகமாய் வாராமா வா….
ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ
நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ
ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ
ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th August 2015, 10:12 PM
#2670
Senior Member
Seasoned Hubber
Let's continue with a few more live songs by my favourite singer...
Here is ஒரு நாள் போதுமா... (A little bit of comedy from BMK - couldn't remember all the lines!
...and of course சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks