Page 265 of 400 FirstFirst ... 165215255263264265266267275315365 ... LastLast
Results 2,641 to 2,650 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2641
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த இனிய சுதந்திர நல் நாளில் ,பல சுதந்திர புருஷர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டிய அந்த உன்னத ஆத்மாவிற்கு அஞ்சலியாக இந்த தொகுப்பை வழங்குகிறேன் .

    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

    முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
    முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
    முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே
    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
    நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
    நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே
    முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே

    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
    நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
    நாங்கள் தோள் கொட்டுவோம்


  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2642
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.

    அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??

    நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.

    இதயத் தலைவா! நீ சொல்லு

    இரும்பு மனிதா! நீ சொல்லு

    கண்ணிய நெறியே! நீ சொல்லு

    கர்ம வீரா! நீ சொல்லு

    நான் யார்? அன்று நான் யார்?
    நான் யார்? அன்று நான் யார்?
    அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
    நான் யார்?

    வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
    உயிர் வந்தே மாதரம்
    வந்தே மாதரம்
    வந்தே மாதரம்
    வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
    ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
    இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்

    நான் யார்? அன்று நான் யார்?
    அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
    நான் யார்?

    விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
    உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
    விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
    உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

    தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
    தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
    என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்

    ஏதும் தேவையில்லையென உதறியவன்

    நான் யார்? அன்று நான் யார்?
    நான் யார்? அன்று நான் யார்?
    அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
    நான் யார்?

    Last edited by vasudevan31355; 15th August 2015 at 10:57 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #2643
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
    கண்ணீரால் காத்தோம்....... மஹாகவி பாரதி

    எப்படிப்பட்ட தியாகிகளின் ரத்தத்தால் பெற்ற சுதந்திரம் இன்று எப்படிப்பட்டவர்களின் கைகளில்.....


  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #2644
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சுதந்திரம் இன்று இருக்கிறதா என என் ரூமிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்ததில் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்றுதான்சொல்லவேண்டும்...

    ஒரு காலத்தில் முழங்கை தாண்டி கைகளின் அழகை மறைத்திருந்த ரவிக்கை,டப்க்கென்று யாரிடமோ கோபித்துக் கொண்டாற்போல் மேலே ஏறி ஏறி ரவிக் ஆகி, பின் பிற்காலங்களில் முதுகுப்பக்கம் ஜன்னல், முடிச்சுகள் என்று கற்பனையாய்ப் பரந்து விரிந்து அழகூட்டி (யாருக்கு, யாருக்கோ) எல்லாரையும் கவர்ந்தது என்னவோ வாஸ்தவம் தான்..

    அதுவும் இந்த ரவிக் இருக்கிறதே..ம்ம் எவ்ளோ தான் அரை குறை ஆடைகளில் இருக்கின்ற கவர்ச்சியில் ஒரு அழகாகக் கட்டப்பட்ட சேலை, ரவிக்கில் பெண் மிக க் கவர்ச்சியான எழிலொடு மின்னுவாள் என ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்


    எனில் ஒரு அழகிய ரவிக் பாடல்

    ராசாக்குட்டி, நான் எப்படி
    ரவிக் பாடல்கள் சீரிஸ் பத்துப் பகுதிகள் குவிக்காக போடலாமே சி க !

  9. Likes chinnakkannan liked this post
  10. #2645
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "

    அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்

    "நான் பேசித்தான் தீர வேண்டும் ......"

    நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .

    நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
    நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---

    எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..

    நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---

    உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .

    இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????


  11. #2646
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Inqulab Zindabad

    பாரதத்தின் பெருமையை , அதன் அருமையை , அதன் இளமையை , அதன் வலிமையை இந்த பாடல் எடுத்து சொன்ன மாதிரியோ , அதில் நடித்த திலகத்தின் நடிப்பைப்போன்றோ இனி உலகத்தில் மற்றுமொரு உதாரணம் காட்ட ஒன்றுமே இல்லை ....இறந்த பிணமும் ' வந்தே மாதரம் " என்று சொல்ல வைக்கக்கூடிய நடிப்பு , பாடல் ----


  12. #2647
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    புத்தன் வந்த திசையிலே போர்
    புனித காந்தி மண்ணிலே போர்
    சத்தியத்தின் நிழலிலே போர்
    தர்ம தாயின் மடியினிலே போர்

    சுதந்திரம் சுலபமாக கிடைத்து விட்டது - ஆமாம் கொள்ளை அடிக்க , குழி பறிக்க ,பணம் பறிக்க , பதவி மோகம் தொடர , தலைமுறைகளுக்கும் சொத்து குவிக்க , வழக்குக்களை தள்ளிப்போட , பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்த , மற்றவர்களை திட்டியே , குற்றம் சொல்லியே வாழ்க்கையை இன்னும் மேன்படுத்திக்கொள்ள ------

  13. #2648
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வீரம் உண்டு ...தோள்கள் உண்டு, வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு..சாரம் மிக்க தர்மம் உண்டு ...


  14. Likes Russellmai, eehaiupehazij liked this post
  15. #2649
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes chinnakkannan liked this post
  17. #2650
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜெயா மேடத்தின் டீஸிங் சாங்க்ஸ் நான்கு.

    அல்லாமே ஈஸ்வரி ராட்சஸி கோஷ்டியுடன் மேடத்துக்காகப் பாடியது. கிட்டத்தட்ட ஒரே மாதிரி

    1. ஜெயா மேடம் எம்.ஜி.ஆர் அவர்களை ஒருவழி பண்ணுவதைப் பாருங்கள். விதியே என்று படித்துக் கொண்டிருப்பவரை வம்புக்கு இழுத்து,

    'பரபோஸ்...அரபோஸ்....மரபோஸ்...ஹோ! லிவியோ'.....

    என்று வாய்க்கு வந்தபடி பாடி,

    'அடி மத்தளம் கொட்டி மேளத்தை தட்டி
    வித்தையைக் காட்டடி கண்ணு
    அடிக் கண்ணு அடிக்கண்ணு
    இந்தப் புத்தகப் பூச்சி படிச்சி முடிச்சி ஆவதென்னடி கண்ணு
    அடிக் கண்ணு அடிக்கண்ணு'

    என்று 'குமரிக் கோட்ட'த்தில் குமரிகளின் கொட்டம்.





    2. நடிகர் திலகத்தை விட்டாரா! சிவில் எஞ்சினியர் அவர் வேலையைப் பார்க்கும் போது தலையில் 'டொ'மேல் என்று வந்து விழும் கைப்பந்து. கையில் வாலிபாலோ... புட்பாலோ பிடித்து அரை டிராயர் அணிந்து மாமிகளையும், வாலிபர்களையும் விட்டு தாக்கு தாக்கென்று தாக்குகிறாரே!

    'அத்தைக்கு மீசை வச்சி பாருங்கடி
    முற்றத்தில் மாலை கட்டிப் போடுங்கடி
    ஆடை போன வழி ஆசை போகுமென்று ஆடாமல் ஆடுங்கடி

    பம்பினா பம்பினா பம்பினா பம்
    பம்பினா பம்பினா பம்பினா பம்

    உலகைப் படைப்பது பெண்கள் பெண்கள்
    உயிரை எடுப்பது கண்கள் கண்கள்
    மயக்கம் கொடுப்பது நாங்கள் நாங்கள்
    மயங்கி விழுவது ஆண்கள் ஆண்கள்'

    நிலம் அளக்கும் 'எங்க ஊர் ராஜா'வுக்கு புத்திமதி வேறு.

    'நிலத்தை அளந்தது போதும் போதும்
    மனதை அளந்திட வாரும் வாரும்'

    செமையாக வாருவார்.





    3. ஜெயா மேடம் அரை டிராயர் அணிந்து கொண்டு, டென்னிஸ் ரேக்கேட் பிடித்து, தோழியருடன் பெண் பார்க்க வந்த நம்ம 'விஸ்வம்' மனோகரை டீஸ் செய்து பாடுவதைப் பாருங்கள். ராட்சஸி குழுவினர் செய்யும் அமர்க்களம் அட்டகாசம். 'ஓ...ஹச்சு ஹச்சு' என்று தும்மல் போட்டு செம கலாய்ப்பு.

    'என்ன பொருத்தமடி மாமா
    எனக்கிவர் மாலையிடலாமா
    உள்ளதைச் சொல்லுங்கடி பாமா
    அம்மம்மா அம்மாமா அம்மம்மா

    பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
    பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்தக் கொதிப்போ'

    நடுவில் வரும் அந்த ஹா 'ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹஹ்ஹஹ ஹா' செம டக்கருங்கோ.





    4. இதோ ரயிலில் மாட்டி சிக்கித் தவிக்கும் குடுமி கிராமத்தான் ரவி. கிண்டலடிக்கும் நகரக் குமரிப் பெண் ஜெயா.

    'வருஷத்தைப் பாரு 66
    உருவத்தைப் பாரு 26

    'ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னாக்கடி... ஜிஞ்ஜின்னா'


    Last edited by vasudevan31355; 15th August 2015 at 03:12 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •