-
7th August 2015, 07:11 AM
#2451
Junior Member
Veteran Hubber
மாற்றார் தோட்ட மனங்கவர் மதுரங்கள் !
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இசை மற்றும் டைட்டில் பாடல்கள் தொகுப்பு
பகுதி 30 : டுமாரோ நெவர் டைஸ் / TOMORROW NEVER DIES(1997) / PIERCE BROSNAN as James Bond OO7!
கோல்டன் ஐ வசூல் மழை கொடுத்த புத்துணர்ச்சியில் அடுத்த படமான டுமாரோ நெவர் டைஸ் படத்திலும் பியர்ஸ் பிராஸ்னன் தனது உளவுப் பணியைத் தொடர்ந்தார். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் அம்சங்கள் தூக்கலாக இருந்தாலும் சற்றே ஸ்கூல் பையன் மாதிரி கெச்சலான தோற்றம் ஷான் கானரியின் முரட்டுத் தனத்தை இமிடேட் செய்யும்போது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது. சற்று ஓவரான முகச் சுழிப்புக்களும் ரோஜர் மூரை இமிடட் செய்கிறார் என்பதை உணர்த்தியது. வரவர கிராபிக்ஸ் ஆதிக்கமும் அதிகரிக்க பாண்ட் படங்கள் கொஞ்சம் ரசிகர்களின் ஈடுபாட்டை குறைய வைக்க துவங்கியது. படமும் பெரிய வெற்றியை அடையவில்லை இசையும் பாடலும் பெரிதாக ரசிகர்களை சென்றடையவில்லை ஆனாலும் ரசிக்கத் தகுந்ததே !
Last edited by sivajisenthil; 7th August 2015 at 07:32 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th August 2015 07:11 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2015, 08:30 AM
#2452
Junior Member
Seasoned Hubber
RARE ADVT- TRICHY
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
7th August 2015, 08:32 AM
#2453
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 08:33 AM
#2454
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 08:35 AM
#2455
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 08:37 AM
#2456
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 08:40 AM
#2457
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 01:19 PM
#2458
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று: பார்வை இரண்டு- சென்று வா நிலவே
காதலனைப் பிரிந்து வாடும் நாயகி சந்திரனைப் பார்த்துத் தன் பிரிவாற்றாமையைப் பாடுவது இந்தியத் திரை மரபு. இந்தச் சூழலில் அமைந்த இந்தி - தமிழ் கதாநாயகிகளின் பார்வைகளைக் காண்போம்.
‘நாம் மகிழ்வோடு இருந்தபோது உதித்த சந்திரன் வானில் எழும்பிவிட்டதே, நீ இன்னும் வரவில்லையே’ என்ற இந்திப் பாடலையும் ‘எங்களுடன் இணைந்திருந்த நிலாவே இப்பொழுது என் தலைவன் இங்கு இல்லை, எனவே நீ இன்று போய்விடு; நாளை இதே நேரம் அவன் இருக்கும்பொழுது வா’என்று கோரும் தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.
இந்திப் பாடல்
படம்: பேயிங் கெஸ்ட். பாடியவர்: லதா மங்கேஷ்கர்.
பாடலாசிரியர்: மஜ்ரூர் சுல்தான் பூரி. இசை: எஸ்.டிபர்மன்.
பாடல்
சாந்த் ஃபிர் நிக்லா மகர் தும் ந ஆயே ஜலாஃபிர் மேரி தில், கரூங்கி யா மே ஹாய்யே ராத் கஹத்திஹை வோ தின் க யே தேரே யே ஜாண்த்தா ஹை தில் கே தும் நஹீன் மேரே
பொருள்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை
எரிகிறது மீண்டும் என் இதயம்
என்ன செய்வேன் அய்யோ நான்
இந்த இரவு சொல்கிறது உனது அந்த
இன்பமான நாள் எங்கோ சென்றுவிட்டது
இதயம் எனது அறிந்து கொண்டுவிட்டது
இனி நீ என்னுடையவனில்லை என
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
எழுகிறதே உன் நினைவு
இந்த இரவு சொல்கிறது உன் அருமை
அந்த நாட்கள் அகன்றுவிட்டன
அறிந்துகொண்டது (என்) உள்ளம் அல்ல
நீ எனது என நிற்கிறேன் கண் இமை விரித்து
என் செய்வேன் நான் எழுகிறதே உன் நினைவு
தகிக்கும் நெஞ்சின் கரும் புகை சூழும்
சகிக்க நான் இயலேன் சடுதியில் கிளம்பி வா
எரித்துவிட்டது எனை இந்த வசந்தத்தின் நிழல்
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை.
தமிழ்ப் பாடல்
படம்: உயர்ந்த மனிதன். பாடலாசிரியர்: வாலி.
பாடியவர்: பி.சுசிலா. இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்... ( நாளை )
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்?
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்?
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்?
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்? ( நாளை )
சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்ற பாடல் இது.
-
7th August 2015, 01:22 PM
#2459
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 16: காலைப்பனி, காதல் மற்றும் கானம்
ர்மறையான கதாபாத்திரங்களைப் பிரதானப் பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் மகேந்திரனிடம் அந்தத் துணிச்சல் உண்டு. அவர் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படம் ஒரு உதாரணம்.
படத்தில் மோகன், பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் பாத்திரங்கள் மனத் தெளிவு கொண்டவை அல்ல. ஆனால், சூழல் கைமீறிச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தனைப் பிரயத்தனப்படும் பாத்திரங்கள் அவை. நகரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு மேற்கத்திய இசைப் பாணியில் அற்புதமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா.
பருவத்தின் முதல் பாடல்
நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாகிங் செல்லும் நாயகிக்கு வழித்துணையாகச் சேர்ந்துகொள்கிறான் நாயகன். இருவரும் ஜாகிங் செல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் ‘பருவமே… புதிய பாடல் பாடு’. காலடிச் சத்தங்களைத் தாளமாக வைத்து இளையராஜா இசையமைத்த பாடல் இது. இப்பாடல் பதிவுசெய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜாகிங் செல்லும் ஜோடியின் காலடிச் சத்தங்களை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் திருப்தியடையாததால், கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலியே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுசெய்தாராம்.
கிராமம் அல்லது வனப் பிரதேசம் பின்னணியிலான நிலப்பரப்புகளின் சித்திரத்தை உருவாக்குவதற்கும், நகரத்தின் பூங்காக்கள், நெடுஞ்சாலைகளின் இருபுறமும் விரியும் நிலப்பரப்புகள் போன்றவற்றைச் சித்தரிப்பதற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை இளையராஜாவின் இசையில் உணர முடியும். அந்த வகையில் நகரம் சார்ந்த இயற்கை நிலப்பரப்பின் காட்சிகளைச் சித்தரிக்கும் இசையைக் கொண்ட பாடல் இது. ஓடிச் செல்லும்போது மாறிக்கொண்டே வரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசைக் குறிப்புகளை எழுதியிருப்பார் இளையராஜா.
காலடிச் சத்தத்தின் அதிர்வுகளால் பூச்செடிகளில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் மேலெழுந்து பறப்பதைப் போல் முதல் நிரவல் இசையின் கிட்டார் இசை ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக் கோவைக்கும் சரணத்துக்கும் இடையில் சில நொடிகளுக்கு ஹார்மோனியத்தின் இசையைக் கரைய விட்டிருப்பார் இளையராஜா.
அக்காட்சியில் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு செல்லும் ஏழைச் சிறுமியைக் காட்டுவார் மகேந்திரன். மேன்மையான ரசனை கொண்ட இரு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்புக்கு உதாரணம் அக்காட்சியும் இசையும். இரண்டாவது நிரவல் இசையில், அதிகாலைப் பனியில் உடலை வருடும் குளிர் காற்றைப்போல் தழுவிச் செல்லும் வயலின் இசைக் கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. மென்மையான இப்பாடலின் சுவை எஸ்.பி.பி. – எஸ். ஜானகி குரல்களில் மேலும் கூடியிருக்கும்.
காதலின் மர்மம்
விவரிக்க இயலாத உணர்ச்சிகளை எழுப்பும் மர்மமான உறவு காதல். குறிப்பாக, நட்பு காதலாக மலர்வதற்கு முன்னதான இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சிகள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. கலைப்படைப்புகளில் அவற்றைப் பதிவுசெய்ய நுட்பமான பார்வை தேவை. மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கங்களை அற்புதமாகப் பதிவுசெய்த படைப்புகளில் ஒன்று ‘உறவெனும் புதிய வானில்’ பாடல்.
புதிரான விஷயத்தை அணுகும் மனது, மர்மமான உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல் இது. எதிர்பாராத திகைப்பில் உறைந்திருக்கும் மனதைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். சஞ்சலமான மனதின் படபடப்பும், பரவசம் ததும்பும் காதல் உணர்வும் கலந்த குரலில் ‘பா..பபப்பா…’ எனும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் ஜானகி. ‘கனவிலும்… நினைவிலும் புது சுகம்’ என்று அவர் பாடும்போது, அதே உணர்வு கொண்ட காதலனின் குரலாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங் இணைந்துகொள்ளும்.
கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என்று மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு அடுக்குகளில் விரிந்துசெல்லும் இசைக் கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பனி படர்ந்த நிலப்பகுதி, நகருக்கு வெளியே புதர்களில் புதைந்திருக்கும் பழைய கட்டிடங்கள், அறையின் இருளை ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்று என்று வெவ்வேறு கற்பனை அடுக்குகளின் மேல் பாடல் மிதந்துகொண்டே செல்லும். ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்’ எனும் வரிகளைப் பாடும்போது எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் காதல் கலந்த கம்பீரம் தனி அழகு.
திருமண உறவின் சிக்கலில் தவிக்கும் நாயகியின் மனப்பதிவாக ஒலிக்கும் ‘ஏ.. தென்றலே’ எனும் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார். ஜானகியை ஒப்பிட சுசீலாவுக்குக் குறைவான பாடல்களையே வழங்கியிருந்தாலும், அவருக்கென தனிச் சிறப்பான பாடல்களை வழங்கத் தவறவில்லை இளையராஜா.
இப்பாடல் அவற்றுள் ஒன்று. பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் சோக தேவதைகளின் கோரஸ் இப்பாடலின் உணர்வைக் கூட்டிவிடும். ’மம்மி பேரு மாரி’ என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு. ‘கீச்சு’ எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் பதின்பருவ இளைஞன் பாடுவதாக அமைக்கப் பட்ட அப்பாடலைப் பாடியவர் எஸ். ஜானகி!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2015, 01:25 PM
#2460
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
எம்.ஜி.ஆருக்கே சவாலாக அமைந்தவர்!
அந்த நாள் ஞாபகம்: ரஞ்சன்
புகழின் உச்சாணிக் கொம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்தார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்துப் படங்களைத் தயாரித்துவந்த சாண்டோ சின்னப்பா தேவர், அவருக்கென்றே உருவாக்கிய ‘ராபின் ஹுட்’ டைப் கதைதான் ‘நீலமலைத் திருடன்’.
எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப திரைக்கதை, சென்டிமென்ட் காட்சிகள், பாடல் காட்சிகள், ஆக்*ஷன் காட்சிகள் ஆகியவற்றை அமைத்து சூப்பர் ஹிட் மசாலா படம் எடுப்பதில் தேவர் கெட்டிக்காரர். அவ்வண்ணம் எம்.ஜி.ஆருக்காகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய நீலமலைத் திருடன் (1957) படத்தின் கதையை, தனது சகோதரரும் இயக்குநருமான எம்.ஏ. திருமுகத்தை அழைத்துச்சென்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல வைத்தார்.
கதையைக் கேட்டு ‘சபாஷ்’ என்று பாராட்டினாரே தவிர கால்ஷீட் தராமல் இழுத்தடித்துவந்தார். தேவர் அதற்கு முன் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை எம்.ஜி.ஆர். மறக்கவில்லை. தேவரோ தெய்வ பக்தியும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்டவர் இனி எம்.ஜி.ஆருக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆரை விட்டால் வேறு யார் சரியாகப் பொருந்துவார் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது தேவரின் எண்ணத்தில் சட்டென்று வந்து அமர்ந்துகொண்டார் நடிகர் ரஞ்சன்.
எஸ். எஸ். வாசன் இயக்கிய ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் இந்தி மறுஆக்கம் ஆகிய படங்களின் மூலம் இந்திப் படவுலகில் பிஸியான சாகஸ நடிகராகப் புகழ்பெற்றிருந்தார் ரஞ்சன். சில ஆண்டுகள் மதராஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் பம்பாயில் தங்கிவிட்டார். அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்தார் தேவர். தேவருக்கு எம்.ஜி.ஆரைப் போலவே ரஞ்சனும் ஆரம்ப கால நண்பர்.
‘சாலிவாகனன்’(1944) படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் ரஞ்சனும் மோதிய வாள் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது. படப்பிடிப்பு என்ற போர்வையில் எம்.ஜி.ஆர் தன்னைத் தாக்குவதாக ரஞ்சனும், ரஞ்சன் தன்னைத் தாக்குவதாக எம்.ஜி.ஆரும் மாறி மாறி இயக்குநரிடம் புகார் செய்தனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த உரசலை நன்கு அறிந்தவர் தேவர். இருவரையும் மத்தியஸ்தம் செய்து சமாதானப்படுத்தியவர்களில் தேவரும் ஒருவர். சாலிவாகனன் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சவாலாக அமைந்த ரஞ்சன்தான் இந்தக் கதையில் நடிக்க முடியும் என்று தேவர் நம்பினார்.
கவலையடைந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள்
1957-ல் வெளியான ‘நீலமலைத் திருடன்’ படத்தில் வில்லன் பி.எஸ். வீரப்பாவை ஒழித்துக்கட்ட நீலமலைத் திருடனாகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞன் வேடத்தில் நடித்தார் ரஞ்சன். மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைத்து டி.எம்.சௌந்தர்ராஜன் உச்சஸ்தாயில் கம்பீரமாகப் பாடிய ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா! தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா!’ என்ற பாடல் காட்சியில் வெள்ளைக் குதிரையில் ஏறி ரஞ்சன் திரையில் வந்தபோது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். “நம்ம வாத்தியார் நடிச்சுருக்க வேண்டிய பாட்டு நைனா” என்று கவலைப்பட்டுப் புலம்பித் தள்ளினார்கள். படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு “தேவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதே!” என தன் அண்ணன் சக்கரபாணியிடம் வருந்தினார். இந்தச் செய்தி தேவர் காதுக்கும் வந்துசேர்ந்தது.
அப்போது, ‘ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள்?' என்று டீக்கடையில் வாய்ச் சண்டை நடக்கும். “ எம்.ஜி.ஆர்தான் ஜெயிப்பார்” என எம்.ஜி.ஆர் ரசிகர்களும், “ரஞ்சனை ஜெயிக்க முடியாது” என்று ரஞ்சன் ரசிகர்களும் வாக்குவாதம் செய்துகொள்வார்கள். இதற்குக் காரணமாக அமைந்தது ரஞ்சனின் வாள் வீசும் வேகம்.
காவிரி மைந்தர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த ஊர் லால்குடி. ரஞ்சனின் அப்பா வி. ராமநாராயண சர்மா லால்குடிக்காரர். ரஞ்சனின் தாயார் அலமேலு அம்மாள் திருச்சி ரங்கத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய இசை, நடனம், பக்தி மூன்றுக்கும் பெயர்பெற்ற இந்த ஊர்களைச் சேர்ந்த பெற்றோருக்கு 10 பிள்ளைகள். அவர்களில் 4-வது பிள்ளையாகப் பிறந்தார் ரஞ்சன். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ரமணன். வீட்டில் செல்லமாக ரமணி. சென்னை மயிலாப்பூருக்கு ரஞ்சனின் குடும்பம் குடிபெயர்ந்தது. சென்னையில் படித்து வளர்ந்த ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
‘பரதம்’ நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் கற்றார். படிப்பிலும் ’பலே’ என்று சொல்ல வைத்தார். பாட்டில் சுட்டி, பரதத்தில் படு கெட்டி என்று பள்ளிப் பருவத்தில் பெயரெடுத்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே நாட்டிய நாடகமொன்றில் நடிக்க ஆரம்பித்தார் ரஞ்சன். ஜெமினி ஸ்டூடியோவின் ஊழியர் வேப்பத்தூர் கிட்டு, ரஞ்சனின் துருதுரு நடனத்தையும் நடிப்பையும் கண்டார். அவர் படபடவென்று திக்காமல் திணறாமல் வசனம் பேசிய அழகைக் கண்டார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்துவந்த ‘அசோக்குமார்’(1941) படத்தில் இளம் புத்தராக நடிக்க ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பி. ஜி. ராகவாச்சாரி. அவரிடம் ரஞ்சனை அழைத்து அறிமுகப்படுத்தினார் கிட்டு. வாய்கிழிய வசனம் பேசலாம் என்று வந்த ரஞ்சனுக்கு ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் ஒரே ஒரு காட்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர் வேடம் கிடைத்தது. இதே படத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் என்று பெயர் போடப்பட்ட எம்.ஜி.ஆருக்குத் துணை வேடம்.
சகலகலா வல்லர்
ஆனால், அதே ஆண்டில் ரஞ்சனுக்கு ஏற்றம் ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் சுற்றிவந்த ரஞ்சனைக் கண்டார், அன்று புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் விளங்கிய நியூடோன் ஸ்டூடியோ ஜிடன் பேனர்ஜி. ரஞ்சனின் தோற்றத்தைப் பார்த்து அவரும் தன்னைப் போல் ஒரு வங்காளி என்று நினைத்த ஜிடன், ஆர். ரமணி என்ற பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். அவரை நாயகனாக்கவும் உறுதியளித்தார்.
இதற்கிடையில் ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் சிவபெருமானாக ரஞ்சன் ஆடிய சிவதாண்டவ நடனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து எஸ். சௌந்தர்ராஜன் இயக்கிய ‘ரிஷ்யசிருங்கர்’(1941) படத்தில் நாயகனாக நடித்தார். அதற்கு முன் ரஞ்சன் நாரதராக நடித்திருந்த பக்தநாரதர் (1942) என்ற படமும் வெளியாகிக் கவனம் பெற்றது. ஆனால், ரஞ்சனுக்கு முதல் பெரிய வெற்றியாக அமைந்த படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு பிஸி நாயகனாக மாறிய ரஞ்சனின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது 1948-ல் வெளிவந்த எஸ். எஸ். வாசனின் பிரம்மாண்டமான படமாகிய ‘சந்திரலேகா’. இதில் கதாநாயகனாக நடித்த எம்.கே. ராதாவுக்கும் கதாநாயகியாக நடித்த டி.ஆர். ராஜகுமாரிக்கும் இணையாக வில்லன் சஷாங்கனாக நடித்திருந்த ரஞ்சன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ரஞ்சனின் துடுக்குத்தனம் நிரம்பிய வில்லன் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட வாசன், அவரை இந்தியில் நடிக்க வைத்துப் பல படங்களை இயக்கினார். நிஷான், மங்களா, சிந்துபாத் தி செய்லர் படங்களில் தொடங்கி இந்திப் படவுலகில் பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ரஞ்சன்.
விமானம் ஓட்டுதல், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஓவியம் வரைதல், பரத நாட்டியம், பக்கவாத்தியம் இசைத்தல் போன்ற பல கலைகளிலும் சிறந்தவராக விளங்கிய சகலகாலா வல்லவர் இவர். ‘நடனம்' என்ற பெயரில் பத்திரிகையொன்றைச் சில காலம் நடத்தி எழுத்தாளராகவும் விளங்கினார். ரஞ்சன் அந்தக் காலத்து பி.ஏ., எம்.லிட்., பட்டதாரி.
1959-ல் ரஞ்சன் நடித்த படம், ராஜா மலையசிம்ஹன். கடைசியாக அவர் நடித்த படம்1969-ல் வெளியான ‘கேப்டன் ரஞ்சன்’. இதன் பிறகு தனது மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் வசித்துவந்தவர் தனது 65-வது வயதில் மறைந்தார். தமிழ் சினிமாவில் ரஞ்சன் போல் ‘சகலகலாவல்லவர்’களாக இருந்த நடிகர்கள் மிகவும் குறைவே.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks