-
4th August 2015, 08:35 AM
#2381
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th August 2015 08:35 AM
# ADS
Circuit advertisement
-
4th August 2015, 08:37 AM
#2382
Senior Member
Diamond Hubber
செந்தில் சார்,
இதோ சாரங்கபாணியின் சர்க்கரைப் பாடல். 'வேதாள உலகம்' படத்தில் மேற்கத்திய இசை பாணியில் பாடி அசத்துவாரே. எம கிங்கிரர்கள் போல நிற்கும் வேதாளங்களை கிண்டல் செய்து பாடும் பாடல்.
அய்யய்ய பார்க்க கண்ணு கூசுதே
அவலட்சணமாய் தோணுதே
பைய பைய கோபம் வந்து போகுதே
பார்க்க பார்க்க வெறுப்பாவுதே
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th August 2015, 08:51 AM
#2383
Junior Member
Veteran Hubber
Thanks a lot Vaasu Sir for having triggered the voluntary participation of our friends by way of prompting them to come with valuable contributions for this thread even for a small naglected piece of song or sequence from any film
senthil with regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th August 2015, 09:05 AM
#2384
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
ச்சே புஸ்ஸூன்னு போய்டுச்சே..ம்ம் நாளைக்கு வாசு ராகவேந்தர் மது என்ன சொல்றாங்கன்னு பாக்லாம் (ஹையா நாளைக்குப் பாடு ஓவர்..கண்ணா நல்லா ப்ளான் பண்றடா நி) ஆனா இன்னிக்கு இருக்கே..ஏன் ராஜ் ராஜ் சார் சொல்ல மாட்டாஹளா என்ன..
எனக்குப் பிடித்த நர்கீஸ் பாட்டு இது..
படம் : அதாலத்.... கொஞ்சம் கண்ணில் ஈரம் வரவழைக்கும் கதைக்கு லதாவின் இந்தப் பாட்டு வெங்காய உரிப்பு
எனக்குப் பிடித்த மதுபாலா பாட்டு இது
படம் : பர்சாத் கி ராத்
அழும்போது கூட அழகா இருப்பார்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
4th August 2015, 11:25 AM
#2385
Junior Member
Veteran Hubber
இணையதளத்தில் இணையற்ற தேடுதல் நாயகராக விளங்கும் வாசு சாருக்கு ...
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
யாகூ யாகூ பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
வாசு வாசு பண்ணிப் பார்த்தோம் ....கிடைச்சிருச்சே!!
நன்றிகள் வாசுதேவன் சார்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th August 2015, 11:40 AM
#2386
Junior Member
Veteran Hubber
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !: புதிய குறுந்தொடர் ஆரம்பம்!
காதலிக்கும் போது காதலியின் கிசுகிசுப்பான பேச்சுடன் அருகாமை நமது செவிகளுக்கு மனங்கவர் மதுரகானமே !!
அதுவே தலையணை மந்திரமாக மாறும் போது மாமியார்களுக்கு நாராசமே !
காதலி மண்டைக்குள் மாவாட்டும் மனைவியான பிறகு கிசுகிசுப்புக்கு வேலையில்லாமல் அவர் போடும் எரிச்சல் கத்தல்கள் கணவனின் செவிக்குள் தண்டர்பாலே !!
அதன்பிறகு கிடைத்தற்கரிய காதோர கிசுகிசுப்பு நமக்கெல்லாம் வெறும் கனவே !! கானல் நீரே !
ம்ம்ம்...... (ஆனந்த) கண்ணீரை சுண்டி விட்டுக் கொள்வோம் !!
பகுதி 1 : காதொலி சித்தர்கள் காதோடு காதாக!!
கிசுகிசுப்பான காதொலி பாடல்களில் என்றும் முதலிடம் ஜெயந்தி ஈஸ்வரியின் குரல் குழைவில் காதல் மன்னரைக் கட்டிப் போட்ட காணொளிக் காட்சி / வெள்ளிவிழா
மெல்லப் பேசுங்கள் ..பிறர் கேட்கக்கூடாது...சொல்லித் தாருங்கள்...யாரும் பார்க்கக் கூடாது..../ காசேதான் கடவுளடா!
மெல்லப் பேசு மெல்லப் பேசு கண்ணாடிப் பாத்திரத்தை கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசு / TR PAAPPA!மனிதரில் மாணிக்கம் ?
இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!
அவரும் கொஞ்சதூரம் ஓடி சி க விடம் கொடுப்பாராம் !!
சி க ஓ(ட்)டோ ஓ(ட்)டுன்னு ஓட்டிட்டு ராகவேந்தர் சாரிடம் ஹேண்டோவர் செய்வாராம்...அப்புறம்....
Last edited by sivajisenthil; 4th August 2015 at 12:53 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th August 2015, 12:16 PM
#2387
Junior Member
Veteran Hubber
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !:
பகுதி 2 : டெலிபோன் மூலம் காதோடு காதாக.....நமக்கும் காற்றோடு காற்றாக!! மதுர விருந்தே!!
டெலிபோன் என்று ஒன்று ஒருகாலத்தில் காதலர்களை காதோடு காதாக ஒட்டிக் கட்டிப் போட்டது !!Now cellphones.....Whats App....
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மக்கள் திலகமே !
ஹலோ ஹலோ சுகமா ......ஆமா நீங்க நலமா?
செல்போன் இல்லாததால் டெலிபோனை மையமாக வைத்து கதை பின்னப் பட்ட படங்களில் புதிய பறவையும் திரிசூலமும் நடிகர்திலகத்தின் பங்கு !!
காதல் மன்னர் எப்போதும் நேருக்கு நேர்தான் .....ஸ்ட்ரேயிட்டா பங்காளி டு பங்காளிதான்
இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!
Last edited by sivajisenthil; 4th August 2015 at 12:51 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th August 2015, 12:52 PM
#2388
Junior Member
Diamond Hubber
கதைசுருக்கம்:
part1
நடிகர்திலகத்தின் மகன் சரத்பாபு.
ஜெய்சங்கரின்
தங்கையைகாதலிப்பது போல் நடித்துஅந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டுஏமாற்றிவிட்டு ஊருக்கு வந்து விடுகிறார்.அந்தப்பெண் மானம் கருதி தற்கொலை செய்து விடுகிறார்.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின்ஒரு கடிதம் மூலமாகதற்கொலைக்கு காரணம் ஜெய்சங்கரால் தெரிந்து கொள்ளப்படுகிறது.கடிதத்துடன் சரத்பாபுவின் போட்டோவும்ஜெய்யின் கைக்கு கிடைக்கிறதுதன் தங்கையின் மரணதுக்கு காரணமானவனை பழி தீர்க்க வேண்டி,அந்த போட்டோவையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு கண் மருத்துவர் நடிகர்திலகத்தை பார்க்க வருகிறார்.பையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு தனக்கு கண்பார்வை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.நடிகர்திலகமும் சமாதானப்படுத்தும் வகையில் கண்பார்வை தர ஒப்புக்கொள்கிறார்.
part2
நடிகர்திலத்தின் மருமகளாக சரிதா.மாமனாரின் அன்புடனும் கணவரின் பாசத்துடனும் சந்தோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில்
சரிதாவுக்கு ஏற்படும் ஒரு நோய் அவரது உயிருக்கே பாதுகாப்பில்லை,6மாதத்திற்குள்எந்த நேரமும் இறக்க நேரிடலாம்என்கிற நிலை.சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிர் இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நடிகர்திலகம்.
part1 Part2 ஆகிய இரண்டின் முடிவுகளும் ஒன்றாக கலந்த நிலையில் இப்பொழுது,.,
ஜெய் க்கு நடிகர்திலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது.கண் ஆபரேசனுக்கு பிறகு போட்டோவை வாங்கிகொள்வதாகவும் அதுவரை பத்திரமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறார.ஆபரேசனுக்கு பின் போட்டோவில் உள்ள நபரை தானே கொண்டு வந்துகண் முன் நிறுத்துவதாகவும் வாக்கு கொடுக்கிறார்.அதன் பின்னர் நடிகர்திலகம் போட்டோவை பார்க்கும்படி நேரிடுகிறது.
அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
போட்டோவில் மகன் சரத்பாபு.
யாருக்கும் தெரியாத வண்ணம் போட்டோவைகிழித்து குப்பைக்கூடையில் எறிந்து விடுறார்.
இதை சரிதா பார்த்துவிடுகிறார்.இதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்கள்சரிதாவுக்கு நடிகர்திலத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.ஜெய் கொடுத்த போட்டோவைஅவர் ஏன் கிழித்து எறிய வேண்டும்?மேலும் அவருடைய நடவடிக்கைகள் ஜெய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் தெரியவில்லையே?என்றுசரிதாவின் மனம் குழப்பமும்,சந்தேகமும் கொண்ட நிலையில் தவிக்கிறது.சின்ன அதிர்ச்சி கூட தன் மருமகளுக்கு தெரியக்கூடாது என்னும் நிலையில்நடிகர்திலகம் அந்த விஷயத்தை மறைக்க எடுத்துக் கொளளும் முயற்சிகளே சரிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.இந்த சூழ்நிலையில் தான் தன் எண்ணக் குமுறல்களைசரிதா கேட்பதாகவும் நடிகர்திலகம்மறைமுகமாகவும்
சொல்வதாகவும் இந்தப்பாடல் படத்தில் வருகிறது.
சுசீலா:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா?
tms:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
சுசீலா:சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!
Tms: மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு வரைமுறை கிடையாது அன்றோ! அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றே அன்றோ! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? (கண் கண்ட தெய்வமே)
பாடலில் சற்று கடினமான வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும்.தமிழும் அதன் அர்த்தம் விளங்கும்படியான உச்சரிப்பும் கொண்ட பாடகர்களால் மட்டுமே இந்தப்பாடலை பாட முடியும்.சுசீலாவேதுண்டுகள் இரண்டாக சூரனை என்பதில் உச்சரிப்பில் பலம் குறைந்திருப்பது தெரிகிறது.(10பேரை வைத்து சோதனை செய்ததில் அறிந்த முடிவுஇது) TMS இந்த விசயங்களில் சூறாவளி.
சுசீலா: காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன் மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!
tmsபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய) விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள்ஜோதியே!
சுசீலா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
tmsமேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சுசீலா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
tms:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!
இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்தகள் செல்வமே! முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா!
பிரமாண்ட காட்சிகள் அரங்கங்கள் வண்ண வண்ண ஆடைகள்வெளிநாட்டு படப்பிடிப்பு இல்லாமலேயே ஒரு பாடலை அதற்கு மேலாக ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்
கதையின் முடிவைTV OR DVD யில் காண்க
-
4th August 2015, 12:56 PM
#2389
Senior Member
Senior Hubber
hi good morning all..
si.se niraiyakk kaathOdu irukkaraapala irke..
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு
*
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
*
பூங்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்
*
will come later
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
4th August 2015, 01:45 PM
#2390
Senior Member
Diamond Hubber
காது பற்றி ஏதோ காதில் விழுந்தது...
இதோ ஒரு காது பாட்டு.. என்ன சேதின்னு கேக்கறீங்களா ? உங்க காதைக் கொடுங்க
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks