Page 229 of 400 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2281
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
    ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !
    சிவாஜி செந்தில் சார்,

    உங்கள் குறையை ஓரளவிற்கு தீர்க்கும் பாடல். ஆனால் அபூர்வம்தான். ஹீரோ ரேஞ்சிற்கு அட்டகாசமான தலைக் கட்டுடன், கையில் மேன்டலினுடன், நாடோடிக்காரனாய் வில்லங்க வீரப்பா நாடோடி டெண்ட்டுகளுக்கு மத்தியில் ராஜசுலோச்சனாவின் ஆடல் பாடலுக்கு இசை அமைத்து, சுலோச்சனாவைச் சுற்றி வருவது நிச்சயம் வித்தியாசமான புதுமையான ஒன்றுதான். இதுவரை பார்க்காதவர்களுக்கு இது வாய் பிளக்கச் செய்யும் பாடல்தான்.

    கோபக் கனல் கண்களில் கொதிக்க, 'ஹா..ஹா' என்று பகீர்ச் சிரிப்பு எதுவுமில்லாமல், எந்தப் பொருள் மீது கை வைக்கிறாரோ அந்தப் பொருள் கோபத்தில் இவரால் தூக்கிப் போடப்பட்டு பல படங்களில் சுக்கு நூறாகும்....நிறைய பூ ஜாடிகள், பூந்தொட்டிகள் என்று. அப்படியெல்லாம் இல்லாமல் வீரப்பா மென்மையாக பங்கு கொண்ட அபூர்வப் பாடல் இது.

    பாடல் மிக மிக இனிமை. சுலோச்சனாவின் கண் வெட்டுகளும் அருமைதான்.

    'ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா
    பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா'

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

    ஒரு சிறு குறை. ஆரம்பக் காட்சியைத் தவிர பெரும்பாலும் மற்ற காட்சிகளில் வீரப்பாவின் பின்புறமாகவே காமெரா மேன் அவரை கவர் செய்திருப்பார்.

    படம் 1956 ல் வந்தக் 'ஆசை'தான். உங்க 'காதல் மன்னன்' நடித்ததுதான்.

    இப்போ உங்க 'ஆசை' நிறைவேறிடுச்சா? நீங்கதான் சொல்லணும்.

    Last edited by vasudevan31355; 2nd August 2015 at 10:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2282
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கோபக் கனல் கண்களில் கொதிக்க, 'ஹா..ஹா' என்று பகீர்ச் சிரிப்பு எதுவுமில்லாமல், எந்தப் பொருள் மீது கை வைக்கிறாரோ அந்தப் பொருள் கோபத்தில் இவரால் தூக்கிப் போடப்பட்டு பல படங்களில் சுக்கு நூறாகும்....நிறைய பூ ஜாடிகள், பூந்தொட்டிகள் என்று. அப்படியெல்லாம் இல்லாமல் வீரப்பா மென்மையாக பங்கு கொண்ட அபூர்வப் பாடல் இது.
    Vaasu Sir


    'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார் !
    உங்கள் நிறுவன பிரச்சினைகள் சுமுகமாகிட வேண்டுதல்கள் !!

    Last edited by sivajisenthil; 3rd August 2015 at 09:00 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #2283
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார் !
    உங்கள் நிறுவன பிரச்சினைகள் சுமுகமாகிட வேண்டுதல்கள் !!
    நன்றிகள் சிவாஜி செந்தில் சார்.

    நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. இன்றுடன் 14 ஆவது நாளாக வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் கொஞ்சம் தளர்ந்த மாதிரி தெரிகிறது. நாளை சுரங்கம் ஒன்றில் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்று உள்ள பிற சங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து. இது வரை அமைதி. நாளை சற்று தீவிரம். தங்களைப் போன்ற நல்ல, அன்பு உள்ளங்களால் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நிர்வாகத்தின் அடக்குமுறைப் போக்கு ஹிட்லரை நினைவுகூர வைக்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2284
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breaker / Gape filler songs!!

    Good Morning song from Gene Kelly's Singing in the Rain !

    Just a teaser for my next series on Maatraar thoatta madhurangal : Hollywood songs and dances!
    Part 27 focussing on Gene Kelly my matinee idol for songs and dances alongside Fred Astaire!!

    Last edited by sivajisenthil; 2nd August 2015 at 11:35 PM.

  8. #2285
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ.. ராத்திரி வேளைல்ல எம்.ஆர்.ராதாவோட டூயட் உங்களுக்காக..

    *



    ஆரம்பமே இனிக்கும் மனதில் அடிக்கடி துயர் கொடுக்கும் காதல்..
    வளர்பிறை இனிக்கும் தேய் பிறை கசக்கும்…
    காதல்…
    சி.எஸ்.ஜெயராமன்…எம்.ஆர்.ராதா..- எல்லோரும் வாழ வேண்டும்..

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #2286
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு குறள் பார்த்தேள்ன்னாக்க….

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்

    (எங்கே ரவியைக் காணோம்..)

    எல்லாருக்கும் நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ளவனை நல்லவனாகவும் கெட்ட குணம் அதிகமாக உள்ளவனை கெட்டவனாகவும் கொள்ள வேண்டும். 'குணம்' என்பது 'நல்ல குணம்' 'குற்றம்' என்பது இங்கே 'தீய குணம்

    எஸ்.பி.பியின் உரை : இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பண்ணலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்

    நமக்கெல்லாம் நாடி ந்னா வேறதான் தோணும்

    *

    இங்க பாருங்கோ..ஒரு இளைஞன் இளைஞி.. ஒல்லி ஒல்லியா ஜிம்பாடி யோட இளைஞன்..அதே ஒ.ஒ.வா மூக்கும் முழியுமா கள்ளி ஸாரி கன்னி.. என்னவாச்சு பாத்தேள்னாக்க ஆடி மாசம்.. ஹஸ்பெண்ட் வைஃப் தான் கல்யாணம் ஆனவொடனே ஆடி அவசரமாப் பொறந்துடுச்சா..வூட்டுல பிரிச்சு வச்சுடறாங்க.. சரி..ன்னு எப்போதுமே அந்தக்காலத்துலருந்து பெரியவங்க வார்த்தையைமீறது தானே பசங்க வழக்கம்..

    இவளுக்கோ இமெய்ல் விடறான்..ஹாய்.. நாம இந்த ..இந்தப் பார்க்குக்கு வரலாமா..

    அவளுக்கும் ஆசை தான்.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா எங்கிட்டாவது கூட்டுடுவானோன்னு பயந்து இருந்தாளா…பார்க்னவொடனே..ஓகே..

    பார்த்தா அப்புறம் தான்..குட்டி முத்தா கொடுக்கலாம்னு கூப்பிட்டா இவ பிகு பண்ணிக்கறா.. ச்சும்மா வாடி நோ ப்ராப்ளம்னு சொன்னா அவளுக்குக் கோபம் வருது..ஆசையா வான்னுகூப்பிட்டுஇப்படி வாடி போடின்னு மரியாதை இல்லாம..இருந்தாலும் செல்லமாத்தானே சொல்றான்னு முறைக்கிறா..


    வாடிபோடி என்றாலோ வண்ணவிழி காட்டியே
    நாடித் துடிப்பினை நங்கையவள் – ஊடியே
    ஏற்றுகிறாள் கூட எழில்காட்டி ஆசைக்கு
    ஊற்றுகிறாள் எண்ணெயு மாம்..

    *
    இதையே அந்தக்காலத்துல வர்ற ஒருபாட்டுல
    பெண் என்ன பாடறா..

    நாடி துடிக்குது துடிக்குது என்னை நாடி துடிக்குது துடிக்குது (படத்துல காதலர்கள் பாடற மாதிரி வருது பாட்டு)

    சீர்காழி கோவிந்த ராஜன் என்ன சொல்றார்.(படத்தில் முத்துராமன்).

    கண்ணழகு நாடி கன்னியிடை நாடி
    சின்ன இதழ் தன்னிருக்கும் தேனமுதம் நாடி

    அந்த கே.ஆர்.விஜயாம்மா பி.சுசீலா குரல்ல என்னவாக்கும் சொல்றார்

    கொஞ்சுமொழி நாடி
    கோலமுகம் நாடி
    பிஞ்சுமொழி வாயிருக்கும்
    வஞ்சிக்கனி நாடி

    நினைவு மயங்குது
    எதற்கோ நெருங்குதாம்….

    பட்டு மெத்தை நாடி
    தொட்டு விளையாடி
    பட்டத்து ராணிஎன்னும் பதவியை நாடி

    பள்ளியறை நாடி துள்ளி விளையாடி
    அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி..

    கண்ணோ துடிக்குது
    கன்னம் சிவக்குது
    என்னமோ புதிய அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது

    சின்னச் சிட்டு ஜோடி
    ஒன்றை ஒன்று நாடி
    சிறகினை விரிக்கின்ற காலந்தனை நாடி…

    தென்னை இள நீரும் செங்கரும்புச் சாறும்
    கன்னங்களில் ஊறிவரும் கனி ரசம் நாடி…( நன்னா சிரிக்கறாங்க கே.ஆர்.வி!)

    ஆசை பிறக்குது…
    அருகில் அழைக்குது..
    அம்மம்மா போதும் அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது..





    படம் சீதா..முத்துராமன் கே.ஆர்.விஜயா..

    *

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  12. #2287
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நல்லதே நடக்கும் வாசு சார். Our prayers are with you.

  13. #2288
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    செந்தூரப் பூவே மூன்று வெர்ஷனும் இப்போபார்த்தேன் ராகதேவன்..தாங்க்ஸ்.. தமிழில் வரிகள், தெலுகு ஹிந்தியில் விஷூவல் கொஞ்சம்மாற்றிவிட்டார்கள் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.. பாடலும்கூட.. நன்றி அகெய்ன்..

  14. Likes raagadevan liked this post
  15. #2289
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அசோகன் சொந்தக் குரலில் பாடி அசத்தியிருக்குற பாட்டையும் இங்கே சந்தடி சாக்கில் நுழைச்சிடறேனே !

    இரவும் பகலும் படத்திலிருந்து


  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #2290
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றிகள் சிவாஜி செந்தில் சார்.

    நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. இன்றுடன் 14 ஆவது நாளாக வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் கொஞ்சம் தளர்ந்த மாதிரி தெரிகிறது. நாளை சுரங்கம் ஒன்றில் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்று உள்ள பிற சங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து. இது வரை அமைதி. நாளை சற்று தீவிரம். தங்களைப் போன்ற நல்ல, அன்பு உள்ளங்களால் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நிர்வாகத்தின் அடக்குமுறைப் போக்கு ஹிட்லரை நினைவுகூர வைக்கிறது.
    நல்லதே நடக்கும் வாசு ஜி. இறைவன் என்றுமே தொழிலாளிகள் பக்கம் தான்

  18. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •