Page 226 of 400 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2251
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    [quote]
    Quote Originally Posted by madhu View Post
    சிவாஜிசெந்தில் சார்..

    இதோ கவிதா படத்தில் ராஜசுலோசனாவுடன் எம்.என்.நம்பியாரின் இன்னொரு டூயட்...

    By madhu sir
    மது சார்
    நல்ல கிளிப்பிங் தேடிப்பிடித்து ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள்

    நிச்சய தாம்பூலம் படத்திலும் நடிகர்திலகத்தோடு ஆரம்பப் பாடலில் ஹம்மிங் வாயசைப்பார் நம்பியார் சுவாமி
    வில்லத்தனம் நெளியும் ஹம்மிங்கே!!

    Last edited by sivajisenthil; 2nd August 2015 at 08:08 AM.

  2. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2252
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இந்த கான்செப்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஷம்மி கபூர் ...சைனா டவுன் மூலமாக//

    செந்தில் சார்,

    ஜாலியான கான்செப்ட். ரசித்தேன். 'சைனா' டவுன் பாடலை ஏற்கனவே மதுர கானத்தில் பதித்து அலசியுள்ளோம். இப்போது தலைப்புக்கு பொருத்தமாக தந்து குஜால் படுத்தியுள்ளீர்கள்.

    //ஒரு காலகட்டத்தில் இந்திய கதாநாயகர்கள் பெரும்பாலும் கிளப்புகளில் ஆடிப் பாடிப் பிழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை வெட்டியில்லாமல் தோழிகளுடன் ஊர் சுற்றும் கதாநாயகிகள் இம்மாதிரி கிளப்புகளுக்கும் பொழுது போக்க வருவார்கள் !!//

    அருமை! ரசித்துச் சிரித்தேன். உண்மையும் கூட. அதுவும் ஹிந்தித் திரைப்படங்களில் நீங்கள் மேற்கூறிய விஷயங்கள் அப்போது ஒரு திரைப்படம் விடாமல் அத்தனைப் படங்களிலும் ஆட்கொள்ளும்.

    'பத்லி கமர் ஹே திரிச்சி நசர் ஹே'

    என்று ராஜ்கபூரின் 'பர்ஸாத்' திரைப்படத்தில் முகேஷ் பிரேம்நாத் அவர்களுக்காகப் பாடும் பாடல் ஒன்று வரும். 1949 ல் வந்த படம். சும்மா கலக்கல் பாடல். நிம்மியின் சோகத்துக்கு லதா குரல் கொடுக்க சோகமும், சரசமும் மாறி மாறி அற்புதமான பாடலாக இது அமைந்து விட்டது. கிளப் ஆர்ப்பாட்டம் பாதியும், கலங்க வைக்கும் கண்ணீர் பாதியுமாக அற்புதக் கலவை இந்தப் பாடல். நடுவில் வரும் அந்த உற்சாக 'யேய்' குரலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாதே. சங்கர் ஜெய்கிஷனின் அற்புதங்களில் ஒன்று, பிரேம்நாத் நெடுநெடுவென்று இளமையாக, ஜோராக இருப்பார். காட்சி ரிச். உடன் குக்கூ ஆடுவார். முகேஷின் குரல் காந்தம் போல இழுக்க லதாவின் குரல் அப்படியே உருகும். நம்மை உருக்கும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes rajeshkrv, RAGHAVENDRA, eehaiupehazij liked this post
  6. #2253
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நம்ம நம்பியார் 'மர்மயோகி' திரைப்படத்திலேயே நல்ல கருத்துக்களை கழுதை மூலம் சொல்லி விட்டார் பாடல் வழியாக . நம்பியார் வழு வழு என்று அவ்வளவு அழகு. படத்தில் ஹீரோவுக்கு கவுண்டமணி, சந்தானம் போல பக்க பலம்.

    'கழுதையிலே ரெண்டு விதம்
    நல்லதுண்டு கெட்டதுண்டு
    ஒன்று கத்தயிலே நல்லதென்பார்
    மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்

    குட்டியாய் இருக்கையிலே
    குதிரையைக் காட்டிலும்
    லட்சணத்தில் எட்டு மடங்கு

    கழுதை

    குட்டியாய் இருக்கையிலே
    குதிரையைக் காட்டிலும்
    லட்சணத்தில் எட்டு மடங்கு

    ஆளைப் பார்க்காதே கழுதை
    அடிபட்டு செத்துப் போவே
    ஒழுங்கா நடந்துக்கோ'

    என்று ஜாடைமாடையா நம்பியார் கழுதையை திட்டும் சாக்கில் மனிதர்களைத் திட்டுவார். அருமை.

    Last edited by vasudevan31355; 2nd August 2015 at 07:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #2254
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    *

    சி.செ..கோல்டன் ஐ பார்த்தது துபாயில் நள்ளிரவு 01.15 மணிக்காட்சி.. காலங்காலை 4 மணி அளவில் படம் முடித்து விட்டு சோடியம் வேப்பர் விளக்கொளியில் காரில் வந்து கொண்டிருந்தபோது போலீஸ்கார் கைகாட்டி ஓரங்கட்டச் சோல்லி - மனைவியார் தான் ஓட்டிவந்தார்- லைசென்ஸ் எடு எனக் கேட்டது மறக்க இயலாத ஒன்று.. டிக்கெட் எல்லாம் கேட்கவில்லை..! கொஞ்சம் த்ரில்லான படம் தான்..வேறென்ன செய்வது என 006 அந்த டாங்கரை ரயிலில் மோதச் சொல்லும்போது அவருக்கே சிரிப்பு வந்தது துல்லியமாகத் தெரிந்தது..வில்லங்க வில்லி, ஹீரோயின் ஸோ ஸோ.. கட்டக் கடோசியில் ஐயாம் இன்வின்சிபிள் எனும்போது லிக்விட் நைட்ரஜன் வந்து அந்தக் குண்டுப்பையனை உயிர்(இல்லாத) சிலையாக்குவது ஜோர்.. அந்த பேனா அமுக்கும் நிமிடங்களில் ஹ்ருதயத்துடிப்பு எகிறும்..

    வில்லங்க வில்லன்களில் பறக்கும் பறவை நீயே பாட் போடலாம் என்றால் மதுண்னா முந்திக் கொண்டுவிட்டார்

    எஸ்.வி.ராம்தாஸ் டூயட் பாடியிருக்கிறார் தெரியுமோ.. ஏதோ ஒன்று தேடுகையில் பார்த்த நினைவு..சேமிக்க மறந்து விட்டேன்..இனி மதுண்ணா வாசுண்ணா பாடு..

    //ஒன்று கத்தையிலே நல்லதென்பார்
    மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்// வாஸ் பாட் இனிதான்கேக்கணும்..ம்ம் ஆனாக்க ஒங்க பேர்ல கோபமாங்காட்டியும்..ஒய்.. சொல்றேன்..

    ஏ.சி.தி யின் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேனா நேற்று..( சுவாரஸ்யமாக அவருக்கு எழுதத் தெரியவில்லை இது என்கருத்து) அதில் ஒரு பாட் - ஆசாரியெல்லாம் பிடித்து அவர் மனதில் தோன்றிய காட்சியை- வட்ட வட்டமான தாமரை இலை செய்து அடியில் கயிறெல்லாம் கொடுத்து மரத்தில் இருத்தி, பின் நடுவில் தாமரைப்பூ என செட் போட்டு- ஏவிஎம் செய்ததை - அந்தப் பாட்டை- அது எடுபடாமல் போனதை எழுதியிருந்தாரா..அதுபற்றி எழுதலாம் என நான் நினைத்தேனா..கூகுள் செய்தேனா..

    பார்த்தால் வாசு ஏற்கேனவே போட்டாச்.. விலாவாரியாக.. நற நற..

    http://www.mayyam.com/talk/showthrea...%AF%8D/page282

    ஏ.சி.தி சொன்ன அடிஷனல் இன்ஃபோ.. இதைக் கலர் ப்ரிண்ட் போட்டு போவோர் வருவோரிடமெல்லாம் காட்டிக் கொண்டிருந்தாராம் ஏ.வி.எம்.சிலகாலம்..


    ம்ம் இது மட்டுமில்லை..வேறு ஏதாவது ரேர் சாங்க் தேடினால் நமது நெய்வேலி கூகுள் அல்லது கடலூர் கூகுள் வாசு ஏற்கெனவே போட்டு வைத்திருக்கிறது.. அவர் போடாத பழைய பாட் கொடுக்காத விஷயம், விளக்கம், படங்கள் தேடுவதே சாலஞ்சிங்கான விஷயம் தான்..வாசு சார்..தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் யுவர் உழைப்பு.. ஸ்டில் வி வாண்ட் மோர்

    ராகதேவனின் , ராஜ்ராஜின் பாடல்கள் இனி தான் கேட்கவேண்டும்.. முன்புகொடுத்த பா.பாடல்களுக்கு தாங்க்ஸ் ராஜ்ராஜ்சார்..

  9. Thanks eehaiupehazij, vasudevan31355 thanked for this post
  10. #2255
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நம்பியார் இந்த நஙகையுடன் உள்ளத்தில் நஞ்சு உதட்டில் புன்னகையுடன் படகு விடும் தேன் நிலவை விடலாமோ சி.செந்தில்..


  11. Thanks eehaiupehazij, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  12. #2256
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீள் பதிவு

    **

    *****
    கறுப்பு உருவம்.. திடகாத்திரமான தேகம்..கண்களில் கொஞ்சம் அனுபவ அறிவு..இருபது வயதுக்கு அதிகம் தான்.. நான் சொல்வது என் கல்லூரி சினேகிதன் ரகுராமனைப் பற்றி..செல்லமாய் ஆர்க்யூப் என்றழைப்பேன்.(ஆர்.ரகுராம்)..

    அந்த ரகுராம் ஒரு நாள் கல்லூரியில் “வாடா.. அபிராமின்னு புதுசா ஒரு தியேட்டர்..அதுல ஒரு நல்ல ஹிந்திப் படம் போகலாம்” எனக் கேட்க லவ்லெட்டர் கொடுத்த இளைஞனை முறைக்கும் இளைஞியைப் போல் முறைத்தேன்..

    “டேய்.. எனக்கோ ஹிந்தி சுட்டும் வராது..உனக்குத் தெரியும்.. தியேட்டர்ல நான் என்ன பண்ண” “ச்சும்மா வாடா..பிகு பண்ணாம”என மூன்றாம் பீரியட் தமிழை வெட்டி விட்டு, தரதரவென்று பஸ்ஸில் இழுத்துச் சென்று கல்லூரியிலிருந்து 45 நிமிஷப் பயணத்தில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து அரக்கப் பரக்க 4ம் நம்பர் பெரியார் பேருந்து நிலையம் டு தெப்பக்குளம் பஸ் ஏறி அலங்கார் தியேட்ட்ருக்கு அடுத்த ஸ்டாப்பான அபிராமி என இறங்கி இருந்தபெட்டிக்கடையில் ‘அபிராமி’ என விசாரிக்க(அப்போ குணாவெல்லாம் வரவில்லை) புது தியேட்டராப்பு என எதிர் தெரிந்த சந்தினைக் காட்டினார் பெட்டிக்க்டைக்காரர்..

    வாடா என ரகு அவசரப் படுத்த வேக வேகமாக சந்துகளில் புகுந்துபுறப்பட்டு தியேட்டரில் நுழைந்து ‘என்ன படம்டா..எனக்குப் பசிக்குதே” எல்லாம் உள்ள வாங்கித் தரேன் வா – படம் பேரு கர்ஸ் எனச் சொல்ல ஏண்டா என்னை சபிக்கிறே எனச் சொன்னதும் என்னை ரகுமுறைத்தது இன்னும் நினைவிருக்கிறது..

    உள் நுழைந்து சந்தோஷமாய் சூடாய்க் கிடைத்த ஏதோ வடையோ சமோசாவோ உள்ளே தள்ளி தியேட்டரில் நுழைந்தது முதல் அவனைக் கலாய்த்துக் கொண்டுதானிருந்தேன்..

    மூக்கும் முழியுமாய் குட்டிப் பெண்ணாய் லட்சணமாய் அவ்வப்போது குட்டைப் பாவாடையில் டினா முனிம், செவேலென்று வார்த்த ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை நிற்மாய் ரிஷிகபூர் என படம் புரிவதற்கு ஒன்றும் கஷ்டமில்லை தான்..இருந்தாலும் து சோல பரஸ்கி மே சத்ர பரஸ்கா என பாட ஆரம்பிக்க என்னடா அவ சோழ தேசத்தவ இவன் பல்லவன் கறானா என அப்பாவியாய் நான் கேட்க வெகுசீரியஸாய் படத்திலிருந்துகண்ணெடுக்காமல் ரகு பதில் சொன்னான்..- அவளுக்கு பதினாறு வயசு இவனுக்குபதினேழு வயசுங்கறாண்டா.. ஓம் சாந்தி ஓம் பாடலின் போது யாருடா அந்த சாந்தி..அதுபாட்டுடா.. இப்படியே பல விஷயங்கள் வாரிக்கொண்டிருந்தேன்..

    பிற்காலத்தில் ஒருவருஷமோ இருவருஷமோ கழித்து எனக்குள் ஒருவன் பார்த்தபோது கர்ஸ் பார்த்த திருப்தி ஏற்படவில்லை..

    முந்தா நாள் ஸீ க்ளாஸிக் சினிமாவில் கர்ஸ் பார்த்த போது இந்த நினைவெல்லாம் வர, கண்ணில் நீர் முட்டியது..ஏனெனில் நான்கு வருடம் முன்பே ரகு சடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்..அதுவும் அவனைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும்..என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் என்றிருந்த் போது அந்த எ ஒ நா வராமலேயே போய்விடும் என நினைத்துக் கூட ப் பார்க்கவில்லை..

    *


  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  14. #2257
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    எஸ்.வி.ராம்தாஸ் டூயட் பாடியிருக்கிறார் தெரியுமோ.. ஏதோ ஒன்று தேடுகையில் பார்த்த நினைவு..சேமிக்க மறந்து விட்டேன்..இனி மதுண்ணா வாசுண்ணா பாடு..
    டூயட் பாட்டுன்னா ரெண்டு பேர் பாடுறதில்லையா சிக்கா...

    இந்தாங்கோ மூணு பேர் பாடும் பாட்டில் ராமதாஸும் நடிக்கிறாருங்க..

    குழந்தைக்காக படத்தில் சீர்காழி, டி.எம்.எஸ்., பி.பி.எஸ் குரல்களில் மேஜர் சுந்தரராஜன், மனோகருடன் ராமதாசும்..

    ( சிக்கா தேடினாலும் சிக்காத வகையில் சிவாஜி ரேர் சாங்க்ஸ்னு தலைப்பு வச்சிருக்காங்க )


  15. #2258
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    நன்றி. மது அண்ணா தந்தது போல் இன்னொரு பாடல். ஏற்கனவே இன்றைய ஸ்பெஷலில் போட்டிருந்தாலும் ராமதாஸ் பங்கு கொள்வதால் இந்தப் பாடல் 'விஜயபுரிவீரன்' திரைப்படத்திலிருந்து.

    'உள்ளத்திலே உரம் வேணுமடா
    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உண்மையிலே திறம் காணுமடா
    ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா'

    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, madhu, RAGHAVENDRA liked this post
  17. #2259
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராமதாஸ் பங்கு கொண்ட இன்னொரு பாடல். ஆனால் ஈஸ்வரி மட்டுமே பாடுவார்.

    'வீரத் திருமகன்' படத்தில்

    'கேட்டது கிடைக்கும்
    நினைப்பது நடக்கும்
    பதவி வேண்டுமா
    என் உதவி வேண்டுமா'

    அருமையான பாடல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  18. #2260
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஊக்கம் தரும் ஆக்க பூர்வமான கருத்து எண்(ணை)ணப் பரிமாறல்கள்தான் இந்தத் திரி நன்கு தூண்டப் பட்டு சுடர் விட்டுப் பிரகாசிக்க செய்கின்றன வாசு சார்/மது சார்/ சி க சார்/ரவி சார் !
    எந்த சூழலிலும் மன முதிர்வுடன் அனைவரையும் அரவணைக்கும் அருமையான பதிவத்தோழர்கள் குழாமில் இணைந்திருப்பது மன ஆறுதலைத் தருகிறது.
    மனக் காயங்களுக்கு மருந்தாக இங்கு பதிவிடப் படும் தேனிசைப் பாடல்கள் பற்றிய அலசல்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றன.
    திரியின் அபார வளர்ச்சியும் கண் பட வைத்திடும். ஊர் கூடித் தேரிழுத்திடுவோம்...இதே உற்சாகத் துள்ளல்களுடன்!

    வில்லங்க கானங்களும் வெல்லங்களே!

    பகுதி 4 அசோகன் / இது சத்தியம்...வல்லவனுக்கு வல்லவன்..பாத காணிக்கை....
    தமிழ்த் திரை பாரம்பரியத்தில் அசோகனுக்கு ஒரு தனியிடமுண்டு அவரும் சில பல திரைப்படங்களில்...இது சத்தியம், வல்லவனுக்கு வல்லவன், மணப்பந்தல்...கதா நாயகராகவும் பாத காணிக்கை, கர்ணன், உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் நல்ல குணசித்தரிப்பிலும், அடிமைப்பெண், உ சு வா பிரதான வில்லனாகவும், நான், மூன்றெழுத்து..நகைச்சுவைப் பங்களிப்பிலும் மிளிர்ந்தார்! உயர்ந்த மனிதனில் நடிகர்திலகத்துடன் உன்னத இடம்!!


    சத்தியம் இது சத்தியம் பாடல் காட்சியமைப்பும் அசோகனின் உடல்மொழி அசைவுகளும் பாசம் மக்கள் திலகத்தின் உலகம் பிறந்தது எனக்காக பாணியில் !



    வல்லவனுக்கு வல்லவனிலும் எம் ஜி ஆரை நினைத்து நடன அசைவுகள் ..



    இன்னொரு உத்தம வில்லர் மனோஹருடன் ..சாவித்திரியுடன் (ஜெமினியும் இப்படத்தில் மாறுதலான வில்லன்!!)



    ஓராயிரம் பார்வையிலே ...ஒரு சில ப்ரேம்களே!! அருமையான பாடல் காட்சிப் பதிவு



    பாதகாணிக்கையில் ஜெமினி இணைவில் ..நடிகர்திலகம் தரப் பாடல்! வீடுவரை உறவு....

    Last edited by sivajisenthil; 2nd August 2015 at 08:04 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •