-
26th July 2015, 09:20 AM
#2131
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th July 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2015, 09:21 AM
#2132
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th July 2015, 09:22 AM
#2133
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th July 2015, 09:24 AM
#2134
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2015, 09:25 AM
#2135
Junior Member
Seasoned Hubber
-
26th July 2015, 09:26 AM
#2136
Junior Member
Seasoned Hubber
-
26th July 2015, 09:27 AM
#2137
Junior Member
Seasoned Hubber
-
26th July 2015, 09:40 AM
#2138
Junior Member
Veteran Hubber
வாசு சார்
குழந்தை உள்ளம் திரைப் படத்தையும் ஒதுக்காது ஓர் அன்(னை)னப் பறவை போல பாலை நீரிலிருந்து பிரித்தெடுத்து பாடல்களுக்கு சுவை மதிப்பூட்டல் அளித்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி
உங்கள் இடைவெளியற்ற தேடுதல் குணமே உங்களை விண்ணளாவிய பதிவர் திலகமாக உயர்த்தியிருக்கிறது !
நடிகர்திலகம் என்ற புயலின் மையத்தில் இருந்து கொண்டே பல்வேறு கரைகளைக் கடந்து பதிவு மழை பொழியும் உங்கள் நிகரற்ற ஆற்றல் விடா முயற்சி எதையும் முறைப்படுத்தி செய்வன திருந்தச் செய்தல் சுவை மதிப்பூட்டல் ...எங்களுக்கு எட்டாக் கனியே!
இளைய தலைமுறையினரின் இதயக் கனியே !!
Last edited by sivajisenthil; 26th July 2015 at 09:50 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th July 2015, 09:46 AM
#2139
Junior Member
Seasoned Hubber
திருக்குறளும் , திரை இசையும் -4
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் இல்லை .
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை - அங்கொரு கண்ணும் , இங்கொரு கண்ணும் ஆலய வழிப்பாடு இல்லை
" பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th July 2015, 11:12 AM
#2140
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
20
'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு'
'குழந்தை உள்ளம்' கதைப் பதிவு படித்து முடித்து விட்டீர்கள் தானே!
இப்போது பாலாவின் தொடருக்கு வருவோம்.
பாலாவின் அற்புதமான ஒரு பாடல் இந்தப் படத்தில் ஒலிக்கும் சுசீலாவுடன் இணைந்து. அபூர்வமானதும் கூட. பாலாவை அறிமுகப்படுத்திய எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையிலேயே பாலா தமிழில் அட்டகாசம் புரிந்த பாடல்.
இசையமைப்பாளர் கோதண்டபாணி பற்றியும், தான் பின்னணிப் பாடகராக நிலைக்க பட்ட கஷ்டங்களையும் பற்றி நமது பாலா என்ன சொல்கிறார்?
(நன்றி spbindia.blogspot.in இணையதளத்திற்கு)
SPB on his debut film:
S P Balasubramanyam
This is my debut film. (Sri Sri Sri Maryada Ramanna 1967) (telugu) It happened because of Sree Kodandapani gaaru. He was one of the judges when I contested in a singing competition in 1963 in Madras. After the program, he came to me and said that I'd become a popular singer and will keep on singing for the next forty years! And, true to his blessings, I find myself still singing, even after forty years! He took me to S. Bhavanarayana gaaru, introduced me, and recommended me but nothing happened on that front. I was disappointed and went back to college to complete my second year AMIE.
Again, Kodandapani gaaru called me one day and took me to Padmanabham and asked meto sing a song. I sang the title song of mErE mehboob, pibarE raamarasam, etc.to Padmanabham, who liked my voice and assured that he'd definitely give me a chance. Apart of the song Emi yee vinta mOham! was intially supposed to be sung by Ghantasala maasTaaru. He went to his native place to attend to his mother who fell ill and was thus unable to come to the recording. As the shooting neared, they made me sing it on an adhoc basis, with an intention to replace it with Ghantasala maasTaaru's voice if it was not as good. Though I had only one charaNam to sing, I practised the whole song. On the day of recording, December 15, 1966, no car came to pick me up.
I waited for sometime and went the studio on my bicycle. Until I went to Vijaya Gardens, I had a feeling that they might not have liked my voice, but when I reached I was informed that the car had a mechanical problem. After waiting for some time, I got a call from Kodandapani gaaru and I recorded the whole song in twenty minutes. I was paid Rs. 300/-as the remuneration for this song. I mailed Rs. 100/- to my father. At that time, I used to get Rs. 80/- per month from my home to meet my expenses in Madras as I was staying in a room along with other friends for my studies. While sending the money, I also wrote to my father that he need not send me money for another two months.
My first song along with bigwigs like P.B. Sreenivos, Raghuramayya gaaru, and P. Susheela was a memorable experience. When Ghantasala maasTaaru returned from the village they showed the song to him. He said that my voice was good and insisted that the voice should be kept as is in the song. It was his blessings and S.P. Kondandapani gaari blessings, which I cannot forget even after forty years...
பாலா பின்னணிப் பாடகராக ஆகப்பட்ட சிரமத்தை இப்போது நாம் தெரிந்து கொண்டோமல்லவா!
எனவே தங்கப் பாடகரை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களுக்கு நம் வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். மதுர கானமும் அவருக்கு தன் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
காட்டில் ஜெமினிக்கும், காட்டுவாசிப் பெண் வாணிஸ்ரீக்கும் டூயட். பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்குப் பிறகு ஜெமினிக்கு பாலா மிக அம்சமாகவே பின்னணி பாடகராகப் பொருந்தினார். கவனியுங்கள். இயற்கை என்னும் இளைய கன்னி, கற்பனையோ கை வந்ததோ, சிட் சிட் சிட் எங்கே போவோம், முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு, மங்கையரின் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று பாலா ஆரம்பத்தில் ஜெமினிக்கு அதிகமாகவே பாடி அத்தனையும் ஹிட் ஆயிற்று.
பாடல் படமாக்கலில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் ஜெமினி கச்சிதமாக, அழகாக, இளமையாகத் தெரிகிறார். நைட் கவுனுடன் பாடலைப் பாடுகிறார். தலையில் ஒற்றை பெரிய ரோஜாவுடன், நெற்றியில் ஸ்ரீதரின் 'சித்ராலயா' லோகோ போல பொட்டிட்டு (நங்கூரப் பொட்டு போலவும் தெரிகிறது) காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து, முகவாய்க் கட்டையில் ஃ போன்ற மூன்று கரும் புள்ளிகளுடன், கால்களில் தண்டையுடன், கைகளில் நிறைய கருப்பு வளையல்களுடன், நாகரீகக் காட்டுப் பெண் சேலையணிந்து வாணிஸ்ரீயும் அழகாத்தான் இருக்கிறார். அந்தக்கால முகத்தோடு முகம் வைத்தல், முகவாய்க் கட்டைகளை இணைத்தல், கன்னத்தோடு கன்னம் உரசல், இருவரும் இணைந்து சைட் குளோஸ் -அப் போஸ் தருதல் என்று அத்தனையும் இந்தப் பாடலிலும் உண்டு.
ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி பாடும் போது சிரிப்பு நமக்கு பொங்கித்தான் வருகிறது.
பாலா தமிழுக்கு வந்த புதிதில் பாடியதால் கொஞ்சம் தமிழ் உச்சரிக்க சிரமப்படுவது போல் தெரியும். 'பூ வண்டு' என்பதை 'பூ வந்து' என்று உச்சரிப்பது போலத் தோன்றும்.
சரணங்களுக்கிடையில் சுசீலா அம்மா தரும் 'லா லா ல லா' ஹம்மிங்குகள் குளிர்த் தென்றலின் சுகம். மூன்றாவது சரணம் மட்டும் சுசீலா அம்மா அருமையாகப் பாடுவார் அந்த சரண வரிகள் 'தேன் தரும் நிலவு' போலவே. செட்-அப் முழு நிலவு 'பளிச்'சென்று காய, இரவுப் பின்னணியில் இந்த வரிகள் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.
நான் அப்போது இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏ.எல்.ராகவன் தான் இப்பாடலைப் பாடுகிறாரோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்தீர்களானால் ஏ.எல்.ராகவன் குரல் போலவே பாலாவின் குரல் இருக்கும். 1969-ன் படம் என்பதால் பாலாவின் குரல் மிக இளசாக இருக்கும்.
மிக அமைதியான பாடல். ரசிக்கத் தகுந்த ஆரம்ப கால பாலாவின் அபூர்வ ஜெம். பாடல் வரிகளை அளித்தது கவிஞர் கண்ணதாசன். இசை இன்ப மயம். பாடலில் தெலுங்கின் சாயல் வராமல் பார்த்துக் கொண்டது கோதண்டபாணியின் சாமர்த்தியம். இரண்டு எஸ்.பி.க்களான குருவும், சிஷ்யனும் பங்களித்து கலக்கிய பாடல்.
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
போனஸ் இணைப்பு.
பாலா 1966 டிசம்பர் மாதம் 15ம் தேதி பாடி, பதிவாகி, 1967 ல் ரிலீஸ் ஆன, 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா' தெலுங்குப் படத்தின் பாலாவின் முதல் பாடல். ('Emi Ee Vintha Moham') கோதண்டபாணியின் இசையில். பாலாவுடன் பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களும், ரகுராமையா அவர்களும் இணைந்து பாடியிருப்பார்கள்.
ராஜஸ்ரீ ஒற்றையாய் நடுவில் ஆட, தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார்கள் கிருஷ்ணா, சோபன்பாபு, ராமகிருஷ்ணா, ஹரநாத் (ராஜா) நால்வரும் அவரை சுற்றி மோக போதையில் அலைய, சோபன்பாபுவுக்கு ஒலிப்பது நம் பாலாவின் குரல். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்று அட்டகாசமாக நிரூபித்திருப்பார் பாலா.
பாடல் அருமை. இதையும் கேட்டு மகிழுங்கள்.
Last edited by vasudevan31355; 26th July 2015 at 06:24 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
Bookmarks