-
22nd July 2015, 01:25 PM
#2051
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2015 01:25 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2015, 01:49 PM
#2052
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2015, 01:50 PM
#2053
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd July 2015, 01:51 PM
#2054
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd July 2015, 01:52 PM
#2055
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd July 2015, 01:54 PM
#2056
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd July 2015, 05:42 PM
#2057
Junior Member
Veteran Hubber
the monotony breaker
தவற விடக் கூடாத பரவசம் !!
ஹாலிவுட்டின் இசை ஜாம்பவான் என்னியோ மொர்ரிகொன் / Ennio Morricone
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் ! Cowboy film genre!!
பகுதி 14 : For a few Dollars more and The Good The Bad and the Ugly music by Ennio Morricone!
Starriing Clint Eastwood!
Hollywood's Italian Sphagatti Westerns by Ennio Morricone of the Good, The Bad, and the Ugly fame!!
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சரிநிகர் போட்டியாக ஹாலிவுட்டில் இத்தாலி சார்ந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் இத்தாலியின் ஸ்பாகட்டி வேஸ்டேர்ன்ஸ் என்று செல்லமாக விளிக்கப்பட்ட கௌபாய் படங்களால் கலக்கியெடுத்த காலகட்டம்!
ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் சமகாலப் போட்டியாளர்களான கிளிண்ட் ஈஸ்ட்வுட் , கிரிகரி பெக், டெரன்ஸ் ஹில்-பட் ஸ்பென்சர்... ஜாங்கோ...படங்கள் ரசிகர்களின் மாறுபட்ட ரசனைகளுக்கு ரசவாத மாற்றங்களில் தீனி போட்டுக்கொண்டிருந்தன !!
கௌபாய் படங்களில் தனி முத்திரை பதித்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் படங்களான தி குட் தி பேட் தி அக்ளி மற்றும் பார் எ பியூடால்லர்ஸ் மோர்...பட வரிசைகளின் மனதை கவர்ந்திழுத்த இசைக் கோர்ப்புக்கு சொந்தக்காரர் எண்ணியோ மொர்ரிகோன் என்னும் இத்தாலிய இசை மேதை!!
ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையையும் மிஞ்சி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தத் துள்ளிசைத் தூறல் இதோ!...
இந்த இசை மந்திரவாதி என்னியோ மோரிகோன் நமது மனங்களை வசியம் செய்து ஜேம்ஸ் பாண்டின் இறவாப் புகழ் பெற்ற டாக்டர் நோ தீம் இசையையும் மிஞ்சுகிறார் !!
Enjoy with a Head Phone!
சிரஞ்சீவித்துவம் வாய்ந்த இறுதிக்கட்ட கல்லறைத் தோட்ட மோதலில் துடிக்கும் தோட்டாக்கள் வெடிக்கும் துப்பாக்கிகள் !!
Watch the rythmic dancing to the tune of Clint Eastwoods'
Cowboy cap!!
Last edited by sivajisenthil; 22nd July 2015 at 06:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd July 2015, 10:08 PM
#2058
Junior Member
Veteran Hubber
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம் !
Cowboy Genre பகுதி 15 : மெக்கன்னாஸ் கோல்டு McKenna's Gold starring Gregory Peck and Omar Shariff
ஹாலிவுட் திரைவரலாற்றில் மறக்க முடியாத கதாநாயகர் கிரிகரி பெக் !!
ரோமன் ஹாலிடே, கன்ஸ் ஆப் நவரோன், ஓமன் போன்ற காவியங்களின் நாயகர். அவர் கவ்பாய் பாணியில் ஷரீப் ஆக தங்க வேட்டைக்காரர்களை வளைத்துப் பிடிக்கும் சாகசக் கதை ! மிகச்சிறந்த பொழுதுபோக்குப் படமாக சக்கை போடு போட்டு வெள்ளிவிழா கண்டு வசூலில் பெரும் புரட்சி செய்த படம்!!
நண்டுப்பிடி வில்லனாக ஓமர் ஷெரீபிடம் கிரிகரி பெக் படும் அவஸ்தைகள் முறுவலை வரவழைக்கும்!
ஒரு கழுகின் பார்வையில் கதை விரிந்ததும் அமர்க்களமான டைட்டில் இசை ஆரம்பம் !! படம் நெடுக சிலிர்க்க வைக்கும் இசை வெள்ளம்!!
Old Turkey Bazzard ....Gold Gold Gold..! by Quincy Jones!
Grand Canyan of Gold! Excellent Gunshot BGM!! Enjoy!
Last edited by sivajisenthil; 22nd July 2015 at 10:44 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd July 2015, 11:04 PM
#2059
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
19
'பௌர்ணமி நிலவில்'
இதோ பாலாவின் 'படா' ஹிட் 1969 ன் ஆரம்ப காலப் பாடல். 'சத்யா' பிலிம்ஸ் 'கன்னிப் பெண்' படத்தில்,'மெல்லிசை மன்னரி'ன் மறக்க முடியாத இசையில், தமிழகத்தையும், சிலோனையும் சும்மா ஆட்டோ ஆட்டோவென்று ஆட்டுவித்த அட்டகாசப் பாடல். திரும்பும் இடமெல்லாம் 'பௌர்ணமி நிலவு' தான். ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். அதுவும் புதுச்சேரி வானொலி நிலையத்தில் போட்டு 'கிழி கிழி' என்று கிழித்து விட்டார்கள்.
பின்னால் இளையராஜாவின் ஆஸ்தான ஜோடியாய் பல ஹிட் பாடல்களை அளித்த பாலா, ஜானகியின் ஆரம்ப கால முன்னோடிப் ஜோடிப் பாடல் இது.
இந்தப் பாடலின் இனிமையைப் பற்றி என்ன சொல்வது? சுகம்..கேட்க சுகம்.. கேட்கக் கேட்க சுகம். திகட்டாத, தெவிட்டாத சுகம். நம்மையறியாமல் நாம் மெய் மறந்து விடுவோம். சரி! இப்போது கேட்டால்? எப்போது கேட்டாலும் ஒரே சுகம்தான். அதே இனிமைதான்.
மிகப் பொருத்தமாக பாலாவும், ஜானகியும் குரல்களில் ஜோடி சேர்வார்கள். அலட்டல் இல்லாமல் அழகாகப் பாடுவார்கள். (பின்னாளில் போல் அல்ல.) பாலாவை எங்கோ உச்சியில் கொண்டு போய்க் கிடத்திய பாடல் இது. . இன்று பல இளைஞர்களுக்குக் கூட இப்பாடல் தெரிந்திருக்கிறது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தே இப்பாடலின் விஸ்வரூப வெற்றியை அறியலாம்.
முக்கியமாக பாடல் வரிகள் குறிப்பிடத்தகுந்தவை. (வரிகள் 'வாலிபக் கவிஞர்' வாலி) தமிழின் பெருமையை அந்தக் கால சினிமாக் காதலர்கள் தங்கள் காதல் பாடல்களில் கூட அழகாகப் புகுத்துவது போலக் கவிஞர்கள் அற்புதமாக எழுதிக் கொடுத்தார்கள். இந்தக் காலக் காதலன் போல 'உன் கொலுசு நான்...உன் மூக்குத்தி நான்... உன் பாதம் சரண் அடைவேன்... உன் காலைப் பிடிப்பேன்'... என்றெல்லாம் பிதற்றி உளறிக் கொட்டவில்லை.
காதலில் கூட தமிழின் பெருமை ரசிக்கும்படி உணர்த்தப்பட்டது.
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே
என்று தமிழ் எப்படிபோற்றப்படுகிறது பார்த்தீர்களா? எப்படி வளர்க்கப்படுகிறது பார்த்தீர்களா?
துள்ளும் இளமைப் பருவம் நமது
தொட்டுத் தழுவும் சுகமோ புதிது
என்று காதலர்கள் தங்கள் இளமைப் பருவத்தை சிலாகித்தலும் அருமை.
காதலியின் பூமேனியை கவிஞர் பொன் வீணைக்கு ஒப்பிடுதலும் அற்புதம். (காதலன் இசை ஆசிரியன் அல்லவா!)
ஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு மடியில் வைத்துப் பார்க்கும் கவிஞர் வாலியின் ரசனை அபாரம். அதிலேயும் அவர் தமிழை விடவில்லை. 'பிள்ளைப் பருவ'த்தை தாய் மடியில் ஒப்படைத்து, 'பேசும் பருவ'த்தை தமிழ் மடியில் ஒப்படைக்கிறார். 'கன்னிப் பருவம்' என் வடிவில் என்று காதலி அந்தப் பருவத்தைத் தன் மூலம் பெருமைப்படுத்திக் கொள்வாள். ஜோர்.
மிக இளமையான, 'பாபு' வுக்கு முந்தின, காமெரா முன் கூச்சமுடன் நிற்கும் இசை ஜிப்பா அணிந்த சிவக்குமார் (கொடுவா கிருதா வேறு) படத்தில் இசை ஆசிரியர். (தலையை இழுத்து, தலைவர் போலப் பாட முயன்று, நமக்கு சிரிப்பை வரவழைப்பார். நிர்மலாவுடன் நெருங்க பயம் நன்றாகவே தெரியும். பரிதாபமாய் இருக்கும்.)
அவரிடம் பயிலும் மாணவி அழகான 'வெண்ணிற ஆடை' நிர்மலா. இருவருக்கும் காதல். அதனால் வரும் டூயட் இந்தப் பாடல். (இந்தப் படத்தில் நிர்மலா மிக அழாக 'மொழு மொழு'வென்றிருப்பார்) கண்கள் காதல் களியாட்டங்கள் புரியும். சிவக்குமார் என்றால் இவரிடம் இன்னும் உற்சாகம் கொப்புளிக்கும். நெருக்கமும் அதிகம் தெரியும். முழங்கால் கவுன் பிளாக் கலரில் நிர்மலாவுக்கு அம்சமாக இருக்கும். கழுத்தில் மின்னும் நெக்லஸ் இன்னும் அழகு சேர்க்கும். காதில் தொங்கும் நீள் ஜிமிக்கியும் ஓஹோ! இந்தப் பாடலுக்கு நன்றாக வாயசைப்பார் நிர்மலா. இந்தக் காலதத்து நடிகைகள் எங்கே வாய் அசைக்கிறார்கள்? வாய்தான் அடிக்கிறார்கள்.
'காவல்காரன்'(1967) படத்திற்குப் பிறகு 'சத்யா' மூவிஸாரின் படத்தில் மீண்டும் சிவக்குமார். (நல்ல ஒத்துழைப்பு போல.) மெயின் ஹீரோ ஜெயசங்கர். வாணிஸ்ரீ ஹீரோயின். இன்னொரு காதல் தோல்வி தியாகி லஷ்மி. போலீஸ் கதை. அதெல்லாம் வேண்டாம் நமக்கு. 'சத்யா பிலிம்ஸ்' என்பதால் ஆர்.எம்.வீரப்பன் மாலை போட, 'கன்னிப் பெண்' படத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் வந்து துவக்கி வைப்பது (மானிட்டர் பார்த்து முடுக்கி வைப்பார்) போன்ற காட்சியுடன் படம் ஆரம்பமாகும். படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கியிருப்பார்.
ஆனால் பாடல்களுக்கென்று ஒரு படம் என்ற பாராட்டை நிச்சயம் நாம் இந்தக் 'கன்னிப் பெண்'ணுக்குத் தரலாம். சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த 'ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்தந்தம்மா', (வாவ்! என்ன பாட்டு அய்யா அது!) அப்புறம் ஜெய், லஷ்மி ஜோடி பாடும் படத்தின் ஆரம்பப் பாடலான 'இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி' (இன்றைய ஸ்பெஷல்' தொடரில் விருப்பத்துடன் எழுதி இருப்பேன்) வாணிஸ்ரீ, லஷ்மி இரட்டை நாயகிகள் சுசீலா, ராட்சஸி குரல்களில் பாடும் 'அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே' (என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடல் பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்) என்று பாடல்கள் ஒவ்வொன்றும் பிரமாதத்திலும் பிரமாதம்.
அப்புறம் சுமாரான 'உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான்' பாடல் ஒன்றும் உண்டு.
சரி! நம் பாடலுக்கு வந்து விடுவோம். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ரசியுங்கள். அற்புதமான சாகாவரம் பெற்ற சிரஞ்சிவித்துவம் மிக்க பாடல். முக்கியமாக பாலாவின் இளமை கொஞ்சும் குரல் நம் நெஞ்சில் குதூகலமாய் எதிரொலித்தபடியே இருக்கும்.
அதுவும் பாலா,
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
வரிகளில் என்று இரண்டாம் முறை பாடுகையில் 'பனி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது சற்றே மாற்றுவார் பாருங்கள். சூப்பர்.
பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
எனும்போது கடலலை தாலாட்டும் சுகத்தை அப்படியே நமக்கு அள்ளித் தருவார் பாலா.
ஜானகியும் கூடத்தான்.
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே
நெஞ்சம் முழுதும் கவிதை எழுது
கொஞ்சும் இசையைப் பழகும் பொழுது
துள்ளும் இளமைப் பருவம் நமது
தொட்டுத் தழுவும் சுகமோ புதிது
கண் பார்வையே உன் புதுப் பாடலோ
பொன் வீணையே உன் பூமேனியோ
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பிள்ளைப் பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளைப் பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னிப் பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்
பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க
பொன்னோவியம் என் மன மேடையில்
சொல் ஓவியம் உன் ஒரு ஜாடையில்
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா
ம்ஹூஹூஹூம் ஹூம் ஹூம்
ம்ஹூஹூஹூம் ஹூம் ஹூம்
Last edited by vasudevan31355; 23rd July 2015 at 09:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
23rd July 2015, 07:48 AM
#2060
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 14th August 2015 at 06:58 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks