Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Naya(k)gan illaiyendral Kannan Ethu.


    Mr CK.

    Started the thread with a melody of NT. Now it is your turn to rock as usual.


    Regards

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #12
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சீனா கானா,

    முதலில் வாழ்த்துகள் மதுர கானத் திரி பாகம் 4-ஐ கவிதை மணக்க மணக்கத் துவக்கியதற்கு.

    பயந்த மாதிரியே பண்ணிவிட்டீர்களே!!!

    - என்ன இப்படி சொன்னதற்கு மறுபடியும் பயந்து விட்டீர்களா? இல்லை, திரியை துவக்குவதை நினைத்து பயந்து இருந்தீர்களே - நல்ல படியா துவக்கணுமேன்னு. ஆதி மூல கணபதியை கும்பிட்டு துவக்கின பின்னாடி நீங்க பயந்தது போலவே நல்ல படியாக துவக்கி விட்டீர்கள்தானே என்று கேட்டேன். அந்த குஷியில்தான் கவிதை மழையாய் பொழிகிறீர்கள். அத்தோடு உங்கள் பின்னால் நினைவுகளும் கலந்து கட்டி கவிதையும், பாடலும்... தூள்.

    மற்றபடி நான் அதிகமாக பங்கெடுத்தது மதுரகானத் திரியின் 3-ஆம் பாகத்தில்தான். உண்மை. வாசுவும் நீங்களும் தந்த உற்சாகம்தான் காரணம். ராஜேஷ், ரவி, கோபால், ராஜ்ராஜ் , கலைவேந்தன், சித்தூர் வாசுதேவன், முரளி, ராகவேந்தர், கோகுல் போன்றோர் அவ்வப்போது கொடுத்த ஆதரவும் இதற்கு காரணம். யாரையாவது குறிப்பிடாமல் இருந்தால் மன்னிக்கவும். கிட்டத்தட்ட 500 பதிவுகள் இட்டிருப்பேன் என்று நினைக்கிறேன் - 11 வருட மைய அனுபவத்தில், 70 சதவீதத்திற்கு மேல் இத்திரியில்தான் பதிந்திருக்கிறேன். பாராட்டிய அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

    நடிகர் திலகம் திரியில் நிறைய எழுத வேண்டுமென்று ஆசை இருந்தாலும் அங்கே இருக்கும் பெரிய ஜாம்பவான்களை பார்த்து நான் திமிங்கலங்களின் முன் சிறிய ஒரு மீனாய் உணர்கிறேன் அத்துடன் அந்த திரி சற்றே உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள் நிறைந்தது. அதனால் பயமாயும் இருக்கும். இந்த திரியில் உங்களைப் போன்ற திமிங்கலங்களுடன் சிறிய மீனாய் உற்சாக நீச்சல் அடிக்க முடிகிறது. அதற்காக நான் அனைவருக்கும் கடமைப் பட்டுள்ளேன்.

    சரி உங்களுக்காக இந்த சின்ன கண்ணன் பாடல்:



    மேலிருக்கும் பாட்டை விட அழகான பாடல் இதோ:

    Last edited by kalnayak; 22nd May 2015 at 11:24 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #13
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன ரவி,

    கொதிக்கும் எண்ணெய் தொட்டி தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு மலராக எண்ணி கொண்டு வர ஆள் போட்டு ஆயிரம் கரங்கள் நீட்டி ஆயிரம் பதிவுகளுக்காக குலோத்துங்கன் போல காத்திருந்தேன். நீங்கள் ,அதற்குள், தப்பித்து கருவின் கருக்குள் போய் விட்டீகள். ஆவலுடன் உங்கள் புது கருவுக்காக காத்திருக்கிறோம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #14
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணா,

    கணபதி தோத்திரம்(வம்பில்லாமல்), எனக்கு பிடித்த இதயம் பேசினால் என்ற அபூர்வ பாடல் போட்டு ,ஆவலுடன் ராஜேஷ் சொன்னது போல,கத்தியுடன் காத்திருந்த என்னை,மலர் செண்டு கொடுக்க வைத்ததற்கு ,வாழ்த்துக்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  9. #15
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி.., //எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் // மிக்க நன்றி.. கருவை ப் பற்றிய தொடர் ஸ்டார்ட்...

    எஸ்.வாசுதேவன்.. நன்றி

    கல் நாயக் நன்றி

    சின்னக்கண்ணன் தோட்டத்துப் பூவாக ஒரு தேவதை வந்தாள் அழகாக.. நான் கேட்டிராத பாடல் கல் நாயக் அழகு.. நன்றி..சின்னச் சின்னக்கண்ணனுக்கும் அழகான பாட்டு நன்றி

    கோ, மலர்ச்செண்டுக்கு மிக்க நன்றி..( ஆண்டவா தொடர்ச்சியா வாங்கணுமே)
    *
    (தங்கச் சலஙகை கட்டித் தழுவுது பூச்செண்டு!



    ஓடும் நதி.... ரவி ஷீலா) ப்ரிண்ட் தான் சரியில்லை

  10. Thanks kalnayak thanked for this post
  11. #16
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சீனா, கானா

    நான் எழுதின நிலாப் பாடல்களை எல்லாம் காணாமல் போகச் செய்த நீங்கள் போட்ட நிலாப் பாடல் யாரும் கண்டார்களா இல்லையா தெரியவில்லை. நான் கண்டேன். பயந்தேன். வெளியே சொல்லவில்லை. எனது நிலாப் பாடல்களை வேண்டுமென்றே தொடர்ந்தேன். அதுதான் அன்பே ஆருயிரே படத்தில் நடிகை நிலா நடித்த மயிலிறகே என்ற பாடல்தான். அதிலிலேயே தெரிந்துவிட்டது நீங்கள் எவ்வளவு பயங்கரமான ஆள் என்று. இப்போது பூவின் பாடல்களில் பூமாலை பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி கவிழ்ப்பீர்கள் என்று பயந்து எதிர்பார்த்தேன். நீங்கள் பாகம் 4-ஐ துவக்குவதில் கவனமானதால் யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்த வழிகள் இவையாக கூட இருந்திருக்கலாம்: பூமாலை படப் பாடல்களை போட்டிருக்கலாம். இல்லை 'பூ' படப் பாடல்களை போடலாம். யாரும் எதிர்பார்க்காத முறையில் கவிழ்ப்பவராயிற்றே. நீங்கள் எப்படி என் பூவின் பாடல்களுக்கு ஆப்பு வைப்பீர்கள் என்று நீங்களே சொல்லி விடுங்கள். நீங்கள் ஆப்பு வைத்தாலும் நான் தொடர்வேன் என்பது தெரிந்த கதைதானே.
    Last edited by kalnayak; 22nd May 2015 at 12:07 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. Likes chinnakkannan liked this post
  13. #17
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்ன ரவி,

    கொதிக்கும் எண்ணெய் தொட்டி தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு மலராக எண்ணி கொண்டு வர ஆள் போட்டு ஆயிரம் கரங்கள் நீட்டி ஆயிரம் பதிவுகளுக்காக குலோத்துங்கன் போல காத்திருந்தேன். நீங்கள் ,அதற்குள், தப்பித்து கருவின் கருக்குள் போய் விட்டீகள். ஆவலுடன் உங்கள் புது கருவுக்காக காத்திருக்கிறோம்.
    கோபால்,

    நீங்கள் குலோத்துங்கன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் உங்களை ஒட்டக்கூத்தர் என்று நினைத்திருப்பார்கள்.
    Last edited by kalnayak; 22nd May 2015 at 01:11 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. #18
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    நேற்று க் கொஞ்சம் சாவைப் பற்றிய நினைப்பு வந்தது எனக்கு..

    காரணம் இரண்டு வெண்பாக்கள்:

    முதலாவது எனது எழுத்தாள நண்பர் இரா. முருகன் அவர்கள் எழுதியது:

    பாலுக் கொருதினம் பட்டுடுத்திச் சுற்றத்தார்
    மேலுக்குத் துக்கம் நடித்தழ நாலுநாள்
    இந்துவிலா பிச்சுவரி இத்தணூண்டு ஃபோட்டோவும்
    வந்தால் முடியும் இறப்பு

    அவர் பாட்டிற்கு எசப்பாட்டாக திரு. கிரேஸி மோகன் எழுதியது

    "செத்தாத்தான் என்னஒய் ! சேதாரம் சட்டைக்கே
    பத்தானால் மாசம் பிறப்பிருக்கு-சொத்தா!
    உசுருனக்கு மூடா ,உயிலெழுதிச் செல்ல
    மசிரேபோச் சென்று மடி "

    நானும் எழுதிப் பார்த்தேன்..

    மடியில் சிரம்வைத்து மாய்ந்தது போக
    நடித்திருந்த வாழ்க்கை நகரும் - துடிப்பாகப்
    பொங்கிப் புனர்ஜென்மம் போகுமென் றெண்ணியே
    இங்கிருந்து செல்வோம் இனி

    ஆக பிறந்த தேதி தெரியும்.. மறையும் தேதி தெரியாது..ஏதோ போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை..

    *
    இந்தப் பெண்ணிற்கும் அப்படித் தான்… படித்தவள் புரொஃபசர்..அ வள் விரும்புவதும் ஒரு ப்ரொபஸரை..ஆனால் அவருக்கோ கான்ஸர்..சில நாட்களில் ஜீவிதம் முடியப் போகிறது..

    ஆனால் அவளால் காதலிக்காமல் இருக்க முடியவில்லை..உன்னுடன் இருக்கிறேனே.. என்னுடல் பொருள் ஆவியெல்லாம் தருகிறேனே ஏற்றுக்கொள்..

    ம்ஹூம்.. முடியாது..

    அப்படியெல்லாம் சொல்லாதே எனச் சொல்லிப் பின் என்னவெல்லாமோ பேசி அவனுடன் இருந்து விடுகிறாள்..
    இது நம்மவரில் வரும் கமல் கெளதமி பார்ட். ப்ரொபஸர் ஒரு முரட்டு மாணவனைத் திருத்தும் கதை மெயின் லைன்.. ஆனால் சைடாக வரும் காதல் மிக அழகாக ஆழமாக ப் படம்பிடிக்கப் பட்டிருக்கும்..

    இந்தப் பாடலும் தான்..

    படத்தில் பொசுக்கென முடிந்துவிடும் பாடலை இன்று தான் ஆடியோவில் கேட்டேன்.. நிறைய்ய இருக்கிறது..


    *

    உடையோடு பிறக்கவில்லை
    உணர்வோடு பிறந்துவிட்டோம்..
    வாழ்வின் தேவையை
    வாழ்ந்து போகவந்தோம்

    வாடி பூங்கொடி
    பிரம்மன் படைப்பில்
    எந்தன் பங்கு நீயடி
    உன் பங்கு அது நான் தானே

    ஆஹா மன்மதா
    ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா

    ஆண் பெண்ணின் இந்தத் தேடல் தான்
    தீராதா..
    கண்டேன் காதலா
    இங்கே மட்டும் துன்பம் கொண்ட இன்பமே
    இன்றோடு உயிர் போனாலும் வாழ்வேனே..

    வா வா முல்லையே..

    சாவை வெல்லும் சங்கதி இதுபோல் இல்லையே
    நூறாண்டு என்னை நீ வாழவைத்தாயே..

    இடையோடு தொடுவதற்கு
    இடைக்கால தடைஎதற்கு
    இது பாதி வேளை தான்
    மீதி நாளை தான்..
    *
    சுஜாதா மோஹன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. சென்சார் செய்யாத ஆடியோ



    தனியாக வீடியோ பாட்டுக் கிடைக்கவில்லை..

    பாடலுக்கு முன்னால் கமல்,கெளதமி பேசிக்கொள்ளும் ஸ்வீட் நத்திங்க்ஸ் கொள்ளை அழகு.
    *
    (என்ன மன்ச்சு இப்ப வந்திருக்க..

    சாவுன்னு ஆரம்பிச்சு ரொமான்ஸ் பாட்டுப் போட்டிருக்கயே.. உன்னை…)

    பின்ன வாரேன்..

  15. Likes kalnayak liked this post
  16. #19
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 9: "பூமாலை போடும் வேளை"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~
    அஜித் படமாங்க. பகைவன்னு பேராங்க. நாயகி பேரு அஞ்சலா ஜாவேரியா?

    ஆட தயாரா இருக்கீங்களா. சரி ஆடிக்கோங்க.



    இதுக்கு மேல தெரிஞ்சவங்க சொல்லுங்க.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. #20
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    முதலில் வாழ்த்துக்கள். என்ன தெளிஞ்சுட்டீங்களா?

    நடிகர் திலகம் திரியில் பதிய ஒரு பெரிய பதிவு தயார் செய்து கொண்டிருந்ததால் மெய்மறந்து அதிலேயே மூழ்கி விட்டேன். (நமக்குதான் நடிகர் திலகம் என்றாலே நானூறு நாளுக்கு பசி, தூக்கம் இருக்காதே)

    அதான் கொஞ்சம் லேட்! ஹி ஹி ஹி...

    அமர்க்களமான துவக்கம். இனிதே ஆரம்பம்.

    அந்தக் கணபதியும், எங்கள் கணேசனும் இருக்க வெற்றிக்கு எது பஞ்சம்?

    //கொஞ்சம் தொய்வடைந்து சோஓஓஒகமாய் இழை இருந்த போது.. ஹஹஹ..அஹோ வாரும் சி.க எனக் கைகோர்த்து சோர்வடையாமல் மாறி மாறி பதிவு செய்து இழையோட்டத்தை உணர்வோட்டமாய்ச் செய்த கல் நாயக்.. கொஞ்சம் கொஞ்சம் குட்டிக் குட்டிப் பாராவில் சிரிக்க வைத்திருந்தவர், முழுக்கையை மடித்து முழுவீச்சில் இறங்கிப் பதிவுகள் செய்தார்..அதுவும் ஒன்லைன் பஞ்ச்சாய் கடைசியில் எழுதும் ஒருவரியில் ஹி ஹி எனப் புன்முறுவல் தானாகவே முகத்தில் வந்து தொற்றிக் கொள்ளும்.. அவருக்கு நன்றி + மென் மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்..//

    நிஜமான, மெய்யான, நிதர்சனமான உண்மை. நாயக் மூன்றின் நாயகர். நேற்று கிருஷ்ணாவிடம் போனில் உரையாடும் போது இதையேதான் சொன்னேன். நீரும் இன்னொரு கதாநாயகர். ('காளி' ரஜினி விஜயகுமார் போல்) உங்கள் இருவருக்கும், மற்றைய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! நல்லபடியாக மூன்றை தொடக்கி முடித்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!

    'இதயம் பேசினால்' அற்புதமான பாடல். வாணியின் முத்திரைகளில் சிறந்த ஒன்று. அதை ரசித்த உமது ரசனை அதனினும் பெரிது.

    அப்புறம் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நம் எல்லோருக்கும் நல்லவரான நமதருமை கிருஷ்ணா இன்னைக்கு வரார். 'டும் டும் டும்'... அவரை இப்போதே வரவேற்கத் தயாராவோம். நேற்று அவரிடம் பேசி விட்டேன்.

    சி.க,

    சந்தோஷம்தானே! அப்புறம் போட்டாச்சு போட்டாச்சு

    கிருஷ்ணா! வருக! வருக!
    Last edited by vasudevan31355; 22nd May 2015 at 02:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks gkrishna thanked for this post
    Likes chinnakkannan liked this post
Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •