Page 196 of 400 FirstFirst ... 96146186194195196197198206246296 ... LastLast
Results 1,951 to 1,960 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1951
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அல்லாவே எங்களின் தாய் பூமி
    பூவாசம் பொங்கியதால் ஏரி
    பூவனம் போர்க்களம்
    ஆனதேனோ
    பனிவிழும் மலைகளில்
    வலிகள் ஏனோ
    யா அல்லாஹ்! என் கஷ்மீர் அழகாக மாறாதா?
    யா அல்லாஹ்! என் கஷ்மீர் அமைதி காணாதா?

    Last edited by vasudevan31355; 18th July 2015 at 09:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1952
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

    இரண்டு ஆண்டுகள் ஒடிவிட்டன .. இன்னும் துயரத்தில் இருந்து மீள முடியவில்லை.
    60 ஆண்டுகள் அசராமல் எழுதியது உன் பேனா அது நின்றதும் தமிழே நின்றது
    உன் இளமை வரிகளை மட்டுமே பார்ப்பவர் சிலர்
    உன் தமிழ் வளமையை பார்த்தவர் பலர்
    1000 இளம்கவிகள் வந்தாலும் தனி ஒரு கவியாக
    பெருங்கவியாக அவர்களுடன் போட்டியுடன் வழியும் காட்டியாகவும் விளங்கியது நீ மட்டுமே
    என் தமிழ் ஆசானே மெல்லிசை மன்னரும் வந்து விட்டார். இனி மேலுலகில் கவியரங்கள் களை கட்டும் ...
    என்றுமே காவியக்கவிஞராக எங்கள் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டிருப்பது நீர் ஒருவரே - வாலியின் அடிமை ராஜேஷ்

  5. Likes Russellmai, raagadevan liked this post
  6. #1953
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங் ஆல்..

    அனைவருக்கும் எனது ஈத் பெரு நாள் நல்வாழ்த்துக்கள்..

    வெய்யில் கொளுத் கொளுத் என்று தான் இருக்கிறது.. இரவில் டெம்பரேச்சர் 42 டிகிரி சி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. கண்ணுக்குக் கீழ் உஷ்ணம்..உஸ்... அப்பாடா..

    ஊரிலிருந்து வந்து ரெண்டு ரெண்டு பனடால், பின் சீஸீ3 மற்றும்காஃப் சிரப் போட்டுத்தூங்கினாலும் தூக்கம் வராமல் ஒருமாதிரி ரெண்டுங்கெட்டானாய்ப் போய்விட்டது..

    ச்சும்மா வீட்டிலிருந்து நாலு ஸ்டெப் இரவு ஒன்பது மணியளவில் அருகிலிருக்கும் ரூவி ஹைஸ்ட்ரீட் நடந்தால்..

    ஜே .ஜே.. என்று கூட்டம்..கிட்டத் தட்ட தீபாவளி சமய மதுரை கீழ வாசல் மாதிரி.. அண்ட் ட்ராபிக் நான்கு சக்கர வாகனங்கள் மெல்ல பொறுமையுடன் பொறுமை இழந்து
    ஆனால் கட்டுப்பாட்டுடன் முன்னுள்ள காருக்கு முத்தா கொடுக்காமல் ஊர்ந்து கொண்டிருக்க, துணிக்கடைகளில் கொஞ்சம் கூட்டம் ..ஷூக் கடைகளிலும் தான்..

    அந்தப் பக்கம் கொஞ்சம் நடு வீதியில் இருந்த மலபார் ஹோட்டல்களில் கும்பல் ப்ளஸ் ஹோட்டல் காரரிடம் கொஞ்சம் நிம்மதி (பின்னே.. ஒருமாதம் ஈவ்னிங் மட்டும் தானே திறக்க முடியும் இங்கு..) இனி முழுதும் திறக்கலாமல்லவா..

    *
    நன்றி சி.செந்தில்..அந்த லேஸன் பை கட்டுரையை இரவு ஒன்றோ இரண்டோ தூக்கம் வராமல் எழுந்து எழுதினேன்..

    டைமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்..என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று

    நெவர் ஸே நெவர் அகெய்ன் ரொம்ப காலத்துக்கு முன் பார்த்தது ஒரே ஒரு முறை மட்டும் அதுவும் விட்டு விட்டுப் பார்ததில் அவ்வளவாக நினைவில் இல்லை..ம்ம் நடத்துங்கள்..

  7. #1954
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாலி ஐயா மறைந்து இரண்டு ஆண்டுகளா ஆகிவிட்டன ராஜேஷ்..ஆச்சர்யமாக இருக்கிறது எப்படி காலம் வெகுவாக ஓடுகிறது என்று..ம்ம்

  8. Likes rajeshkrv liked this post
  9. #1955
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் வாலி

    வாலியின் மிக சிறந்த வரிகள்.

    தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

    கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

    முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

    முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

    நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

    கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

    மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

    மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

    புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





    எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

    எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

    நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

    1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

    2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

    3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

    4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

    5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

    வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

    ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

    M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

    இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

    வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
    Last edited by Gopal.s; 18th July 2015 at 12:16 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1956
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .//

    ஹாய் கோபால் நலம் தானே

    உங்கள் மீது அளவிடற்கரிய கோபம்+ வருத்தம் எல்லாம் எனக்கு உண்டு (எதனால் என உமக்கே தெரியும்) ஆனால்
    நீங்கள் முனைந்து இடும் பதிவுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என் பிஞ்சு (?!) மனம் ஒப்பவில்லை..

    நினைத்தால் போதும் பாடுவேன் - மிகப் பிடித்த பாட்டு எனக்கு. ஹை பிட்ச்சில் ஜானகி பாட சுழன்றாடும் கீதாஞ்சலி.. மறக்க முடியாது..எனக்கும் அதைக் கேட்கும் போது மயிர்க்கூச்சமெடுக்கும்..

    அதுபோலவேமீண்ட சொர்க்க இறுதிப் பாடல் மன நாட்டிய மேடையில் ஆடினேன் - சுசீலா நும் பிடிக்கும்

    ஒரு நாளிலே உறவானதே...யும் அப்படியே..

    வாலியைப் பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் கவலைப் படாதவர்..தன்னைப் பொறுத்தவரை தெளிவாக இறுதிவரை எழுதியவர் பாடலாகட்டும் சரி, புதுக்கவிதை நூல்களாகட்டும் சரி..( ம.தியைச் சார்ந்து இருந்தார் என்பதால் பலர் பேசியிருக்கிறார்களா என்ன..)

    மற்ற மதப் பாடல்களைப் பற்றி அவர் சொன்னது மட்டும் நினைவில்.. அந்த சமயப் பாடல்கள் எல்லாம் பாடல்கள் திரையில் வரும் சமயத்திற்கேற்ப எழுதப் பட்டது..

    நடிப்புச் சுடர், புஷ்பலதா + வாலி - இன்று வந்த சொந்தமா..




    உங்களுக்காக ஒரு பாட்..(ஆண்டவா பிடிக்கணுமே )

    ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்... ரவி கே.ஆர்.வி


  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1957
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே
    பகுதி 9 : LIVE AND LET DIE (1973) / லிவ் அண்டு லெட் டை (வாழ்ந்து சாக விடு) : ஜேம்ஸ் பாண்டாக ரோஜர் மூரின் வருகை!
    Refreshing entry of ROGER MOORE as a long standing alternative to Sean Connery

    ஒரு வழியாக ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் வட்டத்திலிருந்து விடுபட்டு ரோஜர் மூருக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக்கு வழி காட்டினார்.
    முதல் படத்தில் ஷான் கானரி பெருமைப் படுத்திய ஜேம்ஸ் பாண்ட் அறிமுக வார்த்தைகளான 'பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட்' ரோஜர் மூரை சொல்ல வைக்க மிகவும் யோசித்தார்கள்.

    அதே போல மூரின் முதலிரண்டு படங்களிலும் டைட்டிலுக்கு முன்னால் வரும் சாகசக் காட்சிகளிலும் அவர் தோன்றுவதை சற்று அவநம்பிக்கையுடன் தவிர்த்தார்கள். ஷான் கானரி அளவு முடியாமல் காமடி ஆகிவிடக் கூடாது என்று நினைத்தாராம் புரோக்கோலி!

    But Moore proved that he would be the right alternative to Connery with his alter ego Bond image in a lighter vein comedy mix as his unique brand contribution!!


    ஷான் கானரி உருவகப் படுத்திய ஜேம்ஸ் பாண்ட் அறிமுக வசனம் 'பாண்ட்....ஜேம்ஸ் பாண்ட்' டாக்டர் நோ படத்திலிருந்து....

    Super voice and dialogue delivery with a sizzling modulation by Connery that remains inimitable till date, even after five more actors have donned the tuxedo after him!!

    உதட்டில் புகையும் சிகரெட்டுடன் என்னவொரு ஸ்டைலாக 'பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்' பிறக்கிறது !!
    53 வருடங்களுக்குப் பிறகும் வெல்ல முடியாத அமரத்துவ அறிமுக ஒன் லைனர்!!(புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ....... நடிகர்திலகத்தின் கெட்டப் இக்காட்சியை அடியொற்றியதே!!)

    தீம் மியுசிக் பின்னணியில் ரீங்காரமிட ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் அவரது கம்பீர நடையழகு உள்ளத்தைக் கவர்ந்து சொக்க வைக்கிறதே



    An interesting scene..Roger Moore utters 'My Name is Bond .....James Bond'!!....quite impressive!!...like the cannon ball dialogue delivery of NT in VPKB imitated by a school child in a fashion show in a lovable baby dialect!!



    லிவ் அண்ட் லெட் டை படத்துக்கு ஜான் பேரியின் தீம் பாடல் இல்லை. பதிலாக பால் மெக்கார்ட்னி அண்ட் விங்ஸ் இணைவில் பாடல் அமர்க்களமாக கோர்க்கப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது George Martin has scored the Music!





    The movie received mixed criticisms. Over all it could not fare well up to expectations but profit wise better than On Her Majesties Secret Service!! Now Moore has been slowly becoming the inevitable Bond icon to replace Connery over time though Moore could establish his individuality only after his third outing The Spy Who Loved Me!!

    The most famous Crocodile farm escape by Bond/Moore!
    unlike Lazenby's fiasco, Moore firmly established his footsteps to don the Bond tux in a line of 7 movies creating the record to be balanced by the original Bond Connery by his NSNA!! We love Moore next only to Connery!!


    Last edited by sivajisenthil; 19th July 2015 at 12:05 AM.

  13. Likes Russellmai, chinnakkannan liked this post
  14. #1958
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மடிந்து விட்ட மனசாட்சி ......
    நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
    அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!

    http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn

    உலகப் பொதுமறை திருக்குறள்
    உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!
    Last edited by sivajisenthil; 18th July 2015 at 07:42 PM.

  15. #1959
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Brand செய்ததால்தான் grand success அடைந்தார் வாலி .வாலிக்கு இது பெருமைதான்.

  16. Likes rajeshkrv liked this post
  17. #1960
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    (கனவுச்) சேற்றில் மலர்ந்த (காதல்) செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
    பகுதி 8 :அவளுக்கென்று ஒரு மனம் : பாரதி Vs காஞ்சனா


    மாமாவையே கல்யாணக் கனவுடன் உயிருக்குயிராக நேசிக்கிறார் பாரதி. ஆனால் ஜெமினி மாமனோ அவரை சிறுவயது முதல் குழந்தைப் பெண் என்ற கண்ணோட்டத்திலேயே பாசம் செலுத்துகிறார். மாமா விலக விலக சந்தேக சேற்றில் சிக்கி காஞ்சனா தொடர்பு மனதை அரிக்க நிம்மதி இழக்கிறார். மாமாவின் உண்மை நிலை தெரிந்ததும் வெறுக்கவும் முடியாமல் அன்பை வி(ல)ளக்கவும் முடியாமல் தவித்து மதுவுக்கும் அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழலில் முத்துராமனின் கைப்பாவையாகிறார்.....


    கலைந்த கனவும் தெளிந்த நினைவும்



    Last edited by sivajisenthil; 19th July 2015 at 09:20 AM.

  18. Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •