Page 194 of 400 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1931
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
    பகுதி 3 : ஆடிப்பெருக்கு !

    காவேரி ஓரம் கவி சொன்ன காதல் வெறும் கதைதானோ என்று பதை பதைக்கும் சி க வின் சரோ ! சரூ ?


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1932
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அவசரத்தில் " உடுக்கை " என்று திருத்த மறந்துவிட்டேன் . இப்பொழுது திருத்திவிட்டேன் --

    // உடுக்கை சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை

    CK - தங்கப்பதக்கத்தில் சோ தன் தம்பி வையாபுரியைப்பற்றி மனோரமாவிடம் சொல்லுவார் " ம்ம் ஒண்ணுமே புரியாம பேசக் கற்று கொண்டு விட்டான் - கூடிய சீக்கிரம் பெரிய ஆளாகிவிடுவான் " - அதுபோல உங்களுக்கே புரியவில்லை என்றால் நான் நிஜமாகவே பெரிய ஆள் தான் ------

    உலுக்கை சத்தம் - வாசுவின் கல்தூண் பதிவு

    இளமையின் சத்தம் - தலைவரின் "நான் தன்னந்தனிக் காட்டு ராஜா" பாடலில் துள்ளி விளையாடும் அவரது இளமை

    அந்த உலுக்கையின் சத்தம் இன்னும் இந்த திரியில் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் , இந்த பாடல் மூலம் தலைவரின் இளமை சத்தம் இன்னும் இனிமையாக இருந்தது

    ( அப்பாடா economics விடைத்தாள் எழுதின சோர்வு -----) - கொஞ்ச மாதங்கள் திரிக்கு வெளியே இருக்க விரும்புகிறேன் CK - அப்பொழுதுதான் நான் எழுதாமல் , மற்றவர்கள் எழுதுவதை இன்னும் வெகுவாக ரசிக்க முடியும் ......
    Last edited by g94127302; 17th July 2015 at 09:12 PM.

  4. Likes vasudevan31355 liked this post
  5. #1933
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
    பகுதி 4 :பாக்கியலட்சுமி !

    பால்ய விவாகத்தில் இதயத்தில் நுழைந்து வாலிப வயதில் தன்னை மறந்து விட்ட கணவன் தன்னை இனம் கண்டுகொள்ள மாட்டாரோ என்ற பரிதவிப்பும் தங்கைபால் ஈர்க்கப் பட்டுவிடுவாரோ என்ற சந்தேகமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அபலையாக சௌகார் ஜானகி !



  6. Likes adiram, Russellmai, vasudevan31355 liked this post
  7. #1934
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
    பகுதி 5 :ராமு

    உயிரையே உன்னிடம் அர்பணித்த பின்னும் மறைந்த முதல் மனைவியின் ஞாபகத்திலேயே தன்னை ஒதுக்கி விடுவாரோ என்ற சந்தேகத்தில் தடுமாறும் விஜயா

  8. Likes Russellmai, vasudevan31355 liked this post
  9. #1935
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    //உலக்கையின் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை
    ரவி சார் 'கல்தூண்' உடுக்கைப் பாடல் பதிவை சொல்ல வந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

    தங்கள் பாராட்டிற்கு நன்றி சின்னா! நைட் ஷிப்ட் போக வேண்டும். நேரமாகி விட்டது. இன்னைக்கு முழுக்க மதுர கானத்தில் செலவழித்தாகி விட்டது. எல்லோரும் அற்புதமாகக் கலக்குகிறீர்கள். வருகிறேன். நாளை சந்திப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1936
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //( அப்பாடா economics விடைத்தாள் எழுதின சோர்வு -----) - கொஞ்ச மாதங்கள் திரிக்கு வெளியே இருக்க விரும்புகிறேன் CK - அப்பொழுதுதான் நான் எழுதாமல் , மற்றவர்கள் எழுதுவதை இன்னும் வெகுவாக ரசிக்க முடியும் ......//

    உடுக்கை - உலக்கை , உலுக்கை என மாறியதில் ஒரு சின்ன கன்ஃப்யூஷன்..ரவி.. அம்புட்டு தேன்..திரும்பத் திரும்ப திரிக்குவெளியே எனச் சொல்வது முறையில்லை ஆமாம்..சொல்லிவிட்டேன்

    உலக்கை என்பது நெல் குத்துவது..- மண்வாசனையில் ரேவதியிடம் பாண்டியன் நீ கை விலக்கி..உலக்கையைத்தான் கையை மாற்றி அரிசி குத்தும் போது வலிக்கவில்லையா எனப் பாடியிருப்பார்..

    உடுக்கை - இசைக்கருவி..

    அம்பிகையே ஈஸ்வரியே விலும் வரும்..

    பம்பை உடுக்கை கொட்டி
    பரிவட்டம் மேலே கட்டி
    தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
    எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
    அச்சாரம் சொல்லி
    ஹோ ஹோ ஹோ .... ஹோய்

    என இந்தப் பாடலிலும் வரும்..(ஹை..கலையோட பாட்டை சுட்டுட்டேன்.. ( இதுக்குப் பெரிசா அவர் வியாசம் எழுதியிருப்பார் அவர்..ம்ம் இப்பவும் எழுதுவார் தான் )



    உலுக்கை தெரியலீங்க்ணா

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Richardsof liked this post
  12. #1937
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
    PART 6 : ON HER MAJESTY'S SECRET SERVICE (1969)
    Introducing GEORGE LAZENBY as James Bond OO7 to fill in the shoes of Sean Connery who opted out due to monotony !

    ஒரு காலகட்டத்தில் ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் வட்டத்தை விட்டு வெளிவந்து பல்வேறு கதாபாத்திரங்களில் பரிமளிக்க முடிவு செய்தார். ஜார்ஜ் லாசன்பை என்னும் துடிப்பான உடற்கட்டு கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் புதிய ஜேம்ஸ் பாண்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரும் நன்றாகத்தான் குறைவின்றி ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தின் தன்மைகளை வெளிக்கொணர முயற்சித்தார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கானரியைப் போலவே பிரமாதப் படுத்தியிருந்தார். எனினும் ரசிகர்களின் கண்ணுக்கு ஷான் கானரி என்ற மகத்தான மக்கள் கலைஞர் ரத்தமும் சதையுமாக உயிர் தந்து உலவ விட்ட ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனைப் பாத்திரத்தில் புது நடிகரை ஏற்றுக் கொள்ள இயலவில்லை! படமும் தரமானதாக இருந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் என்னும் பிளேபாய் ஜாலிக்காரர் கல்யாண வட்டத்துக்குள் வருவதை ஜெமினி போல சைவக் காதல் செய்வதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை! குறைந்த பட்ச லாபத்துடன் படம் சுருண்டு லாசன்பை ஒருபட அதிசயமானார்!! மீண்டும் உலகிலேயே வேறு எந்த நடிகரும் நினைத்துப் பார்த்திராத அதிகபட்ச பணமும் லாபத்தில் பங்கும் வழங்கப் பட்டு கானரி தனது ஜேம்ஸ் பாண்ட் பணிக்கு டயமண்ட்ஸ் ஆர் பாரெவர் படம் மூலம் திரும்பி வந்து வாகை சூடினார் !!
    ஆன் ஹெர் மேஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் படத்திலும் தீம் இசையும் பாடலும் பிரபலமாயின!
    !

    This never happened to the other fella (Connery, suggestive)!



    The sand cone timer suggests the changing times with the new hero assuming the Bond role. All other characters except Connery are shown draining down suggestively!



    Scintillating theme song sung by Louis Armstrong!



    The ski chase long before that in Roger Moore's The Spy Who Loved Me epic ski jump!! Enjoy the time trendy theme music juxtaposition by John Barry to suit the night effect of the ski chase!! George Lazenby himself was a two time Ski champion in real life too!!

    Last edited by sivajisenthil; 18th July 2015 at 05:30 AM.

  13. #1938
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
    PART 6 : ON HER MAJESTY'S SECRET SERVICE (1969)
    Introducing GEORGE LAZENBY as James Bond OO7 to fill in the shoes of Sean Connery who opted out due to monotony !

    !

    This never happened to the other fella (Connery, suggestive)!



    The sand cone timer suggests the changing times with the new hero assuming the Bond role. All other characters except Connery are shown draining down suggestively!



    Scintillating theme song sung by Louis Armstrong!



    The ski chase long before that in Roger Moore's The Spy Who Loved Me epic ski jump!! Enjoy the time trendy theme music juxtaposition by John Barry to suit the night effect of the ski chase!! George Lazenby himself was a two time Ski champion in real life too!!
    தன்னை மறக்கவைக்கும் தன்னுடைய சுற்றத்தை
    எண்ணாமல் மாறாக எள்ளிடும் - கண்ணில்
    பகரும் நடிப்பும் பாங்காய் வரவும்
    அகந்தை அழித்தது ஆம்..

    யெஸ்.. ஜார்ஜ் லேஸன் பை..

    எக்கச்சக்கமாய்க் கோகுலக் கிருஷ்ணன் போல பற்பல ரகங்களில் எழில் நங்கைகள்.. சுவாரஸ்யமான திரைக்கதை மிகுந்த பொருட் செலவு .. கொஞ்சம் உட்கார்ந்து பார்த்தோமானால் சுவாரஸ்யமான திரைக்கதை (என்னைப் போல காமிக்ஸ் லவர்களை ஆவென்று பார்க்க வைக்கும் விஷூவல் காட்சிகள்+ சண்டைகள்) இவ்வளவு இருந்தும் இந்த நபர்..அதாவது ஜார்ஜ் லேஸன் பை ஏன் புகழ் பெறவில்லை..

    காரணம் அகந்தை..

    ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு புக்காகி ஆல்பர்ட் ப்ரோக்கோலியால் இவனே இனி தான் எந்நாளும் பாண்ட் என
    இளையராஜா வராத காலத்திலேயே அவரது இசையை இசைத்து பாடப்பட்ட ஜார்ஜ் லேஸன் பை என்ன செய்தார்..

    பாண் ட் படம் எடுக்கும் போது, எடுக்கப் பட்ட போது, புக் ஆன போது என்னவோ ஏதோ உள்ளத்தில் விழுந்த எண்ணம்...

    நானே என்றும் ராஜா...

    என்பது போல் நினைத்ததாலோ என்னவோ மிகப் படுத்தல்.. படம் எடுக்கும் போதும் சரி படம் எடுத்து முடித்த போதும் சரி..

    என்னவெல்லாமோ செய்ததாக பதினைந்து வருடங்கள் முன்னால் அமெரிக்காவில் இருந்த போது வந்த ஒரு ஆர்ட்டிகிளில் படித்திருக்கிறேன்..

    அழகான காளை தான்..ஆனால் ஆர்வக்கோளாறு + அகந்தை எனில் வாய்ப்பைக் கோட்டை விட்டவர்..

    பிற்காலத்தில் ப்ரூஸ்லீயிடம் பழகியவர் .. சனி,குரு, சூரியன் இன்ன பிற கிரகங்களின் பார்வையாலோ என்னவோ
    ப்ரூஸ்லியுடன் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் படத்தில் புக்காகி பின் படம் ஆரம்பிக்கும் முன்னே ப்ரூஸ்லீ மரிக்க அந்தப்படமும் டிலே ஆக

    அதன் பின்னர் அவர் தொட்டது எதுவும் சோபிக்கவில்லை

    ஆஸ்திரேலேயாவைச் சேர்ந்த ஜார்ஜ் லேஸன் பை முதலில் தன் கரியரை ஆரம்பித்தது ஆட்டோ மெகானிக் - அண்ட் கார் சேல்ஸ்மென்.. ஆல்பர்ட் ப்ராக்கோலியைச் சந்தித்தது ஆண்களுக்கான அழகு நிலையத்தில்..அதாவது பார்பர் ஷாப்..பின் தான் ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்பு..

    என்னதான் பாண்ட் மணமுடித்ததால் தான் படம் ஃபெய்லியூர் எனச் சொன்னாலும் கூட படத் தோல்விக்கு ஜார்ஜின் அகந்தையும் ஒரு காரணமே..ம்ம்

    டிவி சீரியல்கள் இன்னும் ஒரு ட்ராகுலா படம் (2016 வெளியீடு) என இருந்தாலும் கூட ஜேம்ஸ்பாண்ட் புகழ் எனத் தான் அவரது அடையாளம்..அவரே மறுத்தாலும் கூட..

    ம்ம்

    அந்தப் பெண்கள்... வில்லனுக்குக் கட்டுப் பட்டு ஜேம்ஸ்பாண்டுடன் ஜொள்ளுவிடும் ஒரு நங்கை மறக்க முடியுமா என்ன சி.செ.. ம்ம்

    டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவரின் அந்த வெள்ளைக்காரி, அண்ட் நீக்ரோ பெண்ணுடனான பாண்ட் ஃபைட் போடுவீர்கள் தானே!

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  15. #1939
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.வீ பற்றி என் நண்பன் சாரு நிவேதிதா .

    தொலைக்காட்சி வருவதற்கு முன்பு ஒட்டுமொத்தத் தமிழ் இனமே, ரேடியோ சிலோனில் கே.வி.மகாதேவனையும் அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனையும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் வீட்டுத் திண்ணையில் பாயைப் போட்டு “அமைதியான நதியினிலே ஓடம்” (ஆண்டவன் கட்டளை) என்ற பாடலைக் கேட்காத ஒரு தமிழன் அந்நாளில் இருந்திருக்க முடியுமா? சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக் கிளி (தமிழுக்கும் அமுதென்று பேர்), எங்க வீட்டுப் பிள்ளை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, கை கொடுத்த தெய்வம், பணம் படைத்தவன், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், புதிய பறவை என்று இப்படி நூற்றுக்கணக்கான படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தால் அழியாத காவியப் பாடல்களை உருவாக்கினார். (வண்ணதாசன் “சில பழைய பாடல்கள்” என்று ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறார்).

    எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே ஏராளமாக எழுதியிருக்கிறேன். முக்கியமாக, தமிழர்கள் வரலாற்று உணர்வு இல்லாமல் எப்போதும் தற்காலத்திலேயே வாழ்ந்து தற்காலமே முக்காலமும் என்று நிரூபிக்க முயலும்போதெல்லாம் எம்.எஸ்.வி. பற்றி எழுதியிருக்கிறேன். கிட்டப்பா, பாபநாசம் சிவன், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா தொடங்கி தமிழ் வெகுஜன இசையில் பெரும் மேதைகளும் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஜி.ராமநாதனுக்குப் பிறகு வந்த இரண்டு மேதைகள் கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஆவர். மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எம்.எஸ்.வி. வேறுபடும் இடம் எதுவென்றால், தொடர்ச்சி அறுபடாமலே பல ஆண்டுகள் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தபடியே இருந்தார். ஆண்டுக்குப் பதினைந்திலிருந்து இருபது படங்கள் வீதம் (சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேல்) சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் சிகரத்தில் இருந்தவர் எம்.எஸ்.வி.

    ஒரு படத்துக்காக இசை அமைப்பதற்கு இப்போதெல்லாம் எத்தனை எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. பாங்காக், லண்டன் என்றெல்லாம் போய் மாதக்கணக்கில் தங்கி இசை அமைக்கிறார்கள். ஆனாலும் ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ஒரே படத்தில் ஐந்தாறு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதெல்லாம் அந்நாளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. ஆனந்த ஜோதி, கர்ணன் என்ற இரண்டு படங்களை மட்டும் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை.


    தமிழர்களின் காதலை, பாசத்தை, துக்கத்தை, துயரத்தை, கொண்டாட்டத்தை, வீரத்தை, வேதனையை, மகிழ்ச்சியை, தனிமையை, பக்தியை, கேலியை, கிண்டலை இசையாக மாற்றிக்கொடுத்த மேதையான எம்.எஸ்.வி.யின் பூத உடல் இன்று மறைந்துபோனாலும் அவரது இசை, தமிழ் உள்ளளவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில். எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மகா கலைஞனுக்கு மரணமே இல்லை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. #1940
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்தால் போதும் பாடுவேன்.

    மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
    அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?

    பாலின் நிறம் போல உருவான பெண்மை
    பனியில் விளையாடும் கனிவான மென்மை
    எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
    ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

    இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.

    எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
    வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.

    Last edited by Gopal.s; 18th July 2015 at 04:53 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •