Page 184 of 400 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1831
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post

    i guess the hindi version was the original not sure(nutan kishore kumar)
    Yes ! Anuraag(Hindi) was the original.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1832
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    மகனுக்காக எல்லாவற்றையும் இழந்த தந்தை , தாய் மானின் துணிவு, தந்தை மானின் உயிர்த் தியாகம், எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் என்று பதிவுகள் கலக்கல்.

    இன்னும் 8 வந்தால் 200 ஐத் தொடுவீர்கள். என் முதல் வாழ்த்துக்கள் முன் கூட்டியே.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1833
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலை சார்,

    வருக. பதிவுகளைப் பொறுமையாகப் படித்து பின்னூட்டம் மற்றும் பாராட்டுக்கள் அளித்ததற்கு நன்றிகள். பதிவுகளிட்டு நாட்களான போதும் ஒன்று விடாமல் அதைப் படித்து பின்னூட்டம் அளிப்பதில் ஆதிராம் சார் போலவே தாங்களும் நிகரற்றவர்தான். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்னும் சில மு.க.முத்துவின் பாடல்கள் இருக்கின்றன. விரைவில் அதையும் அளிக்கிறேன். 'கல்தூண்' படப் பாடல் கதை சொல்லும் பாடல் ஆதலால் அதன் நீளம் அதிகம். கதை முழுவதையும், அத்தோடு சேர்ந்து வேலின் பெருமையையும் கூறும் பாடல். அதனால்தான் பதிவின் நீளம் அதிகம்.

    வேலைப் பளுவிற்கு மத்தியிலும் நடுவே வந்து பதிவிட்டதற்கு நன்றிகள் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1834
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்,

    மதுர கானத் திரிக்கு தங்களை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். வருக12 வருக!.

    அது போல 'எங்க ஊர் ராஜா' படத்தின் 'யாரை நம்பி நான் பொறந்தேன்' பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பு அம்சங்களை பிட்டு பிட்டு வைத்து பிளந்து கட்டியதற்கு நன்றிகள். நடிகர் திலகம் திரியில் தங்களுடைய 'தியாகம்' பதிவையும் ரசித்துப் படித்தேன். நேற்று ராகவேந்திரன் சாரிடமும் இதுபற்றி பேசினேன்.

    நடிகர் திலகத்தின் நடிப்பை அலசுவதற்கு ஒன்றன்பின் ஒருவராக தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இது தங்களைப் போன்றவர்கள்ள இன்னும் தொடர வேண்டும். நல்ல பதிவிற்கு நன்றிகள். தொடர்ந்து பங்களியுங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks Georgeqlj thanked for this post
  7. #1835
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  8. Likes Russellmai liked this post
  9. #1836
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

    ராகவேந்திரன் சார்,

    வெஜ் அண்ட் நான் வெஜ் பதிவுக்கு தங்களுடைய பின்னூட்டம் அம்சம். குமார் அவர்களின் இசை பற்றியும், குணசிங் பற்றிய அரிய தகவல்கள் தந்தும் பதிவை முழுமை பெறச் செய்து விட்டீர்கள். இதற்குத்தான் ரசிக வேந்தர் வேண்டும் என்பது. இந்த மாதிரி பதிவு சம்பந்தமான பின்னூட்டங்களே பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. பார்த்தீர்களா? எவ்வளவு விஷயங்கள் தங்கள் மூலமாக இப்போது வெளிவருகின்றன!

    அருமையான சப்போர்ட்டிற்கு நன்றிகள் சார்.
    Last edited by vasudevan31355; 16th July 2015 at 06:42 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1837
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 195

    பாகம் 2 - தந்தை

    தந்தை - மகன் பந்தம்

    தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்

    கண்ணன் வாழ்ந்காலத்திலேயே கோபஸ்திரீகளிடத்தில் அதீத சாமா்த்தியம் இருந்திருக்கிறது. கண்ணனைப் பிடிக்கஒரு கோப ஸ்திரீ செய்த காாியம் அற்புதம்! உறியைத் தொட்டால் மேலே ஒரே மணி இருக்கும். அது கண,கண என்று அடிக்கும். வெண்ணெய் எடுக்க வேண்டும் என்று இல்லை. உாியைத் தொட்டாலே மணி அடிக்கும் .

    குழந்தை கண்ணனுக்கு இந்த மணி இருப்பது தொியாமல் ஒரு நாள் சாயங்கால வேளை இந்த வீட்டிற்குச் சென்றான் . எல்லோரும் ஜாக்கிரதையாக இருந்ததால் வெண்ணெய் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு வீடாகச் சுற்றி கடைசியில் இந்த வீட்டிற்கு பசியோடு வருகிறான் . உறியைப் பாா்த்தவுடன் அதீத சந்தோஷம்.
    உறியைத்தொட்டான் ; தொட்டவுடன் மணி அடித்தது. நடுங்கிப் போய் விட்டான் குழந்தை கண்ணன் . இந்த குழந்தைக்கு த் தொிந்தது ஒரே வித்தை. அது பண்ணுவதும்,நமக்குச் சொல்லிக் கொடுப்பதும் அந்த வித்தைதான். என்ன அது? சரணாகதி. அதைத் தவிர வேறு எதுவும் தொியாது. மணியைப் பாா்த்து சரணாகதி பண்ணியது.

    இப்படி அடிக்கிறாயே! நான் மாட்டிக் கொண்டால் அம்மா என் முதுகை சுத்தம் பண்ணிவிடுவாளே! உதை விழுமே! காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.கொஞ்சம் அடிக்காமல் இரேன்! என்று கைகூப்பியது.

    மணி உடனே'அடியேன்!அடியேன்!' என்று தாஸனான நான் அடிக்க மாட்டேன் என்றது. மிகவும் சந்தோஷத்தோடு குழந்தை பானைக்குள் கையை விட்டு வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட போது 'கண கண' வென்று மணி அடித்தது .

    மணியே! அடிக்க மாட்டேன் என்றாயே! இப்படிப் பண்ணுகிறாயே..இதுதானா தர்மம் ? நீ சொன்னதால்தானே வெண்ணெயை வாயில் போட்டுக் கொள்ளப் போனேன். இப்படிச் செய்வது நியாயமா! என்று கேட்டது குழந்தை.

    மணியின் மணியான வாா்த்தை இது. " ஏ க்ருஷ்ணா! நாராயணா! உனக்கு நிவேதனம் ஆகும் போது நான் பக்கத்தில் இருந்துகொண்டு அடிக்காமல் இருந்தால் எனக்கு ஏது பிரயோஜனம்? பகவானுக்கு நிவேதனம் ஆகும்போது மணியடிக்காமல் இருக்கலாமா...?அதனால் அடித்தேன் என்றது.

    உனக்கு நிவேதனம் ஆனதால் மணியடித்தேன். இல்லையென்றால் அடித்திருப்பேனா? இனிமேல் அடிக்கமாட்டேன்.நீ சாப்பிடு என்று மணி சொன்னது. தா்மத்தைப் பற்றி பேசினால் கண்ணன் வாதாட மாட்டான். ஒத்துக் கொண்டு விடுவான்.அப்படி மணி பேசியதை ஒத்துக்கொண்டு போய் விட்டான் பரமாத்மா. உலகத்திற்கே தந்தையான அந்த பரம்பொருளே தர்மத்தைப்பற்றி பேசினால் அமோதித்து செல்லும் போது நடமாடும் தெய்வமான நம் தந்தையிடம் என் வாதிட வேண்டும் ? அவரின் தர்ம சிந்தனைகளுக்கு நாம் ஏன் ஒரு அணை போடவேண்டும் ? கண்ணனுக்கு ஒரு மணி போல , நாமும் நம் தந்தையை ஆராதிப்போம் - முதியோர் இல்லம் தேவை இல்லை - நம் மனக்கதவுகள் மணியோசையை எழுப்பும் போது !!


  11. #1838
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 196

    பாகம் 2 - தந்தை

    தந்தை - மகன் பந்தம்


    நல்ல மனைவி , நல்ல பிள்ளை , நல்ல குடும்பம் தெய்வீகம்

    ஆபத்துக்கு உதவாத
    நண்பன்

    அரும்பசிக்கு உதவாத
    அன்னம்

    தரித்திரம் அறியாத

    பெண்டீர்


    தாகத்தை தீர்க்காத

    தண்ணீர்

    கோபத்தை அடக்காத

    மனிதன்

    குருமொழி கேளாத

    சீடன்

    பெற்றோருக்கு அடங்காத

    பிள்ளை

    எதற்கும் பயன் இல்லை

    இவ்வேழும் மெய்யே

    ==========



    நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் தெய்வீகம்
    அது தெய்வீகம் -
    நல்ல மனைவி நல்ல பிள்ளை தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம் -
    நல்ல மனைவி நல்ல பிள்ளை கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக்காணத் திரியும் ஒரு பிள்ளை
    கானல் நீரில் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
    உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
    உறவை மறந்து உரிமை மறந்து பிள்ளை போலே ஒரு அன்னை பிள்ளை போலே ஒரு அன்னை - நல்ல மனைவி நல்ல பிள்ளை,,!


  12. Likes Russellmai liked this post
  13. #1839
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 197

    பாகம் 2 - தந்தை


    நல்லதொரு குடும்பம் என்றுமே ஒரு பல்கலை கழகம்


  14. Likes Russellmai liked this post
  15. #1840
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 198

    பாகம் 2 - தந்தை

    நல்ல குழந்தைகள் , பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகள் ,, அன்னை தந்தையை தன்னுடனே வைத்துக்கொள்ளும் மகன் இவர்கள் ஒன்றாக இருக்கும் வீட்டில் ஆனந்தம் என்றுமே விளையாடும் , குடி கொண்டிருக்கும் ...


  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •