Page 171 of 400 FirstFirst ... 71121161169170171172173181221271 ... LastLast
Results 1,701 to 1,710 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1701
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில் சார் - உங்கள் பதிவுகள் அனைத்தும் , நீங்கள் PhD பண்ணியவர் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன - வாசுவின் பதிவுகளில் ஆழமான ஆராய்வுகள் இருப்பது போல் , உங்கள் பதிவுகளில் ஆழமான எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன - உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் இந்த திறமையை கண்டு வியந்த வண்ணம் இருக்கிறேன்

  2. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1702
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    தாம்பத்யம்....இது..தாம்பத்யம்...
    "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ..."பாரதியின் இந்த இரண்டு வரிகளை இரவல் வாங்கிக் கொண்டு மீதி சந்தங்களை இதன் பொருளுக்கு முழு நீதி வழங்கி இருக்கிறார் கவியரசர் .இசையமைத்திருப்பவர் திரை இசைத் திலகம்..பாடலுக்கு உடல் நடிகர் திலகம்,பத்மினி அம்மா...உயிர் டி .எம்.எஸ்.......ஏற்ற இறக்கங்களுடன் பாடலை ஒரு இறவாப் பாடலாக்கி இருப்பார்.நடிகர் திலகமும்,பப்பிம்மாவும் வாழ்ந்திருப்பார்கள்.ஒரு ஆங்கிலேயக் கம்பெனியில் தலைமை அதிகாரியாக இருந்து பிரஸ்டிஜ் பத்மநாபன் என்று வலம் வரும் கம்பீரம்....ரிட்டைர்மேன்ட்டுக்குப் பிறகு சுருங்கி தன் நிலை தடுமாறி மனைவியிடம் குமுறும் குழந்தையாய்...குழந்தையை தேற்றி வாரி அணைக்கும் தாயாய் மனைவி ......காட்சி மனசை அரிக்கும் என்றால் பாடல் நெஞ்சைப் பிளக்கும்...பிள்ளைகள் மதிப்பதில்லை,மருமகள் சரியில்லை,மகளுக்குத் திருமணம் செய்யவில்லை...பாரம் நெஞ்சை அழுத்த ஒரு ஈசிச்சேரில் நடிகர் திலகம்..காலடியில் சாதாரண தேவேந்திரா மடிசார் புடவையிலும்,எளிமையில் அழகு மயிலென பப்பிம்மா...காட்சியை ரவி வர்மா பார்த்திருந்தால் சித்திரமாய்த் தீட்டி இருப்பார்...பப்பிம்மா கண்களில் குளமென கண்ணீர்...பாடல் பிறக்கிறது...""உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ?"'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்வு ஒளிமயமானதடி ..பொன்னை மணந்ததால் சபையில் புகழும் வளர்ந்ததடி 'அவர்களுக்குள் ஒரு ப்ளாஷ் பேக் ......அவர்கள் திருமணம்....அம்மாஞ்சி அய்யராத்து பைய்யன் நடிகர் திலகத்தின் பஞ்சகச்சமும் நெத்தியில் வீபூதியும்....அழகு....மடிசார் புடவை,நெத்தியில் பட்டம்,சுட்டி,ஜடை சிங்காரம்,குஞ்சலம்,கொள்ளைப் பூ,கை கொள்ளாம வளையல்கள்........அந்த எடுப்பான மூக்கில் முத்துந்தளுக்கு,பேசரி........இந்த அழகைச் சொல்ல இதற்கு மேல் வார்த்தை ஏதும் இல்லை.....அவளைக் கரம் பிடித்த நாள் முதல் அவருக்கு ஏறு முகம்...பொன்னை மணந்ததால்....இங்கே சொல்ல வந்திருப்பது அவளுடைய தங்கமான குணம் பற்றி....அவளால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து...காலம் நகர்கிறது...பிள்ளைகள் ..பல சுமைகள்.."கால சுமைதாங்கி போல வாழ்வில் எனைத் தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுதடி..."'ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன ?வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்."....காலச்சுமையில் நான் ஓய்ந்து சாயும் பொழுதெல்லாம் என்னைத் தாங்கி என் கண்ணீரைத் துடைக்கும் பொழுது என் இன்னல்கள் துயரங்கள் தவிடு பொடியாகிறது....ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு நடிகர் திலகம்,அவர் முகம் பார்த்து விம்மும் பப்பிம்மா....சில்வுட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அதுவே இது..பிள்ளைகள் ஆதரவு இல்லை..."முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் ..பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதைமை செய்ததடி பேருக்குப் பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்"...படுக்கை என்றதும் திருமண முதலிரவு நெஞ்சில் நிழலாடுகிறது...அதை வீழ்த்துகிறது நிகழ்காலம்...முள்ளில் படுக்கை..இமைகள் மூட மறுக்கின்றது....பேருக்குப் பிள்ளைகள் ....சொந்தம் என்று சொல்லிக் கொள்ள...ஆனால் அவர்களால் ஒரு பயனும் இல்லை...என் தேவைகளை உன்னையன்றி வேறு யார் உணர்வார்கள்...அந்த தெய்வம் தவிர?.....அவளை அவரின் காவல் தெய்வம் என்றே சொல்கிறார்....தாம்பத்யம்...இது....ஆஹா....வாழ்ந்திர ுக்கும் இந்த ஜோடியை காலம் உள்ளவரை தாம்பத்யம் உள்ளவரை யார் மறக்க முடியும்.....நெஞ்சில் என்றும் ஒரு ராகமாய்....

    மிகவும் நன்றி யோகேஷ் - தாம்பத்தியத்தின் அருமையை மிகவும் அழகாக அலசியுள்ள பதிவு இது - இதை நீங்கள் இங்கு பகிர்த்துகொண்டதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது - நல்ல விஷயங்களை தூண்டில் போட்டு கண்டுபிடித்து இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் பண்பு சிலிர்க்க வைக்கின்றது

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #1703
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    கல்தூண் படத்தில் இடம்பெற்ற அருமையான, ஆனால் யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத 'வேல் நட்ட கதை' பாடலின் சிறப்புப் பதிவு படித்து மகிழ்ந்தேன் அன்பதைவிட அதிர்ந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும்.

    என்னவொரு எழுத்து, என்னவொரு வர்ணனை, என்னவொரு கூர்ந்த கவனிப்பு, அதை எழுத்தில் கொண்டுவரும் ஆற்றல். அப்பப்பா.., அசர வைத்துவிட்டீர்கள் ஐயா.

    நான் கல்தூண் பார்த்தபோது இந்தப்பாடலை இவ்வளவு கூர்மையான கவனிப்புடன் பார்க்கவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.

    நடிகர்திலகம் தான் நடிக்கும் பாத்திரமாகவே ஒன்றி வாழ்ந்துவிடுவார் என்பது அறிந்ததே. அதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். அமரகாவியம் வெளியாகி ஒரே வார இடைவெளியில் வந்த படமென்றாலும் இரண்டுக்கும் நடிப்பில் எவ்வளவு வித்தியாசம்.

    நடிகர்திலகம் பிற்கால படங்களில் பரிமளிக்கவில்லை, சாதிக்கவில்லை என்பதெல்லாம் வெறும் பிதற்றல். அவர் 'பூப்பரிக்க வருகிறோம்' வரையில் சிறப்பான நடிப்பைத் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.

    நண்பர் ரவி அவர்கள் சொன்னதுபோல, இனி உங்கள் உழைப்பைப் பாராட்ட புதிய வார்த்தைகளைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

    அதுவரை இதையே பாராட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அசத்துங்கள், ஜமாயுங்கள், கொடிநாட்டுங்கள்.

    (ஊடகங்கள் இருபத்தைந்து பாடல்களையே வைத்துக்கொண்டு அவற்றையே திருப்பி திருப்பி ஒளிபரப்புவதை விடுத்து இம்மாதிரி பாடல்களையும் கவனம் செலுத்தலாமே)
    Last edited by adiram; 10th July 2015 at 07:05 PM.

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  8. #1704
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    உங்களின் கருவின் கரு தொடரில் தந்தை மகன் உறவை விளக்கும் சம்பவங்களும், அதற்கேற்ற பாடல்களும் வெகு பொருத்தம். ஒவ்வொரு சம்பவமும் மனதை உருக்குகிறது. சமீபத்தில் படித்ததில் 'சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட' தந்தை மீது மகன் காட்டும் பரிவும் . அதை ஊக்கப்படுத்தும் மருமகளும்.. (காசியில் மாமியாரை விட்டுவரச் சொன்ன மருமகளுக்கும் இந்த மருமகளுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்).

    வாசு அவர்களைத் தொடர்ந்து நீங்களும் உங்கள் கருவுக்கு கல்தூண் பாடலையே எடுத்துக்கொண்ட விதம் நல்ல ஒற்றுமை.

    பதிவுக்கு பதிவு மெருகேறி வருகிறது. பாராட்டுக்கள்.

  9. Thanks uvausan, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  10. #1705
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் யுகேஷ் பாபு சார்,

    காலத்தால் 'அழியாத உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலைப்பற்றிய அசத்தலான பதிவை தந்து திரிக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி. பாடல் மிக அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    நல்லவை எங்கு தென்பட்டாலும் தேடிக்கொணர்ந்து பதிவிடும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  11. #1706
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இதென்ன மாயம்?. கல்தூண் பிரமிப்பு நீங்குவதற்குள் அடுத்த இன்ப அதிர்ச்சியாக இளமை பாலாவின் 'மங்கையரில் மகராணி' பாடலின் சிறப்பான ஆய்வுப் பதிவைத் தந்து அசர வைத்துவிட்டீர்கள்.

    நிஜமாகவே பாலா சுசீலா ஜோடி பாடிய அருமையான பாடல்களில் ஒன்று. இப்படத்துக்கு முன் வந்த ஸ்ரீதர் தயாரிப்பில், சக்கரவர்த்தி இயக்கத்தில் வந்த உத்தரவின்றி உள்ளே வா வில் இடம்பெற்ற 'மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி' பாடலும் அப்படித்தான். (இந்த தொடரில் அதுவும் வரும்தானே).

    நீங்கள் சொன்னது மிகச்சரியே. சாத்தனூர் அணையின் எழிலை முற்றிலுமாக எடுத்துக்காட்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் சொந்த முடியிலே நடிக்கும் ஜெமினிக்கு இதிலும் அப்படியே. அவரது கட்டம்போட்ட சட்டை இன்னொரு பாடலை நினைவுபடுத்தும் (தன்னந்தனியாக நான் வந்தபோது).

    பாடலில் ஜெமினியின் ஜோடியாக வரும் 'நம்ம வசந்தி என்கிற சித்திரலேகாவும்' கொள்ளை அழகு. இன்னொருபக்கம் பரிதாபமான பாரதி, அவருடன் வில்லனாக வரும் முத்துராமன் இந்தப்பாடல் இடைவெளியிலும் வில்லன் முறைப்பு காட்டுவார்.

    அழகாக வரிவரியாக விவரித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அதிசயிக்க வைக்கிறது. எவ்வளவு பொறுமை வேண்டும். சாத்தனூர் அணைபற்றிய பாராவில் அப்படியே அணையை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். (அந்த பிறையின் அருகில் நின்று நாங்களும் போட்டோ எடுத்திருக்கிறோம்).

    பாடல்களை படமாக்கம் செய்வதில் ஸ்ரீதர் சூரர் என்பது இப்பாடலிலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. அதுபோல பாடல்களை அலசுவதில் நெய்வேலியார் சூரர் என்பது இந்தப் பதிவிலும் நிரூபணம் ஆகியுள்ளது.

    அசத்தலுக்கு மேல் அசத்தல். அதற்கு எடுத்துக்கொள்ளும் அபார உழைப்பு. எப்படித்தான் பாராட்டுவது?.

  12. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  13. #1707
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    -deleted-
    Last edited by NOV; 10th July 2015 at 08:05 PM. Reason: Spam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #1708
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    மங்கையரில் மகராணி பாரதி என்றால்
    எழுத்தில் மகராஜா வாசு ...

    என்னவொரு ஆழமான அலசல், ஆய்வு... இவையெல்லாம் தமிழ்த் திரையிசை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
    என் மனதில் உள்ளவற்றையெல்லாம் ஆதிராம் சார் அப்படியே சொல்லி விட்டார் (சாத்தனூர் அணையில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டதைத் தவிர)

    ஆதிராம் சார் தங்களுக்கும் என் நன்றி. நான் சொல்ல நினைத்தவையெல்லாம் தங்கள் பதிவில் இடம் பெற்று விட்டன.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #1709
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    'ஆபீஸில் வேலை வெட்டியில்லாமல் (?!?!?!) சும்மாதானே உட்கார்ந்திருக்கிறாய். சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல்களை உனக்குத்தெரிந்த வரையில் பட்டியலிட்டால் என்ன?' என்று மனம் கட்டளையிட்டதால் என் நினைவுக்கு வந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். நிறைய விடுபட்டிருக்கும்.

    'காலங்களில் அவள் வசந்தம்' (பாவ மன்னிப்பு)
    'எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
    'கண்ணிரண்டும் மின்ன மின்ன' (ஆண்டவன் கட்டளை)
    'மனம் என்னும் மேடை மேலே' (வல்லவனுக்கு வல்லவன்)
    'நல்ல இடம் நீ வந்த இடம்' (கலாட்டா கல்யாணம்)
    'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' (தெய்வமகன்)
    'உங்களில் ஒருவன் நான்' (நூற்றுக்கு நூறு)
    'மாணிக்கத்தேரில்' (தேடிவந்த மாப்பிள்ளை)
    'மங்கையரில் மகராணி' (அவளுக்கென்று ஒரு மனம்)
    'நாம் ஒருவரை ஒருவன் சந்திப்போமென' (குமரிக்கோட்டம்)
    'கீதா ஒருநாள் பழகும் உறவல்ல' (அவள்)

    இன்னும் நிறைய.

    ஊட்டி பொட்டானிக்கல் கார்டன், கொடைக்கானல் காலப் மைதானத்துக்கு அடுத்து அதிகம் இடம்பெற்ற தமிழக அவுட்டோர் லொக்கேஷன் இதுவாக இருக்கலாம்.

    ஆனால் இப்போது பார்க்க முடியவில்லை. இப்போதான் குப்பை பாடல்களுக்கெல்லாம் ஒருவரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி ஆப்பிரிக்க பாலையிலும், மூன்றாவது வரி கனடாவிலும் எடுக்கிறார்களே.

    'என்னமோ போங்க'.

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes uvausan, vasudevan31355 liked this post
  18. #1710
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Objection your honour!

    ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
    காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார் !
    Gemini brilliant in this movie

  19. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •