Page 165 of 400 FirstFirst ... 65115155163164165166167175215265 ... LastLast
Results 1,641 to 1,650 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1641
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மறக்க முடியாத கலைஞர்கள்.

    குசலகுமாரி



    நல்ல அழகான நடிகை. பரத நாட்டியத்தில் தேர்ந்த பயிற்சி. வழுவூர் ராமையாப் பிள்ளை, எம்.எஸ்.ராமசாமி பிள்ளை இருவரின் சிஷ்யை. நிறையப் படங்களில் நடனம் ஆடும் மங்கை.

    நடிகர் திலகத்துடன் குசலகுமாரி



    இவர் நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி' படத்திலேயே நடித்திருப்பார். படம் டைட்டில் முடிந்தவுடன் ஆரம்பமாகும் நாட்டிய நிகழ்ச்சியில் குசலகுமாரி நடனமாடிப் பாடுவார்.

    'வாழ்க வாழ்கவே
    வளமாய் எமது திராவிட நாடு
    வாழ்க வாழ்க வாழ்கவே'

    என்ற பாடலுக்கு ஆடுவார்.

    டைட்டிலில்

    நடனம் குசலகுமாரி, குமாரி கமலா என்று போடுவார்கள். இவர் முகத்தை முதலில் 'பராசக்தி'யில் காட்டிய ராசி நடிகர் திலகத்திற்கு முதல் படத்திலேயே வானளாவிய புகழைப் பெற்றுத் தந்தது என்று கூட கூறலாம்.



    அடுத்து



    'கூண்டுக்கிளி' படத்தில் நடிகர் திலகத்தை விரட்டி விரட்டிக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். தீபாவளிப் பண்டிகையின் போது ஒலிக்கும் வித்தியாச அற்புத பாடலான,

    'வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே
    தீப நன்னாளிதை ஒன்றாகக் கொண்டாடுவோம்'

    கோஷ்டிப் பாடலில்

    'மிகச் சிறியாரும் பெரியாரும் மகிழ்வே கொண்டே
    ஆடித் திரிவார் இன்றே சுகம் பெறுவார் நன்றே'

    வரிகளின் போது இவர் நடனமாடுவார்.





    படத்தில் இவருக்கு சொக்கி என்று பெயர். நடிகர் திலகத்துடன் தனியாக இவருக்கு ஜாலியாக ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடலில் பாவாடை தாவணியுடன் கொஞ்சம் கிளாமராக வருவார்.

    எனக்குத் தெரியல்லே
    நெஜம்மா எனக்குத் தெரியல்லே
    நெஜம்மா தெரியல்லே
    ஒன்னும் புரியல்லே



    பாடல் முடிந்ததும் நடிகர் திலகம் குசலகுமாரி கன்னத்தில் ஓர் அறை விடுவார். அதற்கு குசலகுமாரி மறு கன்னத்தை சிரித்தபடி காட்டி 'இந்தக் கன்னத்திலே' என்பார். நடனமும், பாடலும் அம்சம்.



    இன்னொரு காட்சியும் ரசம். தொழிலாளிகளுக்கு சாப்பாடு போடும் ஒரு கிழவியின் பேத்திதான் குசலகுமாரி. தலைவர் அந்தக் கிழவியிடம் சாப்பாடு கொடுக்கச் சொல்லி காசு தர வருவார். 'பாட்டி... பாட்டி' என்று கதவு தட்டி நடிகர் திலகம் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் பேரா' என்று குசலகுமாரி அங்கு வருவது அழகு. நடிகர் திலகம் பாட்டியை சாப்பாடு கொண்டு வந்து தரும்படி குமாரிடம் சொல்ல,அதற்கு குறும்பாக 'பாட்டி வராட்டி பேத்தி கொண்டு வந்து தரலாமா?' என்று சிரித்தபடி கேட்பதும் சுவை. 'எனக்கு வேண்டியது சாப்பாடு... இதுல பாட்டி கொண்டுகிட்டு வந்தா என்ன? பேத்தி கொண்டுகிட்டு வந்தா என்ன?' என்று நடிகர் திலகம் கடுப்பாக பதில் சொல்லி செல்வது இன்னும் டாப். (மனிதர் முகத்தில்தான் எவ்வளவு கடுப்பு?!) பின் நடிகர் திலகம் போனதும் பாட்டியிடம் தலைவரைப் பற்றி குமாரி சொல்லி மகிழும் நடிப்பு நன்றாக இருக்கும்.

    இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகர் திலகம் கழுத்தை பிடித்து நெரிக்கும் போது குசலகுமாரி புத்தி சொல்லி அழுவது அவர் சிறந்த நடிப்பிற்கு சான்று.

    அடுத்து,

    'கள்வனின் காதலி' படத்தில் குசலகுமாரி தலைவரின் தங்கை அபிராமியாக வருவார். இதில் படம் முழுக்க தலைவருடன் வருவார்.

    படத்தின் ஆரம்பத்தில் பானுமதிக்கு ஒரு கிழவருடன் கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் நடிகர் திலகம் பூங்குளம் ஊரில் இருக்கப் பிடிக்காமல் அவசரஅவசரமாக மூட்டை முடிச்சு கட்டி வெளியூர் செல்வார் குசலகுமாரியுடன். அண்ணனின் காதலுக்கு சப்போர்ட் பண்ணும் பெண் குசலகுமாரி.



    வெளியூரில் தங்கியிருக்கும்போது அங்கு பெரிய மனிதர் வேடம் போடும் டி.எஸ்.துரைராஜ் அவர்களின் கழுகுப் பார்வையில் சிக்கி குசலகுமாரி பரிதவிப்பது பரிதாபம்.

    நடிகர் திலகம் கள்வனாகி நீண்ட நாள் சென்று பிரிந்த தன் தங்கையை மைத்துனர் டி.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் சந்திக்கும்போது அந்தக் காட்சி நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

    'காவேரி' படத்தில் இவருக்கு ஒரு நடனக் காட்சி உள்ளது.



    நடிகர் திலகம் மனம் குழம்பியிருக்கும் நிலையில் அவர் புத்தியைத் தெளிய வைப்பதற்காக பத்மினி, ராகினி, குசலகுமாரி, மாடி லஷ்மி மற்றும் நடன மாதர்கள் ஜிப்ஸி கூட்டம் போல பாடி ஆடுவார்கள். அந்தப் பாடலில்

    கீழ்க்கண்ட

    'சுந்தரனுக்காக தோகை மயில் கொண்டு வந்தோம்
    சொந்தமாகத் தருவோமின்னா வந்த வேலை சரியில்லே'

    வரிகளைப் பாடி ஆடுவது குசலகுமாரிதான். ஆனால் சொற்ப நேரமே வருவார்.



    இதுவல்லாமல் 'நீதிபதி' இவர் நடித்த ஒரு முக்கியப் படம்.

    மலையாளத்தில் 1960-ல் வெளியான 'சீதா' என்ற படத்தில் நசீர் ராமனாக நடிக்க இவர் பிரதான சீதை வேடத்தில் நாயகியாக நடித்திருப்பார். பிரேம் நசீருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ('மரியக்குட்டி' 1959)

    இவர் சிரிப்பும் கொள்ளை அழகுதான். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். 'கலைமாமணி' 'கலைச்செல்வம்' பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

    வறுமையில் வாடி வரும் நடிகை குசலகுமாரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு வாடகை கட்ட முடியாமல் 2004 ல் அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும் அன்றே வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை குசலகுமாரிக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    அது சரி! இப்போது குசலகுமாரி என்ற நடிகையைப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்?

    விஷயம் இருக்கிறது.

    அக்டோபர் ஒண்ணாம் தேதி தானாக உங்களுக்குத் தெரிய வரும்.

    அதுவரை பொறுங்கள்.

    இதோ ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவர்களைப் பாராட்டி குசலகுமாரி மேடையில் பேசும் பேச்சு. கண்டு களியுங்கள். இப்போதும் இளமையாகவே இருக்கிறார்.

    Last edited by vasudevan31355; 8th July 2015 at 12:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks uvausan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1642
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1643
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 166
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்



    உண்மை சம்பவம் 26

    என் அப்பாவிற்கு அதிகமான கடவுள் நம்பிக்கை - நம்புவதுடன் மட்டும் நிற்காமல் தன் சேமிப்பை பல நல்ல காரியங்களுக்கும் செலவழிப்பார் . நான் அவருக்கு opposite . கடவுள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன் - என் 6 வயது மகன் சுரேஷ் தாத்தா மாதிரி - அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு எல்லா இடத்திற்கும் போவான் ... நான் ஒரு திரிஷ்ட்டி பரிகாரம் எனது வீட்டில் . இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அப்பா என் சுதந்திரத்தில் என்றுமே தலையிட்டத்தில்லை - கோவில் போடா என்று திட்டினதும் இல்லை - என் மகனுக்கு மட்டுமே வருத்தம் -- நான் அவனுடன் கோவிலுக்கு வருவதில்லை என்று .. ஒருநாள் வீட்டில் பேச்சு சப்தம் அதிகமாக இருந்தது - என் மகன் தாத்தாவின் மடியில் உட்க்காந்திருக்க , என் தந்தை வேறு யாரிடமோ , ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன என்பதை விளாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார் .. வழக்கத்திற்கும் மாறாக அவர்கள் பேசுவதை சற்றே செவி சாயித்துக் கேட்டேன் - அப்பா சொன்னார்

    " ஒரு சமயம் கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் .

    அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,

    என்றகண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உ ன்வார்த்தையில்எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

    பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது."

    எவ்வளவு பெரிய உண்மை ! எவ்வளவு எளிதில் ஒரு பாமரனக்கும் புரிகின்ற அளவில் இருந்தது அப்பாவின் உபதேசம் - அவர் கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தேன் - அப்பா எனக்கு நம்பிக்கை வந்து விட்டது - கதறினேன் --- " அப்பா " இது என் மகனின் குரல் - அவனுக்கு இருந்த தெளிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டதே !- கோவில்களுக்கு வர என் மகன் தாத்தாவை இப்பொழுதெல்லாம் தொந்தரவு படுத்துவதில்லை .............

    அல்லித் தண்டு கால் எடுத்து
    அடி மேல் அடி எடுத்து
    சின்னக் கண்ணன் நடக்கையிலே
    சித்திரங்கள் என்ன செய்யும்


  7. Thanks Russellmai, vasudevan31355 thanked for this post
  8. #1644
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 167
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்



    உண்மையான பக்தி என்பது என்ன ? - என் தந்தையின் வார்த்தைகளில்


    ஒருமுறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதைவாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலிசெய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்குபுறமாக இருந்து கீதை வாசிக்கவிட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு கீதையை யாரோ தவறாக வாசிப்பது காதில்விழுந்தது.

    அவர் அருகில் சென்றுகேட்டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாகதெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் தவறாக வாசிக்கிறீங்கள்?" என்றார் சைதன்யர் .

    அதற்கு அவர்சொன்னார்.., "கீதையை திறந்ததும். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் நிக்கிறார்களே சுவாமி..! அதை காணும்போது என் உடல் நடுங்கிறது..! என் நா தழு தழுக்கிறது..! கண்ணீர் பெருகிஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்னசெய்வேன் பிரவு..?" என கண்ணீர்விட்டார்.

    திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்யர் கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவதுதெரிந்ததோ..?" வெட்கி தலைகுனிந்தனர் அவரை கேலிசெய்தவர்கள்.

    இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது கண்ணீர் விடும் மிகஉயர்த ஒரு உண்ணதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடம் இல்லை. இந்த சரணா கதியை அடைந்தவர்களை யாரும்_வெல்லவோ, தோற்கடிக்கவோ முடியாது . இதில் மத வேறுபாடுகளே இல்லை - எல்லா மதங்களும் இப்படிப்பட்ட பக்தியைப்பற்றித்தான் பெருமையாக கீதையிலும் , பைபிள்லிலும் , குரான்லிலும் பக்கம் பக்கமாகச்சொல்கின்றன ......



    கவிஞரின் முத்தான வரிகளில் ஒரு இனிமையான தாலாட்டு. மிகவும் குறைவான வாத்தியங்கள் மூலம் அமைக்கபட்ட அருமையான இசை. டி.எம்.எஸ் தன் கணீர் குரலில் மென்மையாகவும் பாடலின் அர்த்தம் தெளிவாக புரியும் வண்ணம் பாடியுள்ளார்.

  9. #1645
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 168
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    அப்பாவைப்பற்றிய ஒரு அருமையான ஆராதனை



  10. Likes Russellmai liked this post
  11. #1646
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 169
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    words from a child of wisdom ----


  12. #1647
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    RARE DOCS FROM NAVAMANI -1974
    Last edited by Varadakumar Sundaraman; 8th July 2015 at 08:48 AM.

  13. Thanks eehaiupehazij, vasudevan31355, uvausan thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  14. #1648
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks eehaiupehazij, vasudevan31355, uvausan thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  16. #1649
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks eehaiupehazij, vasudevan31355, uvausan thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  18. #1650
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 170
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    வராத கரு ஒன்று வந்தது . வெளியில் வரும் போது அதற்க்கு கத்த தெரியவில்லை =வாய் பேசத்தெரியாத குழந்தை - கதருகிறான் தந்தை - புலம்புகிறாள். அன்னை .--- அம்மா என்று கூப்பிடாதா ? - அப்பா என்று அழைக்காதா? --- வாழ்க்கை அவர்களுக்கு ஒரு சூனியமாகத் தெரிகிறது - செல்லாத கோவில் இல்லை , வேண்டாத தெய்வம் இல்லை - இறைவன் செவி சாய்க்கிறான் குழந்தை வடிவில் - ஒரு குழந்தை இன்னொமொரு குழந்தையிடம் உலக அதிசியங்களை கேள்விகளாக கேட்கிறது - வாய் பேச வந்த அந்த குழந்தை இறைவியிடம் அந்த குழந்தை (யாருக்கும் வேண்ட தோன்றாத ) வேண்டுவதெல்லாம் இதுதான்

    " ஆண்டாண்டு காலமாய் அழுகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும் ;

    ஆணவகார்கள் நெஞ்சிலே தான் என்ற அறியாமை நீங்க வேண்டும் ;

    வேண்டாத குணங்களை விட்டு விட்டு என்றும் உன்னை வேண்டிடும் உள்ளம் வேண்டும் ;

    வேறென்ன வேண்டும் என்று நீ நினைத்து - அதை விரைந்தோடி தர வேண்டும் ....


    Last edited by g94127302; 8th July 2015 at 12:02 PM.

  19. Thanks eehaiupehazij, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •