-
6th July 2015, 08:34 PM
#1621
Junior Member
Veteran Hubber
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா ......இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா...
ஸ்ரீதரின் தூரப் பார்வையில் ஜெமினி வைஜயந்தியின் கிட்டப் பார்வை !
நமது ஓரப் பார்வையில் மதுரகானம்.....
பாட்டுப் பாடவா.......... பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா ,,,,,,,,,,,,பறந்து செல்லவா
பால் நிலாவைப் போல வந்த பாவையல்(ல)வா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
புதுமை இயக்குனர் என்று புகழின் உச்சியில் ஏறி நின்ற ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அனைத்துப் படங்களிலும் பாடல்கள் தேனிசை ரீங்காரமிடும் மதுர கானங்களே !
கல்யாண பரிசு போன்ற காலத்தினால் கரையாத கனமான கதைக் களம் மட்டுமல்லாது தன்னால் என்றென்றும் சிரித்து மகிழ வைக்கும் தரமான நகைச்சுவைத் ததும்பலையும் சம பங்கில் தர இயலும் என்பதை
தேன் நிலவு, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு படங்களின் மூலம் நிலைப்படுத்தினார் ஆரம்பகால தயாரிப்புக்களில் இசையில் ஏ எம் ராஜா இணைவில் மறக்க முடியாத பாடல்களில் கண்ணியமான காதலை படம் பிடித்தார்.
ஜனரஞ்சகமான பொழுதுப் போக்குப் படமான
தேன் நிலவில் பாட்டுப் பாடவா...பார்த்துப் பேசவா..பாடல் காட்சியமைப்பும், இதமான வண்ணத்தில் எடுக்கவில்லையே என்று ஏங்க வைத்த வெளிப்புற இயற்கையழகுக் காட்சிகளும், இளமைத்துள்ளல் மங்கை வைஜயந்தியுடன் காதல் மன்னரின் பதமான காதல் பதிவுகளுடன் கூடிய ராஜாவின் மென்மைக் குரல் குழைவும்...
என் மனத் திரையில் என்றும் பசுமையான மதுர கானப் பதிவே!!
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
Last edited by sivajisenthil; 7th July 2015 at 08:13 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
6th July 2015 08:34 PM
# ADS
Circuit advertisement
-
6th July 2015, 08:42 PM
#1622
Senior Member
Diamond Hubber
கல்ஸ்,
'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் 'மாஸ்டர்' ராமு காட்டில் தனியாக அலைந்து துன்புறும்போது பாடகர் திலகம் பாடும் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்கும்.
பாம்பு ஒன்று கொடுமையாக விஷத்தை ராமு கண்ணில் பீய்ச்சி அடித்துவிட, அந்தப் பையன் கண்களை இழந்து விடுவான். பாலைவன மணல் திட்டுகளில் கையில் பொம்மையுடன் அலைந்து விலங்குகள் துரத்த ரொம்பவும் கஷ்டப்படுவான். பரிதாபமாக இருக்கும். மனதை உருக வைக்கும் அருமையான பிக்சரைசேஷன்.
'தெய்வம் இறங்காதா
உன் முகம் பார்க்காதா'
இதையும் பார்த்து விடுங்களேன்.
Last edited by vasudevan31355; 6th July 2015 at 08:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
6th July 2015, 09:34 PM
#1623
Senior Member
Diamond Hubber
சிவாஜி செந்தில் சார்!
மதுர கானங்கள் திரிக்கு மனமகிழ்ச்சியுடன் தங்களை வரவேற்கிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விதவிதமான அசத்தல் தலைப்புகளில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்களின் பாணியை எண்ணி வியந்தபடியே இருப்பேன்.
இப்போது உங்கள் திறமைப் பார்வை மதுரகானங்களில் பதிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
உங்கள் பாடல் கேட்டு பரவசத்தில் 'பறந்து செல்லவா?' என்று கேட்கத் தூண்டுகிறது.
பாடகக் கோமாளிகளின் ஊடகப் பார்வையில் கோமான்களின் (வாழ்க்கை) நாடகங்கள் !! அற்புதம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். சதன், நம்பிராஜன், வீரப்பன் ஏன்று ஜாலி களை கட்டும்.
பீம்சிங் படங்களில் இந்த மாதிரிப் பாட்டுக்கள் நிச்சயம் அவருடைய ஒவ்வொரு படத்திலும் இடம் பெறும்.
'படிச்சதையெல்லாம் பயன்படுத்தாதவன் முதல்தர கோமாளி
ரொம்பப் படித்தவன் போலே நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி'
என்று கதைக்குப் பொருந்திய வரிகள் காட்சிகளினூடே இணைந்து வரும் அந்த சொர்க்க தினங்கள் எங்கே?
'படித்தால் மட்டும் போதுமா?' என்று இன்றும் கேட்கத்தான் தோன்றுகிறது.
நன்றி செந்தில் சார். நம் இறைவனாரின் ஆசீர்வாதம் மிகப் பெற்றவர் நீங்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th July 2015, 09:46 PM
#1624
Senior Member
Diamond Hubber
ரவி சார்!
உங்கள் பதிவுகள் எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கின்றன. தந்தைக் கருவில் இத்தனைப் பாடல்களா என்று ஆச்சர்யம் மேலோங்குகிறது.
கற்பூரக் கதை, கண்ணன் வந்தான் என்ற உணர்ச்சிக் குவியல்களின் சங்கமப் பாடல், செந்தில் சாரை வரவேற்று அனைவருக்கும் கௌரவம், மெழுகுவர்த்தி குழந்தைக் கதை, எனக்கு ரொம்பப் பிடித்த பாடலான பொல்லாத புன்சிரிப்பு, (இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் எழுதி இருக்கிறேன். ரவி, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) நான் பெத்த மகனே ஜாலி என்று திரியின் நாயகராக ராஜநடை போடுகிறீர்கள். உங்கள் அயராத உழைப்பிற்கு என் அசந்து போன நன்றிகள். பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th July 2015, 10:23 PM
#1625
Junior Member
Veteran Hubber
நன்றிகள் வாசு சார்
மதுரகானங்கள் திரிக்குப் பார்வையாளனாக மட்டுமே வந்திருக்கிறேன் உங்கள் எழுத்து ஜாலம், ரவியின் ஈடுபாடு, சின்னக் கண்ணரின் கலைவாணத்துவம், கலைவேந்தரின் (எ)/(வ)ண்ணச்சிதறல்கள் முரளி/ராகவேந்தர்/கோபால்/ராஜேஷ் வர்ணனைகள், கல்நாயக்கின் தெளிந்த நீரோட்டம், ..... உண்மையில் நான் கொஞ்சம் 'இரும்படிக்கும் இடத்தில் ஈ' என்று சற்று தயக்கத்துடனேயே என் பதிவை அளித்தேன். ஜாம்பவான்களின் உள்ளம் திறந்த நல்வரவு கூறல் எனக்கு மதுரமாக இருக்கிறது !
இசை அவுரங்கசீப்பாக இருக்கும் நானும் மாறுதல் விரும்பியே உங்கள் பாதையில் பயணிக்க விழைகிறேன்! களம் வேறு என்பதை மனதில் இருத்தி!!
அன்புடன் செந்தில்
Last edited by sivajisenthil; 6th July 2015 at 10:32 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th July 2015, 08:20 AM
#1626
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
7th July 2015, 08:22 AM
#1627
Junior Member
Veteran Hubber
ரவி சார்
உங்கள் நல்வார்த்தைகள் எனக்கு சத்து டானிக்கே. நீங்கள் போட்டுக் கொடுத்த கோட்டில்தான் நானும் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றியுடன்
நினைவு கூர்கிறேன்.
உங்களுடன் இணைவதில் பெருமைகலந்த மகிழ்வே!
அன்புடன் செந்தில்
-
7th July 2015, 08:27 AM
#1628
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 162
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
உண்மை சம்பவம் 24
அப்பா , ஒரு சின்ன சந்தேகம் - என் 7 வயது மகன் அருண் நான் ஆபீஸ் புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் குறுக்கே வந்தான் - அவன் சந்தேகங்களை சேர்த்தால் ஒரு பெரிய புத்தகமே போட்டுவிடலாம் . அருண் இன்று எனக்கு போர்டு மீட்டிங் - evening உன் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன் ... நழுவப்பார்த்தேன் . " அப்பா நான் இன்னும் கேள்வியே கேட்கவில்லை - எப்படி நீங்கள் ஒரு கேட்க்காத கேள்விக்கு பதில் சொல்ல முடியும் ? " அதிகமாக வழிந்தேன் - வழிவது இதுவரை மனைவியிடம் மட்டும் தான் - முதல் தடவை மகனிடமும் ஏற்பட்டது .
" ம்ம் .. சொல் ! என்ன சந்தேகம் ? - பதில் evening தான் கிடைக்கும் "
" ஒருவன் எப்படி அப்பா ஞானி யாக முடியும் ? " ( மனதிற்குள் சொல்லிக் கொண்டேன் - உன் கேள்விகளுக்கு பதில் சொன்னாலே , ஞானி ஆகிவிடலாம் ) ..
ஓகே , சாயிந்திரம் பதில் கிடைக்கும் . உடனே வண்டியை 4வது கியரில் ஸ்டார்ட் செய்தேன் ----
சின்ன கேள்விதான் - அனால் அவனுக்கு புரியும் வண்ணம் எப்படி சொல்வது ? வழி நெடுக இதே யோசனைதான் - வழியில் இருந்த கிருஷ்ணர் கோவிலில் வண்டியை நிறுத்தி - " கேட்பதும் கொடுப்பவனே கிருஷ்ணா ! நீதான் எனக்கு ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும் ...." கிருஷ்ணன் சிரித்தான் - அவன் சிரிப்பில் அருணைப் பார்த்தேன் ....
இரவு 7மணி - வீடு திரும்பினேன் - அருண் எனக்காக காத்துக்கொண்டிருந்தான் - அப்பா ரெடி யா ?? - அவன் ஆர்வத்தை குறைக்க மனம் வரவில்லை .. அவனை தூக்கிக்கொண்டேன் - பதில் இருக்கிறது கண்ணா - உனக்கு ஒரு சிறிய கதை மூலமாக என் பதிலை சொல்கிறேன் -------
ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.
அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.கிருஷ்ணரின் பார்வையிலே கருணையும் அன்பும் ஆறாக ஓடியது .
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைத்துக்கொண்டு அன்பை காட்டுபவனே ஞானி, என்றார்.
அருண் முகத்தில் என்றும் பார்க்காத ஒரு வெளிச்சம் , திருப்தி , சந்தோஷம் - அப்பா - நீ எனக்கு கிடைத்தபின்பும் இந்த கேள்வியை நான் உன்னிடம் கேட்டிருக்க கூடாது ....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th July 2015, 08:34 AM
#1629
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 163
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
ஒரு குழந்தைதான் அம்மாவையும் அப்பாவையும் இணைக்கிறது - அந்த மழலை இல்லாத வீடு, உயிர் இல்லாத வெறும் கூடு . அதே மழலை வளர்ந்ததும் தன் தவறான போக்கால் குரலை உயர்த்தும்போது உண்மையிலேயே தாயும் தந்தையும் ஒரு உயிர் இல்லாத கூடாகத்தான் ஆகி விடுகின்றனர் .........
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th July 2015, 08:48 AM
#1630
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 164
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
நமக்கு கிடைத்த சில அருமைகளை நாம் என்றுமே உணர்ந்து கொள்வதில்லை - இல்லாதவைகளைப்பற்றித்தான் அதிகமாக உணர்ந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் . நமக்கு கிடைத்த விலை மதிப்பற்ற நவரத்தனங்களை மதிக்காமல் கண்ணாடி கற்களில் பெருமை அடைகிறோம் .... அதன் மதிப்பை உணரும்போது நம் வாழ்க்கை முடிவடைந்து போகிறது ...
வெயிலின் அருமை தெரிய வேண்டுமா ? நிழலைக்கண்டு பிடியுங்கள்
காலில் போட்ட புதிய செருப்புக்கள் கடிக்கின்றனவா ? - இரண்டு கால்களும் இல்லாத ஒரு முடவனை சந்தியுங்கள் ;
பெற்றவர்கள் பாரமாகத் தெரிகிறார்களா ? அனாதைகளை பாருங்கள் - அந்த தெய்வங்களின் பரிசம் படாமல் வளரும் உடம்புகள் ;
வெற்றியின் பெருமைகளை உணர வேண்டுமா - தோல்வி அடைந்தவனை சந்தியுங்கள் ....
இதோ இந்த பெரிய குழந்தை அப்பா , அம்மா இருந்தும் அநாதை - இவன் குமறல்களை அந்த படைத்தவனிடம் சொல்லி அழுகிறான்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks