Page 162 of 400 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1611
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வருக வருக செந்தில் சார் - நீங்கள் வந்த இடம் நல்ல இடம் ! உங்களின் கற்பனை நயத்தை எண்ணி நான் வியக்காத நாளே இல்லை - சமீபத்தில் உங்கள் ஹெல்மெட் பதிவுகள் - மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது - என் சிறிய வேண்டுகோள் , நேரம் கிடைக்கும் போது இங்கும் வந்து உங்கள் அருமையான பதிவுகளை போட வேண்டும் - இது எங்கள் எல்லோர் விருப்பமும் கூட .

    நெஞ்சத்தை வருடும் " பாலா" பதிவுகள் ," ஏன் " இதுவரை ரசிக்காமல் போய்விட்டோம் இந்த பாடல்களை என்று ஏங்க வைத்துவிடும் திரு வாசுவின் தீவிர உழைப்பில் மலரும் பதிவுகள் ;

    திரு கோபாலின் ஆங்கில படங்கலைப்பற்றிய அதிரடி அலசல்கள்;

    கண்ணித் தீவாக அருமையாக திரு கல்நாயக் அவர்களின் கை வண்ணத்தில் வளரும் "பூக்களின் ஆனந்த நடனம் ;

    "என்னமோ போங்க " என்று விட்டு விடாமல் எங்களை கட்டிப்போட்டு தன் பதிவுகளால் மயங்க வைக்கும் திரு சின்ன கண்ணனின் ராஜாங்கம் ;

    திரு கிருஷ்ணாஜி அவர்களின் அட்டகாசமான கண்ணனைப்பற்றிய ஆராதனைகள் ;

    திரையில் பக்தி- ராஜேஷ் அவர்களின் அருமையான அலசல் ;

    படிக்க படிக்க திக்கட்டாத ராகவேந்திரா அவர்களின் திலக சங்கமம் ;

    சமூக சிந்தனைகளை தூண்டிவிடும் "கலை " அவர்களின் பதிவுகள் ;

    ஓடிவந்து மனமார பாராட்டும் திரு முரளி அவர்களின் சிந்தனைகள் ;

    அருமையாக ரசித்து பாராட்டத்தவறாத திரு ஆதிராம் அவர்களின் எண்ண ஓட்டங்கள் ;

    திரு ராஜ் ராஜ் அவர்களின் " மலரும் நினைவுகள் ;

    திரு rd அவர்களின் அருமையான சிந்தனைகள் ;

    திரு வினோத் அவர்களின் திடீர் வருகை & பதிவுகள் ;

    திரு குமார் அவர்களின் அருமையான எண்ண ஓட்டங்கள் ;

    திரு யோகேஷ் அவர்களின் அற்புத பங்களிப்பு , தகுந்த ஆவணங்களுடன் ;

    திரிக்கு வெளியே இருந்துகொண்டு அனைத்து பதிவுகளையும் பொறுமையாகப்படித்து அந்த பதிவாளர்களை மனமுவந்து எதையும் திரும்பி எதிர்பார்க்காமல் பாராட்டும் திரு கோபு அவர்கள் ;

    இப்படி இந்த திரிக்கு தன்னையே அர்பணித்துக்கொண்டவர்கள் நிறைந்த இடம் இது .

    உங்கள் வருகை இந்த திரியை இன்னும் பலப்படுத்தும் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை
    Last edited by g94127302; 6th July 2015 at 07:55 AM.

  2. Thanks vasudevan31355, Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1612
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  5. Likes Russellmai liked this post
  6. #1613
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 159
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    உண்மை சம்பவம் -23

    அன்று வழக்கத்திற்கு மாறாக என் 8 வயது மகனுடன் விளையாட சிறிது நேரம் கிடைத்தது ..

    " அப்பா ! இவ்வளவு கதைகள் நீ எனக்கு சொல்கிறாயே , நீ தாத்தாவிடம் இருந்து என்ன தெரிந்துகொண்டாய் ? "

    " கண்ணா நான் சொல்வதெல்லாம் அவரிடம் இருந்து தெரிந்துகொண்டததுதான் ! . அவரிடம் இருந்து தெரிந்துகொண்டதில் நான் இன்னும் மறக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தை உனக்கு இன்று சொல்லப்போகிறேன் .

    " அப்படியா ! " மிகவும் ஆர்வத்துடன் உங்களைப்போல கேட்கத்தயாரானான் .

    ஒருவன் ஒரு பெரிய குருவிடம் கேட்டான் . " குருவே நீங்கள் யாரை மிகச்சிறந்த குருவாக உங்களுக்கு நினைக்கிறீர்கள் ?"

    குரு சொன்னார் " பல பேர்கள் இருக்கிறார்கள் - இருந்தாலும் மூன்று பேர்கள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள் - அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக அதிகம் .

    " யார் அவர்கள் ? எனக்கும் சொல்ல முடியுமா ?" அவன் ஆவலுடன் கேட்டான் .

    சொல்கிறேன் - அந்த மூன்றில் முதல்வன் ஒருவன் திருடன் - ஒருமுறை வழிதெரியாத பாதையில் இரவு நேரத்தில் ஒரு இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன் - தங்குவதற்கு ஒரு இடத்தை தேடிக்கொண்டிருந்தேன் . ஒருவன் கண்களில் தென்பட்டான் - அவன் தன் வீட்டில் தங்கலாம் என்றான் - அவன் திருடன் என்றும் ஒத்துக்கொண்டான் . இரவு நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதில்லை . ஒரே ஒரு இரவு மட்டும் தங்க நினைத்த நான் ஒரு வாரம் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை . தினமும் அவனிடம் என் கேள்வி இன்று "உனக்கு ஏதாவது கிடைத்ததா?" என்பதுதான் . இல்லை அய்யா - நம்பிக்கை உள்ளது - நாளை ஏதாவது கிடைக்கலாம் . அவன் நம்பிக்கை எனக்கு ஒரு பாடமாக அமைந்தது .

    இரண்டாவது குரு - ஒரு நாய் - ஒரு ஓடையில் நீரைக்குடிக்க விரைந்தது - அதில் தெரியும் தன் நிழலைப் பார்த்து பயந்து விட்டது - தினமும் அதை கவனித்துக் கொண்டிருந்தேன் - தினமும் அங்கு அந்த நாய் வரும் - தன் நிழலைப்பார்க்கும் - ஓடிவிடும் . ஒரு நாள் வழக்கத்திற்கும் மேலாக அந்த நாய் திடீரென்று அந்த ஓடையில் குதித்தது - அதன் நிழல் மறைந்தது - வேண்டும் மட்டும் நீரை அருந்திவிட்டு , நீந்தி கரை சேர்ந்தது , அதன் பயமும் மறைந்துவிட்டது . என்ன துன்பங்கள் வந்தாலும் பயத்தை உதவிக்கு அழைத்துச்செல்ல கூடாது என்பதை அந்த நாயின் மூலம் கற்றுக்கொண்டேன் .

    மூன்றாவது ஒரு குழந்தை - ஒரு எரியும் மெழுகு வர்த்தியை கையில் பிடித்துக் கொண்டு என் எதிரில் வந்துகொண்டிருந்தாள் . அந்த குழந்தையிடம் கேட்டேன் - " குழந்தே ! நீ பிடித்துக்கொண்டிருக்கும் மெழுகு வர்த்திக்கு எங்கிருந்து வெளிச்சம் வந்தது ? " கொஞ்சமும் தயங்காமல் அந்த குழந்தை உடனே அந்த மெழுகு வர்த்தியை ஊதி அணைத்தது . உடனே என்னிடம் " அய்யா ! இந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சம் போனதைப்பார்தீர்கள் . அது எங்கே போனது என்று சொல்லமுடியுமா ?" -- பொட்டில் அறைந்தது போன்று இருந்தது - என் ஆணவம் , அறியாமை அன்றே மறைந்தது . யார்கிட்டே இருந்தும் நாம் எதுவும் கற்றுக்கொள்ளலாம் என்பதை புரிந்து கொண்டேன் .. இதில் வயது வித்தியாசமே இல்லை , பார்க்கவும் கூடாது .

    ஒரு வழியாக என் தந்தை சொன்ன கதையை என் மகனிடம் சொல்லி முடித்தேன் - அந்த சமயம் ஒரு தெரு நாய் அந்த பக்கம் வந்தது - அதற்க்கு வால் இல்லை . என் மகன் சொன்னான் " அப்பா , தாத்தா சொன்ன கதை மிகவும் அருமை - இதோ இந்த நாயிடம் இருந்தும் நான் ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன் .....

    " சிரித்தேன் - வால் இல்லாத இந்த தெரு நாயிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டாய் ?? "

    " எவ்வளவு தான் நாம் உயர்ந்தவர்களாக இருந்தாலும் யாரிடமும் தேவை இல்லாமல் வாலாட்டக்கூடாது என்பதை புரிந்துகொண்டேன் அப்பா !"

    அசந்து விட்டேன் - அந்த நாயின் குரைச்சல் தான் என்னை எழுப்பி விட்டது .......

    Last edited by g94127302; 6th July 2015 at 01:06 PM.

  7. Likes eehaiupehazij, Russellmai liked this post
  8. #1614
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 160
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு

    மன்கையரைப் பார்த்ததுண்டு
    மனத்தைக் கொடுத்ததில்லை
    மலர்களை பார்த்ததுண்டு
    மாலையாய் தொடுத்ததில்லை
    மணக் கோலம் பார்த்ததுண்டு
    மாப்பிளையாய் ஆனதில்லை
    மணக் கோலம் பார்த்ததுண்டு
    மாப்பிளையாய் ஆனதில்லை
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு

    தெய்வம் ஒரு சாட்சி என்றால்
    நேரிலே வருவதில்ல
    பிள்ளை மறு சாட்சி என்றால்
    பேசவே தெரியவில்லை
    யாரை சொல்லி என்ன பயன்
    என் வழக்கு தீரவில்லை
    யாரை சொல்லி என்ன பயன்
    என் வழக்கு தீரவில்லை
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு

    உன் வீட்டுத் தோட்டத்திலே
    ஒரு மரம் தனி மரமாம்
    தனி மரம் தவிக்க கண்டு
    தளிர் கோடி தழுவியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு
    அன்று முதல் பழகியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு
    அன்று முதல் பழகியதாம்
    பழகிய பழக்கத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ

    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததின்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு


  9. #1615
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 161
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்



  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  11. #1616
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    நண்பர்களுக்கு வணக்கம். நேரமின்மையால் வர முடியவில்லை. மன்னிக்கவும்.

    கல்நாயக்,
    பூ பாடல்களை மீண்டும் தொடங்கியிருப்பதற்கு நன்றி. இறைவன் என்றொரு கவிஞன் பாடலை இதற்கு முன் நீங்கள் கேட்டதே இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. ஹிட்டான பாடல்தானே. ஆமாம்........... சின்னக்கண்ணனை ஏன் மறக்க நினைக்கிறீர்கள்? உங்கள் பதிவை (எண்.1403) பாருங்கள். இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க.வை என்னால் மறக்காமல் இருக்க முடியாது.. என்று கூறியிருக்கிறீர்களே? சி.க.வை என்னால் மறக்க முடியாது என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? சின்னக்கண்ணன் மீது உங்களுக்கு என்ன கோபம் அவரை மறப்பதற்கு? (சும்மா விளையாட்டுக் சொன்னேன்) சரியாக மாற்றி விடுங்கள்.
    அப்புறம்... எனக்கு என்றும் 18 இல்லை. ரொம்ப பொறாமைப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் எனக்கு 19 வயது பிறக்கப் போகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    கலைவேந்தன்,

    சி.க. பற்றி நான் தவறாக கொடுத்ததை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.

    அப்புறம் உங்கள் வயதைப் பற்றி... உங்களோடு சற்றே பழம் விட்டு சொல்லிவிடுகிறேன். ஒரு ஆங்கிலப் படத்தில் கதாநாயகனுக்கு ஒரு வருடத்தில் ஆறு வருட வளர்ச்சி வளர்ந்து விரைவில் முதியவனாகி விடுகிறான். ஆனால் இங்கே உங்களுக்கு மாற்று விதமாக இருக்கிறதே... உங்களுக்கு என்ன ஒவ்வொரு ஆறு வருடத்திற்கும் ஒரு வயது கூடுகிறதா? சரி சரி பரவாயில்லை அனுபவியுங்கள். உங்களோடு விவாதத்திற்கு வரவில்லை. இன்னும் இதைப் பற்றி என்னுடைய சிந்துபாத் பேட்டி தொடரும்போது பேசுகிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. #1617
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி,

    மூன்றாம் பாகத்தில் பெரும்பாலும் சி.கவும் நானும் இருவராய் செய்த பணியை, தாங்கள் 4-ஆம் பாகத்தில் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வப்போது வாசு அவர்கள் புயலாய் வந்து பல பதிவுகள் முடிக்கிறார். அவர் இருந்தாலும், பணியால் பதிவிடா விட்டாலும் நீங்கள் பதிவுகளை தொடர்கிறீர்கள். ஏதாவது புதிதாக சொல்லி உங்கள் பதிவுகளை பாராட்டவேண்டுமேன்று தேடிக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், உங்கள் பதிவை நான் புதிதாக எப்படி பாராட்டுவது எப்படி என்று. வித்தியாசமாக இருக்கிறதா? இன்னும் உங்களின் பல பதிவுகளை படிக்க வேண்டும். படித்து விட்டு சொல்லுகிறேன். பணி அதிகமானதால் எனது பங்கு பெருமளவு குறைந்து விடுகிறது. மன்னிக்கவும். சிறிது நாட்களில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  13. Likes vasudevan31355 liked this post
  14. #1618
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ரவி,

    மூன்றாம் பாகத்தில் பெரும்பாலும் சி.கவும் நானும் இருவராய் செய்த பணியை, தாங்கள் 4-ஆம் பாகத்தில் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வப்போது வாசு அவர்கள் புயலாய் வந்து பல பதிவுகள் முடிக்கிறார். அவர் இருந்தாலும், பணியால் பதிவிடா விட்டாலும் நீங்கள் பதிவுகளை தொடர்கிறீர்கள். ஏதாவது புதிதாக சொல்லி உங்கள் பதிவுகளை பாராட்டவேண்டுமேன்று தேடிக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், உங்கள் பதிவை நான் புதிதாக எப்படி பாராட்டுவது எப்படி என்று. வித்தியாசமாக இருக்கிறதா? இன்னும் உங்களின் பல பதிவுகளை படிக்க வேண்டும். படித்து விட்டு சொல்லுகிறேன். .
    கல்நாயக் சார் , நீங்கள் என் பதிவுகள் எல்லாவற்றையும் படிப்பதே எனக்கு பாராட்டுக்கள் அளிப்பதாகும் - இதைத்தவிர எனக்கு தனியாக வேறு பாராட்டுக்கள் தேவை இல்லை - எனக்கும் உங்களைப்போல வேலை பளு அதிகமாக இருக்கின்றது - ஆனாலும் இங்கு வந்து பதிவுகள் போடுவதால் stress level அதிகமாக குறைகின்றது , மனதிருக்கும் ஒரு இனம் புரியாத இன்பமும் கிடைக்கிறது . In my humble submission , this thread is a great unwinding platform for people who are entangled in ocean of work load. ஒன்றுமே சாதிக்காமல் போனாலும் , எதையோ சாதித்து விட்டதைப்போன்ற ஒரு மனநிலை .

    சிறிது நாட்களில் உங்கள் வேலை பளு குறைந்துவிடும் , உங்களுக்கு பதிவுகள் போட நேரம் கிடைக்கும் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது .

  15. #1619
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலை சார்,

    கொஞ்சம் இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவுகளைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமடைந்தேன். அடைந்தோம். தங்களது பாராட்டிற்கு என் நன்றிகள்.

    நண்பர்கள் அனைவருடைய பதிவுகளையும் படித்து இன்புற்று அனவைருக்கும் பாராட்டுத் தெரிவித்ததற்கும் நன்றி!

    தங்களது வழக்கமான முத்திரையோடு கூடிய சதாரம் படப் பாடல் அலசலுக்கு நன்றிகள். யாருமே இதுவரை தொடாத பாட்டை நீங்கள் தொட்டு விட்டதால் மிகவும் மகிழ்ச்சி எனக்கு. இப்போதைக்கு அது மிகவும் அபூர்வ பாடல். ஒருகாலத்தில் கலக்கிய பாடல்தான். தகப்பன் தவறால் அவனோடு அவன் குடும்பமே நிர்மூலமான நிகழ்வைப் படித்ததும் மிகவும் வேதனையாக இருந்தது.

    எண்ணாத துன்பம் எது வந்த போதும்
    எதிர் கொள்ளத் தயங்காதே
    எளியோருக்காக நீ செய்த தியாகம்
    இதை லோகம் மறவாதே
    (லோகம் பற்றி லோகநாதன் பாடியது நம் யோகமே!)

    இந்த இடத்தில் அற்புதமான இசை சங்கதி ஒன்று வந்து விழும்.

    http://www.inbaminge.com/t/s/Satharam/

    'மெய்யன்பே எந்நாளும் அழியாத இன்பம்
    அதற்கீடு வேறில்லை'

    உண்மையே!

    நல்ல பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் கலை சார்.

    இன்னொன்று. நம் சின்னா இல்லாமல் திரி சிறிது களை இழந்திருப்பதும் மறுக்க இயலாத உண்மை. இது பற்றி சின்னாவுடன் போனில் பேசினேன். அவர் இந்தியா வந்திருப்பதால் பயங்கர பிஸி. என்னால் கூட பார்க்க இயலவில்லை. விரைவில் திரியில் வந்து கலக்குவார். அவர் டூரில் இருந்தாலும் திரியின் விவரங்களை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தார். திரியின் மீது அவருக்கிருந்த ஈடுபாட்டை நினைத்து பூரித்துப் போனேன். சின்னாவுக்கு என் சிந்தை குளிர்ந்த நன்றிகள்

    நண்பர் கல்நாயக்கும், ரவி சாரும் அருமையான பங்களிப்பை நல்கி வருகிறார்கள். குறிப்பாக ரவி சார். தன் கடமையை அற்புதமாக செவ்வனே செய்து வருகிறார். அவருக்கும் பாராட்டுக்கள்.

    நன்றி கலை சார்.
    Last edited by vasudevan31355; 6th July 2015 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks uvausan thanked for this post
  17. #1620
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like



    நண்பர் கல்நாயக்,

    பூ பாடல்களில் அருமையான பாடலான 'பூப் பூவா பறந்து போகும்' பாடலை கன்னித் தீவு சுவாரஸ்யத்துடன் இணைத்து அளித்ததற்கு பாராட்டுக்கள்.

    'திக்குத் தெரியாத காட்டில்' படமே பாடல்களில் பட்டை உரித்த படம்.

    கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே (பாலாவின் வரிசையில் வரும்)

    பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்

    குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா

    காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுமப்பா (சீர்காழியின் தனி முத்திரை)

    என்று எந்நாளும் இனிக்கும் எவர்க்ரீன் பாடல்கள்.



    இந்தப் படத்தைப் பார்த்தால் ரங்காராவ், தேவிகா, மாஸ்டர் ராமு நடித்த 'பிள்ளைச் செல்வம்' (தெலுங்கிலிருந்து இறக்குமதி) படம் நினைவுக்கு உடனே வரும். இந்தப் படத்தில் 'மாஸ்டர் ராமு' தன்னந் தனியாக காட்டில் அலைவான். 'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் பேபி சுமதி காட்டில் அலைவாள்.

    இந்தப் படத்தில் நாகேஷ், வி.கே.ஆர் இருவரும் காவலர்களாக காட்டில் அலைந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். 'பல்லாண்டு வாழ்க' படத்தில் பார்த்த முரட்டு நம்பியாரை முன்னமேயே கிட்டத் தட்ட அதே கோலத்தில் இப்படத்தில் காணலாம்.

    முத்துராமன், ஜெயலலிதா, சச்சு, வி.கோபாலகிருஷ்ணன், மாலி, நாகேஷ், வி.கே.ஆர். நம்பியார், ராகவன் என்று ஏகத்துக்கும் நட்சத்திரக் கும்பல்.

    பிள்ளைகள் தனியாக காட்டில் அலைவது போன்று படங்கள் வந்து அப்புறம் இளசுகள் இரண்டு மட்டும் காட்டில் சிக்கிக் கொண்டு ஆபாசக் கலப்புடன் இளமை விருந்து படைத்த பல படங்கள் வர ஆரம்பித்தன. (புளூ லாகூன், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா, எல்லோரையும் குஷிப்படுத்திய தனி ரக 'ஜம்பு' என்று)

    நல்ல முன்னேற்றம்தான்.

    இதே தலைப்பில் ரமணிச்சந்திரன் எழுதி ஒரு நாவலும் வெளிவந்தது.
    Last edited by vasudevan31355; 6th July 2015 at 08:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks kalnayak thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •