Page 159 of 400 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1581
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 147

    பாகம் 2 - தந்தை

    தந்தை - மகள் பந்தம்


    உண்மை சம்பவம் 21


    IAS நுழைவு பரிட்சை இன்னும் ஒரு வாரத்தில் . என் மகள் லதா மிகவும் மும்மரமாக படித்துக்கொண்டிருந்தாள் - இரவு மணி இரண்டு - அவள் அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது - மெதுவாக அவள் அறையில் நுழைகிறேன் - தூங்க முயற்ச்சிக்கும் அவள் கண்கள் , நான் வருவதை அறிந்து மெல்ல திறக்கின்றன - அப்பா -- ஒரே பயமாக இருக்கிறது - என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை - உங்கள் கனவை தொலைத்து விடுவேனோ என்று மனசு கிடந்தது துடிக்கிறது -- மெதுவாக அவள் முதுகை தடவிக்கொடுத்தேன் -தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் லதா - வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நாம் இழக்கலாம் - சுயமரியாதையையோ , தன்னம்பிக்கையையோ இழக்கவே கூடாது - வழக்கம் போல உனக்கு ஒரு சின்ன கதை ஒன்றை சொல்லட்டுமா ? - சரி அப்பா - லதாவின் தூக்கம் அவளிடம் இருந்து பிரியா விடைப்பெற்றது ---

    மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

    மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

    “அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

    உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

    அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

    உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

    சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

    “இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

    அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

    அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

    அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

    “எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

    மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

    இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

    நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

    நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல.

    லதா இன்று மானிலமே பெருமைபடம் ஒரு தலைசிறந்த IAS ஆபீசர் - அதைவிட பெருமை லதா என் மகள் . அவள் ஒரு செக்கு பாடு அல்ல என்பதை நிரூபித்து விட்டாள் .

    Last edited by g94127302; 3rd July 2015 at 09:55 PM.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1582
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 148
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகள் பந்தம்


    மனதை வருடும் ஒரு இனிய பாடல் - தந்தை மகள் பந்தம்


  5. #1583
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 149
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகள் பந்தம்


    புரிந்துக்கொள்ள முடியாத ஒரு பந்தம் தந்தை மகள் - எண்ணகளாலும் , எழுத்துக்களாலும் இந்த பந்தத்தின் அருமையை விவரிக்க முடியாது - விவரிக்க முயன்றவர்கள் தோல்வியைத்தான் தழுவி இருக்கிறார்கள் - அனுபவிக்க வேண்டிய உறவு - ஆண்டவனால் அளிக்கப்பட வரப்பிரசாதம் இந்த உறவு .



  6. #1584
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  8. #1585
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 150
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகள் பந்தம்


    Dance with a daughter !!



    When tomorrow starts without me
    And I'm not there to see,
    If the sun should rise and find your eyes
    All filled with tears for me.

    I wish so much you wouldn't cry
    The way you did today,
    While thinking of the many things
    We didn't get to say.

    I know how much you love me
    As much as I love you,
    And each time that you think of me
    I know you'll miss me too.

    But when tomorrow starts without me
    Please try to understand,
    That an angel came and called my name
    And took me by the hand.

    And said my place was ready
    In heaven far above,
    And that I'd have to leave behind
    All those I dearly love.

    But when I walked through heaven's gates
    I felt so much at home,
    When God looked down and smiled at me
    From His great golden throne.

    He said "This is eternity
    And all I've promised you",
    Today for life on earth is past
    But here it starts anew.

    I promise no tomorrow
    For today will always last,
    And since each day's the same way
    There's no longing for the past.

    So when tomorrow starts without me
    Don't think we're far apart,
    For every time you think of me
    I'm right here in your heart.

  9. #1586
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஹிட்லர்
    இடியமின்
    கோபக்காரர்
    சிடுமூஞ்சி
    பெருசு
    அந்தாளு
    பழைய பஞ்சாங்கம்
    இம்சை அரசன்
    இப்படி பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நமது அப்பா!

    இந்த பெயர்களெல்லாம்
    அவரை சரியாக புரிந்துகொள்ளாததினால் வைத்த பெயர்கள்!
    அவர் நம் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அழுகை!
    நம் சந்தோஷங்களுக்கு பின்னால் இருக்கும்
    துயரம்!

    எட்டாத உலகத்தை எட்டிப்பார்க்க
    ஏணியானவர்
    நம் சந்தோஷத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக கண்ணீரை கூட கண்ணுக்குள்ளே விழுங்கியவர்!
    அவர் ஒரு
    கருத்தரியமுடியாத கவிதை !
    அவரை புரிந்துகொள்ள ஜென்மம் போதாது,

    இந்த உலகத்திலிருக்கும் எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மகனிடம்/ மகளிடம் தோற்பதை மட்டும் பெருமையாக நினைப்பார்!
    அவருக்கள் அடங்கிய பல அம்மாக்களில் ஒருவரை தான் நமக்கு அம்மாவாக கொடுத்திருக்கிறார்!
    எப்போதும் போல எல்லோரையும் போல நாம் சரியாக புரிந்துகொள்ள தவறிய அப்பாவைப்பற்றி எவ்வளவோ எழுத நினைத்தும் முழுமையாய் எழுதமுடியாமலே போய்விடுகின்றது !

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !!

    தந்தை - மகள் - இந்த உறவுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது - அதனால் பதிவுகளுக்கு ஒரு சிறிய முற்று புள்ளியை வைத்து விட்டு தந்தை -மகன் - இந்த பந்தத்தைப்பற்றி சில பதிவுகள் பார்ப்போம் - இதுவரை பொறுமையுடன் படித்த உங்களை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் எனது பாணியில் விளக்க இருக்கும் தந்தை -மகன் உறவையும் படிக்க வேண்டுகிறேன் .

    அன்புடன்

  10. Likes rajeshkrv liked this post
  11. #1587
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  12. Likes Russellmai liked this post
  13. #1588
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    ஹிட்லர்
    இடியமின்
    கோபக்காரர்
    சிடுமூஞ்சி
    பெருசு
    அந்தாளு
    பழைய பஞ்சாங்கம்
    இம்சை அரசன்
    இப்படி பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நமது அப்பா!

    இந்த பெயர்களெல்லாம்
    அவரை சரியாக புரிந்துகொள்ளாததினால் வைத்த பெயர்கள்!
    அவர் நம் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அழுகை!
    நம் சந்தோஷங்களுக்கு பின்னால் இருக்கும்
    துயரம்!

    எட்டாத உலகத்தை எட்டிப்பார்க்க
    ஏணியானவர்
    நம் சந்தோஷத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக கண்ணீரை கூட கண்ணுக்குள்ளே விழுங்கியவர்!
    அவர் ஒரு
    கருத்தரியமுடியாத கவிதை !
    அவரை புரிந்துகொள்ள ஜென்மம் போதாது,

    இந்த உலகத்திலிருக்கும் எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மகனிடம்/ மகளிடம் தோற்பதை மட்டும் பெருமையாக நினைப்பார்!
    அவருக்கள் அடங்கிய பல அம்மாக்களில் ஒருவரை தான் நமக்கு அம்மாவாக கொடுத்திருக்கிறார்!
    எப்போதும் போல எல்லோரையும் போல நாம் சரியாக புரிந்துகொள்ள தவறிய அப்பாவைப்பற்றி எவ்வளவோ எழுத நினைத்தும் முழுமையாய் எழுதமுடியாமலே போய்விடுகின்றது !

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !!

    தந்தை - மகள் - இந்த உறவுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது - அதனால் பதிவுகளுக்கு ஒரு சிறிய முற்று புள்ளியை வைத்து விட்டு தந்தை -மகன் - இந்த பந்தத்தைப்பற்றி சில பதிவுகள் பார்ப்போம் - இதுவரை பொறுமையுடன் படித்த உங்களை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் எனது பாணியில் விளக்க இருக்கும் தந்தை -மகன் உறவையும் படிக்க வேண்டுகிறேன் .

    அன்புடன்
    Well said Ravi.
    No more explanation would suit this.
    Best presentation of the esteem of a Father.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #1589
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 151
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்



    சரியாக புரிந்து கொள்ளாமல் வளரும் உறவு இது - 10 வயது வரை அப்பாதான் நமக்கு ஹீரோ - வயது மாறும் போது - உறவுகளின் அர்த்தங்கள் திரிக்கப்படுகின்றன -- ஹீரோவாகத் தெரிந்தவன் , ஒரு உதாரண புருஷனாகத்தெரிபவன் , ஒரு தடையாக தெரிகிறான் - இந்த தவறான அர்த்தங்கள் 30 வயது வரை ஏன் அதற்க்கு மேலும் தொடர்கின்றன .... இதே மகன் 40யை தொட்டவுடன் , தானும் ஒரு குழந்தைக்கு தந்தையானவுடன் , தன் தந்தையின் பெருமைகளை உணர ஆரம்பிக்கிறான் .... மீண்டும் அவன் தந்தை அவனுக்கு ஒரு ஹீரோ வாகத் தெரிய ஆரம்பிக்கிறான் .... இந்த உண்மை சிலருக்கு அவன் தந்தை இருக்கும் போது உணர வாயிப்பு கிடைக்காமலும் போய் விடுகிறது . இனி வரும் பதிவுகளை கீழ்கண்டவாறு பிரித்து ஒரு சின்ன அலசல் செய்யல்லாம் என்று எண்ணுகிறேன் .

    1. தந்தை -மகன் பந்தம் - குழந்தை பருவம்

    2. தந்தை -மகன் பந்தம் - மாணவ பருவம்

    3. தந்தை -மகன் பந்தம் - காதல் பருவம்

    4 .தந்தை -மகன் - முதிய பருவம்

    முதலில் குழந்தை பருவம் :

    என்னவெல்லாம் கனவுகள் - என்னவெல்லாம் பூரிப்புக்கள் - தந்தை என்றவுடன் அவன் மனதில் தான் எத்தனை கர்வம் , ஆனந்தம் - உலகமே அவன் காலடியில் விழுந்து விட்டதைப்போன்ற இன்ப உணர்வு ....... twinkle twinkle little star - how I wonder what you are !! அவன் கனவுகள் நட்ச்சத்திரமாக வானத்தில் ஜொலிக்கின்றது - தன் மகனும் வளர்ந்து ஒரு நட்ச்சத்திரமாக மின்னுவான் என்று மலர்களை போன்று உறங்கும் அந்த கண்களை வருடிவிடுகிறான் ....... கனவுகள் வளர்கின்றன -- காலமும் விரைவாக முன்னோக்கி நகர்கின்றது -------


  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  16. #1590
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 152
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்


    நான்கு குழந்தைகள் - நான்கும் பெண்கள் - ஒரு ராஜ குமாரன் பிறப்பானா என்று எங்கும் இந்த தம்பதிகளின் குமரலுக்கு நாம் ஓர் ஆறுதல் சொல்வோமா ?


  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •