Page 151 of 400 FirstFirst ... 51101141149150151152153161201251 ... LastLast
Results 1,501 to 1,510 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1501
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஒரு மண்ணுக்கும் என்று திருத்து.
    திருத்திக்கொள்கிறேன்
    நீங்கள் என்னை சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லை
    சபை நாகரீகத்தோடு எழுதுங்கள் என்றுதான் சொல்கிறேன்
    படிக்கிறவர்கள் எல்லோரையும் அது புண்படுத்தத்தானே செய்யும்..

    எல்லோரும் எல்லாவற்றையும் ரசிப்பதில்லை. ஆனால் படிக்காமல் இருக்க மாட்டார்கள்
    நீங்கள் என்னையோ யாரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது தெரியும் இருந்தாலும் ஏக வசனம், இரண்டு கால் மிருகங்கள் என்றெல்லாம் சொல்வது நலல்தல்ல. அப்படிப்பார்த்தால் எல்லோருமே இரண்டு கால் மிருகங்கள் தான் உம்மையும் என்னையும் உட்பட

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1502
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அதே போல் உலகப்படங்களை “World Music and Movies” திரியில் நீங்கள் பதிவிட்டுருந்தீர்கள் என்றால் அமோக வரவேற்பு கூட கிடைத்திருக்கும்
    எல்லோரையும் குறை கூறுவது சுலபம் .. மற்றவர்கள் சொல்லும் குறையை ஏற்கவும் வேண்டும் ...

  4. #1503
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணன்,

    என்ன ரொம்ப நாளாக காணவில்லை? விடுமுறை திளைப்பா? வாருங்கள். திரிக்கு சுறுசுறுப்பு தேவை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1504
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kyatapira -2010- Koji Wakamatsu -Japan .

    1)முக்கால் வாசி இந்திய பெண்கள் கேட்கும் கேள்வி, எங்களுக்கு எங்கே ஞாயிறு?போராவது,அமைதியாவது? பெண்களுக்கு எங்கே விடிவு?ஆணை சார்ந்து வாழ்வு என்பது ,அவலத்தை சமூக திணிப்பாக சுமந்து வாழும் , இழிவு,பரிதாபம். இதில் மொழியென்ன,நாடென்ன,இனமென்ன ,மதமென்ன?

    2)ஆண்கள் எப்படியிருந்தாலும் ஏற்றே ஆக வேண்டிய நிலையில் பெண்கள். (படித்து,பொருளாதார பலம் பெற்ற பின்பும் தொடரும் அவலம்).ஒரு தமிழ் நாடகம் நினைவுக்கு வருகிறது. உலகிலேயே அதிகம் தாழ்த்த பட்டது தலித் ஆண்களல்ல, அவர்களால் மேலும் தாழ்த்த படும் தலித்தின் மனைவியே என்று.

    4)புனித போர், போர் நாயகர்கள் என்று உண்டா? போரில் குற்றவாளிகள் மட்டுமேதானே மிஞ்ச முடியும்?

    மேற்கண்ட கருத்துக்களை வலுவூட்டும் விதமாக முகத்தில் காரி உமிழ்ந்து ,அறையும் குரூர அருவருப்புடன் சொன்ன படமே கம்பளி பூச்சி என பொருள் தரும் மேற்சொன்ன படம். படங்களில் அருவருப்பு தன்மையை சுமக்க இயலாத மனம் கொண்டவர்கள் தயவு செய்து பார்க்க கூடாத படம் ,எடோகொவா என்ற எழுத்தாளரின் தடை செய்ய பட்ட சிறுகதையை தழுவிய இப்படம்.
    1930இன் ஜப்பான்-சீன போரின் பின்னணி. குரோகவா என்ற ஜப்பான் லெப்டினன்ட் போரில் பலர் குடலையுருவி,சித்ரவதை தண்டனைகளுக்கு பலரை ஆட்படுத்தி,பல பெண்களை கதற கதற கற்பழித்த பெருமையாளன் .போரில் முகம் சிதைந்து,தொண்டை அறுந்து, கைகால்கள் துண்டு பட்டு, சிறிதே உடல் ,பாதி முகம் என்று ஊரால் போர் கடவுளாக தொழ பட்டு ,பதக்கங்கள் மட்டுமே மிஞ்சின பிண்டம்.அவன் மனைவி தஷாஷியால் அவனை ஏற்க முடியாவிட்டாலும் ,ஊரின் கட்டளைக்கு கட்டு பட்டு அவனை ஏற்று சேவை செய்யும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறாள்.குரோகவாவுக்கு ,மனிதன் என்று சொல்ல மிஞ்சியிருப்பது குரூர வக்கிர உணர்வு,கோபம்,காமம்,பசி. தனக்காக எதுவுமே செய்ய இயலாதவன் சாப்பிடுவது,மல-ஜலம் கழிப்பது உட்பட. மனைவியை வற்புறுத்தி வினோத முறையில் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறான். (அவளை அடித்து துன்புறுத்தி கேவலமாக பில்லையில்லாதவள் என்று தூற்றியிருப்பான் நல்லாயிருந்த காலத்தில்)அவளை கோபமூட்ட, அவள் உடையணிந்து கிளம்பும் போது சிறுநீர் கழிப்பது,சாப்பாட்டை துப்புவது என்று மகா படுத்தல்.பதக்கங்களை ரசிப்பது ஒரே பொழுதுபோக்கு.

    துன்புறும் ,வேதனையுறும் மனைவி, அவன் மறுத்தும் கேளாமல்,ராணுவ உடையை அணிவித்து ,அவனை தள்ளு வண்டியில் ஊர்வலம் போவாள். (என்ன அற்புத பழிவாங்கல்).

    இறுதியில்,தேய்த்தே ,தவழ்ந்து சென்று குட்டையில் உயிர்விடும் பிண்டம். நம் பழங்கால கூத்தில் கட்டியக்காரன் போல,நம் மனசாட்சியாய் ஒரு கோமாளி.

    இந்த மாதிரி படங்களே,போரை வெறுக்க,பெண்ணை சகாவாய் அங்கீகரிக்க நமக்கு கற்று கொடுக்கும்.

    ஒரு சித்ரவதை போன்று நம்மை துடிக்க,துவள வைத்து,மனதை குதறி போடும் படம். ஆனால் முடிவில் ,இன்னும் மேன்மையாக்கும் நம்மை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1505
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இனி பேசி ஒரு புண்ணியமும் இல்லை.
    நீங்கள் தொடருங்கள்
    நான் எனக்குத்தெரிந்ததை தொடருவேன். இந்த கும்பலில் தான் நீங்களும் வந்து எழுதுகிறீர். இதே கும்பலில் நீரும் அடக்கம்..

    இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.. நாம் தூர விலகுவதே நல்லது.

  7. #1506
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ரவி

    உங்கள் கருவின் கரு தொடர் அருமை.
    தாய்மையை போற்றி இப்பொழுது தந்தைக்கு சிறப்பு சேர்க்கும் பதிவுகள் எல்லாம் அருமை.

    எதையும் எதிரிபாக்காமல் பாசத்தை பொழியும் தாய் ஒரு புறம், வாழ்க்கையின் நேர்த்தியை உணர்த்தும் தந்தை ஒரு புறம்
    இருவரும் தியாக சொரூபிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    வாழ்த்துக்கள்.

  8. #1507
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    -deleted with warning-
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1508
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஹ ஹா
    யார் எலி.. உம்மை மாதிரி ஆளுக்கெல்லாம் பயந்து நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை
    மிச்ச மீதியா .. நீர் என்ன சினிமா என்சைக்ளோபீடியா .. பிலிம் நியூஸ் ஆனந்தன் கூட இன்றும் பணிவோடுதான் பேசுகிறார்.
    நீர் ஒன்றுமே இல்லை ஆனாலும் இவ்வளவு ஆணவம், தலைக்கனம் ..
    சிரிப்புத்தான் வருகிறது. உமது எழுத்தில் எப்பொழுதுமே சிறுபிள்ளை சண்டைபிடிப்பது போன்ற பேச்சு ..

    அப்பா நம்மால முடியாது. .. நீர் உண்டு உமது பிதற்றல்கள் உண்டு. இந்த திரி உம்முடையது அல்ல.
    யார் வேண்டுமானாலும் வருவோம் பதிவுகள் போடுவோம்.. படிக்கவில்லை லைக் போடவில்லை என்று நாங்கள் யாரும் இதுவரை புலம்பவில்லை.

  10. #1509
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்

    நைட் டியூட்டி முடித்து வந்து பார்த்தால் இங்கு ஒரு போரே நடந்திருக்கிறது.

    என்ன இது? நான்தான் உங்களிடம் சொல்லி இருந்தேனே! ஒழுங்காகத்தானே பதிவுகள் இட்டுக் கொண்டிருந்தீர்கள்? திடீரென்று ஏன் தடித்த வார்த்தைப் பிரயோகங்கள்? மிருகம், அது இதுவென்று. இது உங்களுக்கே நன்றாய் இருக்கிறதா?

    இங்கு எல்லோரும் சகோதர உணர்வுடன் பதிவுகளை இடுகிறோம். உங்களிடமும் உங்களை அறியாமலேயே அது உண்டு. சில நாட்களுக்கு முன் கூட எல்லோர் பெயர்களையும் குறிப்பிட்டு ஒருவர் விடாமல் பாராட்டியிருந்தீர்கள். இப்போது என்ன வந்தது? ஏன் தேவையே இல்லாமல் இவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம்?

    இப்போது ராஜேஷ்ஜியிடம் மீண்டும் முருங்கை மரம். அதுவும் அத்து மீறிய வசை பாடல். ஏன் இந்த மாதிரி வார்த்தைகள்? அதில் நீங்கள் காணும் லாபம்தான் என்ன? அனைவரும் மிகவும் மனம் புண்பட்டுப் போய் இருக்கின்றனர். நீங்கள் எல்லைகள் மீறி வார்த்தை பிரயோகம் செய்துள்ளீர்கள். அவரவர்களுக்கு தெரிந்ததை ஆத்மசுத்தியுடன், மன திருப்தியுடன் இங்கே பதிவிடுகின்றனர். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை.

    என்னுடைய இந்தப் பதிவுக்கும் என்னை நீங்கள் வசை பாடுவீர்கள் என்று தெரியும். அதைப் பற்றி எனக்கு கவலையோ வருத்தமோ ஏற்படாது. ஆனால் மற்ற பதிவர்கள் என்னைப் போல எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?

    தனிப்பட்ட முறையில் உங்களை நன்றாகப் புரிந்தவன் நான். பொதுத் திரியில் அதே உரிமையை நீங்கள் என்னிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    ஆனால் மற்ற நண்பர்கள் உங்கள் வசவுகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராய் இல்லை. இன்னொன்று. உங்கள் அறிவேதான் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதும் தவறு.

    உங்கள் கோபமும் வார்த்தைகளும் குழந்தைத்தனமானது. நீங்கள் உடனே மறந்து சகஜமாகி விடுவீர்கள். ஆனால் மற்றவர்கள் அது போல இருக்க இயலாது. மாறாத காயமாய் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும். அப்புறம் நீங்கள் நல்லமுறையில் பேசினால் கூட உங்களிடம் நெருங்க விரும்பாமல் தள்ளி விலகியே நிற்பார்கள்.

    உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நண்பர்களிடமிருந்து பின்னூட்டம் வராததற்கு இதுவே முக்கியக் கரணம். ஏன் வீண் வம்பு என்று அனைவரும் ஒதுங்கி விடுகிறார்கள்.

    இதையெல்லாம் நான் சொல்லித்தான் நீங்கள் உணர வேண்டுமா?

    தயவுசெய்து தடித்த வார்த்தைகள் கொண்ட உங்கள் பதிவுகளை நீக்குங்கள். (நீக்கு நீக்கு என்று சொல்லியே நாக்கு மரத்துப் போய் விட்டது) குறிப்பாக மிருகம். உங்கள் பதிவுகளின் மேல், உங்கள் திறமையின் மேல் எல்லோரும் மதிப்பு வைத்துள்ளார்கள்.

    ஆனால் ஒரு நொடியில் அதை நீங்கள் பாழாக்கிக் கொள்கிறீர்கள்.

    யாருமே உங்களை சட்டை செய்யாமல் போனால் அதைவிட கொடுமையான தண்டனை உங்களுக்கு எதுவும் இல்லை. அந்தக் கட்டத்தின் உச்சத்தை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள்.

    நான் சொல்வதை சொல்லி விட்டேன். இனி உங்கள் இஷ்டம். பதிவாளர்களை இப்படி வசை பாடினால் உங்களுக்கு எப்படி பின்னூட்டம் அளிப்பார்கள்?

    நீங்கள் தயவு செய்து இது போன்ற திட்டுதல்களை நிறுத்துங்கள். மேலும் தொடராதீர்கள். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். தயவு செய்து ஹப்பர்களை புண்படுத்தாதீர்கள். எதற்குமே ஒரு எல்லை உண்டு.

    மதுர கானங்கள் சண்டை சச்சரவின்றி ஒரே குடும்பமாக, சகோதரத்துவமாக, நட்பின் சின்னமாக வெற்றி நடை போடும் திரி. அதில் இது போன்ற கரும்புள்ளிப் பதிவுகள் தேவையா? ஜாலியாகக் கலாய்க்கலாம். அளவுடன் கேலிகள் இருக்கலாம் மற்றவர் மனம் புண்படாதவகையில்.

    சரி! நீங்கள் என்னைத் திட்டி பதிவுகள் தொடங்கலாம். ஆனால் பதில் பதிவுகள் வராது. உங்களுடைய எந்த விதமான பதிவிற்கும். நன்றி!

    இப்படிக்கு

    ரெண்டுகால் மிருகங்களில் ஒரு மிருகம்.
    Last edited by vasudevan31355; 29th June 2015 at 07:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes rajeshkrv liked this post
  12. #1510
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராஜேஷ் ,



    புரிகிறது.உன் அறிவின் எல்லை கோடு பிலிம் நியூஸ் ஆனந்தன் . நீயும் அவரோடு அடக்கமாக கடவதாக.த்தூ... உன்னிடம் பேச வந்தேனே?



    வாசு,



    ராஜேஷ் வழிக்கு நான் போவதேயில்லை. ஆனால் சமீப காலங்களில் தேவையில்லா சர்ச்சைகளில் மாட்டி கொள்கிறார். அவர் பாட்டுக்கு பதிவு போட்டு கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை.ஊர் நியாயத்தில் தலையிடும் அளவு இவர் சிறந்த பதிவர் இல்லை. நீ கேட்டதால் சொல்கிறேன். இது கவிஞர்கள் அல்லது கலைஞர்களுக்கு உள்ள license . புரிந்து கொள்ளுங்களேன் முண்டங்களா என்ற அழைப்பு. இது உலகத்தின் மேல் அவர்கள் காட்டும் அக்கறையின் பாற் பட்டதே .தவிர்க்க முயன்று கொண்டே இருக்கிறேன். இது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.(வேண்டுமானால் அது தனி Department).
    ஊர் நியாயத்தில் தலையிட யார் வேண்டுமானாலும் வரலாம். சிறந்த பதிவர் என்று உம்மிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. நீர் பல்கலைக்கழகம் நடத்தவும் இல்லை. பொதுவாக இப்படி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால் அதை கேட்கும் பக்குவமில்லை.. .. வாசு ஜி சொன்னால் தான் கேட்பேன் என்று சொல்ல இது உங்கள் சொந்த பக்கமோ ப்ளாகோ அல்ல. இது பொதுவான ஹப்.
    இனி நான் உம்மை பற்றி பேசப்போவதில்லை. நீரும் என் பெயரையோ என்னைப்பற்றியே பேசவேண்டியதும் இல்லை அந்த உரிமை உமக்கில்லை.
    period. end of discussion

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •