Page 148 of 400 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1471
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    தங்களின் கருவின் கரு தொடர் மிக அருமையாக பயணிக்கிறது.

    விஜியின் பள்ளிப்பருவ சம்பவம் மனதை கனக்க வைத்தது.

    எங்கிருந்து பிடிக்கிறீர்கள், இவ்வளவு பொருத்தமான உண்மைச் சம்பவங்களை?. ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான இணைப்புகள்.

    அற்புதம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை (நானும் முரளி சாரின் தீவிர ரசிகன்)

  2. Thanks uvausan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1472
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    நான் 'மகளுக்காக' படம் பார்த்தபோது இந்தப்பாடல் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. (என்னிடம் ஏ,வி.எம். ராஜனின் தனிப்பாடல்களில் முதலிடம் பாடகர் திலகத்தின் பாடல்களில் 'காசேதான் கடவுளப்பா' , பாலா பாடல்களில் 'திருமகள் தேடிவந்தாள்' )

    ஆனால் உங்கள் பதிவைப்படித்தபின் 'மகளுக்காக' பாடலின் மீதும் சற்று பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் பாடலில் ராஜனை இன்னும் சற்று முதுமையாக காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது.

    நல்ல அருமையான ஆய்வு. சிறப்பான பதிவு.

    ரவி சார்,

    தில்லானாவில் ராஜன் எடுபட்ட காரணம், அவரைப்பேச விடவில்லை. விட்டிருந்தால் இழுத்து இழுத்து பேசி ஒருவழி ஆ(க்)கியிருப்பார். நல்லவேளை ஏ.பி.என்.கடிவாளம் போட்டார்.

  5. Likes kalnayak liked this post
  6. #1473
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ரவி சார்.

    அப்படி அல்ல அது. நீங்கள் வேற ரூட்டில் போய் விட்டீர்கள்.

    இந்தப் படத்தின் உயிர் நாடியே அந்தத் தகப்பன் பாசம்தான். பாடலில் அது இன்னும் பிரதிபலிக்கும்.

    நீங்கள் கூறிய வரிகளில்

    //தாயின் வாழ்வு முடிந்துபோனால் தந்தைக்கு என்று யாரும் இல்லை
    தந்தை வாழ்வு முடிந்துபோனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - ஒருவராக வாழ்கின்றோம் - பிரிவதர்க்கோ இதயமில்லை -----//

    இதில் மகளைப் பற்றியே வரவில்லையே! (மகளைப் பற்றிய பாடல் என்றாலும்) இது மகளை நடுவில் தெரியாமல், அறியாமல், புரியாமல் பிரிந்து பின்பு வேதனைப்படும் தந்தை புலம்பல். இது வேறு. பிரிவுத் துயரம் மட்டுமே பாடலின் பிரதானம்.

    'யாருமில்லை எனக்கே என்று ஓடி விட்டாய் என் மகளே'

    என்று பின்னாடிதான் வரிகள் வரும்.

    ஆனால் 'மகளுக்காக' படத்தில் பாடலின் வரிகளைக் கவனியுங்கள். ஆரம்பம் முதல் மகளுக்காகவே வாழ்ந்து, மகளுக்காகவே சிறை சென்று, மகளுக்காகவே மடியும் தந்தையின் பாசக்குரல்.

    பாடலின் ஒவ்வொரு வரியையும் மீண்டும் படிக்கவும்.

    பாடல் முழுதுமே மகளைப் பற்றியது. வேறு எதுவுமே இருக்காது.

    ஆகவே வரிகள் முழுதும் மகள் பாசம் மட்டுமே உணர்த்தப்படுவதால் பாடல் சிறந்தது என்று கூறியுள்ளேன். நடிப்பை வைத்தோ கதையை வைத்தோ, நடிகரை வைத்தோ அதைக் கூறவில்லை. அதனால்தான் அப்படிக் கூறினேன்.

    இந்த இடத்தில் நீங்கள் நடிகர் திலகத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டீர்கள் என்று புரிகிறது. பாசத்துக்கு அவர் பாடல்கள்தான் டாப் என்று சொல்ல வருவதும் புரிகிறது. ஆனால் அது வேற டிபார்ட்மெண்ட். அப்படி இருப்பதும் பாராட்டுதலுக்கு உரியதுதான்.

    இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks uvausan thanked for this post
    Likes kalnayak liked this post
  8. #1474
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Want to share this link: 'அண்ணா.. சாப்பிடுங்க..' மருத்துவமனையில் எம்எஸ்விக்கு உணவு ஊட்டிய இளையராஜா!

    Read more at: http://tamil.oneindia.com/news/tamil...al-229734.html
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #1475
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி கல்ஸ். கதை வேண்டாமென்றால் மனது கேட்கவில்லை. பிடித்த படமும் கூட. அதான்! கொஞ்சம் வேலையும் நிறைய வாங்கி விட்டது. ஆனால் இந்தப் பாடல் என்றால் அப்படி ஒரு பைத்தியம்.

    பூவ பூவப் பூவே பாட்டு உங்களுக்கு பிடிபட்ட பின்னணியை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். கல்ஸ்! எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.

    ரெண்டாவது அது என்ன பூவ பூவப் பூவே என்றே புரியவில்லை. பூவே என்றால் சரி. பூவ பூவப் பூவே என்றால் என்ன? இந்த சினிமாக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதி நம் தலையில் கட்டுவார்கள். ரொம்பநாள் எனக்கு இந்தப் பாடல் கூவ கூவ கூவே என்றுதான் விழுந்தது.

    இன்று உங்களால்தான் அது பூவே என்று தெரிந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்புக்கும் நன்றி!
    நன்றி வாசு.

    நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் ஜோதிகா விஷயத்தில். பூவா பூவா பாடலில் ஆடும் ஆட்டம் கேவலம் என்றால் சந்திரமுகி படத்தில் அதை விட. ஜெயா டிவியில் வந்த இளைய ராஜாவின் இன்னிசை மழை நிகழ்ச்சியில் இளையராஜாவே யுவனின் இசை பற்றி நகைச் சுவையாக யுவன் இசை அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொன்னார். நீங்கள் "கூவ கூவ" என்று இந்த பாடலை சொன்னதும் அதுதான் நினைவுக்கு வந்தது. முதன் முதலில் தெளிவாக நான் கேட்டு விட்டதால் எனக்கு பிடித்துப் போனதோ என்னவோ. இல்லை அதை அதிக முறை கேட்டதால் பிடித்ததோ என்னவோ தெரியவில்லை. இந்த பாடலை விட 'சுடிதார் அணிந்து வந்த' என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. #1476
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,

    'மகளுக்காக' பட பாடல் 'இனிமேல் எனக்கென்ன கவலை' பதிவு சுகம். இங்கேயும் உங்கள் 'ஞான'த்தை பார்க்கிறேன். ராஜ்ராஜ் சாருக்கான ஜுகல் பந்தியும் அருமையிலும் அருமை.

    என்ன எங்கள் பதிவுகளுக்கு போட்டியாக நீங்கள் பதிவுகள் இட்டு எல்லோரது துறையிலும் பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரது வாக்குகளையும் நீங்களே வாங்குவது என்று முடிவு செய்து விட்டீர்களா? இல்லை நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களை எழுத வைத்துக் கொண்டு இருக்கிறோமா? எங்கள் பதிவுகளுக்கு உங்கள் பதிவுகள் வலுக் கூட்டுகின்றன. எல்லாமே சுகம். சுபம்.
    Last edited by kalnayak; 27th June 2015 at 08:17 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. #1477
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி உங்கள் பதிவுகளைப் பற்றியும், மற்றவர்களின் பதிவுகளைப் பற்றியும், அடுத்த பூவின் பாடலையும் திங்கட் கிழமை எழுதுகிறேனே.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. Thanks uvausan thanked for this post
  13. #1478
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு நடிப்பு நல்ல பாடலை கொலை பண்ணுமா ?? - ஒரு சின்ன அலசல்



    நல்ல பாடல் - இயற்கையை இந்த பாடல் வர்ணித்த மாதிரி அவ்வளவு அழகாக வேறு எந்த பாடலும் சொன்னதில்லை என்று சொல்லலாம் - பாடியவர் மிகவும் பிரபலமானவர் - எல்லோர் மனதிலும் வசிக்கிறவர் . இசை ராஜா - இசையும் ராஜா தான் - படத்தை டைரக்ட் பண்ணியவர் நம் கோபாலின் நெருங்கிய நண்பர் ...இத்தனை அற்புதங்கள் இருந்தும் தன் முத்திரை பதித்த நடிப்பினால் நம் கண்களை மூடிக்கிகொள்ள வைத்தவர் திரு சரத் பாபு அவர்கள் . பாடலை பாருங்கள் -----

    உணர்ச்சியே இல்லாத முகம் - தேவையே இல்லாத இடத்தில் சிரிப்பு - மலைச்சரிவுகளில் சில இடங்களில் நேர் பாதைகளும் வரக்கூடும் - அங்கே 360 டிகிரி யில் வலது புறம் steering யை திருப்புவார் , உடனே நேரே செல்லும் அதே பாதையில் 360 டிகிரி யில் streeing யை இடது பக்கம் திரும்புவார் - பார்வை மலைகளின் பக்கம் இருக்கும் - ரோடில் இருக்காது - இரண்டும் பக்கம் streeing யை த் திருப்பியும் வண்டி நேராக ஓடும் --- இவரது சேட்டைகளைக்கண்டு பின்னே உட்காந்திருக்கும் பெண்கள் கூட்டம் எப்படி வண்டியிலிருந்து குதிக்காமல் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை .... ஆடியோ வில் கேட்க்க வேண்டிய பாடலை TV யில் பார்த்துவிட்டோமே என்ற மன வருத்தத்துடன் டிவி யை நிறுத்தினேன் ( இன்று டிவி யில் முள்ளும் மலரும் )

    வாசு சார் - AVMR யை சற்றே நினைத்துப்பார்த்தேன் சரத் பாபு இடத்தில் -- சரத் பாபு நன்றாகவே பண்ணியுள்ளார் என்றே தோன்றுகிறது .

    இப்படி பல பாடல்கள் பல நடிகர்களால் கொலை செய்யப்பட்டுள்ளன - இன்னுமொரு உதாரணம் - மதுரையில் பறந்த மீன் கொடியை ---------

    இதற்கென்றே ஒரு புதிய திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் -----

  14. #1479
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Good Morning from San Francisco,CA. I will be here for the next three weeks !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. #1480
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அங்கிள் வெகேஷன் எஞ்ஜாய் செய்யுங்கள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •