Page 144 of 400 FirstFirst ... 4494134142143144145146154194244 ... LastLast
Results 1,431 to 1,440 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1431
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வாருங்கள் கடலூர் நண்பர் கல்நாயக் அவர்களே! தங்கள் பூப்பதிவுகளை தொடர்ந்து தருக. இனி இடைவெளி விட்டால் உரிமையுடன் கோபித்துக் கொள்வேன். சரியா?
    வாசு, உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக.

    இரு மலர்கள் பக்கெட் நன்றாக இருக்கிறது.

    பூவின் பாடல் அடுத்த பதிவில்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1432
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'திருப்பம்' படத்தின் ஸ்டில் 'தங்கப்பதக்கம்' என்று தவறாக 'சினிமா எக்ஸ்ப்ரஸ்' இதழில் (15 மே 1996) குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு தரம் பத்திரிகை நடத்தும் நிர்வாகிகள் கவனிக்கவே மாட்டார்களா? அதுவும் நடிகர் திலகம் என்றால் கேட்கவே வேண்டாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes kalnayak, RAGHAVENDRA liked this post
  5. #1433
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    வாசு, உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக.
    கடலூர் பெருமை கொள்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1434
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes Russellmai liked this post
  8. #1435
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 25: "பூவ பூவ பூவ பூவப் பூவே பூவ பூவ பூவ பூவப் பூவே"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~

    திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பதை மக்கள் குறைத்து விட்டிருந்த நேரம். பாடல்கள் கேசட்டுகளில் வருவதுடன், சீடி மற்றும் டீவீடிக்களில் நல்ல விற்பனையில் சென்று கொண்டிருந்த காலம். எங்கிருந்தோ காற்றின் வழியே வந்த இந்த பாடல் என்னை கவனம் ஈர்த்த கணம், நான் கடலூரில் இருந்து பாண்டிக்கு சென்று கொண்டிருந்தேன். அருகில் இருந்த எனது சகோதரன் (கசின்) சொன்னான் "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்று புதுப்படம், "பாட்டெல்லாம் கேட்டுப் பார்க்கலாம்" என்றான். யார் படம் என்று கேட்டேன். சூரியா நடித்தது, வசந்த் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜ இசை என்றான். கேசட் வாங்கி கேட்டுப் பார்த்தேன். எனக்கு நன்றாகவே பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்திருக்கும்.

    நக்மா நடித்து முடித்து இன்னொரு தங்கையும் நடித்து முடித்திருந்த காலம். இந்தியில் காதலுக்கு மரியாதையில் நடித்த நக்மாவின் இளைய சகோதரி இதில் அறிமுகம் என்றறிந்தேன். அவரே அஜித்தின் 'வாலி'யிலும் சிறிய பாத்திரம். பின்பு அவரே சூரியாவின் மனைவியாக ஆகி இப்போது '36 வயதினிலே' ஆனது காலம் உருவாக்கிய வரலாறு.

    'பூவெல்லாம் கேட்டுப்பார்' ஒரே கதையை பலர் மறு உருவாக்கம் செய்த படம்தான். இது இயக்குனர் வசந்த்தின் பார்வையில். இதை தொலைக்காட்சியில்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க முடிந்தது. பாடல் முழுவதும் பல பூக்களைக் காட்டுகிறார்கள். என்ன சொல்வது, ஜோதிகா துள்ளிக்குதித்து, பல உடற்பயிற்சிகள் செய்து நடனமாடி பூக்களிடம் அவ்வப்போது சில கேள்விகள் கேட்கிறார்கள். அவ்வப்போது பூக்களுக்கெல்லாம் ஒரே பாராட்டு மழைதான். மற்றபடி பாட்டுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. கேட்கவும் நன்றாகவே இருக்கிறது.

    பாடியது யார்? யாராவது கேட்பீர்களோ இல்லையோ. சொல்லிவிடுகிறேன். நித்யஸ்ரீ மகாதேவன்.



    poova poova poova poova poove(3)
    poova poova poove

    poove undhan maeniyil aedho oru vaasanai
    neeyum kooda kadhal kondaayo?
    poova poova poova poova poove(3)
    poova poova poove

    ovoru naaLum oru azhagil poothu nee kulinginaai
    vanna vanna idhazhgalai ellam enge nee vaanginaai?
    poova poova poova poova poove(3)
    poova poova poove

    vannagalodu malarugiraai vasanaiyodu vaazhugiraai
    parithidum pozhudilum sirikindraai
    poove siru poove unai pol vaazhndidum vaazhkaye vendume
    nee oru naaLil ulagai aaLum raani
    needhaane endrum ennakku nalla thozhi

    poove undhan maeniyil aedho oru vaasanai
    neeyum kooda kadhal kondaayo?
    poova poova poova poova poove(3)
    poova poova poove

    vasandham vandha saedhiyinai vandukku eppadi solvayo?
    vannathila vaasathila irandiluma?
    thaenai nee thandhu edhai nee peruvai poove poove
    un thaegam theendi parandhu sendra vandu
    pira poovai paarthal kobam unnakku varuma?

    poove undhan maeniyil aedho oru vaasanai
    neeyum kooda kadhal kondaayo?
    poova poova poova poova poove(3)
    poova poova poove

    poove undhan maeniyil aedho oru vaasanai
    neeyum kooda kadhal kondaayo?
    poova poova poova poova poove(3)
    poova poova poove

    இதற்கு ஆண் குரல் பாடல் ஒன்றும் உண்டு. பாடியவர் உண்ணிக்கிருஷ்ணன். இத்திரைப் படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதியவர் கவிஞர் பழனி பாரதி
    Last edited by kalnayak; 26th June 2015 at 10:39 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #1436
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்நாயக் சார்
    அத்திப்பூத்தாற்போல வராமல் தொடர்ந்து அன்றாடம் மலரும் மலர்களாய் இங்கு பங்கெடுத்து பூக்களிலிருந்து தேனெடுத்துத் தாருங்கள் என வேண்டுகிறேன்.
    கடந்த பல ஆண்டுகளில் உள்ளத்தைத் தொடும் பாடல்களாய் அமைந்திருந்தவற்றுள் இப்பாடலுக்கு இடம் உண்டு. இதுபோல் இன்னும் பாடல்களைப் பகிர்ந்து கொள்க.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks kalnayak thanked for this post
  11. #1437
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குமார் சார்
    சற்று நேரத்திற்கு முன் தான் நடிகர் திலகத்தை மனதில் வைத்து உருவ அமைப்பை வடித்து சமர்ப்பணம் படத்தில் நடிகர் விஜயகுமாரை இயக்குநர் நடிக்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தேன். இதே அடிப்படையில் மாஸ்டர் பிரபாகரை நடிகர் திலகத்தின் இளவயது உருவகமாகவே அமைத்திருந்தார் ஏபி.என். அவர்கள். வா ராஜா வா படம் முழுதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மாஸ்டர் பிரபாகரின் ஒவ்வொரு அசைவையும் நடிகர் திலகத்தை மனதில் வைத்தே செதுக்கியிருந்தார் இயக்குநர். உண்மை எது பொய் எது பாடலில் முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழியைப் புகுத்தி மாஸ்டர் பிரபாகரை நடிக்க வைத்திருந்ததை இப்பாடலில் நாம் காணலாம்.

    நடிகர் திலகத்தை நினைவூட்டும் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai, kalnayak liked this post
  13. #1438
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    சமர்ப்பணம் பாடல் காணொளிக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களுக்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு உளமார்ந்த நன்றி, தரவேற்றிய நண்பருக்கும் தங்களுக்கும்.

    இந்நாளைய தகப்பன் பிள்ளை உறவு முறை பற்றிய தங்கள் கருத்து நெஞ்சைத் தொடுவதாக உள்ளது.

    இருமலர்கள். .. ஆஹா.... அட்டகாசம்...

    தலைவர் இல்லாமல் வாசுவின் பதிவா.. தூள் கிளப்புங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #1439
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    மிக மிக ஸ்பெஷல் பதிவு



    (நெடுந்தொடர்)

    12

    'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்'

    பாலா தொடரில் அடுத்து வருவது 'வீட்டுக்கு வீடு' (1970) செம ஜாலி காமெடிப் படம்.



    ஜெய், லஷ்மி, முத்துராமன், 'வெண்ணிற ஆடை' நிர்மலா, நாகேஷ், வி.கே.ஆர், மேஜர் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி' என்று நட்சத்திரக் கும்பல். நகைச்சுவைக் கும்பல். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கென்றே எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடிய படமும் கூட.


    துணிச்சல் பெண்ணான லஷ்மி அப்பாவுக்குப் பயந்த கோழையான பணக்கார ஜெய்யைக் கல்யாணம் செய்து கொள்கிறார். இருவரும் முத்துராமன் வீட்டிற்கு குடித்தனம் வருகின்றனர். அங்கு லஷ்மியின் தோழி நிர்மலா அவர் கணவர் முத்துவால் கொடுமைப் படுத்தப்பட, அதைக் கண்டு லஷ்மி கொதித்து தோழியின் வாழ்விற்காக குரல் கொடுத்து போராட ஆரம்பிக்கிறார்.

    நிர்மலாவின் ஒரே ஆதரவான பெரியப்பா (முத்துவின் லட்சணம் தெரிந்தவர்) திடீரென வெளியூரில் இறக்க நேரிட, அவர் இறக்கும் தருவாயில் தன்னிடமுள்ள ரூபாய் இரண்டு லட்சத்தை மகள் நிர்மலாவுக்குத் தரும்படி மானேஜர் வி.கே.ஆரிடம் சொல்லி விட்டு இறக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன். (முத்து மேல் நம்பிக்கை இல்லாததால்)
    .
    முத்துவும் நிர்மலாவும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான், அதை மானேஜர் வி.கே.ஆர் சில நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி கண்ணால் பார்த்து ஓ.கே சொன்னால்தான் பணம் நிர்மலாவிற்கு சேரும்.
    அப்படி ஒரு கண்டிஷன்.

    ஆனால் அது நடக்க சாத்தியமில்லாமல் முத்து கெட்ட பழக்கங்களுடன் ஒரு பெண்ணிடம் வேறு அடிமைப்பட்டுக் கிடக்கிறார். முத்துராமன் இல்லாத சூழ்நிலையில் நிர்மலாவின் நல்வாழ்விற்காக வேண்டி லஷ்மி தன் கணவனான ஜெயசங்கரை நிர்மலாவின் கணவன் என்று வி.கே.ஆரிடம் பொய் சொல்லி நாடகமாட வேண்டிய கட்டாயம். நேரம்.. சூழ்நிலை.

    அதை நம்பும் வி.கே.ஆரும் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்துவதைப் பார்த்துவிட்டுத்தான் பணத்தைத் தர முடியும் என்று சில நாட்கள் அங்கேயே தங்கியும் விடுகிறார். உடன் அவரின் உருப்படாத மகன் கிடார் நாகேஷ். வி.கே.ஆர் முன்னால் தர்ம சங்கடத்துடன் லஷ்மியின் கட்டாயத்தின் பேரில் ஜெய், நிர்மலா பல்லைக் கடித்துக் கொண்டு கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.

    வெளியே தங்கியிருக்கும் முத்துராமனிடம் பணம் கிடைக்கப் போகும் விஷயத்தைச் சொல்லி லஷ்மி, ஜெய் இருவரும் அவரை வீட்டிற்குக் கூட்டிவருகின்றனர். இப்போது முத்து லஷ்மியின் கணவனாக நடிக்க வேண்டும்.

    ஜோடி மாறி பணத்துக்காக கள்ள நாடகம். ஆனால் நல்ல நாடகம். நல்லதுக்காக நாடகம். ஜோடிகள் வி.கே.ஆருக்காக மாறி மாறி வேடம் போடுவதும் வி.கே.ஆர் ஏமாந்த சமயத்தில் ஒரிஜினல் கணவன் மனைவி ஒன்று சேர்வதுமாக கும்மாளக் கதை. இதை நாகேஷ் கண்டுபிடித்து விட்டு தந்தை வி.கே.ஆரிடம் நிரூபிக்கப்படும் பாடு மீதி கதை. லஷ்மியை ஒருதலையாய் பேயாய்க் காதலிப்பதும் இடைச் செருகல். இறுதியில் எல்லாக் குழப்பமும் முடிந்து சுபம்.

    கலகலவென்று நகரும் படம். ஒரு இடம் கூட சலிப்புத் தட்டாது. நடிகர்கள் அனைவரும் நல்ல காமெடி ஒத்துழைப்பு.

    இதே படத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து பின்னால் ராமநாராயணன் 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' என்று ஒரு கூத்து எடுத்தார் ராம்கி, விந்தியா, விவேக், ரோஜா, கோவை சரளா கும்பலுடன்.




    லஷ்மி

    'டாண்.. டாண்' வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. அலட்சிய நடிப்பு கொடி கட்டுகிறது.

    நிர்மலா

    பரிதாபமான முத்துவின் மனைவி. கணவனே கண் கண்ட தெய்வம் அவன் கொடுமைக் காரனாய் இருந்தும்.

    ஜெய்

    பயந்தாங்கொள்ளிக் கணவன். லஷ்மியின் ஜோடி. அடுப்பங்கரை நளன். இடுப்பில் புடவை போல் தூக்கிக் சொருகப்பட்ட வேட்டியுடன் கரண்டியும் கையுமாய் மனிதர் செமையாய் சமையல் அமர்க்களம்.

    முத்துராமன்

    குடி கூத்தி, சீட்டாட்டம், ரேஸ் அத்தனைக்கும் அதிபதி. நிர்மலாவை நிர்மூலமாக்கும் கணவர்.

    வி.கே.ஆர்

    கண்காணிப்பு குடுமி மானேஜர். பிள்ளை நாகேஷின் தொல்லைகளை ஹேண்டில் பண்ணும் விதமே தனி. சரளமான காமெடி டயலாக்ஸ் சகட்டு மேனிக்கு. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல். ('சங்கீத மழை' "மழையிலேயே பாடுவானோ?!!)



    நாகேஷ்

    உண்மை நாயகர். 'சங்கீத மழை' பட்டு பாகவதர். கிடார் வைத்து கிடுகிடுக்க வைப்பார் காமெடியில். ஜோடிகள் மாறுவதைக் கண்ணால் கண்டு 'ம்ம். மாட்டிகிட்டான்'...'ம்ம். மாட்டிகிட்டான்' என்று சொல்லி தந்தையை தடுமாறச் செய்வது ஒன்றே போதும்,.

    மேஜர்

    வழக்கமான பணக்காரத் தந்தை. ஜெய்க்கு.

    'மேஜிக்' ராதிகாவும் உண்டு கவர்ச்சிக்காக.



    சி.சுந்தரம் அளிக்கும் பாபு மூவிஸ் 'வீட்டுக்கு வீடு'. கவிஞரின் பாடல்களுக்கு அற்புதமான இசை தந்தவர் 'மெல்லிசை மன்னர்'.

    சுசீலா, ராட்சஸி, சாய்பாபா, பாலா பாடல்களைப் பாடியிருப்பார்கள்.

    ஒளிப்பதிவை கர்ணனும், பாஸ்கர் ராவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    கதை வசனம் காமெடி கோபு. அன்றைய 'கிரேஸி' மோகன்.

    இயக்கம் சி.வி.ராஜேந்திரன். தெளிவான, குழப்பமான திரைக்கதைக்கு குழப்பமில்லாத அம்சமான இயக்கம்.

    இயக்கத்தில் இவர் 'ராஜா'


    'நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி',

    சாய்பாபாவின் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' (நான் இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை)

    'நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே' (ராட்சஸி)

    'தொட்டுத் தொட்டுப் பார்த்தால்' (சுசீலா அமர்க்களம்)

    போன்ற அமர்க்களமான பாடல்கள்.

    இப்போது தொடரில் பார்க்கப் போவது பாலா, ராட்சஸி இணைவில் யாரும் இணையே செய்ய முடியாத ஒரு அற்புதப் பாடல்.

    'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு'




    லஷ்மி, ஜெய் இருவரின் டூயட்.

    தொடை நடுங்கி ஜெய் அடுத்தவர்களுக்கு பயந்து பயந்து, லஷ்மியை ஒளிந்து ஒளிந்து காதலிக்க, துணிவோடு லஷ்மி வெளியே வந்து துள்ளாட்டம் போடுவார். லஷ்மி மிக எளிய நைலக்ஸ் சேலை அணிந்து தலை நிறைய கனகாம்பரம் வைத்திருப்பார். ஜேம்ஸ்பாண்டுக்கும் ஜே!

    'லாலாலாலால்லா' என்று லஷ்மி ஈஸ்வரியின் குரலில் பாடலை உற்சாகமாய்த் தொடங்க, பயந்து ஒளிந்தபடி ஜெய் 'ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்' என்றபடி 'மாட்டேன்' என்று முரண்டுபிடிக்க, ரகளையாய் பாடல் ஆரம்பிக்கும். கவிஞரின் தமிழ் வரிகள் அமுதமோ அமுதம்.


    'லாலாலாலால்லா

    ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்

    லாலாலாலால்லா

    ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்

    லா... லா...

    அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு
    அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு

    நங்கை இவளிடம் நவரசம் பழகிய
    உங்கள் முகம் அதிசயக் கனவு
    நங்கை இவளிடம் நவரசம் பழகிய
    உங்கள் முகம் அதிசயக் கனவு

    நவரச நிலவு

    அதிசயக் கனவு

    நவரச நிலவு

    அதிசயக் கனவு

    பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
    பறவை பறக்கும் அழகோ
    தேவியின் வெண்ணிற மேனியில்
    விளையாடும் பொன்னழகு

    லாலால்லா..லாலா...லாலால்லா

    பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
    பறவை பறக்கும் அழகோ
    தேவியின் வெண்ணிற மேனியில்
    விளையாடும் பொன்னழகு

    மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
    மயங்கி களிக்கும் அழகோ
    காதலின் ஆனந்த போதையில்
    உறவாடும் உன் அழகு

    லாலால்லா..லாலா...லாலால்லா

    மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
    மயங்கி களிக்கும் அழகோ
    காதலின் ஆனந்த போதையில்
    உறவாடும் உன் அழகு

    கற்பனை அற்புதம்

    காதலே ஓவியம்

    தொட்டதும் பட்டதும்

    தோன்றுமே காவியம்

    கற்பனை அற்புதம்

    காதலே ஓவியம்

    தொட்டதும் பட்டதும்

    தோன்றுமே காவியம்

    அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு

    நங்கை இவளிடம் நவரசம் பழகிய
    உங்கள் முகம் அதிசயக் கனவு

    தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
    என தேடி அணைக்கும் அழகே
    மைவிழி நாடகப் பார்வையில்
    கதை நாளும் சொல்லிவிடு

    பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
    பருவ கால இசையே
    பார்த்தது மட்டும் போதுமா
    ஒரு பாடம் சொல்லிவிடு

    வந்தது கொஞ்சமே

    வருவதோ ஆயிரம்

    ஒவ்வொரு நினைவிலும்

    உலகமே நம்மிடம்

    அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு

    நங்கை இவளிடம் நவரசம் பழகிய
    உங்கள் முகம் அதிசயக் கனவு

    ஹோய் நவரச நிலவு

    ஹோ அதிசயக் கனவு

    ஹாங் நவரச நிலவு

    அ தி சயக் கனவு

    அடா! அடா! அடா! என்ன பாடல்! பாலாவும் ராட்சஸியும் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள் இந்தப் பாடலை. பாலாவின் அந்த அலட்சிய குரல் பாவங்கள்...ஏற்ற இறக்கங்கள்.

    'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
    நங்கை முகம் நவரச நிலவு'


    எட்டு வார்த்தைகளையும் ஒரே சமயத்தில் ஒன்றாக்கி அவர் கொஞ்சும் வித்தையை மிஞ்ச வேறு யார்?

    அதற்கு ஈடு கொடுக்கும் ஈஸ்வரியின் வித்தை ஜாலங்கள்.
    (லாலால்லா..லாலா...லாலால்லா)

    'கற்பனை அற்புதம்' என்று பாலா ஆரம்பித்து பின் அதையே திரும்ப இன்னும் பேஸ் வாய்ஸில் அழுத்தமாய்க் கொடுப்பாரே. இது கற்பனையையும் மீறிய அற்புதம் அல்லவா? 'மைவிழி நாடகப் பார்வையில்' எனும் போது 'மைவிழி'யை இவர் உச்சரிக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.

    இரண்டாவது சரணத்தில் வரும் 'வந்தது கொஞ்சமே' முதல் சரணத்தின் 'கற்பனை அற்புதம்' போல ரிப்பீட் ஆகாமல் நமக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சும். இன்னொரு முறை பாலா திரும்ப பாட மாட்டாரா என்று மனம் ஏங்கும். அவ்வளவு ஏன்?... கோபமே கூட வரும்.

    பாடல் முடியும் போது இவர் 'ஹோய்.. நவரச நிலவு' என்று கொஞ்ச, ராட்சஸி அது பங்கிற்கு 'ஹோ... அதிசயக் கனவு' என்று பதில் கொஞ்சல் கொஞ்ச,

    இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நாம் கெஞ்ச,

    உலகத்தின் இன்பத்தை எல்லாம் ஒன்றாக்கித் தரும் பாடல்.

    பாலாவின் வைரக் கிரீடத்தில் ஒரு மாணிக்கம் இந்தப் பாடல் என்று நன் கூற மாட்டேன்.

    வைரக் கிரீடமே இந்தப் பாடல் என்றுதான் கூறுவேன்.

    'மெல்லிசை மன்னர்' வீடு கட்டி அடிப்பார்.


    பாடலின் ஆரம்பத்தில் உன்னிப்பாகக் கேளுங்கள். 'அங்கம் புதுவிதம்' என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் விசு ஒரு அருமையான சங்கதி பின்னணி கொடுத்திருப்பார். அப்படியே நடிகர் திலகத்தின் 'சிவந்த மண்' படத்தின் 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலின் துவக்கத்தில் அந்த சங்கதியை ஒரு 70% அப்படியே உணரலாம்.

    Last edited by vasudevan31355; 26th June 2015 at 03:00 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks Richardsof thanked for this post
    Likes Russellmai, kalnayak, adiram, RAGHAVENDRA liked this post
  17. #1440
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

    கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.

    வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.

    வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    அன்புடன்

    வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!

  18. Likes Russellmai, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •