Page 139 of 400 FirstFirst ... 3989129137138139140141149189239 ... LastLast
Results 1,381 to 1,390 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1381
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதிராம்
    தங்களின் தந்தையாாரின் நினைவுகள் தங்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளவை. அதனால் தான் தங்கள் எழுத்தில் அவை உயிர் பெற்று அனைவருக்குள்ளும் ஊடுருவும் சக்தியைப் பெறுகின்றன. நெஞ்சைத் தொடும் நெகிழ்வினை ஊட்டுவது தாயாரின் நினைவு மட்டுமல்ல, தந்தையாரின் நினைவும் தான்.
    தங்களின் உள்ளம் உருக்கும் பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks adiram thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1382
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஆனால் தந்தைக்குப் பின் ...
    ஈடு செய்ய முடியாத அன்பும் பாசமும் அதனையும் மீறி, தன் பிள்ளையை ஒரு மனிதனாக உருவாக்குவதில், அவனை சுயமாக நிற்க வைப்பதில் ஒரு தந்தையின் கடமை உணர்ச்சியும் ஈடுபாடும் அக்கறையும் யாராலும் தர முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ரவி எடுத்துள்ள இந்த கருவின் கரு தொடரில் தந்தையின் பங்கு பற்றிய பாகத்தில் தங்களின் தாய்க்குப் பின் தாரம் பாடல் தேர்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    அதே போல்,
    ரோஷமான் திரைப்படத்தைப் பற்றிய கோபாலின் பதிவிற்கு துணைப்பதிவுகளாய்த் தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் நிழற்படங்கள் அமைந்து வலுவூட்டியுள்ளன.
    தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks uvausan thanked for this post
  6. #1383
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    கலைஞர் கருணாநிதி ஒரு உதாரணக்கதை சொல்வார். மழை கொட்டும் காலங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழுது, பயிரிட்டு, சில நாட்களில் அறுவடை செய்து தங்கள் உழைப்பின் பலனான நெல் மூட்டைகளில் சாய்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த வளத்தைத் தந்த மேகத்துக்கு நன்றி சொல்ல அண்ணாந்து பார்க்குபோது அங்கே மேகங்கள் இருக்காது, நீலவானம் வெறிச்சோடி இருக்கும்.

    இன்று ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கிறேன். அனுபவிக்க என் தந்தை இல்லை. தாயின் வடிவில் என் தந்தையையும் பார்க்கிறேன்.
    திரு ஆதிராம் - அருமையான வரிகள் - பொன்தட்டில் பதிக்க வேண்டியவைகள் . இதே நிலையில் தான் நானும் இன்று இருக்கிறேன் - சென்னையில் triplicane அருகில் உள்ள Akbar Sahib Street இல் 1 BHK ஹௌசில் என் பெற்றோர்கள் குடியிருந்தனர் . வந்து போகும் நண்பர்களும் , உறவினர்களும் மிகவும் அதிகம் - நான் படிக்க வேண்டும் என்பதில் என் தந்தை எடுத்துக்கொண்ட முயற்ச்சிகள் , செய்த தியாகங்கள் - இவற்றைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் . எது கேட்டாலும் வாங்கித்தருவார் - இத்தனைக்கும் வீடு முழுவதும் கடன் . தான் பட்ட கஷ்ட்டங்கள் எதையுமே என்னை நினைத்துப்பார்க்க கூட என் தந்தை அனுமதிக்க வில்லை . முதல் தடவை நான் என் சம்பளத்தில் ஒரு பெரிய வீடு வாங்கியதும் என் அப்பாவிற்கு என்று தனி அறை தர வேண்டும் - அவர் பெயரை வீட்டுக்கு வைக்க வேண்டும் -- இவ்வளவு ஆசைகளுடன் படித்தேன் -- வீடு வாங்கினேன் , நினைத்ததற்கும் பெரிதாக - அப்பாவின் போட்டோ வைத்தான் மாட்ட முடிந்தது ... லிவர் Cirrhosis அப்பாவை யாருக்கும் தெரிவிக்காமலேயே தன்னுடன் அழைத்துச்சென்று விட்டது -------

  7. Thanks rajeshkrv, adiram thanked for this post
  8. #1384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    அகிரா குரோஸவா ஆசிய கண்டத்தைச் சார்ந்தவர் என்றாலும் உலக அளவில் அவருடைய சிறப்பைப் போற்றும் மனப்பான்மை அமெரிக்கர்களுக்கு இருந்தது வியப்பிற்குரிய விஷயம். இனவெறி, நிறவெறி போன்றவற்றையெல்லாம் கடந்து அமெரிக்காவிலும் அவருடைய புகழ் பரவியது அவருடைய படைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

    குரோஸவா ... உலகின் இரண்டாம் மிக நீளமான திரைப்படத்தைப் படைத்த பெருமையையும் தன்னுடைய ரன் படத்தின் மூலம் பெற்றவர். 9 மணி நேரம் அப்படம் நீண்டது. அதைவிட ஜெர்மனியின் ஹெய்மத் திரைப்படம் நீளமாக 16 மணி நேரம் ஓடியது. இவையிரண்டும் Feature Film வகையறாவைச் சார்ந்தவை. இவையன்றி பரீட்சார்த்தத் திரைப்படங்கள் நேரம் காலம் கணக்கின்றி நாள் கணக்கிலும் நீண்டிருக்கின்றன.

    ஆனால் 9 மணி நேரமானாலும் தொய்வின்றி ரன் படத்தை எடுத்துச் சென்றிருப்பார் குரோஸவா. இருந்தாலும் தன்னுடைய முத்திரையைப் பதிக்காமல் விடவில்லை.

    இது போன்ற இன்னும் பல இயக்குநர்கள் பற்றி நாம் விவாதிக்கலாம். நெஞ்சம் மறப்பதில்லை திரியில் இயக்குநர்களைப் பற்றியும் நாம் எடுத்துக் கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes vasudevan31355 liked this post
  10. #1385
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள ராஜேஷ் ,

    வணக்கும் . உங்கள் " திரையில் பக்தி " எழுதிக்கொண்டது . நலம் . நலமறிய ஆவல் . ஒன்றிண்டு பதிவுகள் என்னை போட வைத்தீர்கள் - பிறகு உங்களை காண வில்லை . குறுகிய பதிவுகள் " திரையில் பக்தி " குறைந்துகொண்டு வருகிறது என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றதா ? எனக்கு புரியவில்லை .. உங்கள் எழுத்து வண்ணத்தில் கருவின் கரு என்ற தலைப்பில் யாரோ இங்கு ஒருவர் எழுதுகிறாராமே - அவரை எண்ணிக்கையில் மிஞ்சிவிடும் அளவிற்கு பதிவுகள் வரும் என்று உங்களிடம் தஞ்சம் புகுந்தேன் - நீங்கள் என்னை சரியாக , வேகமாக உபயோகிக்காதது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது .... சீக்கிரம் வந்து என்னை உற்ச்சாகப்படுத்துங்கள் ..

    இப்படிக்கு உங்கள்
    "திரையில் பக்தி "

  11. #1386
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதிராம்,



    அப்படியே தந்தை உயிரோடு இருந்தாலும் லட்ச லட்சமாக மகன்கள் தந்தைக்கு கனகாபிஷேகம் செய்து விட போகிறார்களாக்கும். எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை குறை பட்டு கொண்டது. அமெரிக்கா போனப்புறம் இவங்களுக்கு பிசுனாரிதனம் அதிகமாயிடுச்சு. 50 டாலர் அனிப்பிச்சுட்டு ,ஏதோ பெரிய தொகை போல ஆறுமாசம் அனத்துறாங்க. இந்த பாவனை உருகல்களில் 1% உண்மையிருந்தால் கூட கண்ணீர் கதைகள் எவ்வளவு குறைந்திருக்கும். என்னவோ எழுதி பார்க்க நல்லாயிருக்கு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #1387
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இந்தியர்கள் ,வறுமையை தேசிய பெருமையாக கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் முக்கால்வாசி தாய் தந்தையர் எந்தவித accountability இல்லாமல் பிள்ளை பெறுவதை ஒரு விலங்குகளின் கடமை போல செய்து ,ஒரு இலட்சியமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்தவர்களே.



    எனக்கு தெரிந்து ஒரு தந்தை (நிறைய தந்தைகள் .ஒரு உதாரணம்),ஒரு வேலைக்கும் ஒழுங்காக போகாமல் வாய் சவடாலில் காலம் தள்ளியவர்.(என்னை வேலைக்கு வைக்க எவனுக்குமே தகுதியில்லை ரீதியில்).பிற ஜாதிகளை பற்றி துச்சமாக பேசுபவர். ஐந்து பெண்கள். வெளிநாட்டிலிருந்த மனைவியின் தம்பி தயவில் ,சுமாராக படித்த ஒரு மகனுக்கு வேலை கிடைத்து, அவன் சகோதரிகளை கரையேற்றினான்.



    இவ்வளவு உதவாக்கரையான தந்தைக்கு ,மிக பெரிய அளவில் மகாராஜாக்கள் லெவெலுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி கொள்ளும் ஆசை. நான் அந்த நண்பனுக்கு சொன்ன அறிவுரை. உன் அப்பனை உட்கார வைத்து அறுபது பழைய செருப்புகளை கோர்த்து செருப்பு மாலை போடு.(ஒன்றை நான் இலவசமாக தருகிறேன்). மிக நெருங்கிய நண்பனான அவன், என்ன பெரியவாளை பத்தி இப்படி பேசிட்டேள் என்று பேசுவதை நிறுத்தி விட்டான்.



    இன்னும் கல்யாணம் ஆகாமல் தாய் பெண் ஒருத்தியை வைத்திருக்கும் அவன் சமீபத்தில் என்னிடம் confess பண்ணியது. என் வாழ்க்கையை கெடுத்த அவருக்கு நீங்க சொன்ன மாதிரிதான் பண்ணியிருக்கணும்.



    உதவாக்கரை தகப்பன்களுக்கு தங்க தட்டில் மரியாதை. எம்.ஏ.எம் போன்றவர்களுக்கு மகன்களால் தொல்லை. இந்த முரண்பாட்டை எங்கு போய் சொல்ல???



    இப்படியும் ஒன்றல்ல,இரண்டல்ல,நிறைய........
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #1388
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நண்பர்களே வணக்கம்.

    இடையறாது அலுவலகப் பணியில் முழுகியமையால் திரிக்குக் கூட வரமுடியவில்லை. பலருக்கும் தெரியும் நான் விடுமுறை நாட்களில் (எல்லா ஞாயிறு மற்றும் சில சனிக் கிழமைகள்) எழுதுவதில்லை. அலுவல் நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி படித்து எழுதி வந்தேன். தற்போது அலுவல் மிக அதிகமானதால் படிக்கக் கூட வருவதில்லை. நான் வந்து படித்துக் கூட பல நாட்கள் ஆகி விட்டது. இப்போதும் எனக்கு அவ்வளவாக நேரம் இல்லை. கிடைக்கும் சிறிது நேரத்தில் என்ன படிக்க முடியுமோ படித்து பதில் எழுதுகிறேன். யாராவது என்னை நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வருகிறேன் படித்து விட்டு. நன்றி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. #1389
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி,

    நூற்றுக்கணக்கான பதிவுகளை கருவின் கருவாக தாய் மீது எழுதி முடித்து விட்டு தந்தையைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறீர்கள். இதிலும் நூற்றுக்கணக்கான பதிவுகள் பதிக்க வாழ்த்துக்கள். நவரத்தினம் வியாபாரம் செய்வது குறித்து மகிழ்ச்சி. திரியை கலகலப்பாக கொண்டு செல்வது கண்டு மகிழ்ச்சி. நன்றிகள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. Thanks uvausan thanked for this post
  16. #1390
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நண்பர்களே வணக்கம்.

    இடையறாது அலுவலகப் பணியில் முழுகியமையால் திரிக்குக் கூட வரமுடியவில்லை. பலருக்கும் தெரியும் நான் விடுமுறை நாட்களில் (எல்லா ஞாயிறு மற்றும் சில சனிக் கிழமைகள்) எழுதுவதில்லை. அலுவல் நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி படித்து எழுதி வந்தேன். தற்போது அலுவல் மிக அதிகமானதால் படிக்கக் கூட வருவதில்லை. நான் வந்து படித்துக் கூட பல நாட்கள் ஆகி விட்டது. இப்போதும் எனக்கு அவ்வளவாக நேரம் இல்லை. கிடைக்கும் சிறிது நேரத்தில் என்ன படிக்க முடியுமோ படித்து பதில் எழுதுகிறேன். யாராவது என்னை நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வருகிறேன் படித்து விட்டு. நன்றி.
    அதையேன் கேட்கிறீர்கள் கல்நாயக் ,நீங்கள் இல்லாத போதும் உங்களை சுற்றியே,பற்றியே பேச்சு. என்ன பேச்சு என்பதை படித்து புரிந்து கொள்ளுங்கள்.:-d
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •