Page 13 of 400 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #121
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு கோபால் - பார்த்த , அனுபவித்த சில கசப்பான உண்மைகள் வார்த்தைகளாக ப்ரவாகம் எடுக்கின்றது - புறாவின் வீடு கூட சற்று பெரிதாக இருக்கும் . காற்றே நுழையாத ஒரு எலிப்பொறியை போன்ற இடங்களில் சிலர் தாய்களை அடைத்து வைத்திருக்கும் ஒரு அவலத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது - அதன் பாதிப்புத்தான் இந்த "கருவின் கரு" . மீண்டும் என் நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு ..

  2. Thanks Gopal.s thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #122
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா மோஹினிபற்றிய தகவல்களுக்கு நன்றி.. காதல் பகடை பாலச்சந்தர் சீரியலில் நன்கு நடித்திருப்பார்..

    *
    டின்னர் டயம்..ம்ம் என்னபண்ணலாம்..

    சில நாட்களுக்கு முன் முக நூலில் மோர்க்களிக்குண்டோ இணை என ஒரு தோழி எழுதியிருந்தார்.. எனில் அது தப்பு போங்கு.. என ஒரு பதில் வெண்பா எழுதிப் பார்த்திருந்தேன்..

    வார்த்தால் சிவந்தங்கே வண்ண முறுவலுடன்
    ஆர்ப்பாட்ட மில்லா அழகுடன் – பார்க்கவும்
    பேர்சொலும் தோசையது போலுண்டா சொல்லுங்கள்
    மோர்க்களிக் குண்டு இணை

    அப்புறம் கண்ணா பத்தித் தெரியும் தானே..யார் மனசும் நோகப் படாது எனில்
    நானே எசப்பாட்டுப் பாடிப்பார்த்தேன்..

    மோர்க்களிக் குண்டே இணையென்றே மோனையில்
    வார்க்க இயலாத வாலிப – சோர்ந்துதான்
    போகு மிதயம் பொலிவுறச் செய்வதெது
    ஆ(க்)கும் அவ்வுணவே ஆம்

    ஒடனே அங்கிட்டிருந்துபதில் சட்னி சாம்பார் இல்லாமல் எப்படி தோசை உள்ளே போகுமாம்?

    பதில் சொல்லாமல் இருக்க முடியுமா..

    தொட்டுக்கத் தேவையிலை தோசை முறுவலென்றால்
    அப்படியே சாப்பிடலாம் ஆம்!

    *
    சரிங்க வீ.கா கிட்டக்க இருந்து அழைப்பு வந்துடுத்து.. கிச்சன்ல புதிய வார்ப்புகள் (தோசை) ரெடியாய்டுத்தாம்..

    பின்ன வாரேன்..

    தோசைப் பாட்டுக்கள் நா அச்சமில்லை அச்சமில்லை தான் கையில காசு வாயில தோசை..

    அப்புறம்.. பதினாறு வயதினிலேயில் ஸ்ரீதேவி சொல்லும் வசனம் ஆசை தோசை அப்பளம் வடை

    நிறைய இருக்கு..ஆனா வித்தியாசமான நேர்த்திக்கடன் பாட்டு கேட்க நேர்ந்தது..

    அடி நேந்திகிட்டேன் அடி நேந்திகிட்டேன்
    நெய் விளக்கு ஏத்திவச்ச உன்னோட
    கன்னத்தில் முத்தம் கொடுக்க



    ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
    நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே

    (ஜோதிகா ப்ரஷாந்த்.. ஸ்டார்னு படமாம்)

  5. #123
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க -1
    **

    வாழ்க்கையே ஒருகதை தாங்க..ம்ம் தோசை சாப்பிடலை..இனிமே தான்.. ஏனாம்..அது அப்புறம்.

    இந்தக் கதை சிலபேருக்கு சந்தோஷமாகவும் சிலபேருக்கு சோகமாக்வும் இப்படியே மாறி மாறி போய்க்கிட்டே இருக்கா சமயத்துல பார்த்தா
    ரிப்பீட் தான் ஆகிட்டிருக்கு..சுவாரஸ்யம் குறைய ஆரம்பிச்சுடுது.. இல்லியோ..( இப்ப என்ன சொல்ற ஏதாவது கதை பாட்டு கிடைச்சுடுத்தா..) ஆமாம்..


    பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு
    இரவெல்லாம் பாடச்சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு



    ரவிச்சந்திரன் பாரதி தங்கதம்பி..அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்..

    செந்தமிழே கண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியுமாம்.. ம்ம் என்னவோ போங்க..

    தோசை ரெடி.. மிளகாப்பொடி செய்யணுமாம் அதுக்குள்ற ஃப்ரண்ட்ஸ் வந்துட்டாங்களா.. வீ.காவோட..எனில் கொஞ்ச நாழி கழிச்சுதான்..

    அடுத்த போஸ்ட் ல வாரேன்..

  6. Likes vasudevan31355, Gopal.s liked this post
  7. #124
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க - 2

    *

    இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு..

    ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி
    அக்கறையில் வாழ்ந்த பொண்ண இக்கரைக்கு வச்சகதை
    விடுகதை..தொடர்கதை..

    ஸ்ரீப்ரியா சுசீலாம்மா..அதெல்லாம் சரி..பாவம் இப்படி அத்துவானக் காட்டில தனியாத் தான் குளிக்கணுமா..ஃபரண்ட்ஸோட வந்திருக்கலாமில்லை...என்னமோ போங்க


  8. Likes rajeshkrv liked this post
  9. #125
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆதிராம்,

    தமிழுக்கு நான் உபயோகப் படுத்துவது NHMwriter . கூகுள் செய்து அந்த Nhmwriter ai download செய்யுங்கள். அதை இன்ஸ்டால் செய்யும் போது எந்த மொழி எனக் கேட்கும். தமிழ் என்று போட்டு விட்டு செய்யுங்கள். பின் அந்த என்ஹெச் எம் ஐகானின் மீது டபுள் க்ளிக் செய்தீர்கள் என்றால் ஒரு பெல் (மணி) ஐகான் கம்ப்யூட்டரின் வலது பக்க மூலையில் தோன்றும்.

    அதைக் க்ளிக் செய்தீர்கள் என்றால் மூன்றாவது ஆப்ஷன் Alt+2 Tamil Phonetic Unicode என்று வரும். அதில் க்ளிக் செய்துவிட்டு டபக் டபக் என அடிக்க வேண்டியது தான்.. அதாவது ஆங்கிலத்தில் (dabak dabak ena adikka veendiyathu thaan ) அடித்தால் தமிழில் வரும்.

    சந்தேகம் ஏதாவது வந்தாள் கேளுங்கள்.
    அதே தான் நானும் உபயோகம் செய்கிறேன். மிகவும் எளியது

  10. #126
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    என்னமோ போங்க - 2

    *

    இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு..

    ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி
    அக்கறையில் வாழ்ந்த பொண்ண இக்கரைக்கு வச்சகதை
    விடுகதை..தொடர்கதை..

    ஸ்ரீப்ரியா சுசீலாம்மா..அதெல்லாம் சரி..பாவம் இப்படி அத்துவானக் காட்டில தனியாத் தான் குளிக்கணுமா..ஃபரண்ட்ஸோட வந்திருக்கலாமில்லை...என்னமோ போங்க

    யோவ் நீர் ஒரு ... தனியா குளித்தால் தானே வில்லன் கண்ணில் படலாம் பட்டால் தானே காப்பாற்ற ஹீரோ வருவார்.
    உமக்கு ஒன்னுமே தெரியல

  11. Likes chinnakkannan liked this post
  12. #127
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க -3 ( இரவின் மடியில்னு அடிக்கடி ராகவேந்திரரோட டைட்டில ச் சுட மனசுவரலை அதான்)

    **

    இந்தப் பாட்ல பாத்தீங்கன்னா

    காதலியும் மெட் ராஸ் காதலனும் மெட் ராஸ்..

    மச்சான் உன் மூஞ்சப் பாத்தே நாஸ்தா துண்ணு நாளாச்சு

    (இனிய காதலனே நான் வார்த்துவைக்கும் பொன்னிற தோசை + வெங்காய சாம்பார்+ தேங்காயுடன் இரண்டறக் கலந்த ஸ்ஸ்ஸ்ஸ் எனக் கண்ணில் நீர் மல்க வைக்கும் மிளகாயுடன் செய்யப்பட்ட காரச் சட்னியுடன் காலை உணவு நீ உண்டு தண்ணீர் குடித்து ஏவ் என்று ஏப்பமும் விட பின் ஆறி காட்டன் துணிபோல் ஆகியிருக்கும் தோசையை நீவிட்டு வைத்திருக்கும் கொஞ்சூண்டு சட்னியுடன் உன் கண்ணை ஆசை ஆசையாய்ப்பார்த்தபடி நான் காலை உணவு உண்டு ரொம்ப நாளாயிற்று அன்பரே என்று அர்த்தமாம்)

    ஆயாக்கடை இடியாப்பம்னா பாயாக்கறியும் நீயாச்சு.. (பாயாக்கறி நான் இன்னும் உண்டதில்லை ரெஸிப்பி ப்ளீஸ்)

    வா மச்சான் ஒண்ணாச் சேர்ந்து வாராவதிக்கே போகல்லாம் (அந்தக்காலத்தில் அகண்ட காவேரியில் ஆழம் + அழகாக நீர் வேறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்..அப்போது அதைப்பார்த்தபடி காதலர்கள் ஆற்றின் கரையோரம் அழ்காய் அற்புதமாய் கொஞ்சம் கள்ளம் நிறையக் காதல் கண்ணில் தேக்கிவைத்து நடந்துசெல்வார்கள்.. பட் வாட்டுடூ. நாம்பிறந்து வளர்ந்தது இந்தச் சென்னை..வாராவதி என்று ஸ்மெல் அடிக்கும் கூவம் கரைக்கே செல்லலாம் )

    வாவாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டினா வுடமாட்டேன் ( வா என் இனிய காதலா..என்னிடம் பற்பல விதமாய்க் காதல்பாடம் சொல்பவனே.. உன்னுடைய ஊர் ஜாம்பஜார்.. என்னுடைய ஊர் சைதாப்பேட்டை.. உன்பெயர் போய்யா வெட்கமாய் இருக்குது.. என்பெயர் சொக்கி.. உன்னை உன் கண்ணை உன் உணர்வை உன் உள்ளத்தை மயக்கி மீளா நிலைக்குக் கொண்டு செல்பவள்..)

    இப்படித் தான் அர்த்தமா இருக்குமா இருக்கும் என்னமோ போங்க..


  13. #128
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க -4

    **

    எப்பப் பார்த்தாலும் சரி பொய் பேசுவது என்று ஒரு சிலருக்கே கைவந்த கலை.

    யாருன்னு பார்த்தீங்கன்னா ராஜேஷ் மாதிரி யூத்ஸ்க்குத் தானாம்..

    இங்க பாருங்க ஒரு யூத் இன்னா சொல்லுது (ஸாரி லாஸ்ட் போஸ்ட்டோட மயக்கம்) என்னா சொல்லுது

    உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்


    அப்ப மூக்கு என்ன முகாரி பாடுமா (மோனைக்காகச் சொன்னேன்)

    கண் கானடா

    உதடு - சிந்து பைரவி

    அப்புறம் கீழே சரேலென்று இறங்கி இடைப்பக்கம் வந்தால்..ஆமாம் ஓய் அதே அதே மோகனம்

    பின்..

    கொஞ்சம் சென்சார்லாம் தாண்டி காலுக்கு வந்தால் மறுபடியும் மேலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் பூபாளம் பாடுமோ கால்கள்.. ம்ம் என்னமோ போங்க..

    **
    முத் ராம் அண்ட் ப்ரமீளா ( கார்த்திக்குக்கும் வலை..அதானே பார்த்தேன் என நீங்கள் சொல்வது காதில் கேட்டுஃபையிங்க்)


  14. #129
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ்.. ஹி ஹி..உங்க கமெண்ட் பார்க்கலை..இப்போ தான் பார்த்து ஃபையிங்க்க்..

    அது கரீட்டு யார் வில்லன் ச்சும்மா சிவகுமார் வந்து ரெகார்ட் பண்ணிக்கிட்டு போய்டுவாரோன்னோ

  15. Likes rajeshkrv liked this post
  16. #130
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    'paayaa kari' ? chinnakkaNNan: I thought you were a vegetarian? paayaa is made of goat bones simmered overnight in low flame to be consumed next day. It is a muslim delicacy ! Enjoy!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •