-
8th June 2015, 07:48 PM
#781
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
நிதர்சனமான உண்மை. மிக மிக மிக மிக மிக மக பிடித்தமான பாடல். இப்போதே எழுத கை துடிக்கிறது. பாலா பாடல்கள் முடிந்த மட்டும் வரிசையாக வருவதால் இதைப் பற்றி பின்னால்தான் எழுத வேண்டி வரும்.
கல்நாயக் ஒருமுறை கடலூரில் கமர் திரை அரங்கில் 'கண்ணாமூச்சி' படம் பார்த்ததாக எழுதியிருந்தார் . நல்ல ஞாபகசக்தி அவருக்கு. அங்குதான் ரிலீஸ். மறக்க முடியாத படம். சக்கை போடு போட்டது.
இந்த பாடலைப் பற்றி மிகச் சிறப்பாக எழுத வேண்டும்.
மிகப் பெரிய பரிசாக இப்பாடலை நான் பெற்றுக் கொள்கிறேன். நன்றி ரசிக வேந்தரே! அப்படியே இளைய பிறவிகளுக்கும் ஒரு 'ஓ'
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th June 2015 07:48 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2015, 07:49 PM
#782
கிருஷ்ணா ஜி,
சம்பவத்தை பாதியில் தொங்கலில் விட்டுட்டீங்களே . திருமணம் நின்றதால் சாப்பாடு கிடைக்காத கோபமா?.
-
8th June 2015, 07:51 PM
#783
Senior Member
Diamond Hubber
Originally Posted by
gkrishna
பூ பாட்டில் பின்னி எடுக்கும் அப்பு கல்நாயக்
கலைவாணர் கேட்ட கேள்வி
நம்மையும் வாடவிடாமல் தானும் வாடாமல் வட்டியில் வளரும் பூ முதுமையிலும் உதவும் பூ என்ன பூ - சொல்லுங்கப்பு சி கே
சேமிப்பு
-
8th June 2015, 07:58 PM
#784
டியர் வாசு சார்,
'இளைய பாலா' வின் பாடல் வரிசையில் 'உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது' பாடல் அலசல் நன்றாக உள்ளது. அந்த 'கொலைகார குடும்பம்' படத்தில் உருப்படியானது இந்தப்பாடல் ஒன்றுதான்.
பாபுவில் இடம்பெற்ற 'என்ன சொல்ல என்ன சொல்ல சொல்லித்தர நானிருக்கேன்' பாடல் எப்போது வருமென காத்திருக்கிறேன்.
-
8th June 2015, 08:10 PM
#785
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 08:15 PM
#786
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா,
சினிமாவில் வரும் சம்பவம் போல் அமைந்து விட்டது. இப்போது புரிகிறது. 'என்னடா இவர் போனை எடுக்க மாட்டேன் என்கிறாரே...உடனே கால் பண்ணி விடுவாரே!'என்று நினைத்தேன். ஓஹோ! இதுதானா விஷயம்?
வருத்தம்தான் கிருஷ்ணா! இதுவே அந்தப் பையன் ஓடிப் போய் இருந்தால் விஷயம் எவ்வளவு பெரிது படுத்தப் பட்டிருக்கும்? அந்த பொறுமைசாலிக்கு நல்ல மணப்பெண்ணாக கிடைப்பாள் பாருங்கள்.
-
8th June 2015, 08:16 PM
#787
Senior Member
Diamond Hubber
நன்றி கலை! தங்கள் ஒய்வு நேரத்தில் தாங்கள் நிச்சயம் உங்களுக்கே உரிய பாணியில் நல்ல பாடல்களைத் தாருங்கள். தருவீர்கள். காத்திருக்கிறோம் அனைவரும்.
-
8th June 2015, 08:21 PM
#788
Senior Member
Diamond Hubber
நன்றி ஆதிராம் சார்,
தாங்களும் 70 களின் ஏனைய நல்ல பாடல்களை அலசினால் அதைவிட சந்தோஷம் வேறு எனக்கில்லை. ஏனென்றால் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தாங்கள்.
என்ன சொல்ல! என்ன சொல்ல! உங்கள் விஷய ஞானத்தைப் பற்றி என்ன சொல்ல!
'சொல்லித்தர நானிருக்கேன்' என்று எவ்வளவோ சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து உள்ளீர்கள். இதில் பெரிய விஷயம் என்ன தெரியுமா? தாங்கள் தரும் அனைத்து தகவல்களும் மிகச் சரியானவை என்பதே.
-
8th June 2015, 08:35 PM
#789
வாசு,
மிக மிக மிகப் பிடித்த பாடலை தந்ததற்கு மனங்கனிந்த நன்றி! சின்ன வயதில் காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் உண்மையான காதலர்கள் இப்படித்தான் இருப்பார்கள், இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு ஆழமான கருத்து உருவாவதற்கு காரணமாக இருந்த பாடல். பாடல் வரிகள் மனதை கொள்ளை கொண்டு போகும். அதிலும் சுசீலாவின் குரலில் கேட்கும்போது சொல்லவே வேண்டாம்.
எனக்கு இரண்டாம் சரணம் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த சரணம் முடியும்போது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது என்ற வரியில் சுசீலாம்மாவின் குரல் தேனாமிர்தததிற்கும் மேலே.
இரண்டாவது சரணம் செட் என்பதனால் சற்றே செயற்கை எட்டிப் பார்க்கும். பாடல் ஆரம்பம் மற்றும் முதல் சரணம் கடற்கரையில் எடுத்திருப்பதால் இயல்பாக இருக்கும். அதிலும் பாடல் ஆரம்பிக்கும்போது லட்சுமி இரண்டு கையையும் வீசி ஒரு ஸ்டெப் போட்டு வருவது மிக நன்றாக இருக்கும்.[வசந்த மாளிகையில் தலைவர் மலைவாசி கூட்டத்தினரிடையே ஆடும்போது ஒரு ஸ்டெப் போட்டு வருவாரே! அது போல] .
இந்த பாடலும் இந்த ஹம்மிங்கும் கேட்கும்போது மற்றொரு பாடல் நினைவுக்கு வரும். உத்தரவின்றி உள்ளே வா படத்தில் வரும் காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாடல்தான் அது. அதில் ஸ்ரீகாந்த் என்ற பின்னணி பாடகர் ஹம்மிங் கொடுத்திருப்பார். [நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பாடலை பாடியவர், இல்லையா?]
மீண்டும் நன்றி வாசு!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 08:36 PM
#790
ரவி,
உங்கள் பதிவுகளையெல்லாம் படிக்கிறேன். அண்மைக் காலமாக நிறைய ஆன்மீக, தத்துவ கருத்துகள் பதிவு முழுவதும் விரவி கிடைக்கின்றன. உங்களில் ஒரு மாற்றம் வந்தது போல். மெருகேறிய உங்கள் பாணிக்கு வாழ்த்துகள்.
கண்ணா, சில பதிவுகள் மனதில் சில சலனங்களை ஏற்படுத்தும். உங்கள் தாயாரின் மறைவு பற்றிய பதிவு அப்படித்தான் இருந்தது. தாமதமாக சொல்கிறேன். மன்னிக்கவும்.
கல்நாயக்,
பாடல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடருங்கள்.
கிருஷ்ணாஜி,
நமது கோட்டைக்கு வராமல் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்? நெல்லை சீமையில் சிங்கத் தமிழனின் சாதனைகளை எடுத்து சொல்ல வாருங்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks