Page 164 of 400 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1631
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 165
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    அநாதை குழந்தைகளுக்கு ஆதரவாக தந்தை போல் இருக்கும் இவன் பாடலை கேளுங்கள் - குழந்தைகளுக்கு மற்றும் அல்ல , நமக்கும் ஒரு புதிய உற்ச்சாகம் கிடைக்கும் .


  2. Thanks kalnayak thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1632
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    15

    'எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா?'



    பாலாவின் தொடர் இன்று 'அருணோதய'த்தை நோக்கிப் பயணிக்கிறது.

    ஆமாம். நடிகர் திலகம் நடித்த 'அருணோதயம்' திரைப்படத்திலிருந்து 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஓர் ரம்மியமான பாடல்.

    மீண்டும் பாலா, சுசீலா இணைவு. 1969-ல் வெளிவந்து நாட்டியே இரண்டுபடுத்திய 'ஆராதனா' படத்தின் மிகப் புகழ் பெற்ற பாடலான,

    'Gunguna Rahe Hain Bhanwar Khil Rahi Hai
    Kali Kali'



    பாடலை நினைவில் வைத்து, இப்பாடலுக்கு இசை அமைத்து தன் தனி முத்திரையைப் பதித்திருப்பார் 'திரை இசைத் திலகம்'. இந்தியில் வெளுத்து வாங்கிய இப்பாடலின் முழு டியூனையும் எடுத்துக் கொள்ளாமல் 'Kali Kali' என்ற வார்த்தையின் அருமையான டியூனை மட்டும் 'திருவிழா... திருவிழா' என்ற வார்த்தைக்கு அழகாக எடுத்து, கொஞ்சமும் கெடாமல், நல்ல இனிமையுடன் தன் சொந்த பாணியில் அற்புதமாக பாடலைத் தந்திருப்பார் மகாதேவன். பாடல் வரிகளை மிக எளிமையாக அழகாக எழுதி இருப்பார் கண்ணதாசன்.

    நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் லஷ்மிக்கும், அவரது காதலன் முத்துராமனுக்கும் படத்தில் ஆரம்பத்திலேயே வரும் காதல் டூயட்.


    நல்ல மலைப் பிரதேசத்தில் ஒற்றையாய் நிற்கும் அந்த சின்ன, சிதைந்த கட்டடத்தின் மேல் பாடல் ஆரம்பமாகும். இப்போது 'பாபாநாசம்' படத்திலிருந்து இன்னும் அதிகமாகப் புகழ் பெற்றுவிட்ட நடிகர் திலகத்தின் அந்த நெற்றியில் விழும் முடி ஸ்டைலை முத்துராமன் முன்பே முயற்சி செய்திருப்பது நன்றாகத் தெரியும்.

    ஆனால் அந்த ஒரு அசல்தானே நிறைவான அழகு!

    முத்துராமன் 'டி ஷர்ட்' ரேஞ்சிற்கு கரெக்ட் ஃபிட்டிங்காக மேல் உடை அணிந்திருப்பார். இப்பாடலில் கொஞ்சம் உற்சாகமாயும் நடித்திருப்பார். ஒன்றிரண்டு ஸ்டெப்ஸ் ஆட்டமும் உண்டு. லஷ்மி வழக்கம் போல முழங்கை அளவு ஜாக்கெட் அணிந்து ஜமாய்ப்பார். (பின்னால் குமரியாக வந்த குழந்தை நட்சத்திரம் ஜெயகௌசல்யா ('தங்கை' புகழ்) அப்படியே லஷ்மியின் ஸ்டைலை காப்பியடிப்பார்)

    பாடலில் இரண்டு முத்துராமன்கள், இரண்டு லஷ்மிகள் என்ற மிக்ஸிங் நகாசு வேலைகளும் உண்டு. குரங்கு ஒன்று ஒல்லி ஒற்றை மரத்தை ஆட்டுவதும், (முத்துராமன் குரங்கு மரத்தை ஆட்டும் வேகத்தைவிடவும் லஷ்மியின் தோள்களைப் பிடித்து வேகமாக ஆட்டுவார்) லஷ்மி மலைமீது சுமைதாங்கி போன்ற பாறாங்கல்லில், வெட்டவெளியில் நடுமண்டை காய வெயிலில் அமர்ந்திருப்பதும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.வர்மாவின் திறமைக்கு சான்றுகள்.

    கருப்பு வெள்ளை என்பதால் இயற்கை அழகை நாம் ரசிக்க முடியாமல் போனது வருத்தமே.

    பாலாவின் பால் குரல் சுசீலாவின் தேன் குரல் இரண்டும் சரிசமமாகக் கலந்து இப்பாடல் 'திருவிழா'வின் சந்தோஷத்தை நமக்களிப்பது உண்மைதான். பாடல் துவங்கும் போது வரும் 'டொங் டொங் டொங் டொங் டொங்' இசையை மறக்கவே முடியாது.

    'திருவிழா' வார்த்தையை பாலாவும், சுசீலாவும் மாறி மாறி உச்சரிப்பது உற்சாகமூட்டும். நாமும் அவர்கள் கூடவே சேர்ந்து ஈஸியாகப் பாடலாம். அதே போல இருவரின் 'அஹஹ ஹா....ஒஹொஹொ ஹோ'
    ஹம்மிங்கையும் அமோகமாக ரசிக்கலாம்.

    ஒரு சாதாரண அந்தகக் கால சினிமா ரசிகரிடம் இந்தப் பாடலின் முதல் வரியைப் பாடிக் காட்டினாலே போதும்.... அவர் கூட 'நல்ல பாடலாயிற்றே' என்று இந்தப் பாடலை 'டபக்'கென்று பிடித்துக் கொள்வார்.

    அப்போது பேய் ஹிட் அடித்த பாட்டு. இப்போது ஆயிரெத்தெட்டு சேனல்கள் இருந்தும் இந்தப் பாட்டு தட்டுப்பட மாட்டேன் என்கிறது. ராஜ் டிவியில் 'அருணோதயம்' படம் போட்டால் மட்டுமே இப்பாடலை பார்க்க முடியும். இல்லை என்றால் யூடியூப், டிவிடிதான் துணை.




    எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
    உன்னை மெல்ல அழைப்பதென்பது

    அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல
    பெண்ணை மெல்ல அணைப்பதென்பது

    கோபம் வந்தது அது கோபமல்ல
    காலம் பார்க்கும் ஊடல் என்பது
    கோபம் வந்தது அது கோபமல்ல
    காலம் பார்க்கும் ஊடல் என்பது

    கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது
    அஹஹ ஹா
    ஒஹொஹொ ஹோ

    எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    போகச் சொன்னது கால் போகும்போது
    கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது

    பேசச் சொன்னது வாய் பேசும்போது
    நாணம் வந்து மூடச் சொன்னது

    தழுவச் சொன்னது கை தழுவும்போது
    என்ன வந்து நழுவ சொன்னது
    தழுவ சொன்னது கை தழுவும்போது
    என்ன வந்து நழுவச் சொன்னது

    தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது

    அஹஹஹா

    ஒஹொஹொஹோ

    இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    அன்னவாகனம் போல ஆடி ஆடி
    வருவதுதான் பெண்ணின் சீதனம்

    தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
    பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்

    கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
    இழுப்பதற்கு என்ன காரணம்
    கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
    இழுப்பதற்கு என்ன காரணம்

    என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்

    அஹஹஹா

    ஒஹொஹொஹோ

    எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

    திருவிழா

    திருவிழா

    அஹஹஹா, ஒஹொஹொஹோ, ம்ஹுஹுஹும்




    இந்தப் பாடலில் வரும் மூன்றாவது சரண வரிகள்

    'அன்னவாகனம் போல ஆடி ஆடி
    வருவதுதான் பெண்ணின் சீதனம்

    தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
    பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்

    கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
    இழுப்பதற்கு என்ன காரணம்
    கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
    இழுப்பதற்கு என்ன காரணம்

    என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்'

    வீடியோவில் இல்லை. முதல் இரண்டு சரணங்கள் மாத்திரமே உள்ளன.

    அதனால் மூன்றாவது சரணம் உள்ள ஆடியோ லிங்கையும் இத்துடன் இணைத்துள்ளேன். கேட்டு இன்புறவும்.


    http://www.inbaminge.com/t/hits/Hits...0P%20Susheela/
    Last edited by vasudevan31355; 7th July 2015 at 12:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, eehaiupehazij, uvausan liked this post
  6. #1633
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , கல்நாயக் சார் , செந்தில் சார், ராஜேஷ் , ஆதிராம் சார் - ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

    நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

    இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

    படத்தின் சிறப்புக்கள்

    நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

    ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

    அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

    நடிகர் திலகத்தின் பெருமை

    ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

    " பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

    பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

    கருவின் கரு :

    தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

    மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

    சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

    "நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...


  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #1634
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - மீண்டும் ஒரு இன்ப அதிரிடி அலசல் - பாலாவின் பாடல்களின் பதிவு . இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் - அலசாமலேயே அன்று பிடித்திருந்தது - இன்று உங்கள் அலசலில் கேட்க்கவா வேண்டும் .

    தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
    பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்


    வார்த்தைகளில் தான் என்ன நயனம் - குரலில் தான் என்ன பவ்யம் - கொஞ்சம் மாறினாலும் அர்த்தம் அனர்த்தமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது .. இதையே சற்று எனக்குத் தெரிந்த தமிழில் மாற்றி அமைக்கிறேன் .

    "பாலா பாடல் " தரிசனம் அதை வாசு மட்டும்
    அலசுவதுதான் தெய்வ சங்கல்ப்பம்

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #1635
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    RARE ADVT- FROM NET

  11. Thanks uvausan thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1636
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,

    மண் மீது மானம்.... பாடலின் இணைப்பை அளித்ததற்கு நன்றி. சின்னக்கண்ணன் விரைவில் திரிக்கு வந்து கலக்குவார் என்ற தகவலை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சியும் நன்றிகளும்.

    சிவாஜி செந்தில் சார்,

    அற்புதமான பாடல்களை உங்களுக்கே உரித்தான உவமைகளோடும் தேர்ந்த ரசனையோடும் விமர்சனங்களோடும் அளிக்கும் நீங்களே இசை அவரங்கசீப் என்று உங்களை சொல்லிக் கொண்டால் நான் எந்த மூலைக்கு? காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமான ‘தேன்நிலவு’ வண்ணத்தில் எடுக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று நானும் நினைத்ததுண்டு. நன்றி.

    ரவி சார்,

    // எனக்கும் உங்களைப்போல வேலை பளு அதிகமாக இருக்கின்றது - ஆனாலும் இங்கு வந்து பதிவுகள் போடுவதால் stress level அதிகமாக குறைகின்றது , மனதிருக்கும் ஒரு இனம் புரியாத இன்பமும் கிடைக்கிறது . In my humble submission , this thread is a great unwinding platform for people who are entangled in ocean of work load. //

    என் மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். நன்றி. இந்த திரிக்கு காரணமான வாசு சாருக்கும் நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. Thanks uvausan, eehaiupehazij thanked for this post
    Likes rajeshkrv, eehaiupehazij liked this post
  14. #1637
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு ....பாசம்... நேசம் வீசும் இசை வாசம் !!

    துள்ளிக் குதித்த கட்டிளங் காளையையும் சாதுப் பசுவாக்கிக் கட்டிப் போட்ட மதுர கானம்

    மக்கள் திலகத்தின் படங்களில் சற்றே வித்தியாசமான கதைக் களத்தில் சண்டைக் காட்சிகளை நம்பியிராமல் கலைஞர்களின் நடிப்புப் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளித்த எக்காலமும் மறக்க முடியாத செவிக்கும் சிந்தனைக்கும் இனிய இசையமைப்பில் மெல்லிசை மன்னர்களின் பேர் சொல்லும் தேனினும் இனிய பாடல்களை உள்ளடக்கிய திரைப்படம் !

    அனைத்துப் பாடல்களுமே தேன்! ஆனாலும் இந்தப் பாடல் கண்ணியமான காதலுணர்வுடன் கூடிய துளியும் ஆபாசமற்ற முதலிரவு மய்யப்படுத்தப்பட்ட காட்சியமைப்பினாலும் ஜெமினியின் PBS காதல் குழைவுக் குரல் மக்கள் திலகத்துக்கும் பாந்தமாகப் பொருந்தியதாலும் எனக்கு கேட்கத் திகட்டாத நேசத்துக்குரிய மதுர கானமே!!

    துள்ளிக் குதித்து கைகளை சுழற்றி வான் நோக்கி உயர்த்தாத மக்கள் திலகமும் மதுரமான இன்ப அதிர்ச்சியே!!


    காதல் காந்தம் கவரும்போது துள்ளிக் குதிக்கும் கட்டிளம்காளை கல்யாண முடிச்சு இறுகும் போது...பாவம்.... என்னவொரு சாதுப் பசு போன்ற முகபாவம் !

    Last edited by sivajisenthil; 7th July 2015 at 06:46 PM.

  15. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellmai, Russellzlc liked this post
  16. #1638
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,

    எனக்கும் மிகவும் பிடித்த அருமையான பாடல்.

    //துள்ளிக் குதித்து கைகளை சுழற்றி வான் நோக்கி உயர்த்தாத மக்கள் திலகமும் மதுரமான இன்ப அதிர்ச்சியே!!

    காதல் காந்தம் கவரும்போது துள்ளிக் குதிக்கும் கட்டிளம்காளை கல்யாண முடிச்சு இறுகும் போது என்னவொரு சாதுப் பசு போன்ற முகபாவம் !//


    கூர்ந்து கவனிக்கும் நுட்பமான ரசிகர் நீங்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 7th July 2015 at 06:05 PM.

  17. #1639
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    In the ever loving memory of James Bond of South Jai Shankar!

    During my school days, my father wanted me to see many english movies to refine my ability to talk in english with proper accent as done by the actors. That way I was also made to see Goldfinger, the definitive James Bond 007 movie starring Sean Connery. I still remember that the James Bond fever was at its peak during 1964 and 1965 thanks to Goldfinger and Thunderball. Jaishankar entered the movieworld in 1965 and he acted in Modern Theatres' Vallavan Oruvan in 1966 (?), in a typical Bond role. After seeing Vallavan Oruvan, Jaishankar made the impression of Tamil James Bond in my mind! At that age the Bond scenes with girls were little bit undigestable for me and shocking too! But in Jaishankar's Bondian movies, those Bond girl scenes were in the form of songs like Palinginaal oru maaligai.... etc.,
    பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணிமண்டபம்
    உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது,,,,வா!

    சாதாரண பாடல் வரிகள் ....அசாதாரண இசைக் கோர்வை,,,, அந்தக்கால தேவாவான வேதாவின் ஜேம்ஸ்பாண்டு மெட்டில் இப்பாடலை என்றும் ரசிக்கும் வண்ணம் மதுர கானமாக்கிற்று!!


    ஈஸ்வரியின் மனதில் ஆணியடிக்கும் குரலில் விஜயலலிதாவின் இடுப்பு வெட்டாட்டத்தில் மக்கள் கலைஞரின் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் ...ரசிப்போமே!!

    இரவு 10 மணிக்கு மேல் நடுநிசி வரையே இப்பாடலின் மதுரம் சிந்தையில் தங்கும்!!
    Last edited by sivajisenthil; 8th July 2015 at 11:37 AM.

  18. Thanks uvausan thanked for this post
    Likes Russellmai, rajeshkrv liked this post
  19. #1640
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 39 Vasantha Maaligai

    From Vasantha MaaLigai (1972)

    Yaarukkaaga ihu yaarukkaaga.....




    From the Telugu original Prema nagar (1971)

    Evarikosam evarikosam.........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  20. Likes uvausan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •