Page 40 of 400 FirstFirst ... 3038394041425090140 ... LastLast
Results 391 to 400 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #391
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ச்ச்சும்மா ச்சும்மா பழைய பாட்டே தான் கேக்கமுடியுமா என்ன..அஃதாவது பழைய ஜொள் போவதும் புதிய ஜொள் வருவதும் உலகின் நியதி..

    கொஞ்சம் வேதாந்தமாப் பார்த்தா – சின்ன வயசுலயும் ஜொள் வருது..போற வயசுலயும் வருது..
    *
    எவ்வளவோ பெரிய கணித மேதைக்கும் புரிபடாத கணக்கு ஒன்று இருக்கிறது..என்னவாம்..

    அதற்கு முன்:

    அவன் அழகன் பணக்காரன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாய் வைத்திருப்பவன்.. என்னைப் போலுண்டா எனக் குட்டி அகங்காரம் மனதில் உண்டு அவனிடம்..

    அவள்.. பார்ப்பவர் கண்களைக் கவரும் பேரழகி..திடீரென்று பிரம்மனின் மனதுக்குள் தோன்றிவிட்ட்தாம் –இதற்கு முன்னால் படைத்த்தை விட மிகச் சிறந்த்தாய்ப் படைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஓவியம்..அவளுக்குள்ளும் கொஞ்சம் தற்பெருமை உண்டு..தான் சிறந்த அழகி என்று..

    ஆனால் இருவரைப்பார்த்தும் ஒன்று கெக்கெக்கே எனச் சிரிக்கிறது.. அது தான் காலம்..காலத்தின் கணக்கில் இறுதி விடையாக வருவது..ம்ம் மூப்பு அல்லது முதுமை..முதுமை மனிதன், மனுஷியின் ஆணவம் தொபுக்கடீர் எனத் தலைகுப்புற விழும் இடம்.. அப்போது என்ன செய்ய வேண்டுமாம்..

    இந்தப் பாட்டு அதைச் சொல்கிறது..

    குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
    நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
    ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
    ஐயாறு வாயால் அழை.

    நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாமல் மூச்சு வாங்கும்..சின்னதாய் ஒரு கம்பை வைத்துத் தான் நடக்க வேண்டும்.. லொக் லொக் என இடைவிடாத இருமல் வர உடல் நொந்து, மூச்சு விடக் கஷ்டப் பட்டு இருக்கும் போது என்னவாகும்.. தொண்டையிலிருந்து பொங்கி வரும் வாந்தி...

    அந்தளவுக்கெல்லாம் ஆவதற்கு முன், ஓ அகங்காரம் கொண்ட மனுஷ மனுஷியே...திருவையாறிலிருக்கும் ஐயாரப்பனை.. ஐயாறு என்று அழைத்துக் கடைத்தேறுவாயாக.. ம்ம் பாட்டு நல்லா இருக்கு இல்லையா..
    *

    So நாம கடைத்தேறனும்னா ப.பா வே வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது..அதையே இந்தக்கால க் கவிஞர் பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் வேணுமா எனக் கேட்கிறார்!


    *
    ஜூகல் பந்தியாய் பழைய பாட்..



    எஸ்கேப்ப்ப்
    Last edited by chinnakkannan; 29th May 2015 at 01:39 PM.

  2. Likes vasudevan31355, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #392
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு, வாசு... விவரங்களை பக்கெட் பக்கெட்டா அள்ளி கொடுத்து கொல்லுறீங்களே!!! உங்களுக்கு எப்பிடிதான் நன்றி சொல்றது?

    புள்ளி வச்சா கோலம் போடறவங்களை பார்த்திருக்கேன். இப்பிடி பாட்டை சொன்னால் வரலாறையே கொண்டுவருவதில் உங்களை மட்டும்தான் பார்க்கிறேன். வேற வழியில்லை எனக்கும். இந்தாங்க பக்கெட் பக்கெட்டா நன்றிகள். 'அரசியல்வாதி' தெலுங்கு பாட்டு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் கேட்கிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, chinnakkannan liked this post
  6. #393
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    இன்னைக்கு என்ன ரொம்ப குஷி மூடோ? கவிதைகளும் காதல் பாட்டுகளோடு வந்துனுகீது?
    பூப்பறிக்க நீயும் - நல்ல ஜாலி பாட்டு.
    அத்தானின் முத்தங்கள் - அருமை அருமை. பிரமாதம்-னு நானும் சொல்லணுமோ?
    மறக்கமுடியவில்லை - எனக்கு என்னவோ அவ்வளாவாக பிடிக்கவில்லை, எஸ்.பி.பி. குரல் வளமாக்குகிறது. இது பாலச்சந்தர் இயக்கிய ஜாதிமல்லி படம்தானே. பார்த்திருக்கேன். பாடல் எப்பவோ மறந்து போச்சி.
    அப்புறம்தான் உங்க ... பழைய பாட்டு கேட்பவர்களுக்கு அறிவுரை சொல்லி பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் பாட்டு போட்டீர்கள். சரி அப்புறம் எதற்கு சூப்பரான கண்ணாலே பேசி பேசி பாட்டை போட்டு தகர்க்கின்றீர்கள்?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  8. #394
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 19: "வானம் தூவும் பூமழையே, பூமி பூத்த பொன்மலரே"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~
    இங்க பாருங்க ஒரு அருமையான பூவின் பாடல். படத்து பேரு 'புன்னகை பூவே'ங்க.நாயகன் நந்தாவும் நாயகிரேகா வேதவ்யாஸ்-ம் ஆடியிருக்காங்க. 'பனித்துளிகள் புல்லில் வடிகின்றதே. தேன்துளிகள் பூவில் வடிகின்றதே' எனக்கு இந்த வரிகளை கேட்கிறப்போ 'என்னமோ போங்க'ன்னுதான் சொல்லத் தோணுது. ஹரிஷ் ராகவேந்திராவும், கோவை ரஞ்சனியும் பாடியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, தான் ராசாவோட புள்ளைதான்னு இதுல காட்டியிருக்கிறாருங்க.

    Last edited by kalnayak; 29th May 2015 at 06:36 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. Likes vasudevan31355 liked this post
  10. #395
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 20: "வானில் பூமழை சிந்தியதோ, வெள்ளை மல்லிகை துள்ளியதோ"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
    இதுவும் அருமையான பூமழைப் பாடலுங்க. எஸ்.பி.பி. மற்றும் ஜானகி அம்மா பாடியிருக்காங்க. இது 2010-ல் வெளிவந்த இதய கீதம் படமாம். 1950-ல் வந்த இதய கீதம் படம் ரொம்ப புகழ் பெற்றது போல. அதைப்பற்றி நம்ம கலைவேந்தன் அவர்கள்தான் விவரம் சொல்லணும். நெட்ல 1950 படத்துக்கு நெறைய விவரம் இருக்கு. 2010-ல் வந்த இந்த படத்துக்கு அவ்வளவு விவரம் நெட்-ல கிடைக்கலை. வெறும் ஆடியோ மட்டும் கேட்டு ரசிச்சிக்கோங்க.

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  12. #396
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~
    1950-ல் வந்த இதய கீதம் படம் ரொம்ப புகழ் பெற்றது போல. அதைப்பற்றி நம்ம கலைவேந்தன் அவர்கள்தான் விவரம் சொல்லணும்.
    கல்,

    ஆனாலும் இவ்வளவு குறும்பு ஆகாது. கலையின் வயதை அவரது வாயாலேயே சொல்ல வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு 'லதா' ரேஞ்சுக்கு செயல்படுவது என் போன்ற மண்டூகத்துக்குக் கூட நன்றாகப் புரிகிறது.

    அவர் கூட ராஜா ஹரிச்சந்திரா பற்றி முழு விவரம் கல்நாயக்கிற்குத் தெரியும் என்று புகுந்து புறப்படப் போகிறார் பாருங்கள்.

    ஹய்யா! செம ஜாலி! வயசுச் சண்டையை பார்ப்பதில்தான் எத்தனை சுகம்!
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  14. #397
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்ஸ்,

    அதிகம் கேட்காத நடுத்தர மற்றும் புதிய பாடல்களை பூவின் பாடல்களாகத் தந்து ரசிக்க வைக்கிறீர்கள். நிஜமாகவே மண்டையை உடைத்துக் கொண்டுதான் இப்படிப்பட்ட பாடல்களை தெரிவு செய்ய வேண்டும். அந்த தெளிவு தங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சுவை தருகிறது. முக்கியமாக இதய கீதம், புன்னகைப் பூவே பாடல்கள்.

    வித்தியாசப் பாடல்களுக்கு என் வியந்த நன்றிகள். (கடலூர் வாசியா கொக்கான்னானாம்)
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks kalnayak thanked for this post
    Likes chinnakkannan liked this post
  16. #398
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கல்,

    ஆனாலும் இவ்வளவு குறும்பு ஆகாது. கலையின் வயதை அவரது வாயாலேயே சொல்ல வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு 'லதா' ரேஞ்சுக்கு செயல்படுவது என் போன்ற மண்டூகத்துக்குக் கூட நன்றாகப் புரிகிறது.

    அவர் கூட ராஜா ஹரிச்சந்திரா பற்றி முழு விவரம் கல்நாயக்கிற்குத் தெரியும் என்று புகுந்து புறப்படப் போகிறார் பாருங்கள்.

    ஹய்யா! செம ஜாலி! வயசுச் சண்டையை பார்ப்பதில்தான் எத்தனை சுகம்!
    வாசு,

    கலைவேந்தன் என்கிட்டே ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டார், நான் அவரை விட வயதில் மிக மிக சிறியவன் என்று (அந்த பூக்கள் விடும் தூது பற்றி நீங்க சொன்னீங்க இல்லையா. அப்பவே.) அதுவும் சரிதான் நீங்கள் சொல்வது போல ராஜா ஹரிச்சந்திரா பற்றி விவரம் என்னிடம் கேட்பார்தான். ஏனென்றால் நான் நெட்டில் நன்றாக தேடி, கிடைக்கும் விவரத்தை கொடுத்து விடுவேன் என்று அவரும் புரிந்து கொண்டுள்ளார். மற்றபடி ஒரு முறை சொல்லியிருந்தேன் இன்னும் அவர் பிறக்கவே இல்லையென்று. அதற்குதான் பதில் இல்லை. வாஸ்தவம் தானே. பிறந்திருந்தால் பதில் கொடுத்திருப்பார் அல்லவா?

    அப்புறம் உங்களை நீங்களே மண்டூகம் என்றால் உங்களுக்கு நான் மண்டூகத்தின் மண்டூகம் ஆவேன்.

    அப்புறம் பாடல்கள் தேர்விற்கு பாராட்டியதற்கு நன்றி. நானும் கடலூர் வாசி என்பதில் பெருமைதான். தமிழும் கற்றுக்கொடுத்து, பிழைக்கவும் வழி செய்து கொடுத்த ஊர் அது. பிழைப்பதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் தமிழில் எழுதுவதில் ஒரு பரம திருப்தி. எனது கடலூர் வருகை தற்சமயம் மிகவே குறைந்துள்ளது. ஏதாவது விஷேசம் என்றால் வருவேன். பார்க்கலாம். அதற்கு நீங்கள் கிடைக்க வேண்டுமே!!!
    Last edited by kalnayak; 29th May 2015 at 07:04 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. #399
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக்,

    நீங்கள் பதிந்திருந்த பாடலின் படம் 'இதய கீதம்' தான். இதைப் பற்றியும் எனக்குத் தெரிந்தததை தங்களுக்குத் தந்து விடுகிறேன்.

    இந்தப் படம் நீங்கள் குறிப்பிட்டபடி 2010-இல் வெளிவந்ததல்ல. இதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்த படம் தான். நாகேஸ்வரராவின் புதல்வர் நாகார்ஜுனாவும், அவரது துணைவியார் அமலாவும் ஜோடியாக நடித்த படம்.



    தெலுங்கில் இப்படம் 1990 மார்ச்சில் வெளிவந்தது. அதே வருடம் தமிழில் 'இதய கீதம்' என்று டப் செய்யப்பட்டு வந்தது. தெலுங்கில் இப்படத்தின் பெயர் 'பிரேமா யுத்தம்'

    நாகார்ஜுனன், அமலா ஜோடி தெலுங்கில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்த சமயம். அவர்களுக்குள் காதல் மலர்ந்த பருவமும் கூட. இப்படத்திற்கு இசை ஹம்சலேகா. 'பருவ ராகம்' படத்திற்கு இசை அமைத்து எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்தாரே! அவரேதான்.

    நீங்கள் பதிந்திருந்த பாடலை மறுபடி ஒருமுறை நீங்களே கண்ணை மூடிக் கொண்டு கேளுங்கள். 'டபக்'கென்று அப்பாடலுக்கு இசை ஹம்சலேகா என்று கண்டு பிடித்து விடுவீர்கள்.

    நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் இப்படத்தை அப்போதே கேசட்டில் பார்த்து விட்டேன். 'இதய கீதம்' படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன்.

    பாடல்கள் அருமை. அமலா இளமை. நாகார்ஜுனா வளமை. நான் அப்போ ரொம்ப விரும்பிப் பார்த்த படம். காதல் பிளஸ் ஆக்ஷன் மூவி. அமலா நாகர்ஜுனனுடன் படு நெருக்கம். ரொம்ப கிளாமரா இருப்பார். (இந்தப் பாடலின் துவக்கத்திலேயே நான் சொல்வது உண்மை என்று உணருவீர்கள்)

    ராஜேந்திர சிங் பாபு என்பவர் இப்படத்தின் இயக்குனர். கிரிபாபு, மோகன்பாபு என்று எல்லா பாபு வில்லன்களும் உண்டு.

    நீங்கள் தமிழில் தந்த 'வானில் பூ மழை சிந்தியதோ' என்ற அந்த அருமையான பாடலை இப்போது நான் தெலுங்கில் தருகிறேன். உங்கள் குறை இப்போது தீர்ந்து போகும். சி.கவும் குஷி மூடில் இருக்கிறார். அவரும் அமலாவைப் பார்த்ததும் அடங்குவார்.

    இதோ

    'சுவாதி முத்யபு ஜல்லுலலோ' (தமிழில் மொழி மாற்றத்தில் 'வானில் பூ மழை சிந்தியதோ')

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks kalnayak thanked for this post
  19. #400
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு அற்புதம் அற்புதம்.
    எனக்கு வாஸ்தவமான ஒரு சந்தேகம் வருது - நீங்க ஒரு எந்திரரோ-ன்னு!!! யப்பா என்ன டேட்டா, என்ன டேட்டா, 'சுவாதி முத்யபு ஜல்லுலலோ' பார்த்தாகி விட்டது. பக்கா தெலுகு படமாக இருக்கிறது. நீங்கள் சொன்ன அமலா நாகார்ஜுன் நெருக்கம் உண்மை. (சி.க. குஷி நிச்சயம் தொடரும். சந்தோஷம்தானே சி.க., நமது வாசு இருக்க என்ன கவலை. குஷி குஷிதான்.) உண்மைதான் என் குறை தீர்ந்து போனது அந்த பாடலின் படமான 'இதய கீதம்' பட விவரம் தெரிந்ததால். தெலுங்கிலும் பாடல் நன்றாக இருக்கிறது. தமிழிலும் அப்படியே. ஹம்சலேகா இசை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  20. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •