Page 260 of 400 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2591
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
    இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா...’



    வாசு சார்,

    உங்கள் எத்தனையோ பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய உங்கள் பதிவு.. ‘பூ முடிப்பாள் பூங்குழலி’ கலங்க வைத்து விட்டது. தங்களின் தாயார் நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் ஆண்டு பல நீண்டு வாழ இறைஞ்சுகிறேன்.

    தங்கள் நிறுவனத்தில் பிரச்சினை தீவிரமடைந்து வருவது வருத்தமளிக்கிறது. திமுகவின் தொழிற்சங்க அமைப்பின் தலைவர் நீக்கப்பட்டதை கண்டித்து நேற்று இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்களாம். காலையில் நாளிதழ்களில் பார்த்தேன். தீவிரமடைந்தால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு ஊருக்கு ஒளி கொடுக்கும் தொழிலாளர் வாழ்வு ஒளி பெற வாழ்த்துக்கள்.
    ------------
    ஏற்றத் தாழ்வும் எளியோரை வலியோர் ஏமாற்றி சுரண்டும் சமூக அமைப்பும்தான் இந்தக் கொடுமைகளுக்கு காரணம். இப்படி சொன்னால் பணக்காரர்களுக்கு எதிராக பேசுவதாக கூறுவார்கள். நாடோடி மன்னன் படத்தில் மக்கள் திலகம் கூறுவது போல ‘பணக்காரர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கையல்ல, ஏழைகள் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை’. இதை ஊருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்த இனிமையான பாடல்.... வண்ணக்கிளி படத்தில் மதுரக் கவிஞர் மருதகாசியின் வரிகளில்....

    ‘ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
    இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
    இதை எல்லார்க்கும் நீ எடுத்து சொல்லம்மா..’

    திரை இசைத் திலகத்தின் கிராமிய இசையில், இசைப் பேரறிஞரின் வெண்கலக் குரலில் திரு.பிரேம் நசீர் அவர்களின் நடிப்பில் சிறந்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் மிகச் சரியாக வாயசைப்பார் திரு.நசீர்.

    ‘நன்னானே நானே நானே நானேனன்னானே....’ கோரஸ் பாடலை மட்டுமல்ல, நம்மையும் தூக்கிச் செல்லும்.

    ஊருக்கு சோறுபோடும் விவசாயி பட்டினி.
    எல்லாருக்கும் ஒளி கொடுக்கும் தொழிலாளி வாழ்வில் இருள்.
    மக்களின் மானம் காக்கும் நெசவாளி கட்டிக் கொள்ள நல்ல துணி இல்லை.

    இதை விளக்கும் ஆழ்ந்து சிந்திக்க தூண்டும் வரிகள்..

    ‘பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
    நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
    இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா..’

    அற்புதமான பாடல்.

    இதில் இன்னொன்று, இப்போதைய சூழலை விளக்குவது போல...

    மது விலக்கு கொள்கையை பாமக தலைவர் திரு. ராமதாஸ் அவர்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீரென மதுவிலக்குக்கு ஆதரவு தெரிவித்ததும் நிலைமையே மாறி விட்டது. மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குரல்கள். (எல்லாருமே மதுவிலக்கை ஆதரிக்கும்போது இத்தனை நாட்களாக குடித்தது யாரென்று தெரியவில்லை.) சமீபத்தில் இறந்த திரு.சசி பெருமாள் அவர்கள் கூட கலைஞர் கருணாநிதியின் வீடு தேடிச் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், திரு. ராமதாசுக்கு அவர் நன்றி தெரிவித்ததில்லை. தனக்கே உரிய ராஜதந்திரத்தால் பெயரை தட்டிக் கொண்டு சென்று விட்டார் திரு.கருணாநிதி. அதனால் இந்த விவகாரத்தில் திரு. கருணாநிதி அவர்களை கடுமையாக சாடுகிறார் திரு.ராமதாஸ்.

    இதைத்தான்......

    ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன்பிடிக்க
    காத்திருந்த கொக்கு அதை கவ்விக் கொண்டு
    போவதும் ஏன் கண்ணம்மா?
    அதைப் பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா?...

    .........என்பதோ?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2592
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கலைவேந்தன் சார்,

    நன்றி! அருமை! இதோ நீங்கள் தகுந்த விளக்கத்துடன் எமக்களித்த வளமான பாடல். பார்த்துக் கொண்டிருங்கள். பின்னால் வருகிறேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellzlc thanked for this post
  6. #2593
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நீந்தி மகிழ நீர் நிறைந்த நீச்சல் குளமிருக்கு ! மங்கையர் மனம் மகிழ தேன் நிறைந்த மதுர கான கடலிருக்கு!!
    ஆனால் ஸ்ரீதர் ஏன் ஒரு காலத்தில் நீச்சல் குளத்தில் மீனாட்டம் போட்ட காதல் மன்னரை களமிறக்காமல் கரையிலேயே களைப்பாற விட்டுவிட்டார் ?!

    இளமை கொலுவிருந்த போது தண்ணீருக்குள் என்ன ஆட்டம் ?!


    இளமை ஊஞ்சலாடி ஓய்ந்தவுடன் தண்ணீரில் இறங்க பயமா !



    தண்ணீர் சுடுவதென்ன ....விஞ்ஞான ஆய்வில் ஓய்வெடுக்கும் காதல் மன்னரை உசுப்பேத்தும் பேரொளி....

    https://i.ytimg.com/vi/EPWTU1WuC10/mqdefault.jpg

  7. Likes Russellmai liked this post
  8. #2594
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 47 -madhi kulavum yazhisaiye.......

    I found the song when searching for another song. 'madhi' was missing in the title quoted.

    From Jathakam (1953)

    madhi kulavum yazhisaiye..



    Original tune from Awara(1953) (already posted)

    Dam bhar jo udhar munh phere.....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. #2595
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜ் ராஜ் சார்
    அருமையான இனிமையான தமிழ் வடிவ ஜாதகம் பாடலுக்கு நன்றி.
    கோவர்த்தன் இசையமைத்த முதல் படமல்லவா...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2596
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #2597
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !

    இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!

    ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற
    வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும்போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து
    ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!


    கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 1: ஆணும் பெண்ணும் அழகு செய்வது .....ஆடை / தூக்குதூக்கி

    தூக்கு தூக்கியில் கொலையும் செய்வாள் பத்தினி கான்செப்டில் துரோகமிழைக்கும் மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்திட நடிகர் திலகம் போடும் ஆடை ஏல விற்பனையாளர் மீசை தாடி ஒட்டப்பும் ஆடல் பாடலுக்கான உடையலங்கார கெட்டப்பும் காட்சியமைப்பின் விறுவிறு செட்டப்பும் சூப்பரோ சூப்பர் !

    கருத்துப் பொதிந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து நடிகர் திலகத்தின் குரலாகவே TMS மாறியது வரலாறே!


    Last edited by sivajisenthil; 13th August 2015 at 06:00 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #2598
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    கான்செப்ட் நோக்கம் : ஜெகதலபிரதாபனாக கஜகர்ணம் அடித்தாவது காதலியின் உள்ளம் கவர்வதே!

    கெட்டப் கெட்டிக்காரர் 1 : நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மாறுவேட மதுரம் 2 : வா க(சல்)லாப மயிலே ...ஆரியமாலா ஆரியமாலா / / காத்தவராயன்

    இளமைக் குறும்பு மிளிரும் ஒரு துடிப்பான வாலிபனால் வயோதிக வேடம் தரித்து தள்ளாமையுடன் கூடிய சல்லாப வேட்கையை வெளிப்படுத்த முடியுமா ?

    எப்படிப்பட்ட உருவ மாற்றம் ?! என்னவொரு வெண்தாடி வேந்தர் ஒட்டப்! இசைத்தள்ளாட்ட கெட்டப்! நாயகியை கவிழ்க்கும் செட்டப்!




    இதே கான்செப்டை என் டி ராமாரவ்காரும் பலே தம்முடு படத்தில் தெலுங்கில் மாட்லாடி இதே (ஆனால் கறுப்பு மீசைதாடி) ஒட்டப் செட்டப் கெட்டப்பை விஜயாவைக் கவிழ்க்க ரயில் பயணத்தில் சுவை சேர்க்கிறார் !

    Last edited by sivajisenthil; 13th August 2015 at 02:53 PM.

  15. Likes vasudevan31355, Russellmai liked this post
  16. #2599
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    26

    'துள்ளும் மங்கை முகம்'

    'கண்காட்சி'

    நேற்று நாம் பார்த்த அதே 'கண்காட்சி' படத்திலிருந்து பாலாவின் இன்னொரு பாடல். அதே இனிமை. அதே அற்புதம். இதுவும் ஈஸ்வரியுடன் சேர்ந்து.

    'கள்ளபார்ட்' நடராஜனும், சகுந்தலாவும் ஆடிப் பாடும் வண்ணமயமான நடனம்.



    பாடல் துவங்குமுன் வரும் அந்த 'ஹோ ஹோ ஹோ' ஹம்மிங் கோரஸும், காட்சியில் ஸ்டேஜின் பின்னணியில் தெரியும் நிழலுருவ ஜோடி பிடித்திருக்கும் ஒலிம்பிக் ஜோதி போன்ற ஜோதியும், வானில் தெரியும் நிலா ஜோதியும், ரயில் பெட்டி போல வளைய வரும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, கட்டட நிழற்படமும் இன்றும் பார்க்க புதுமையாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது.

    இந்த புதுமையான செட்டிங்கிற்கு முன் 'குன்னக்குடி'யின் அருமையான ஃபாஸ்ட் பீட்டுக்குத் தக்கபடி 'கள்ளபார்ட்' நடராஜனும், சகுந்தலாவும் ராஜ உடையில் ஆடிப் பாடுவது சூப்பர்.



    'கள்ளபார்ட்'டும் பழைய படங்களில் கோஷ்டி நடனங்களில் ஆடி, பின் தனி நடனங்களும் ஆடியவர். அவருக்கு எல்லா நடனங்களும் அத்துப்படி. அதே போல 'சி.ஐ.டி'சகுந்தலா அப்போதைய காலத்திலிருந்தே ஆடி கொண்டு வருபவர்.

    அதனால் சினிமா நாட்டியங்களில் பெருத்த அனுபவம் பெற்ற இந்த கலைஞர்களை ஜோடியாய் போட்டு, அட்டகாசமான இந்தப் பாட்டிற்கு பொருத்தமாக ஆட வைத்திருப்பார் அருட்செல்வர். 'குன்னக்குடி'யும் ரோமானிய பின்னணி இசை கொடுத்து அமர்க்களப்படுத்துவார். தபேலா இப்பாடலின் பின்னணியில் விளையாடும்.

    பாலாவும், ஈஸ்வரியும் மிக அருமையாக பாடியிருப்பார்கள். பாலா மறுபடியும் பழைய இளங்குரலைக் கொண்டு வந்திருப்பார். 'உல்லாச சொர்க்க மேடையில்' என்பதை மிக அழுத்தமாக பேஸ் குரலில் எடுத்து இழுப்பார் பாலா அவருக்கே உரித்தான அந்த தனி நடையில்.



    பாடல் பாதிக்குப் பின்பு அப்படியே மேற்கத்திய பாணி இசைக்குத் தாவும். அதற்குத் தக்கபடி நாட்டியமும். சீமான் போல கோட் சூட்டில் நடராஜனும், டைட்டான சுடிதாரில் சகுந்தலாவும் ஆடுவார்கள். ஸ்டேஜின் பின்னணி ஸ்க்ரீனும் மாறி இருக்கும். கிடாரின் பங்கு அதிகம்.

    இந்தப் படத்தின் வண்ணத்தைப் பார்க்கும் போது மனம் நம்மையறியாமல் உற்சாகம் கொள்கிறது.

    அழகான இரு வேறுபட்ட வித்தியாச டியூன்களில், பாலா ஈஸ்வரியின் கலக்கல் குரல்களில் அழகான வண்ணக் குழைவில், இரு திறமையான நடன கலைஞர்களின் நல்ல நடன அசைவில் இப்பாடல் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது.

    அபூர்வமான, அடிக்கடி பார்க்க முடியாத, கேட்க முடியாத பாடலும் கூட.




    துள்ளும் மங்கை முகம்
    அள்ளித் தந்த சுகம்
    சொல்லச் சொல்ல தினம்
    மெல்ல மெல்ல மனம்
    நினைத்தாலே இன்பம் பொங்குமே!
    நிலையான காதல் வெல்லுமே!
    என்றும் நிலையான காதல் வெல்லுமே!

    வண்ணப் பெண்ணின் உடை
    அன்னம் போலே நடை
    மின்னல் மின்னும் இடை
    இன்னும் என்ன தடை?
    பொன்னான நேரம் அல்லவா!
    புதுப்பாடம் நான் சொல்லவா!
    இன்று புதுப்பாடம் நான் சொல்லவா!

    கன்னங்கள் தங்கக் கிண்ணமே!
    என் மன்னவா! எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே!
    கன்னங்கள் தங்கக் கிண்ணமே!
    என் மன்னவா! எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே!

    சித்திரக் கிண்ணமே!
    தித்திக்கும் சொந்தமே!
    சித்திரக் கிண்ணமே!
    தித்திக்கும் சொந்தமே!

    தேனூறும் மலராக உறவாடுவோம்
    தேனூறும் மலராக உறவாடுவோம்

    துள்ளும் மங்கை முகம்
    அள்ளித் தந்த சுகம்
    சொல்லச் சொல்ல தினம்
    மெல்ல மெல்ல மனம்

    நினைத்தாலே இன்பம் பொங்குமே!
    நிலையான காதல் வெல்லுமே!
    என்றும் நிலையான காதல் வெல்லுமே!


    http://www.dailymotion.com/video/x15...971_shortfilms





    ஒய்யாரத் தென்றல் வீசுதே!

    கண்ணோடு கண்கள் பேசுதே!

    உல்லாச சொர்க்க மேடையில்

    சல்லாபமாக ஆடுவோம்

    சொல்லாத கதைகள் சொல்லவா?

    இல்லாத கவிதை பாடவா?

    சொல்லாத கதைகள் சொல்லவா?

    இல்லாத கவிதை பாடவா?

    இன்பமான வேலை

    எவரும் இங்கு இல்லை

    ஏகபோகமாக நாமும் யோகமோடு
    நாளும் வாழுவோம்

    ஒய்யாரத் தென்றல் வீசுதே!

    கண்ணோடு கண்கள் பேசுதே!

    உல்லாச சொர்க்க மேடையில்

    சல்லாபமாக ஆடுவோம்


    http://www.dailymotion.com/video/x15...971_shortfilms

    Last edited by vasudevan31355; 19th August 2015 at 11:57 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai, madhu, eehaiupehazij liked this post
  18. #2600
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோட்ட மதுர கானங்கள் 32 / பிரான்க் சினாட்ரா
    Hollywood Musicals : Frank Sinatra Songs and Dances

    பிரான்க் சினாட்ரா ஹால்லிவுட் திரையிசை வரலாற்றில் மைல்கல்லான பன்முகக் கலைஞர்.
    ஆடல் பாடல் நடிப்பு சகலகலாவல்லவர். மகள் நான்சி சினாடராவும் புகழ் பெற்ற பாடகி. நடனப் பிதாமகர் ஜீன் கெல்லியுடன் இணைந்து பல ஆடல் பாடல் படங்களிலும் நடித்திருக்கிறார்!
    தனிக் கதாநாயகராக அவர் நடித்த வான் ரயான் எக்ஸ்ப்ரஸ் ப்ரம் ஹியர் டு எடெர்னிடி மறக்க முடியாத காவியங்கள்.
    Sizzling dance and song with Gene Kelly in Anchors Aweigh!



    Best of Frank Sinatra songs! You Tube link :

    https://i.ytimg.com/vi_webp/LvpGj1vc9d0/mqdefault.webp
    Last edited by sivajisenthil; 13th August 2015 at 05:55 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •