Page 81 of 400 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #801
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 62

    " அம்பா "

    பூவே பூச்சூட வா -- ( கல் நாயக் சார் மன்னிக்கவும் - உங்கள் தோட்டத்திலிருந்து சில பூக்களைத் திருடி விட்டேன் உங்களுக்குத்தெரியாமல் ----)

    தாயின் பாசம் கிடைக்கவில்லை - காதலித்த ஒரு பாவத்திற்காக தன் பேத்தியையும் வெறுக்கிறாள் இந்த பாட்டி - பின்னிப்பிணையும் பாச வலைகள் என்றுமே பிரியாது - பாட்டியுடன் பாசமும் மீண்டும் பேத்திக்கு கிடைக்கின்றது .....



    லலலா லலலா லாலாலா.. லலலா லலலா லாலாலா..
    லலலா லாலா லாலாலா.. லா..லா..லா..

    பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
    பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
    வாசல் பார்த்து.. கண்கள் பூத்து.. காத்து நின்றேன் வா
    பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
    கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
    கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது
    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
    நீயும் நெய்யாக வந்தாய்
    இந்தக் கண்ணீரில் சோகமில்லை
    இன்று ஆனந்தம் தந்தாய்
    பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

    பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

    காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
    பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
    தங்கம் கருக்காது தாயே
    பொன்முகம் பார்க்கிறேன்.. அதில் என் முகம் பார்க்கிறேன்
    இந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே
    சென்று நான் சேர வேண்டும்
    மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
    நான் உன் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்

    பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

    பூவே பூச்சூடவா,
    இளையராஜா,
    வைரமுத்து,
    சித்ரா,
    நதியா, பத்மினி.

    ------------------

    இணையத்தளத்தில் ஒருவர் எழுதின குமறல்கள் :

    " என் பிள்ளைகளை என்னை அடித்து என் தாய் தந்தையை பலவீனபடுத்தி என்னிடம் இருந்து பிரித்தபின் இந்த பாடல் என் தொண்டையில் முள்ளாக குத்துகிறது. ஏதோ ஒரு உணர்வு தொன்டையில் குத்துவதும், எச்சில் ஒருவிதமாக சுரப்பதும், நெஞ்சம் தவிப்பதும், அப்பப்பா பத்மினி வாசலை பரிதவிப்போடு பார்த்து ஏங்குவது போல் நானும் எத்தனை முறை ஏங்கியிருப்பேன். என் பிள்ளை, என் பிள்ளை என்று மனம் பேதலித்து தவித்து இயலாமையில் கோபம் கொண்டு கத்தி இருக்கிறேன். பாசம் மிக கொடியது என்று ஔவை சொல்லவில்லை, அன்பில்லா பெண் மனைவி ஆக அமைந்து அவள் கையால் சாப்பிட வேண்டும் என்ற நிலையே கொடியது என்று ஔவை சொல்லிய கருத்து என் வாழ்கையில் அனுபவம் ஆகிறது. சாப்பாடு என்று ஔவை எதை சொன்னார், வயிற்று பசி, உடல் பசி இரண்டுக்கும் உணவு தேவை. ஔவையே நீங்கள் மீண்டும் பிறக்கவேண்டும், எனக்கு தர்மம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என மனம் ஏங்குகிறது. இந்த பாடல் இதயத்தில் வலி. எந்த சமுதாயத்தில் இன்பமாக,கௌரவமாக, மரியாதையுடன் பெற்றோரின் கருணையில் வாழ்ந்தேனோ, அதே சமுதாயத்தை கொடூரமான, மோசமான, மிகவும் சிக்கலான, அவமான படுத்தும் அருவருப்பான சமூகமாக உணரவைத்தவள் ரேணுகா. திரையில் பத்மினியை போல் என் தாய், என் பிள்ளைகளை நெஞ்சில் சுமந்து, கண்களில் ஏந்தி, ஏங்கிய வாழ்க்கை. பரிதவிப்பு என் தந்தையின் உயிரை எடுத்த சதி."
    Last edited by g94127302; 9th June 2015 at 08:46 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 63

    " அம்பா "


    குழந்தைகள் பெற்றவர்கள் நடந்துகொள்வதை உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் -- அவர்களின் எதிரில் மதிக்கத்தக்க வகையில் நாம் நடந்துகொள்ள வில்லை என்றால் அவர்கள் வாழ்வும் கேப்டன் இல்லாத கப்பலைப்போல அமைந்து விடுகிறது ......


    கோழி ஒரு கூட்டிலே
    சேவல் ஒரு கூட்டிலே
    கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
    அன்பில்லாத காட்டிலே

    கோழி ஒரு கூட்டிலே
    சேவல் ஒரு கூட்டிலே
    கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
    அன்பில்லாத காட்டிலே

    பசுவைத் தேடி கன்னுக்குட்டி
    பால் குடிக்க ஓடுது........
    பசுவைத் தேடி கன்னுக்குட்டி
    பால் குடிக்க ஓடுது

    பறவை கூட இரை எடுத்து
    பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
    பறவை கூட இரை எடுத்து
    பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
    தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
    தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
    தனித் தனியா பிரிந்திருக்க
    எங்களால முடியுமா
    எங்களால முடியுமா
    கோழி ஒரு கூட்டிலே
    சேவல் ஒரு கூட்டிலே
    கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
    அன்பில்லாத காட்டிலே

    அடுத்த வீட்டு பாப்பா இப்போ
    அம்மா அப்பா மடியிலே
    அடுத்த வீட்டு பாப்பா இப்போ
    அம்மா அப்பா மடியிலே
    அதிஸ்டம் இல்லா பொண்ணுக்குதான்
    சேர்த்துப் பார்க்க முடியல்ல
    அதிஸ்டம் இல்லா பொண்ணுக்குதான்
    சேர்த்துப் பார்க்க முடியல்ல
    அம்மா மறக்கல்ல அப்பா நினைக்கல்ல
    அம்மா மறக்கல்ல அப்பா நினைக்கல்ல
    அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
    எங்களுக்கும் வயசில்ல
    உங்களுக்கும் மனசில்ல
    கோழி ஒரு கூட்டிலே
    சேவல் ஒரு கூட்டிலே
    கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
    அன்பில்லாத காட்டிலே.


  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  5. #803
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 64

    " அம்பா "


    தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது .
    தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது ...


  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #804
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 65

    " அம்பா "


    அம்மா , அப்பா என்றும் இணைந்து வாழவேண்டும் - அவர்கள் வாழ்க்கை என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் - இது குழந்தைகளின் ப்ராத்தனை ;

    குழந்தைகள் என்றுமே நான்றாக ஆரோக்கியமாக , நல்ல பெயருடன் என்றும் இருக்க வேண்டும் - இது தினமும் வேண்டும் ஒரு தாயின் ப்ராத்தனை...

    ப்ராத்தனைகளுக்கு உரியவன் ஒருவன் , அவன் நம்மை ப்ராத்திப்பது - உலகில் அன்பு என்றும் நிலைத்து இருக்கவேண்டும் - மத சார்பற்ற உறவுகள் ஓங்கி வளரவேண்டும் ---- நம் ப்ராத்தைனைகள் பலிக்கலாம் - அவனுடையது ????




  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  9. #805
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எம்.எல்.ஸ்ரீகாந்த்

    எம்.எல்.ஸ்ரீகாந்த் பாடிய அபூர்வ பாடல்களின் தொகுப்பு.

    மிக்க நன்றி முரளி சார்!

    'காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ' பாடலில் ஹம்மிங் தருபவர் பாலாதான் என்று பல பேர் அடித்துச் சொல்வதுண்டு. ஆனால் ஒரு சிலரே எம்.எல்.ஸ்ரீகாந்த் என்பார்கள். நான் ஒரு சிலர் கட்சி. அதாவது உங்க கட்சி.

    இதோ 'உத்தரவின்றி உள்ள வா' படத்தின் டைட்டில் கார்டில் பின்னணி பாடியவர்களின் பெயரில் ஸ்ரீகாந்த் என்று போட்டிருப்பதைக் காணலாம்.



    நீங்கள் குறிப்பிட்டுள்ள எம்.எல்.ஸ்ரீகாந்த் அதிகமாகப் பாடல்கள் பாடவில்லை என்றாலும் 'நினைப்பது நிறைவேறும்' பாடல் மூலம் தமிழகத்திற்கு நன்கு பரிச்சயமானவர். வாணியுடன் இவர் பாடிய இந்தப் பாடல் பேய் ஹிட். ஆனால் பின்னால் என்ன காரணத்தினாலோ இவர் அதிகம் பாடவில்லை. ஆனால் இவர் பாடல்கள் சிலவே என்றாலும் ஒவ்வொன்றுமே கேட்டு ரசிக்கக் கூடியவை. அபூர்வமானவை.


    இவர் ஜானகியுடன் 'கல்யாண வளையோசை' படத்தில் இணைந்து பாடிய (சரியா ராகவேந்திரன் சார்?)

    'வள்ளுவன் குரலில் சொல் எடுத்தேன்
    கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
    இளங்கோ வரியில் எழிலெடுத்தேன்
    ஆடுவோம் நாம் ஆடுவோம்'

    என்ற

    பாடல் அருமை. சற்ற குரல் நடுக்கத்துடனே எப்போதும் பாடுபவர் இவர்.

    இப்பாடலை 'லல்லல்லால லலலலலா' என்று ஜானகி துவங்கும் போது நம்மை நாமே மறந்து விடலாம். ஜானகி அற்புதமாக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மேலும் இப்பாடலின் வரிகள் அருமையோ அருமை. டியூன் இன்னும் பிரமாதம்.



    அப்புறம் இன்னொரு பாடல்.

    'பேசு மனமே பேசு' என்ற யாருக்கும் அதிகம் தெரியாத படம் ஒன்று. படம் வெளிவந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

    'கண்கள் தேடுது ஒளி எங்கே
    கலை கூடுது அழகெங்கே
    ஒளி போன பின்னால் என் வாழ்வும்
    நிலையானது வீண் என்பேன்'

    என்ற பிரமாதமான பாடல் ஒன்றை எம்.எல்.ஸ்ரீகாந்த் அதில் பாடியிருப்பார் மனதை உருக்கும் விதமாக. நிச்சயமாக கண்களில் கண்ணீர் பெருகும் இப்பாடலைக் கேட்டால். பாடலின் பின்னால் ஒலிக்கும் கோவில் மணி ஓசை நெஞ்சை பிசைவது உண்மை




    இவர் ஒரு லக்கி கை. சுசீலா, ஜானகி, வாணி என்ற ஜாம்பவான் பாடகிகளுடன் இணைந்து பாடி அசத்தி விட்டார். சுசீலாவுடன் இணைந்து கிறித்துவ பக்திப் பாடலும் பாடி இருக்கிறார். மலையாளப் பாடல்களும் பாடி உள்ளார். இசையமைப்பாளரும் கூட. 70 களின் பாடல்களை ரசிக்கும் எவருக்கும் ஸ்ரீகாந்தைத் தெரியாமல் இருக்க முடியாது.

    மேற் சொன்ன பாடல்களை தமிழ்நாட்டு வானொலிகளை விட இலங்கை வானொலி அதிகமாக ஒளிபரப்பி நம் இதயத்தில் நீங்கா இடம் பெற்றது. இன்னும் சொல்லப் போனால் எம்.எல்.ஸ்ரீகாந்த் என்ற பாடகரையே இலங்கை வானொலி மூலமாகத்தான் நாம் அறிய முடிந்தது.

    இவருடைய எல்லாப் பாடல்களுமே அருமை என்றாலும் நீங்கள் கூறியது போல 'நினைப்பது நினைவேறும்... நீ இருந்தால் என்னோடு' பாடல்தான் இவரை டாப்பில் உயர்த்தியது. இப்படத்திற்கு இசையும் இவரே. 'தன்வினை தன்னைச் சுடும்' என்ற படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான்.



    இவர் பாடிய நினைவுக்கு வரும் இன்னொரு பாடல்

    'எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி
    தென்றல் கவி பாடும் இன்ப ஆட்சி'




    ரொம்ப நன்றி முரளி சார். ஒரு அருமையான பாடகரை நினைவுகூர வைத்ததற்கு.
    Last edited by vasudevan31355; 9th June 2015 at 06:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #806
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி நலம்தானே

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #807
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    எம்.எல்.ஸ்ரீகாந்த் நல்ல பாடகர்.
    ஆமாம் ஜி காதல் காதல் பாடலில் வரும் ஹம்மிங் இவருடையதே. மலையாளத்திலும் பாடியுள்ளார். அவரை நினைவுகூர்ந்த உங்களுக்கு நன்றி

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #808
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குட் மார்னிங் ஜி! சுகந்தன்னே?
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #809
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையில் பக்தி -4

    பக்தி என்பது ஒரு சாரார்க்கு மட்டுமல்ல
    தமிழ் திரையில் எல்லா சமய பக்தியும் வந்துள்ளது அப்படிப்பட்ட பாடல்களும் அருமையாகவும் அமையத்தான் செய்தன

    அப்படிப்பட்ட பாடல் தான் இது.
    பி.ஏ.பெரிய நாயகி அவர்களின் குரலில் அற்புத பாடல்

    எஸ்.வி.வெங்கட்ராமனின் இசை, எம்.வி.ராஜம்மாவின் நடிப்பு என எல்லாமே தூள்

    எனக்கு மிகவும் பிடித்த எம்.வி.ராஜம்மா

    அருள் தாரும் தேவ மாதாவே


  16. Thanks gkrishna, vasudevan31355 thanked for this post
  17. #810
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுருக்க எழுதுவது எப்படிஜி? கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •