Page 80 of 400 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #791
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //தினம் கருவைக் கலைக்கும் இந்தக் காலத்தில்// வாசு ஜி.. என்னை பற்றி நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள்.. நான் டெய்லி ஆம்லெட்லாம் சாப்பிட மாட்டேன்

    முரளி வாங்க வாங்க.. நன்றி..

    வாசு.. பரங்கிக்காய் மூஞ்சி பிரபாகர் ரெட்டி யை விடுங்கள்..இன்னொரு வில்லன் அந்தக்காலத்தில் படுத்தி எடுத்தாரே நினைவிருக்கா சுதர்ஸன்.. சந்திப்பு வில் வயசான டான் ..எப்பப் பார்த்தாலும் கான்ஸ்டிபேஷனில் இருப்பது போல ஒரு முகம்.. நிறைய படஙக்ளில் வில்லன் அப்புறம் மர்மதேசம் என்ற சீரியலின் முதல்பாகத்தில் இவர் டபிள் ஆக்டா அல்லதுசகோதரருடன் நடித்தாரா தெரியவில்லை..அதிலும் வருவார்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #792
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு, நன்றி எடையைப் பாராட்டியதற்கு..// நீர் தைரிய சாலிதான்.. சி.கவிற்குப் பிறகு// அதானே சின்னான்னு கூப்பிடறதுல்லாம் மறந்து போச்சா.. மனிதர் மாறிவிட்டார்..மாறியது நெஞ்சம் மாற்றிய்வர் யாரோ



    (கண்டது கற்றால் பண்டிதன் ஆவான் என்பார்கள். ஆனால் சின்னக்கண்ணன் பதிவுகளைப் படித்தால் (என்னைப்போன்ற) கணடவ்னும் பண்டிதன் ஆகலாம் போலிருக்கிறதே) அடடா ரொம்ப தாங்க்ஸ் ஆதிராம்.. யாரங்கே செளதிக்கு ஒரு பக்கெட் பன்னீர் பார்சல்

  4. Likes vasudevan31355 liked this post
  5. #793
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்ஸ்!

    முதலில் கையைக் கொடுங்கள். 'பூப்பூவாய் பூத்திருக்கு' பாடலுக்காக. எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கரெக்ட்டாக பிடித்து விட்டீர்கள்.

    இந்தப் பாட்டு என்னுள் கலந்த பாடல். சிறுவர்களை மையப்படுத்திய பாடல் என்றாலும் இந்தப் பாடலை கேட்கும் போது ஸ்ரீதேவியோடும், மற்ற குழந்தைகளோடும் சேர்ந்து நானும் சிறுவனாகி விடுவது உண்டு. (அப்போது மட்டும்)

    என்னவோ ஒரு சோகமும், இன்பமும் கலந்த சுவையான பாடல். என்ன பூ என்ன பூ என்று சரோஜாப்பூ கேள்விகளாக அடுக்க, பிள்ளைப் பூக்கள் சரியும் தவறுமாக பதில் சொல்வது இனிமையோ இனிமை.

    இந்தப் பாட்டில் பல விசேஷங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் தந்தையான ஜெமினி இப்பாடலின் போது உடன் இருப்பார்.

    பாட்டின் இறுதி சரணத்தில்

    'வேலை செய்ய சோம்பல் தரும்
    வீட்டில் கூட வெறுப்பு வரும்
    வேதனையில் மலரும் பூ என்ன பூ?

    சொல்லுங்க என்ன பூ?'

    என்று சரோஜாதேவி பிள்ளைகளிடம் கேள்வி கேட்பார். ஆனால் முந்திரிக் கொட்டைஜெமினி (ஜெமினி சரோஜாவை உள்ளூரக் காதலிப்பார்) பிள்ளைகளுக்கு முன்னால் முந்திக் கொண்டு சலிப்பு என்று பதில் சொல்லி விடுவார்.

    அதற்கு தேவி,

    'மலர்களிடம் கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலை சொன்னால் மனசுக்குள்ளே தோன்றும் பூ என்ன பூ?'

    என்று இன்னொரு கேள்வியைக் கேட்டு வைப்பார் சற்றே வெறுப்புடன்.

    அதாவது பிள்ளைகளை மலர்களாக நினைத்து அவர்களுக்குத் தக்கபடி கேள்வி கேட்டால் எல்லாம் தெரிந்த ஜெமினி மரம் மலர்களுக்கு முன்னால் முந்திக் கொண்டு பதில் தரலாமா என்ற வேதனை கலந்த எதிர் கேள்வி அது.

    அதற்கு ஜெமினி மிகப் பெருமையாக,

    'மதிப்பு'

    என்று பதிலளிப்பார் கன்னடத்துக்கிளி தன் காதல் கிளியாகும் என்ற அவருடைய வழக்கமான எண்ணத்தில்.

    ஆனால் ரூட் வேற மாதிரி போ(ஆ)கும். எதிலும் பிடிப்பிலாமல் குடும்பத்துக்காகவே உழைத்து ஓடாய்த் தேயும் தேவிக்கு காதலிக்க நேரமேது... இல்லை அந்த எண்ணம்தான் ஏது?

    உடன் வெறுப்பாக முகத்தை வைத்து பதில் சொல்வார் சரோஜாதேவி. அந்த பதிலிலேயே காதல் மறுப்பும் இருக்கும்.

    'மனசுக்குள்ளே தோன்றும் பூ

    'கசப்பு'...

    (ஏன்யா! பிள்ளைகள் கிட்ட கேள்வி கேட்டா நீ வந்து பதில் சொல்றியே...அறிவில்லை?!...நீ பண்ணிய கூத்துக்கு உன் மேல் மதிப்பா வரும்? உன் மேல் ஆத்திரம்தான் வரும். நீ சம்பளம் கொடுக்கும் முதலாளியாச்சே! நான் வாயை மூடிக் கொண்டு போக வேண்டியதுதான்..? இருந்தாலும் நாசூக்காகவாவது பதில் சொல்றேன்.)

    இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஜெமினி சட்டென்று திரும்பி நாணத்துடன் நெற்றியில் கைவைத்து அவமானப்படுவது ஓஹோ!

    ஒரே ஒரு பாடல்!

    அதில்தான்

    எத்தனை ஆழமான, விதவிதமான

    கருத்துக்கள்...சம்பவங்கள்...உள்குத்துக்கள்...கேள்வ ிகள்...பதில்கள்..கருத்துப் பரிமாற்றங்கள்...உணர்வு வெளிப்பாடுகள்...நடிப்பு நயங்கள்.

    'ஓல்ட் ஈஸ் கோல்ட்' என்கிறார்களே! எத்துணை உண்மை.

    அவ்வளவு இருக்கிறது இந்தப் பாடலில்.

    மறுபடி நன்றி கல்நாயக். இன்னொரு முறை நீங்களும் பார்த்து இன்புறுங்கள்.
    Last edited by vasudevan31355; 9th June 2015 at 09:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak, rajeshkrv liked this post
  7. #794
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    ரவி,

    உங்கள் பதிவுகளையெல்லாம் படிக்கிறேன். அண்மைக் காலமாக நிறைய ஆன்மீக, தத்துவ கருத்துகள் பதிவு முழுவதும் விரவி கிடைக்கின்றன. உங்களில் ஒரு மாற்றம் வந்தது போல். மெருகேறிய உங்கள் பாணிக்கு வாழ்த்துகள்.


    அன்புடன்
    நன்றி முரளி - உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இங்கு பதிவிடும் பதிவுகளை படிப்பதற்கும் , பாராட்டுவதற்கும் . சொல்லும் கருத்துக்கள் படிப்பவர்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் , அவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்கவே இருக்கக்கூடாது , அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் -- இவைகளின் அடிப்படையில் தான் எழுதுகிறேன் - தவறுகள் இருக்கலாம் .

    உங்களைப்போல அதை பொறுத்துக்கொள்ளும் பல நல்ல உள்ளங்கள் பல இங்கு இருப்பதால் எண்ண ஓட்டங்களில் தடை வருவதில்லை . மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள் உங்கள் பாராட்டுக்களுக்கு .

  8. #795
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க -19
    *

    எப்பவும் ஒரு விஷயம் உண்டு.. மனம் கவர்ந்தஆண்மகன் எதுக்காவது சீரியஸா இருந்தா அவனைத் தொந்தரவு செய்யறது பொண்ணுக்கு எப்போதும் பிடிக்கும்.

    ஹாய் டியர்..

    ஹல்லோ


    என்ன சுரத்தில்லாம இருக்கு

    ஷ்ஷூ.. கொஞ்சம் வேலைம்மா

    மொகத்தையாவதுக் கொஞ்சம் காட்டேண்டா

    இதோ

    ஏன் முகமும் சுரத்தா இல்லை..சரிவேண்டாம் காரணம்பாஸ்ம்ப.. இப்ப எனக்குஒரு விஷயம் தெரிஞ்சாகணும்

    என்ன

    ஒரு இமெய்ல் அனுப்பறேன்..அதுல சில சினிமாப் பாட்டுல்லாம் இருக்கு எது எந்தப்படம் நு தெரியலை..கொஞ்சம்பார்த்துச் சொல்லேன்

    ஏய். ப்ரோக்ராம்ல ப்ராப்ளம்னு சொல்றேன்..சரி செய்றேன்

    பின் என்ன.ஆணாகப்பட்டவன் வேலையெல்லாம் ஒதுக்கி அவள் கேட்ட சி.பா படம் பார்த்து எழுதி அனுப்பத் தான் செய்வான்.. எதற்கு அதற்கு அப்புறம் சிம்ம்பிளா ஒரு மெஸேஜ் வரும்.. மிஸ் யூ அண்ட் கிஸ்யூ..

    அதே அது பெண்கள் சீரியஸாய் இருந்தால் போச் எஸ்பெஷலி காதலி..

    ஏம்ம்மா உம்முன்னு இருக்க

    என்னை ஒண்ணும் கேக்காத. கண்ணில் கண்ணீர் திரளும்பின் புரளும் கூந்தல் நெற்றியில் மருளும்

    ஏய் சொல்லேன் அம்மா ஏதாவது சொன்னாளா

    எதுவும் கேக்காத என்னை

    சரி என்று பேசாமலிருந்தால் – உனக்கு என் மேல அக்கறையே இல்லை என்று ஆரம்பிப்பார்கள் பெண்கள் காதலில் என்று ஆன்றோர் சொல்வார்கள்..

    *
    இங்கு பாருங்கள் ரவிச்சந்திரனுக்கு என்னாயிற்று எனத் தெரியவில்லை ச்சும்மா ஸ்ப்ரிங் வச்ச மயிலாட்டமா துள்ளித் துள்ளி ஜெயலலிதா ஆட ஏதோ எதையோ பறி கொடுத்த மாதிரி உம்முனு மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்கார்..இருந்தாலும் ஜெ விடலியே.. கடோசி வரைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்ல ஆடிட்டாங்களே..

    அப்புறமாவது நாடகம் ஆரம்பிச்சாங்களா இல்லையா..என்ன உங்களுக்கும் தெரியாதா ..என்னமோ போங்க..

    எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்
    எங்கெங்குகாதலுக்கு வேளை வைக்கலாம்..
    பெண்ணோட கையெடுத்துப் பார்த்ததில்லையா
    கண்ணோடு வார்த்தை சொல்லிக் கேட்டதில்லையா அய்யய்யா


  9. Likes RAGHAVENDRA, vasudevan31355 liked this post
  10. #796
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குலவிளக்கு பாட்டுக்குன்னு ஆசைப்பட்டு டிவிடிவாங்கினேனா.. ஓர்ர்ரே அழுகை.. டி.வி. ஸ்க்ரீன் கூட ஈரமாய்டுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்..

    எஸ்வி.ரங்காராவ் கொஞ்சம் வித்யாச கேரக்டர்.. அதுக்காக சர்ரூவ லொக் லொக் லொக்குன் இரும வச்சு ( இன்னொருபட இருமல் ஓகே) வியாதி கொடுத்து சாகடிக்கறதெல்லாம் ஓவர்..படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏனோ என்னிடம் ஒட்டவே இலலை


    பாட்டு இசைக்களஞ்சியத்தில் கேட்டுக் கேட்டுப் பிடித்துப்போனது.. நன்றி கல் நாயக் அண்ட் வாசு..

  11. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  12. #797
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோபோங்க – 20

    இந்தப்பாட்டு ரொம்ப நாளாப் பார்க்க நெனச்ச பாட்டு..

    காதலைப் பொய்யென்றேனே கவனிக்க வில்லை நீயே
    அழகெலாம்பொய்யென்றேனே அறியவும் வில்லை நீயே

    என சிலோனில் அடிக்கடி கேட்டது. இன்று தான் கிடைத்தது..எல்லாம் புத்தர் அருள்! என்னமோ போங்க..

    *

    மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
    உள்ளங்கள் வணங்கும் கலையானேன்

    *



  13. Likes RAGHAVENDRA, vasudevan31355 liked this post
  14. #798
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,

    பாலா பாடல்களின் வரிசை அருமை. உன்னைத்தொட்ட காற்று வந்து என்னை தொட்டது
    இசையரசியின் தேன் குரல் இளவயது பாலா , வாலி ஐயாவின் வரிகள், குமாரின் இசை என எல்லாமே அமர்க்களம்

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  16. #799
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  17. Likes kalnayak liked this post
  18. #800
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 61

    " அம்பா "


    உண்மை சம்பவம் 9



    அம்மாவிற்கு என் மீது மிகுந்த கோபம் - இருக்காதா பின்னே - கணவனை இளம் வயதில் இழந்து , ஒரு வீட்டில் எடுபிடி வேலை செய்து என்னை படிக்க வைத்தாள் - ஒரு நாயிக்கு இருக்கும் நன்றி உணர்வுகள் கூட என்னக்கு இல்லாமல் போய்விட்டது .. என்னோவோ தெரியவில்லை , மேரியை சந்திக்கும்வரை நன்றாகத்தான் இருந்தேன் - அவள் என் வாழ்வில் குறுக்கிட்டபின் அம்மாவின் முக்கியத்துவம் குறைந்தது உண்மைதான் ..... " ராமு நீ எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள் ஆனால் அவள் ஒரு இந்து வாகத்தான் இருக்கவேண்டும் " இது அம்மாவின் வாதம் ...

    " அம்மா மதங்கள் நம்மால் உண்டாக்கப்பட்டவைகள் - இதற்க்கு நாம் ஏன் அடிமையாக வேண்டும் - மேரி நல்ல பெண்னம்மா - ஒரு தடவை ஆவலுடன் பேசிப்பார் - உன்னை தங்கமாக பார்த்துக்கொள்வாள் - முன் பின் பார்க்காத ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை விட, தெரிந்த பெண்ணை திருமணம் எய்துகொல்வதில் தவறு என்னம்மா ?"

    அம்மாவிடம் இருந்து பதில் வரவில்லை - அவள் இப்பொழுதெல்லாம் துணை என்று சொல்லிக்கொள்வது அவளுடைய பழைய கால நினைவுகளும் , கண்களில் வற்றிய நிலையில் இருக்கும் கண்ணீர் -இவைகள் மட்டுமே ... மிகவும் ஆச்சாரமாக வளர்ந்தவள் ----

    என் காதல் முன் , அவளுடைய பிடிவாதம் தோற்று போனது - அம்மா எங்களுடன் இருக்க விரும்ப வில்லை - அப்பாவின் 1 bhk வீட்டில் தனியாக வசிக்கிறாள் - நானும் மேரியும் பல தடவைகள் சென்று பார்த்தோம் - அவளின் கோபம் தனியவே இல்லை - மேரி என் நிலமையக்கண்டு மிகவும் வருந்தினாள் - இருவரின் துடிப்பினால் அங்கே கண்ணனின் வருகை . அம்மாவின் மனம் மாறலாம் என்று கண்ணனை காண்பிக்க அவளிடம் எடுத்துச்சென்றேன் - கண்ணனைப்பார்த்தாள் - கைகள் ஏந்த வரவில்லை -----

    கண்ணனுக்கு இன்று மூன்று வயது ---- மேரிக்கு உடம்பு சரியில்லை - எனக்கும் கலை போல வேலை பளுவுடன் ஏகப்பட்ட ஆபீஸ் பிரச்சனைகள் .... கண்ணன் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான் - ஒரு நிமிடம் - கீச் என்ற சப்தம் - யாரோ கத்தும் குரல் --- வீட்டில் இருந்த நான் வெளியே ஓடி வந்தேன் - நல்ல வேளை , யார் பெத்த பிள்ளையோ - காரில் அடிபடாமல் தப்பித்தது - பாவம் அந்த குழந்தையை காப்பாற்றின அந்த அம்மாதான் மயக்கமாக இருக்கிறாள் --- கைகள் பதறின - ஓடினேன் - அது -- அது என் அம்மா தான் -- இங்கு எப்படி வந்தாள் ? காப்பாத்தினது என் மகனைத்தான் என்று தெரியுமா ? -- அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு விரைந்து அழைத்துச்சென்றேன் -- மண்டையில் அடி -- எல்லா டெஸ்டும் எடுத்தாகிவிட்டது --- மெதுவாக ICU வில் இருந்த அம்மாவை நெருங்கினேன் --- அம்மாவிற்கு என்னை பார்த்து புரிந்துகொண்டாள் -- ராமு மேரிக்கு உடம்பு முடியவில்லை என்று எப்படியோ கேள்விப்பட்டேன் - அவளுக்கு செய்த கஷாயத்தை தரவே வந்தபோது ஒரு குழந்தை காரின் அடியில் போக இருந்தது - காப்பாற்றி விட்டு , நான் விழுந்துவிட்டேன் -----

    " அம்மா நீ காப்பாற்றியது உன் பேரனைத்தான் அம்மா ! கண்ணன் ----"

    " அம்மாவின் முகத்தில் பிரகாசம் - பூரிப்பு - ராமு உனக்கு ஒரு உண்மையை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது - உன் தந்தை ஒரு இந்து அல்ல - நான் காதலித்து மணந்துகொண்ட பீட்டர் -- யாருமே எங்கள் திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை - முடிவில் நாங்கள் இணைவது என்று முடிவு செய்தோம் . வருடம் இனிமையாக எங்கள் வாழ்க்கை ஓடம் ஓடியது - பீட்டர் படிப்பதற்காக வெளி நாடு செல்வதாக என்னிடம் சொல்லிவிட்டு சென்றவர் தான் - திரும்பி வரவேயில்லை - அங்கு வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக செய்தி .. " நீ கேட்கலாம் இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் - ஒரு இந்து வாக இருந்திருந்தாலும் , ஏமாற்ற நினைத்தால் என்ன செய்ய முடியும் ? என்று " நீ நினைப்பது சரி ----- என்னிடமும் இதற்க்கு சரியான பதில் இல்லை - " ஒரு வேளை என் விதி வேறு மாதிரி அமைந்திருக்கலாம் ... உன் அப்பா இருந்தும் நான் விதவையாகினேன் --- பல வீட்டில் வேலை செய்து உன்னை படிக்க வைத்தேன் --- பல வசதிகள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவள் - காதலித்தேன் என்ற ஒரு பாவத்தை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை -- நான் சந்தித்த சோதனைகள் , வேதனைகள் மிக மிக அதிகம் - நீயும் அப்படி ஒரு மாய வலையில் விழுந்து விடக்கூடாது என்பதால் தான் நான் தடுத்தேன் - மேரியை நான் ஒரு போதும் வெறுத்ததில்லை - என் மகன் ஒரு பீட்டர் இல்லையே சொல்லி வருத்தப்பட ------------

    கண்ணன் ---- மேரியையும் , பீட்டரையும் என் வாழ்வுடன் இணைத்தான் - அன்பு என்பது மத சார்பற்ற ஒன்று --- அதன் பெயர் - பைபிள் அல்ல , குரான் அல்ல , பகவத் கீதை அல்ல - ஒரே பெயர் -- அதுதான் "அம்மா "..

    =========

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
    மண்மேலே துள்ளும் மான்போலே

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


    என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
    தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
    தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
    ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
    தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
    தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
    கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
    கண்கள் மூடும்

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
    மண்மேலே துள்ளும் மான்போலே

    ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
    காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
    சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
    ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

    எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
    எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
    கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
    கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே

    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
    மண்மேலே துள்ளும் மான்

    Last edited by g94127302; 9th June 2015 at 08:43 PM.

  19. Likes kalnayak, RAGHAVENDRA, vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •