Page 38 of 400 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #371
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்று பிறந்த நாள் காணும் பிதாமகர் ராகவேந்தர் அவர்களை வணங்கும்



    என்.டி. ராமராவ் பிறந்த தினம்: மே 28- 1923
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #372
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு நீங்கள் எழுதி உள்ள பாடும் நிலா பாலாவின் 4வது பாடல் இடம் பெற்ற மிஸ்டர் சம்பத் 1972 இல் நெல்லை ரத்னாவில் பார்த்தேன் . என் இனிய நண்பர் ஒருவர் நம்பி ராஜன் மற்றும் அவர் தம்பி ஸ்ரீனிவாசன் . இருவரும் என்னோடு இந்த திரை படம் பார்க்க வந்து இருந்தார்கள். இன்று இருவருமே US இல் . இடைவேளையில் நமக்கு முறுக்கு,தட்டை ,கடலை மிட்டாய் தின்பது வழக்கம். அதுவும் அந்த பண்டங்கள் இருக்கும் அலுமினிய தட்டை முறுக்கு விற்பவர் தலைக்கு மேல் தூக்கி கொண்டு வேட்டியை மடித்து கொண்டு (நீல அல்லது சிகப்பு கலர் டிரௌசெர் தெரிய ) 'முறுக் முருக அரிசி முறுக்' (ரவும், றவும் அவ்வப்போது குரலில் பிசிறும் ) விற்று கொண்டு வரும் அழகே அழகு.



    இந்த படத்தில் இருப்பதை விட தகடாக இருக்கும் .



    அதே போல் முள்ளு முறுக்கு என்று அழைக்கப்படும் தேன்குழல் கிறிஸ்ப் ஆக இல்லாமல் சவுக் சவுக் என்று இருக்கும்.அதை தின்பதற்கு ஒரு கூட்டமே ரெடியாக இருக்கும்

    அந்த பழக்கத்தில் அதை வாங்குவதற்கு அவர்களிடமும் கொஞ்சம் காசு கேட்கலாம் என்று நினைத்து அவர்களை அணுகிய போது 'டாய் இதை எல்லாம் சாப்பிட கூடாது வவுறு பணால் ஆயிரும் எங்க அம்மா எங்களுக்கு வேற ஒரு பண்டம் கொடுத்து இருக்காங்க' என்று சொல்லி கொண்டே அவர்கள் டிரௌசெர் பையில் இருந்த எடுத்த பண்டம் இருக்கிறதே ஆளுக்கு ஒரு அரை தேங்காய் மூடி . சரி பாதியாக உடைத்து கொண்டு வந்து இருந்தார்கள். இருவரும் முன் பல்லால் கொருவி எடுத்து விட்டார்கள்.மீதி படம் முழுவதும் .



    மிஸ்டர் சம்பத் பற்றி படித்த ஒரு தகவல்

    1947-ல் ஆர்.கே.நாராயணின் நெருங்கிய நண்பரான ஜெமினி ஃபிலிம்ஸ் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்டு, திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கி, மிஸ்டர் சம்பத்தாகவும் நடித்து, திரு.பரூர் எஸ்.அனந்தராமன் அவர்கள் இசையில் மிஸ் மாலினி என்ற பெயரில் இக்கதை திரைப்படம்மாக்கப்பட்டது.

    இதில் புஷ்பவல்லி, ஜாவர் சீதாராமன், சுந்தரிபாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் அறிமுகமான படம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

    இது ஒரு சிறந்த சமூக திரைப்படமாக கருதப் பட்டாலும், வசூலில் ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் ஜனரஞ்சக சமாச்சாரங்கள் எதுவும் இல்லாததே படத்தின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகும். இப்படம் குறித்து திரு.ராண்டார் கை அவர்கள் தி ஹிந்து நாளிதழில் எழுதியுள்ளார்

    பின்னர் 1952-ல் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இதே கதையை மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்து இயக்கினார். இதில் நாட்டியப் பேரொளி பத்மினி மிஸ் மாலினி-யாக நடித்துள்ளார். ஹிந்தியிலும் படம் பெரிய அளவில் சாதிக்கவில்லை.பி பி ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் தான்

    1972-ல் இதே கதையை திரு.சோ அவர்கள் இயக்கி நடித்து மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. இதில் சோ தான் மிஸ்டர் சம்பத் ஆக நடித்திருப்பார். 'சோ', 'விவேக் சித்ரா' சுந்தரம் ஆகியோருடைய உதவியால் 20 பங்குதாரர்களை சேர்த்து, 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்தை தயாரித்தார்.
    இந்தக் கதையில் ஒரு விசேஷம், கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர் எல்லாம் ஒருவரே! 'மிஸ் மாலினி'யில் கொத்தமங்கலம் சுப்பு நடித்த இந்த வேடத்தில், 'மிஸ்டர் சம்பத்'தில் 'சோ' நடித்தார்.

    அவருடைய நடிப்பு பிரமாதமாக அமைந்தது. படம் வெற்றிகரமாக ஓடியது

    Miss Malini

    மிஸ்.மாலினியில் ஒரு நல்ல பாடல் உண்டு

    மைலாப்பூர் வக்கீலாத்து
    மாட்டுப்பொண்ணாவேன்...
    வைகாசி ஆனி மாதம்
    குத்தாலம் போவேன்
    வைரத்தோடு பட்டுப்புடவை
    வகைவகையாய் போடுவேன்
    வாத்தியாரை டியூஷன் வைத்து
    ஹிந்துஸ்தானி பாடுவேன்...

    வாசு நானும் கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்
    gkrishna

  4. Likes Russellmai, vasudevan31355 liked this post
  5. #373
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி கல்நாயக் மற்றும் கிருஷ்ணாஜி..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #374
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ராகவ் ஜி. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  7. #375
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    முதலில் ஹோம் வொர்க்..

    ராஜ் ராஜ் சார்

    கோடையில் இளைப்பாறிக்கொள்ள வகைகிடைத்த குளிர் தருவே – அழகான பாடல் நன்றி.. டி ஆர் எம் கணீர்க்குரல் அண்ட் கடைசியில் வருவது வெகுகுட்டியானகுமாரி கமலா தானே..

    ம்ம் இங்கயா தாமரைக் குளம் ப்ளஸ் மரமா.. பொசுங்கிடும்.. அதுவும் போன செவ்வாயன்று (முந்தா நாள்) 49டிகிரி..மதியம் அலுவலகத்தை விட்டு எதற்கோ வெளி வந்தால்.. அனல் காற்று ஹ்யுமிடிட்டியும் அதிகம்..இன்றுகொஞ்சம்பரவாயில்லை 45 தான் இருக்கும் என நினைக்கிறேன்.வலை எல்லாம் பொய் சொல்கின்றன..

    *

    கல் நாயக்..

    பூமாலை இத்தனை சடுதியில் முடிக்க வேண்டுமா என்ன.. அது சரி திடீர்னு என்ன அயன் பாட்டு.. அயன் பேருக்கு ஒரு சொதப்பல் எக்ஸ்ப்ளனேஷன் வேறு கொடுத்திருப்பாங்க.. பூமழை..ம்ம் தமன்னா ஓகே.. ( இத விட ஓ ஹானி ஆனி ஹானி ஆனி ந்னு ஒருபாட் வரும்..அது கொஞ்சம்பிடிக்க்கும் எனக்கு)

    என்ன ஒரு புரட்சிகரமான கதை பார்வதி என்னைப் பாரடி..பார்ப்பதற்கு ஆவல் மிகுகிறது!.. நன்றி கல் நாயக்..

    மங்கலப் பூமழை பொங்கிடும் திருமேனி இதுவரை கேட்டிராத பாட்டு..ஓய்.. மலை ராணி முந்தானை தழுவத் தழுவ பாட்டு தான் நினைவுக்கு வருது..கே.ஆர்.விக்கு அமெரிக்கர் தான் நாயகரோன்னோ.. பார்த்த்தில்லை.. விமர்சனத்தில் விதுபாலாவை கோல்ட் ஃபிங்கர் படத்தில் வருவது போல் காருக்குள் வைத்து க் கொல்வார் வில்லன் எனப் படித்திருக்கிறேன் குமுதம் விமர்சனத்தில்..

    பூ மழை தூவி தெரிந்த நல்லபாடல்.. பூமாலைபோட்டுப்போடும் மாமா கேட்டதில்லை..செங்கமலத் தீவு பாட் பார்க்கிறேன்..கண்ணன் எங்கே பாட் பொருத்தமாய் இருந்தத்.. தாங்க்ஸ்ங்க்ணா..

    *
    க்ருஷ்ணா..

    ந.தி பற்றிய நியூஸ்- வடிவேலுடையது ( அவர் அதிர்ஷ்டம் தேவர்மகனில் ந.தி கூட நடித்தது..), மிஸ்டர் சம்பத் பற்றிய தகவல்களுக்கு.. நன்றி..
    முறுக்கு நினைவுகள் சுவை..ஹையாங்க்.. பல் வலிக்க்குமே..

    *

    வாசு .

    ராஜஸ்ரீ செங்கமலத் தீவு தெரியலையாம்.. எனக்கும் கூட கொஞ்சம் டவுட்டாகத் தான் இருந்தது.. இந்த மலரைப்பறித்தாய் தலையில் வைத்தாய் எனக்கு மிகப் பிடித்த பாடல் ..பேசியது நானில்லை கண்கள் தானே, சிந்தித்தால் சிரிப்பு வருமும் பிடிக்கும்.. நீங்கள் போட்ட ஸ்டில்களும் பிடிக்கிறது!

    *

    மிஸ்டர் சம்பத் வீடியோகாஸட் வந்த காலத்தில் வீடியோ வாங்கி ப்ரிண்ட் சரியில்லாததால் பார்க்க விட்டுப் போன படம்..

    (புலி நக ஷேப்பில் நெற்றியின் முன்னால் முடி தொங்க அழகாக இருப்பார்) objection your honour..திருப்பி வைத்தபிறைச்சந்திரன் போல இருக்கிறது முடி..

    சரியாக நெற்றியில் சந்திரனும் பாதிப்
    பிறையாய்த் திரும்புதற் போலே – விரியாமல்
    ஆடிய காற்றில் அசைந்தாடும் முடியழகைப்
    பாடியே பார்க்கிறேன் பார்..

    ஓ..பஸ்ல் ஏறி உட்கார்ந்ததுக்கப்புறம் புலி நகம் தெரியுதுங்ணா..ஆனா சற்றே குண்டாய் இருக்குல்ல சுருள் முடி..ம்ம்
    புலிநகம் நெற்றியில்..மான் விழிகள் கீழே….

    ஒல்லி ஒல்லி 8 font எழுத்தைப் போல விகசிக்கும் ஜெயா அழகு தான்.. முத்து..ம்ம் என்னமோ போங்க..

    (அப்போ நான் இளசுதானே!) இப்பவும் தான்..ரசனையில்..

    ஆரம்பம் யாரிடம் உங்களிடம் தான் – நான் கற்றேன்…கிறேன்…பேன் குருஜி..

    System வைரஸால் பாதிக்கப்பட்ட்து என்று எழுதியிருந்தீர்களே.பேக் அப் எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள் தானே..

    *


    ரவி,

    வேலையில்லா பட்டதாரி பாட்டை விட தாயிடம் வாழவில்லை க்ருஷ்ணா க்ருஷ்ணா பாட் தான் பிடிக்கும்
    .. என்ன திடீர்னு மூணு நாள் லீவ்..ம்ம் பத்திரமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.. நான் அடுத்த மாசம் 3வது வாரத்திலிருந்து சுட்டி..

    டாக்ஸி ட்ரைவர் கதை சற்றே தாயே உனக்காகவை நினைவு படுத்துகிறது..சிவகுமாரும் செல்லுமிடமெல்லாம் – எங்க அம்மா சொன்னாங்க எங்க அம்மா சொன்னாங்க என்று ஒரு வசனம் பேசுவார்..ம்ம்

    *

    ராஜேஷ்..

    சிறகே இல்லாத பூங்குருவி, ஒன்று வானத்தில் தவிக்கிறது – இதுவரை கேட்டதில்லை..குஷ்பூ சுரேஷ் ஜோடியா.. குலோப்ஜாமூனும்(அந்தக்கால), ஆமைவடையுமா.. யார் ரூம்போட்டு யோசிச்சுருப்பாங்க..

    உனக்குத்தெரியாமல் உன்னைப் படித்தவள் வாசுகி வா சகி..

    புடவையது மென்மையாய் பூவிலாமல் நெய்தால்
    அடமாய் அழகுவரும் ஆம்..

    ப்ளெய்ன் ஸாரீஸ் எப்போதுமே அழகு பெண்களுக்கு என்று ஆன்றோர் சொல்வார்கள்..ஆனால் மம்முட்டி கட்டம்போட்ட சொக்காயில் நன்றாக இருக்கிறார். இந்தம்மா என்னதான் இளமையாய் இருப்பதாக குளித்துக் குதித்துக் காட்டினாலும் கொஞ்சம் சுமார் தான் இல்லியோ..யாராக்கும் அது..
    பாட்டு நைஸ்..

    *

    பூத்திருக்கும் வனமே வனமே
    பூப்பறிக்க இதுதான் தினமே..

    ஆரம்பத்தில் வரும் ஸாக்ஸஃபோன் அப்புறம்கார் அப்புறம் மம்முட்டி அப்புறம்

    இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இவள் உந்தன் திருமதி..ம்ம்சாக்ஷி.. சுருக்கமா வீட்ல எப்படிக் கூப்பிடுவாங்களாம்..சாக்ஸ்ன்னா..

    பாடல் உமாரமணன்..பூங்கதவே தாள் திறவாய்ல ஹைபிட்சுக்குப் போகும் குரல் கொஞ்சம் அடக்கி மனதை வருடுகிறது..பாடலும் தான்..

    *

    வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்..
    கேட்டிராத பாடல்..ஃப்ராங்க்கா கேட்டீங்கன்னா இந்த ரோஜா ..வில் கம் அண்ட்ர் விஜயகுமாரி ஃபேமிலி..ஆர் கேடகரி.. எனக்கு என்னவோ பிடிக்காது..பாட்டு நன்னாயிருக்கு.. போட்டிருக்கற தங்க நெக்லஸ் நன்னாயிட்டு இருக்கு..

    *

    ஐ லவ் இந்தியா என்ன பட்ஜெட் படமா என்ன.. பாடல் ஆரம்பத்திலேயே துண்டு விழறா மாதிரி இருக்கு… நாய் வேற துரத்துது..ஆ… அதானே பார்த்தேன் நாயகர் எக்ஸர் ஸைஸ் பண்ணிகினு இர்க்கார்.. சரத்.. அந்தம்மா ஓடி வந்து தொபுக்கடீர்னு அவர் மேல ஒக்காந்துக்கிட்டது கூட பரவாயில்லை..எங்கிருந்தோ எனை அழைத்தது உந்தன் கானம் தானான்னு குதிரைகளைப் பார்த்துக் கேக்கறது ரொம்பத் தப்போன்னோ..
    என் மனதில் அன்பை விதைத்ததென்ன உந்தன் மோகம் தானா..(இதுவும் ரொம்ப மோசம் ஆண் மேலேயே பழி போடப் படாது) ம்ம் ஒரு கணம் ராஜகுமாரி ட்ரஸ் அடுத்தகணம் கடற்கரையில் ஹாஃப் ட்ராயர்.. எல்லாம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபீஸ்காக..கொரியோக்ராஃபி கொஞ்சம் இடிக்குது..ஹீரோயினும் ரொம்ப சரத்தை இடிக்கிறார்.. பாட்டு சுமார் தான் பிகாஸ் ஆஃப் மீசிக்..

    ஆக ஒரே கல்லுல அஞ்சு மாம்பழங்கள்(ஒண்ணு கொஞ்சம் புளிப்பு நீலமா இருக்கும்..மாம்பழ வகையைச் சொன்னேங்க) கொடுத்தமைக்கு நன்றி ராஜேஷ்..

    *
    Last edited by chinnakkannan; 28th May 2015 at 11:18 PM.

  8. Thanks kalnayak, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355, rajeshkrv liked this post
  9. #376
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Baby Kamala in Naam Iruvar 1947

    ChinnakkaNNan: If you like to watch Baby Kamala dance
    here is 'Aaduvome PaLLu Paaduvome' also from Naam Iruvar (1947.
    The singer is D.K.PattammaL :

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Likes kalnayak, gkrishna, rajeshkrv liked this post
  11. #377
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பல் வலிக்கிறது கிருஷ்ணா! முறுக்கு தின்னு நாளாச்சு.

    ஹிந்தி 'மிஸ்டர் சம்பத்'தில் விதவிதமான கெட்-அப்களில், ஸ்டேஜில் எனது அபிமான சம்ஷத் பேகம் குரலில் பத்மினி வேறு வேறு டியூன்களில் பாடும் பாடல். (Laila Laila Pukaroon ) இந்தப் படத்தில் மோதிலால் தான் ஹீரோ. (சி.க, மோதிலால் நேரு எப்ப சினிமாவில் நடித்தார் என்றெல்லாம் கேள்வி கேட்கப் படாது.)

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan, kalnayak, gkrishna liked this post
  13. #378
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சில அபூர்வ நிழற்படங்கள்

    இணையத்திலிருந்து.

    தாதா சாஹேப் பால்கே இயக்கிய 'ராஜா ஹரிச்சந்திரா' (May 3, 1913) படத்தின் ஸ்டில்.



    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks gkrishna thanked for this post
    Likes kalnayak liked this post
  15. #379
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நீங்கள் போட்ட ஸ்டில்களும் பிடிக்கிறது!//
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes gkrishna liked this post
  17. #380
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கண்ணனும் கவிஞனும்



    அலகிலா விளையாட்டுடையான்

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே தான். தெய்வத்தை மஹாகவி பாரதி, அதுவும் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்த அந்த ஆயர்பாடிக் கண்ணனை எவ்வாறு அனுபவித்தார் என்று இதுவரை பார்த்தோமே கவனமிருக்கிறதா?.

    தந்தையாக, ஆசானாக, சீடனாக, சிறு பெண் கண்ணம்மாவாக, சேவகனாக பார்த்தது ஒருபுறம் இருக்க, இன்று அவனை ஒரு குறும்புக்கார சிறுவனாக சித்தரிக்கிறார்.

    கோகுலத்தில் பிருந்தாவனத்தில் கண்ணனின் (மதுர கானம் சி கே,வாசு போல) விஷமங்களை அவன் தாய் தந்தை எப்படியெல்லாம் நாளொரு புகாரும் பொழுதொரு சமாதானமுமாக எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை எப்படி பாரதியாரால் கற்பனை செய்யமுடிகிறது என்று வியப்போருக்கு ஒரே விடை ''கொண்டை இருப்பவள் முடிந்து கொள்கிறாள்''.

    பாரதியார் பாரதியார் தான். மீசையும், முண்டாசும் நெற்றியில் கீற்றாக குங்குமமும் கழுத்து வரை யில் பட்டனோடு கருப்புக் கோட்டும் மட்டுமே ஒருவரை அமரகவி ஆக்குமா?. சுதந்திர நாட்களில் எத்தனைபேர் நேருவைப் பார்த்து தாங்களும் ஒரு வெள்ளை குல்லாவை அணிந்துகொண்டார்கள், நேரு ஆக முடிந்ததா ?

    சுருட்டு புடிச்சவன் எல்லாம் சர்ச்சில் இல்லை
    தாடி வைச்சவன் எல்லாம் தாகூர் இல்லை
    மீசை வைச்சவன் எல்லாம் பாரதி இல்லை
    கோட்ல் பூ வைச்சவன் எல்லாம் நேரு இல்லை


    ​ஆயர்பாடியில் நந்தகோபனை அவன் நண்பர்கள் பிடுங்கி எடுத்தனர்'

    ''ஏன் அமைதியில்லாமல் இருக்கிறாய். யசோதாவும் எப்போதும் ஒரு தடுமாற்றத்தோடு சில நேரம் சந்தோஷம் சில நேரம் நடுக்கமாகவும் உள்ளாளே . என்ன நடக்கிறது இங்கே?

    '' என்னத்தை சொல்வேன் போங்கள் ?''

    ஏதோ பத்து காத தூரம் ஓடினாற் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆயாசமாக இருக்கிறாயே நந்த கோபா ''

    ''என்னத்தை சொல்வேன் எல்லாம் அந்தப் பயல் செய்யும் லூட்டி? ஊர் வம்பை விலைக்கு வாங்கி வந்து விடுகிறான்.

    பொழுது விடிந்தால் பொழுது போனால் அவனுக்காக மற்றவரிடம் மத்யஸ்தம், தாஜா செய்வதற்கே சக்தி போய் விடுகிறதையா.''

    ''ஒ, அப்படி என்ன செய்கிறான் உங்கள் பையன்? '' என்று அங்கு மிங்கும் அவன் கண்ணில் தென் படுகிறானா என்று பார்த்துக்கொண்டே கேட்பார் நந்த கோபனின் நண்பர். அவர் பயம் அவருக்கு தெரியும். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் பின்னால் அவன் ஏதாவது விஷமம் செய்துவிட்டால்? ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டால்? இருந்தாலும் அப்படி என்னதான் செய்கிறான் அவன் என்று தைரியமாகவே கேட்டுவிட்டார்.

    ''சொல்கிறேன் கேளுங்கள் ' என்று ஒரு காலை நீட்டிக் கொண்டு ஒரு காலை மடித்துக்கொண்டு திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு ஆரம்பித்தார் தந்தை.

    ''உமக்கு தெரியும் இல்லையா, இந்த தெருவில் 16வீடுகள், அதில் 13 வீட்டில் இளம் பெண்கள். ஏறக்குறைய ஒரே வயது. சிலதுகள் சற்று பெரியது சின்னது. ஆனால் அவர்கள் எப்போதுமே அவனுடன் சேர்ந்து தான் விளையாடுவார்கள். நம் பயலும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாத நாளே இல்லை. ஆண் பிள்ளை என்றாலும் அவனை அவர்களுக்குப் பிடிக்கும். எல்லோரோடும் பேசி மயக்குபவன். அவர்களுக்கு ஜோடியாக விளையாடுபவன். புதிது புதிதாக ஏதாவது சொல்லுவான், செய்வான். அவன் சுவாரசியமானவன் என்று அவனையும் சேர்த்துக் கொள்வார்கள். அங்கு தான் ஆபத்து உருவாகும்''.

    ''ஏன், என்ன பண்ணுவான் ?''

    ''அவனோடு விளையாடினாலும் தினமும் யாராவது ரெண்டு பெண்ணாவது எங்கள் வீட்டுக்கு வந்து யசோதாவிடம் அவனைப்பற்றி ஏதாவது ஒரு குறை சொல்லாத நாளே கிடையாது. விளையாட்டு விளையாட்டு விளையாட்டு. தீராத விளையாட்டு அவனுக்கு, இந்த கண்ணன் பயலுக்கு. ஆமாம் அவன் பெயர் கண்ணன் தான். குறும்புக்கு மற்றொரு பெயர் கண்ணன் அல்லவா?''.

    ''ராதே இந்தாடி கொய்யாப்பழம் என்று ஒரு பெரிய பழத்தை எங்கோ மரத்தில் பறித்து, அந்தப் பெண் ராதாவுக்கு கொடுத்தான். அவள் ''நீ நல்ல கண்ணன் டா (கல்நாயக் போல) . எப்படி டா உனக்கு தெரியும் எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும்'' என்று சொல்லி ஆசையாய் அதை வாங்கி வாயில் வைத்து கடிக்குமுன்பாக மின்னல் வேகத்தில் அவள் வாயில் ஒரு கடி படும் முன்பே அந்த பழத்தைத் தட்டி விடுவான். அது கீழே விழுவதற்குள் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தான் ஒரு கடி கடித்து கால் பழம் அவன் வாயில் சென்றுவிடும்.

    அவள் அழுவாள்.கெஞ்சுவாள். ''கண்ணா கண்ணா தரேன் என்று சொல்லி தந்து ஏனடா ஏமாற்றுகிறாய், கொடுடா'' என் கண் இல்லையா என் அப்பன் இல்லையா நீ '' என அவன் பின்னே கெஞ்சி சரணடையும்போது போனால் போகிறது இந்தா'' என்று கடித்த பழத்தை அவளுக்குக் கொடுப்பான்.


    யாராவது ஒருவர் வீட்டிலிருந்து நிறைய நெய் சர்க்கரை தின் பண்டங்கள் நிறைய கொண்டுவருவான். அவனுக்கு தான் எல்லா வீட்டிலும் செல்லமாயிற்றே.'' எல்லோரும் வாருங்கள் உங்களுக்கும் தருகிறேன்'' என்று அவர்கள் அத்தனைபேரும் ஆசையோடு ஓடி வர, கைக்கெட்டாத உயரத்தில் அதை மேலே வைத்து விட்டு, வேண்டுவோர் எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு தானே கொண்டுவந்தேன்'' என்று அவர்களை திண்டாட வைப்பான். ரொம்ப கெஞ்சினால் கொஞ்சம் எடுத்து தருவான்.

    ஒரு பெண் ரொம்ப அழகானவள். உன்னைப்பார்த்தால் மான் மாதிரி இருக்கிறாய் என்று அவளைப் பற்றி எல்லோர் எதிரிலும் புகழ அந்தப் பெண்ணுக்கு உச்சி குளிர்ந்தது. அவனைச்சுற்றி அவன் சொன்னதெல்லாம் செய்தது. அருகில் அது வந்ததும் நறுக்கென்று அதை வலிக்க வலிக்க இடுப்பில் கிள்ளி விட்டு ஓடி விட்டான். அந்த பெண் வலியோடு ஓலம் இட்டுக்கொண்டு தன வீட்டுக்குள் ஓடியது. கேட்க வேண்டுமா அதன் தாய் முகத்தைத் தூக்கிக்கொண்டு இங்கே யசோதையிடம் முறையிட வந்துவிட்டாள்.''

    ''பிரேமா இங்கே வாயேன் உனக்கு ஒரு அழகான பூ நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன்'' என்று அந்தப் பூவை அவளிடம் காட்ட அவள் பெருமிதத்தோடு ஓடிவந்தாள். மற்ற பெண்கள் '' கண்ணா, எங்களுக்கும் பறித்துக் கொண்டுவந்து தாயேன்'' என்று கெஞ்ச பிரேமாவின் அருகில் சென்று ''நீ கண்ணை மூடிக்கொள் உன் தலையில் நானே இதை அழகாக சூட்டுகிறேன்'' என்றான். அந்தப் பெண்ணும் அவனை நம்பி கண்ணை மூடிக்கொண்டு நிற்க ராதையின் தலையில் அந்தப் பூவை சூட்டிவிட்டு ஓடிவிட்டான். ஏமாந்த பிரேமா அவனைத் துரத்தினால் அகப்படுவானா?

    இதையும் கேளப்பா. ஒரு நாள் ஒரு வீட்டில் விசேஷம் ஒரு பெண் தனது பிறந்த தினம் என்பதற்காக தானும் நீளமாக தலையைப் பின்னி, தாழம்பூ வைத்து மற்ற தோழிகளுக்கும் பின்னி எல்லோரும் தாழம்பூ மணம் கம கமக்க விளையாடிக் கொண்டிருந்தனர். வந்து விட்டான் இந்த ராக்ஷசன். அவன் கவனம் அவர்கள் பின்னல் மேல் சென்றது. ஒளிந்து கொண்டே அவர்கள் அறியாமல் பின் பக்கமாக வந்து அவர்களது பின்னலை பிடித்து இழுத்து விட்டு யார் என்று அவர்கள் பார்க்குமுன்பு ஓடிவிட்டான்.

    இதுபோல் தான் ஒருநாள் கோவிலில் விசேஷம் என்று மைதிலி என்ற பெண் புதிதாக நீல வண்ணச் சேலை ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு வந்தது.'' எங்கே காட்டு உன் புடவை ரொம்ப புதிதாக அழகாக இருக்கிறதே என்று அதைப் பார்ப்பதுபோல் அருகே வந்து அந்த புடவையில் நிறைய சேற்றைப் பூசிவிட்டு ஓடினான். அழுது புலம்பி ஊரையே கூட்டிவிட்டது அந்தப் பெண். யசோதை எப்படியோ அந்த பெண்ணின் தாயை சமாதானம் செய்து அன்று சாயந்திரம் ஒருவாறு அனுப்பி வைத்தாள்

    ''அடடா பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பிள்ளையாக இருக்கிறான் உன் வீட்டுக் கண்ணன். இவ்வளவு விஷமமா இந்த 6 வயதிற்குள். அதுசரி அவன் எங்கே சங்கீதம் படித்தான். ஒரு புல்லாங்குழலில் வெகு நன்றாக ஊதுகிறானே. நாங்கள் அதிசயிப்போம். எப்படி இந்த நந்தகோபன் பிள்ளை இவ்வளவு நன்றாக குழல் ஊதுகிறான் என்று. ''


    ''அதை ஏன் கேட்கிறீர்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு வாத்தியம் உபயோகித்ததில்லை. எதிலுமே இந்தப் பயல் கண்ணன் தானே முதல்வன். ஒருநாள் சில பயல்களோடு யமுனா நதிக்கரையோரம் ஒரு மூங்கில் கொத்தில் இருந்து ஒரு சில மூங்கில் கொண்டுவந்தார்கள். இவன் அதில் ஒன்றை எடுத்து வெட்டி, துளை போட்டு, ஊத ஆரம்பித்தான். எங்கிருந்தோ மந்திரம் போட்டது போல் இசை வெள்ளம்!!

    எப்படி அவனுக்கு இது முடிந்தது என்று அடிக்கடி யோசித்தால் களைப்பு தான் வரும். இந்த ஊரே திரண்டு அவன் பின்னே ஓடும். கையில் இருந்த வேலையைப் போட்டுவிட்டு மந்திரத்தால் கட்டுண்டது போல் அல்லவோ அந்த பெண்களும், அவர்கள் தாய்மார்களும் மற்ற கோபியரும் இந்த ஊரில் அவன் வாசிக்கும் இடத்துக்கு ஓடுகிறார்கள்.

    இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பசுக்களும் கன்றுகளும், பறவைகளும் இதில் கூட்டு. எப்போது ஆரம்பிப்பான் எப்போது முடிப்பான் என்று யாருக்குமே தெரியாது. கண்ணன் பயல் ரொம்ப வினோதமானவன். அவன் செய்யும் விஷமங்களுக்காக தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோபமாக அவனருகில் செல்வேன். என்னவோ மாயம் செய்து விடுவான். ஒரு சிரிப்பில் நான் அவன் அடிமையாகி அவனை வாரி அணைத்து முத்தமிட்டு விட்டு திரும்புவேன். நானே இப்படி என்றால் யசோதையைப் பற்றி சொல்லவா வேண்டும்?.



    உண்மையிலேயே யமுனையின் சல சல நீரோட்டத்தில், மாலைவேளையிலும், அதி காலை சிலு சிலு குளிரிலும் வித விதமான நறுமண போதையில், மரங்களின் அசைவில், செடி கொடிகளின் ஆட்டத்தில் தென்றல் புகுந்து வீச எண்ணற்ற மயில் மான் பசு கன்று ஒன்று சேர்ந்து இந்த கோபியர்களின் கூட்டத்திற்கு இடையே ஒரு மரக்கிளையில் அமர்ந்து அந்த கண்ணன் குழல் ஊதும்போது கண்ணை மூடி கேட்பேனே! ஆஹா! அந்த இன்பத்திற்கு மாறாக ''இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்''.



    ஒரு பெண் அடிக்கடி வாயைத் திறந்து சிரித்துக்கொண்டிருந்தாள் , என்ன தோன்றியதோ அவனுக்கு. அருகே ஓடிக் கொண்டிருந்த ஆறு ஏழு பெரிய கருப்பு நிற கட்டெறும்புகளைப் பிடித்து அவள் வாயில் போட்டு விட்டான். பயந்துபோன பெண் அப்படியே துப்பிவிட்டு பேச்சு வராமல் உளறலோடு ஓடி விட்டது. எல்லாருமே கொல்லென்று சிரித்து விட்டார்கள்.

    கண்ணன் குறும்புகளை பட்டியல் போட்டு காணாது. ஒரு புத்தகமே தனியாக எழுதவேண்டும். நான் சொல்வது எல்லாமே அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தான்.

    ''ஏய், வாடி விளையாடலாம் என்று வீடு வீடாகப் போய் அந்த பெண்களை கூட்டி வருவான். ''நீ போடா எங்களுக்கு வேலை நிறைய இருக்கிறது என்றால் கூட விடமாட்டான். கையைப் பிடித்து தர தர என்று இழுத்துக் கொண்டு ஓடுவான். சின்னக் குழந்தைகளைக் கூட விடமாட்டான். எல்லோரோடும் அவனுக்கென்று ஒரு தனி விளையாட்டிருக்கும். மும்முரமாக பாதி விளையாட்டில் திடீரென்று காணாமல் போய்விடுவான். வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவர்கள் அவனைத்தேடி கூட்டமாக வருவார்கள். அவன் எங்கோ ஒளிந்து கொள்வான்.



    நம்ம கண்ணன் கிட்டே ஒரு சாமர்த்தியம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் நல்லவன்.

    அம்மா, அப்பா, பாட்டி, அத்தை, சித்தி எந்த வீட்டிலும் அவன் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கும் திருட்டுப் பிள்ளை.



    கூசாமல் பொய் சொல்வான். தான் செய்ததை அப்படியே அபாண்டமாய் அடுத்தவன் செய்தான் என்று நம்பும்படியாக நடிப்பான். ஆளுக்குத் தகுந்தபடி மன நிலையை அந்த வயதிலேயே தெரிந்து அதன் படி நடந்து அவர்களை தன் வழிக்குக் கொண்டுவரும் சமர்த்தன். என்ன சொக்குப் பொடி போடுவானோ தெரியாது கோகுலம் ஆயர்பாடி பிருந்தாவனம் பூரா அவன் ஆட்டுவித்தபடி ஆடாத பெண்ணே கிடையாது போங்கள் '' என்று நண்பனிடம் சொல்லி முத்தாய்ப்பு வைத்தார் நந்தகோபன் .



    ​உண்மையிலேயே இன்றும் அந்த கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை தான் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லையே.​ பாரதியாரின் கற்பனையில் ஊறிய இந்த அற்புதப் பாடலை கீழே படியுங்கள். நான் மேலே எழுதியது ஒரு சிறு விளக்கம் தான்.



    கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)

    1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
    எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)

    2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
    செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
    மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
    மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)

    3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
    அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்;
    குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
    குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)

    4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
    பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
    வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)

    5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
    பொங்கித் ததும்புநற்

    ​கீ

    தம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே - அதைக்
    கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)

    6.
    அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
    ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
    எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
    எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)

    7.
    விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
    வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
    இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
    இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)

    8.
    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
    அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
    எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
    யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)

    9.
    கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
    குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
    ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
    அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத)



    gkrishna

  18. Thanks vasudevan31355, kalnayak thanked for this post
    Likes sss, vasudevan31355, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •