-
8th June 2015, 09:05 AM
#2751
Junior Member
Seasoned Hubber
-
8th June 2015 09:05 AM
# ADS
Circuit advertisement
-
8th June 2015, 09:12 AM
#2752
Junior Member
Seasoned Hubber
மதுரை - கோவை இரண்டு நகரகங்களிலும் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் தற்போது ஓடிக்கொண்டு வருவது சாதனை .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
திருச்சியில் மக்கள் திலகத்தின் ''தாயை காத்த தனயன் ''- தகவல் தந்த திரு rks அவர்களுக்கு நன்றி .
-
8th June 2015, 09:22 AM
#2753
Junior Member
Seasoned Hubber
JULY -1972- BOMMAI
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 09:29 AM
#2754
Junior Member
Seasoned Hubber
-
8th June 2015, 09:36 AM
#2755
Junior Member
Seasoned Hubber
நண்பர்களே
நாளை 9.6.1980 நான் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற தினம் .நீங்கள் எல்லாம் சென்னைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டது பற்றி அறிவேன். பசுமையான நினைவுகள்.35 ஆண்டுகள் சென்று விட்டதே.நாளை மீண்டும் உங்களது அனுபவங்களை எண்ணி பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன் .
-
8th June 2015, 11:08 AM
#2756
Junior Member
Diamond Hubber
குண்டு காந்தியை கொன்றது
குண்டு இந்திரா காந்தியை கொன்றது
குண்டு கென்னடியை கொன்றது
இன்னும் பலரை கொன்றது
ஆனால் நீலகண்டன் தொண்டையில்
விஷம் நின்று உலகம் கண்டது
அதுபோல் பாய்ந்தஂகுண்டின் கடமை
கொல்வது துளைத்தபின் கண்டது
பொன்மனசெம்மல் எனஂநின்றது
ஸ்தம்பித்தது தொண்டையில் .
குண்டு தோற்றது எம் ஜி ஆர் ரிடம்
courtesy fb
-
8th June 2015, 11:11 AM
#2757
Junior Member
Diamond Hubber
-
8th June 2015, 04:51 PM
#2758
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
KALAIVENTHAN
நிலைக்க முடியாத அதிகாரம்
கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன் பின்னணியில் அரசியல் சாயம் இருப்பதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோன்று அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்றால் எந்த மாணவர் அமைப்புமே அரசியல் சாயம் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு சில அரசியல் சாயம் உள்ள அமைப்புகள் மட்டும் இருக்கலாம். வேறு சில அமைப்புகள் இருகக் கூடாது என்பது பாரபட்சம்.
சென்னை ஐ.ஐ.டி. அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கும் சில மாணவர் அமைப்புகள் உண்டு. அதில் ஒன்று அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம். இந்த அமைப்பு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவையடுத்து தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், மத்திய பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட சில செயல்பாடுகள், அரசின் முடிவுகள் குறித்து இந்த அமைப்பு விமர்சித்ததாம். அதற்காக தடை விதித்துள்ளனர். (தடை செய்யப்படவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஐஐடி இயக்குநர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல். ஆனால் இயக்குநர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் போராட்டம் ஏன் நடக்கப் போகிறது?) இதை எதிர்த்து மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.
அதே ஐ.ஐ.டி.யில் பா.ஜ.மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னனி கொண்ட மாணவர் அமைப்பும் செயல்படுகிறது. அதுவும் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விமர்சித்திருக்கிறது. பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அந்த அமைப்பின் சார்பில் ஐ.ஐ.டி வளாகத்துக்கு அழைக்கப்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளனர். காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போதைய அரசை ஆதரித்தும் தீர்மானங்கள் போட்டுள்ளனர். அப்போதெல்லாம் பா.ஜ.ஆதரவு மாணவர் அமைப்பு தடை செய்யப்படவில்லை.
இப்போது, பா.ஜ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்வது ஜனநாயகமற்ற செயல். படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? என்றால் எல்லா அமைப்புகளையுமே தடை செய்யலாமே? அம்பேத்கர் - பெரியார் (தடைக்கு இந்தப் பெயர்களும் ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது) வாசிப்பு வட்டத்தை மட்டுமே தடை செய்வது என்ன நியாயம்?
ஒரு அரசை குறிப்பிட்ட கட்சி ஆளலாம். ஆனால், அரசு எல்லாருக்கும் பொதுவானது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பையோ, பிரிவையோ பாரபட்சமாக நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக மக்கள் திலகத்தை கைது செய்து சர்வாதிகாரியாக நடிக்கும் திரு.மனோகரின் தர்பாருக்கு அழைத்து வருவார்கள். கையில்லாத ரோஸ் நிற பனியன் போன்ற அங்கியில் தலைவரின் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
எந்தக் குற்றமும் செய்யாத நான் நிரபராதி என்று தலைவர் ஆக்ரோஷமாக கூறுவார். தலைவர் கூறும் சமாதானங்களை ஏற்க மறுக்கும் திரு.மனோகர், நிலைத்து நிற்கும் என் அதிகாரத்தின் வலிமை புரியாமல் பேசுகிறாய் என்று கூறுவார்.
ஸ்டைலாக தோள்களை குலுக்கி லேசான புன்சிரிப்புடன் தலைவர் சொல்லும் பதிலால் அரங்கமே அதிரும். இதை கடந்த ஆண்டுகூட பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. தலைவரின் பதில்....
உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?
சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால், ஆட்சியாளர்கள் இதை மறந்து விடுவது வேடிக்கை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலே உள்ள பதிவை போட்டிருந்தேன். அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஐஐடி நிர்வாகம் நேற்று நீக்கிவிட்டதாக செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.
இதை சொல்லாமல் இருந்தால் விஷயம் முழுமை பெறாதே என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன். தடை நீக்கம் பற்றிய செய்திக்கான இணையதள இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன்.
மறுவெளியீட்டில் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தலைவர் கூறுவது போல, சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதான் என்பதற்கு இந்நிகழ்ச்சியும் சாட்சி.
http://www.newindianexpress.com/citi...cle2855208.ece
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 08:10 PM
#2759
Junior Member
Platinum Hubber
17.2.1980
எம்ஜிஆர் அரசியல் வாழ்வு இத்துடன் முடிந்து விட்டது .
எம்ஜிஆர் செல்வாக்கு சரிந்துவிட்டது .
எம்ஜிஆர் -எதிர் காலமே இல்லை .
இப்படி ஆரூடம் கூறியவர்களின் ஆனந்தம் 100 நாட்கள் கூட நிலைக்க வில்லை . மக்கள் திலகம் மக்களை நம்பினார் .மக்களை சந்தித்தார் .மக்கள் திலகம் எம்ஜிஆரை மீண்டும் ஆட்சியை அமைக்க பல தொகுதிகள் காத்திருந்தாலும் கொடுத்து சிவந்த கரங்களின் திரைப்படங்கள் வெள்ளி விழாக்களையும் , நூறு நாட்களையும் , வசூலில் சாதனைகள் படைத்த மதுரை மேற்கு தொகுதி மக்கள் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று தங்கள் வாக்குகளை அள்ளி தந்து வெற்றி பெற செய்து சென்னை கோட்டைக்கு ''மீண்டும் முதல்வராக '' அனுப்பி வைத்தார்கள் நம் மதுரை மக்கள் .
மதுரை மக்களுக்கு மக்கள் திலகத்தின்
Last edited by esvee; 8th June 2015 at 08:29 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th June 2015, 08:35 PM
#2760
Junior Member
Platinum Hubber
Madurai district has never been indecisive in making its choice. In all the elections, it has decisively voted for the party that came to power.
The popularity of the Congress in the 1950s and 1960s could be seen from the way the party swept the polls in Madurai district between 1951 and 1962.
The rise of the Dravida Munnetra Kazhagam in 1967 had a significant impact here in the 1967 and 1971 elections. Then came M. G. Ramachandran's Anna Dravida Munnetra Kazhagam in 1977 (which was later rechristened as All India Anna Dravida Munnetra Kazhagam).
From 1977 to 1984, Madurai has overwhelmingly voted for the AIADMK. It returned MGR, the Chief Minister, from Madurai West in 1980.
courtesy - the hindu
Bookmarks