Page 1 of 10 123 ... LastLast
Results 1 to 10 of 92

Thread: கர்ஜனைக்கோர் கட்டபொம்மன் ...

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    கர்ஜனைக்கோர் கட்டபொம்மன் ...




    கலைக்கு அடையாளம் - நடிகர் திலகம்..

    எந்த வெளியீடானாலும் அணிவது வெற்றித் திலகம்...

    இந்த இறைவனுக்கென ரசிகர்கள்
    ... அல்ல .... வெறியர்கள்...
    அல்ல அல்ல... பித்தர்கள்
    அணிவது ரத்த திலகம்...

    அந்த சாதனைத் திலகத்தின் கர்ஜனை ஈரேழு உலகத்தையும் புரட்டிப் போடும்..

    வெற்றி வடிவேலனின் திருவடி
    பற்றி உலா வரும் பொம்மன்
    சுற்றி எட்டுத் திசையினிலும்
    சுற்றமெனக் கொண்டவன்

    இவனசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..

    இந்த மாபெரும் நாயகனின் புகழ்க்கிரீடத்தின் உச்சியில் வீற்றிருக்கும் அந்த வைரக்கல்...

    மறுவெளியீட்டிலும் மகத்தான சாதனைகளைத் தரக்காத்திருக்கும்

    அந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தின்

    சிறப்புகளை இங்கே காண்போம் என வேண்டுகிறேன்..
    கருத்துக்களையும் காட்சிகளையும்
    கண்குளிரத் தரவும் வேண்டுகிறேன்..


    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai, eehaiupehazij, sss liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா

    அழகான காலைப் பொழுது! அருமையாக நடந்த விழா! அற்புதமாக பேசிய சிறப்பு விருந்தினர்கள்! அரங்கம் வழிய வழிய திரண்ட ரசிகர்கள், போது மக்கள்! இவற்றுக்கு நடுவில் அரங்கம் அதிர அதிர பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் நடிப்புச் சக்ரவர்த்தியின் உருவில் டிஜிட்டல் வ்டிவில் வெள்ளையருக்கு எதிராக வீர முழக்கமிட்டப் போது பார்வையாளன் அடைந்த பரவசம் பற்றி சொல்லவும் வேண்டுமோ!

    பெரிய திரையில் ட்ரைலர் ஓட ஆரம்பிக்க அத்துடன் விழா தொடங்கியது. 3 நிமிட முன்னோட்டம் அத்துடன் மனம் கனிந்தருள் வேல் முருகா, இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, கறந்த பாலும் [கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் ராமநாதபுரம் செல்லும்போது வரும் பாடல்] ஆகியவை முழுமையாக திரையிடப்பட்டன. கறந்த பாலும் பாடல் பார்க்கும்போதுதான் எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் இது என்பது மனதில் உறைக்கிறது.

    தொகுத்து வழங்கிய திருமதி மதுவந்தி அருண் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார். ராஜ் டிவி உரிமையாளர்களான நான்கு சகோதரர்களும் முதலில் மேடைக்கு வந்தார்கள். அதன் பிறகு தளபதி ராம்குமார் மேடையேறினார். அடுத்து இளையதிலகம் பிரபு [என் favourite என்ற மதுவந்தியின் கமன்ட்] விக்ரம் பிரபு ஆகியோர் வந்தனர். கலைப்புலி தாணு, விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, சித்ரா லட்சுமணன், Dr. கமலா செல்வராஜ் ஆகியோர் அடுத்து வந்தனர். பிறகு அழைக்கப்பட்டவர் கலையுலக மார்கேண்டேயர் சிவகுமார். மேடைக்கு அழைக்கப்படும்போதே சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். நடிகர் திலகத்தை நினைவுப்படுத்தும் குரலில் அவர் அனைவருக்கு காலை வணக்கம் கூறி வந்தவர்களை வரவேற்றார். இந்தப் படத்தை பாதுகாத்து வைத்திருந்து இப்போது வெளியிட அனைத்து உதவிகளையும் செய்த ராஜ் டிவி சகோதரர்களுக்கு நன்றி சொன்ன அவர் அதற்கு பெரும் உதவியாக இருந்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்கள் ஸ்ரீனிவாசலு மற்றும் முரளி ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி இந்தப் படத்தை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் இந்தப் படத்தையும் வாழ வைப்பார் என்று பலத்த கைத்தட்டலுக்கு இடையே கூறி முடித்தார்.
    அடுத்து கலைப்புலி தாணு. தன்னை சிவாஜி பக்தன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தான் சினிமாத்துறைக்கு வந்ததற்கே காரணம் கட்டபொம்மன் என்றார். பள்ளி நாடகத்தில் கட்டபொம்மன் வசனத்தை பேசி நடித்த தனக்கு பரிசு கிடைத்ததையும் பரிசு வழங்கிய வார்ட் கவுன்சிலர் நீ சினிமாவிற்கு போனால் பிரகாசிப்பாய் என்று சொன்னதை வைத்து சினிமா ஆசையை வளர்த்துக் கொண்டதை சொன்னார். கட்டபொம்மன் வசனம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது என்று சொன்ன அவர் ஜாக்சன் துறையுடன் பேசும் வசனத்தின் சில அவ்ரிகளை பேசிக் காண்பித்தார்.

    அடுத்துப் பேசிய விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும் ராஜ் டிவி இயக்குனர்களில் மூத்தவருமான ராஜேந்திரனும் சுருக்கமாக பேசி தங்கள் உரையை முடித்துக் கொண்டார்கள். ராஜேந்திரன் சிறு வயதில் ஸ்கூல் கட் அடித்துவிட்டு சித்ரா தியேட்டரில் படம் பார்த்ததை நினைவு கூர்ந்தார். அவர் தந்தையார் அதை கண்டுபிடித்ததையும் சொன்னார். அவர் பேசி முடித்தவுடன் மதுவந்தியின் கமன்ட். அய்யா நீங்க உங்க அப்பாவுக்கு தெரியாமல் ஸ்கூல் கட் அடிச்சு படம் பார்த்திருக்கீங்க. ஆனா எங்க அப்பாவோ என்னை ஸ்கூல் கட் அடிக்க வைச்சு VHS காசட்டில் படம் பார்க்க வைத்தார் என்றார். தொடர்ந்து இப்பொது நான் நடத்தும் காலிபர் ஸ்கூல் பள்ளி மாணவர்களை நானே இந்தப் படத்திற்கு அழைத்து வருவேன் என்று சொல்ல கைதட்டல்கள்.

    விக்ரம் பிரபு வந்தார். இத்துணை பெரியவர்கள் இருக்கும் இடத்தில பேச நேரும் தருணத்தில் ஒரு இளைஞன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தார். ஆனால் பேச்சில் சமாளித்து விட்டார். உங்களைப் போலவே ஒரு ரசிகனாக என் தாத்தாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இதுவரை பெரிய திரையில் நான் இந்தப் படத்தை பார்த்ததில்லை. ஆகவே படம் பார்க்க வேண்டும் கை தட்ட வேண்டும் விசிலடிக்க வேண்டும், முடிந்தால் திரையை நோக்கி காசு எறிய வேண்டும். ஆகவே ரிலீசின்போது சந்திப்போம் என்று முடித்தார். உடனே மதுவந்தி விக்ரம் நீங்க காசு எறிஞ்சா நான் சூடம் கொளுத்துவேன் என்று கமண்ட் அடிக்க அரங்கமே அமர்களமானது.

    அடுத்து பேசிய Dr. கமலா செல்வராஜ் சிவாஜி குடும்பத்தில் நானும் ஒருத்தி, அவரின் பெண்ணைப் போன்றவர் என்று சொல்லி எனது அப்பாவும் இதில் நடித்திருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றார். சின்ன வயதில் பெரிய திரையில் பார்த்தது. இப்போது மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்ன அவர் தன்னை அழைத்ததற்கு நன்றி சொல்லி இந்தப் படமும் கர்ணன் போல் வெற்றி பெற வாழ்த்தி விடை பெற்றார். . .

    அடுத்து வந்தார் சித்ரா லட்சுமணன்

    (தொடரும்)

    அன்புடன்
    நன்றி முரளி சார்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா- Part II

    ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். மேடையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக விடப்பட்டு அங்கே நடிகர் திலகத்தின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்லை என்பதனால் அப்படி அமைக்கப்பட்டிருப்பதாக மதுவந்தி குறிப்பிட்டார்.

    இந்த படத்தை டிஜிட்டல் மெருகேற்றம் செய்வதில் முக்கிய பணியாற்றிய சித்ரா லட்சுமணன் அந்த முயற்ச்சியில் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி குறிப்பிட்டார். தாங்களுக்கு கிடைத்த எந்த பிரிண்டும் முழுமையாக இல்லை என்பதை சொன்ன அவர் லாப் வேலைகள் சிலவற்றை சென்னை பிரசாத் லாபிலும் சிலவ்ற்றை மும்பை ரிலையன்ஸ் லாபிலும் செய்ததாக சொன்ன அவர் அதன் பிறகும் ஒரு சில காட்சிகளை மேம்படுத்த வேண்டி பூனா பிலிம் இன்ஸ்டியுட்ல் இருக்கும் Archive -லிருந்து எடுத்தாக சொன்னார்.

    சிவகுமார் இந்தப் படத்தின் முழு வசனங்களையும் சொல்வார் என்று குறிப்பிட்ட சித்ரா லட்சுமணன் இப்போது தாணு போட்டிக்கு வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.

    சிவாஜியின் நடிப்பைப் பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் அவர் தலை முதல் பாதம் வரை நடிக்கும் என்றார். எந்த நடிகரையும் சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட லட்சுமணன் சிவாஜி மாதிரி நடிப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சிவாஜி மாதிரி நடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கட்டபொம்மன் தெருக்கூத்தை பார்த்துவிட்டுத்தான் நடிப்பு ஆசை நடிகர் திலகத்தின் மனதில் வேர்விட்டதை சொன்ன அவர் அதை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சொன்னார். அதன் பிறகு அவர் வந்திருந்த audience -ஐ பார்த்து " உங்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியாது. கட்டபொம்மன் நாடகம் சிவாஜி நாடக மன்றத்தால் 116 முறை நடத்தப்பட்டு அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வசூலானது. அந்த தொகை மொத்தத்தையும் பல்வேறு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி விட்டார். அன்றைய நாளில் 30 லட்சம் என்றால் சவரன் 80 ரூபாய்க்கு விற்ற காலம், இன்றைய தேதியில் 75 கோடி ரூபாய் வரும். 100 ரூபாய் கொடுத்தால் அதை photographer வைத்து படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய தொகையை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தர்மசீலன் சிவாஜி" என்று அவர் சொன்னபோது அரங்க கூரையே இடிந்து விழுவது போல் ஆரவாரம் அணை உடைந்து பாய்ந்தது.

    அடுத்து சிவகுமார் பேசுவதற்கு முன் தான் பேசி விடுவதாக சொல்லி பேசினார் பிரபு. பெங்களூரில் தாங்கள் படித்துக் கொண்டிருந்த அந்த சிறிய வயதில் இந்தப் படம் வெளிவந்ததாகவும் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் அவ்வளவாக இல்லை என்றும் பின்னாட்களில் ராஜ் டிவி வெளியிட்ட VHS காசட்டில்தான் அதிக முறை பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர். பார்த்திபன் விழாவிற்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிரபு அவர் தன்னுடனும் கோழி கூவுது படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசிய மற்றவை எல்லாம் வழக்கமான பேச்சுதான். மேடையில் இருந்த அண்ணன் சிவகுமார் அண்ணன் தாணு, அக்கா கமலா செல்வராஜ் ஆகியோரை சொன்ன அவர் வழக்கம் போல் அண்ணன் ரஜினி, அண்ணன் கமல் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். பிறகு வழக்கம் போல் ரசிகர்களுக்கு நன்றி. அப்பா காலத்திலிருந்து நீங்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

    சிவகுமார் பேச வரும்போது பெரிய வரவேற்பு. என் கேள்விக்கென்ன பதில் என்று ஒரு ரசிகர் சத்தமாக கேட்க, சொல்கிறேன் என்றார். சித்ரா லட்சுமணன் சொன்ன கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு கிடைத்த வசூல் நிதியாக வழங்கப்பட்டது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று சொன்ன சிவகுமார் பலருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார் படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துக் கொண்டபோது அதில் பங்கெடுக்க சிவாஜி, பந்துலு, பத்மின, ராகினி ஆகியோர் சென்றிருந்தனர். அன்றைய நாட்களில் வெளிநாடு செல்பவர்கள் மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாடு விமான நிலையத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் கிளம்பும் அவசரத்தில் பத்மினி அதை மறந்து விட்டாராம்..

    பத்மினியை விமான நிலையத்திலேயே சிறை வைப்பது போல் வைத்து விட்டார்களாம். யார் சொல்லியும் விடவில்லையாம். அவரை எப்படியாவது விழாவில கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்த ராகினி அன்றைய தினம் பஞ்சாபி உடை அணிந்து விமான நிலையம் சென்று பத்மினியை தனியாக சந்தித்து சினிமாவில் வருவது போல் இருவரும் போட்டிருந்த உடையை மாற்றி ராகினி உள்ளே தங்க பத்மினி விழாவில் கலந்துக் கொண்டாராம்.

    மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல் பசும்பொன் வரை .15 படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பதை குறிப்பிட்ட சிவகுமார் நடிகர்களில் தன்னளவிற்கு அவருடன் நெருங்கி பழகியவர்கள் யாரும் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வதாக் சொன்னார். அவரின் மகன் போலவே தன்னை நடத்தியதை நினைவு கூர்ந்தார். எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாத சிவாஜி கெய்ரோ விழாவில் விருது வாங்கும் போது தலை சற்றே கிறுகிறுத்தையும் பத்மினி அவரை சட்டேன்று பிடித்துக் கொண்டதையும் சொன்னார். எகிப்து அதிபர் நாசர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு நடிகர் திலகம் பாலர் அரங்கில் அளித்த வரவேற்பில் தானும் கலந்துக் கொண்டதை சொன்னார்.

    அதன் பிறகு கட்டபொம்மன் வசனங்கள். பற்றி பேசிய அவர் ஜாக்சன் துரையிடம் பேசுவது, இறுதிக் காட்சியில் எட்டப்பனுடன் பேசும் வசனங்களை அதே ஏற்ற இறக்கதோடு பேசி கைதட்டலை அள்ளிய அவர் அடுத்து கந்தன் கருணை பற்றி சொல்ல ஆரம்பித்தார். முதன் முதலில் சிவாஜியுடன் தூய தமிழ் வசனங்களை பேசிய அந்த படத்தைக் குறிப்பிட்டு அதில் சூரபத்மனுக்கும் வீரபாகுவிற்கும் நடக்கும் வாக்குவாதக் காட்சி படமாக்கப்ப்படும்போது தன்னை ஷூட்டிங்கிற்கு ஏபிஎன் வரச் சொன்னதையும் தான் சென்று பார்த்ததையும் நினைவு கூர்ந்த அவர் நடிகர் திலகத்திற்கும் அசோகனுக்கும் நடக்கும் அந்த வாக்குவாதத்தை அப்படியே அதே modulation-ல் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவாக பேசப்படாத ஆனால் ஏபிஎன்னின் அற்புதமான அடுக்கு மொழி வசனங்களை அதன் சுவை குன்றாமல் வழங்கிய சிவகுமார் தமிழ் உள்ளவரை என் தலைவன் பெயர் நிலைக்கும் என்று சொல்லி பட வெளியிட்டளார்களை வாழ்த்தி விடை பெற்றார்

    விழாவிற்கு தாமதமாக வந்த கவிபேரரசு வைரமுத்து இறுதியாக உரையாற்ற எழுந்தார். அது

    (தொடரும்)
    . .

    அன்புடன்

  6. Thanks sss, joe thanked for this post
    Likes Russellmai, sss liked this post
  7. #4
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    போர் முரசு ஒலிக்கட்டும் !
    திருவிழா காணச்சென்ற மறவர் கூட்டம் உடன் நாடு திரும்பட்டும்!
    கோட்டை கொத்தளங்களிலே காளையரின் காவல் வலுப்பெறட்டும் !
    பாசறைகள் நிரம்பட்டும் !
    பார்த்து விடுவோம் !
    வீரவேல் ! வெற்றி வேல்!!

  8. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  9. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post
  19. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post
Page 1 of 10 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •