Page 357 of 401 FirstFirst ... 257307347355356357358359367 ... LastLast
Results 3,561 to 3,570 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3561
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes ainefal, Russellbpw, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3562
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear raghavendra sir,
    congratulations for reaching another milestone of 7000 posts,keep going
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. Likes ainefal liked this post
  6. #3563
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Reserved
    7000 -வது சிறப்புப் பதிவை பதிவிடக் காத்திருக்கும், இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகளை அளிக்கவிருக்கும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #3564
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    'நடிப்பின் கல்தூண்'

    7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.



    'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.

    வேல் பூஜை.

    வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.

    ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.

    பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.

    தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.

    ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.

    வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.

    "சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''

    என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?

    ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
    பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.

    நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.

    அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.

    ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.

    வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.

    அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.

    அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்

    அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று

    அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.

    அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.

    ஆனால்

    கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.

    நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.

    உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.

    தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.

    "என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"

    வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.

    ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.

    வேலின் மானம் காத்தான் வேங்கை.

    மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.



    வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.

    பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.

    பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.

    உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!

    கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!

    அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!

    'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
    எங்கள் வம்சமகன் நட்ட வேல்'

    என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)

    'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.

    உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.

    எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
    கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்

    வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,

    பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
    பழியை வாங்க வரும் வீர வேல்

    பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
    பக்தி தேவதையின் சக்தி வேல்

    என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.

    பந்த பாசங்களை எந்த நாளினிலும்
    பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்

    என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.

    இந்த பூமி விட்டு வந்த போதும்
    உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்

    என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.

    இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.

    இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,

    மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
    காரணத்தை சொல்றேன் கேளடா
    அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
    தானெடுத்து நட்ட வேலடா

    அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!

    இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.

    நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
    நல்லவள் ஒருத்தி இருந்தா
    அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
    ஊருக்குள்ளே கூட இருந்தா

    உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
    ஒத்த பிள்ள பெத்து இருந்தா
    அந்த பச்ச புள்ள முன்னிலையில்
    பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
    நித்தமுமே போட்டு உதைச்சான்

    மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.

    இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!

    குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.

    திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.

    தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
    வாய்ப்பேச்சு நின்னதேயடா
    பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
    வஞ்சம் ஒன்னு வந்ததேயடா

    சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.

    வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
    அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
    அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
    காவிரியை மிஞ்சுமேயடா

    'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.

    'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.

    இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?

    வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
    வாய்த்து விட்டாள்
    பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
    அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு

    பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
    பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
    அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
    பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே

    ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.

    அப்பாவின் செயல் பார்த்தான்
    அம்மாவின் கொலை பார்த்தான்
    அப்போது சீறி வந்தான் ஊமையடா

    அம்மா அம்மா அம்மா

    பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...

    மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.

    திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.

    கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
    பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
    தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
    பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே

    இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.

    பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.

    கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
    அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
    தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
    மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

    ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
    சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
    தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
    சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை

    பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.

    பின் வசன மழை.

    'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது...

    இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...

    கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...

    ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்...

    என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'

    என்று ஆணித்தரமாகத் தொடருவார்.

    அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',

    இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.

    வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.

    நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


    Last edited by vasudevan31355; 9th July 2015 at 07:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3565
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3566
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இராகவேந்திரன் சார்,
    இத்திரியில் தங்களது பதிவுகள் ஏழாயிரத்துக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் கோபு.

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, ainefal, Georgeqlj liked this post
  11. #3567
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் ஊடகத் தளபதியாக ஏழாயிரம் கூர்வாள் பதிவுகளைக் கடக்கும் ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    Last edited by sivajisenthil; 9th July 2015 at 07:03 PM.

  12. #3568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3569
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முத்தான 7000 பதிவுகள்
    வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. Likes eehaiupehazij, Georgeqlj, Russellmai liked this post
  15. #3570
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    7000 பதிவுகளை பதிவுசெய்த ராகவேந்தர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..


  16. Likes eehaiupehazij, ainefal, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •